Thursday, June 20, 2024

முரளி 75 வாழ்க்கையின் நினைவலைகள் 24-06-2024

 ராதே கிருஷ்ணா 24-06-2024


முரளி 75 வாழ்க்கையின் நினைவலைகள் 24-06-2024


காலம் பொன்னானது.

முரளி பிறந்தது அம்பத்தூர் வெங்கடாபுரம் ஏகாம்பர ஐயர் தெருவில் கந்தசுவாமி ஐயர் வீட்டில் 1950 ஜூன் 5ம் தேதி பிறந்தேன். அப்பா நரசிங்க ராவ் ரங்கா ராவ் மற்றும் லக்ஷ்மி அம்மாளுக்கு இரண்டாவதாகப் பிறந்தேன். எனது அக்கா பாமா பாய் அவர்கள் 1947ம் ஆண்டு பிறந்தார்.

அப்பாவின் அப்பா அம்மா அவர்கள் அப்பாவின் சிறு வயதிலேயே இறைவன் திருவடி சேர்ந்தார்கள். அப்பாவின் அண்ணன் சீதாபதி  ராவ் ,அப்பா,  ராஜகோபால், ருக்மணி அம்மாள் (ராஜகோபால் ராவ் முதல் மனைவி) மற்றும் சரஸ்வதிபாய் ஆவர். அப்பாவின் அப்பா அவர்கள் நாமகிரிப்பேட்டை circle இன்ஸ்பெக்டர் அவர்களுக்கு மகனாகப் பிறந்தவர். அம்மாவின் அப்பா நரசிம்ம ராவ் . அம்மா சரஸ்வதி பாய் ஆவர். அப்பாவின் சிறு வயதிலேயே அவரது அம்மா அப்பா இறந்துவிட்டதால் அப்பாவிற்கு குடும்பப்பொறுப்பு வந்துவிட்டது. எனது அப்பாவின் அப்பாவிற்கு இன்னொரு மனைவி மூலம் பிறந்தவர் பேபி அதை, அவர் வேங்கட ராவ் என்பவரை மணந்து இரண்டு மகன்களைப்பெற்று ஒரு மகள் ப்ருந்தாவனி யம் பெற்று வாழ்ந்தனர். 

பெரியவன் இறந்துவிட்டான். சத்யா சசிரேகா என்பவரையம், ப்ருந்தாவனி குருப்ரசாத் என்பவரையும் மணந்து இன்பமாக வாழ்ந்து வருகிறார்கள்.

 ராஜகோபால் ராவ் ருக்மணி அம்மாளுக்கு நாமகிரி மகள் பிறந்தார். பிறகு இரண்டாவது மனைவியாக லட்சுமி அம்மாள் என்பவரை மணந்தார். ராதா, சேஷகிரி, ருக்மணி, பிரேமா, பத்மா, லலிதா, வசந்தா, மற்றும் ரஃஹிதமான் என்கின்ற ரகு பிறந்தனர், வளர்ந்தனர். நாமகிரி அம்மாளுக்கு சாமா மகன், மஞ்சுளா மகள் பிறந்தனர்.  சாமா சுபத்திரா என்பவரை மணந்து சந்திரகலா மகளைப்பெற்று வளர்ந்தனர். சேஷகிரி ஹேமா என்பவரை மணந்து வாழ்ந்தனர்.  ருக்மணி மனம் முடிந்த சில நாட்களில் கணவர் இறந்துவிட்டார். அவர் எல்.ஐ.சி  யில் பனி புரிந்து ஒய்வு பெற்று மேற்கு மாம்பலத்தில் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு 85 வயதிற்கு மேல் இருக்கும். பிரேமா வேறு ஒருவரை மணந்து அவரும் மரணமடைந்துவிட்டார். ஸ்ரீநிவாசன் என்கிற மகன் இருக்கிறான்.  அவனுக்கும் சேஷகிரி மகளுக்கும் திருமணம் ஆகி இன்பமாக குடும்பம் நடத்தி வருகிறார்கள். இப்போது பிரேமாவும் இறந்துவிட்டாள்.

அடுத்து பத்மாவிற்கும் ரங்கநாதன் என்பவருக்கும் திருமணம் ஆகி அவர்களுக்கு பிரசாத் மகனும் ஜெயஸ்ரீ மகளும் இருக்கிறார்கள். பத்மா ரங்கநாதன் இருவரும் இப்போது இல்லை.

லலிதா ராகவேந்திரன் என்பவரை மணந்து ஆனந்தமாக குடும்பம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு இரண்டு மகன்கள் பிறந்து வளர்ந்து வருகிறார்கள்.

வசந்தா கோபிநாத் என்பவரை மனது அவர்களுக்கு இரண்டு பெண்கள் ஒரு மகன் என்று வளர்ந்து வருகிறார்கள். ஒரு மகள் இறந்துவிட்டாள். வசந்தா 100 பேர் வேலை செய்யும் கம்பெனி நடத்தி வருகிறாள்.  அவள் எப்போதும் கூறும் வார்த்தை " முரளி எல்லாம் இருக்கிறது அனால் எதுவும் இல்லை" என்திரு கூறுவாள்.

ரகு  அன்னபூர்ணா என்பவரை மணந்து ஒரு மகனுடன் இன்பமாக குடும்பம் நடத்தி வருகிறார்கள்.

அப்பாவின் அம்மா மற்றும் கிரோம்பேட்டை ராமச்சந்திர ராவ் குடும்பத்தினர் அம்மாவும் சகோதரிகள் ஆவர்.

நமது குடும்பத்திற்கு வருவோம்.  அப்பா ரங்காராவ் லட்சுமி அவர்கள் எனது அப்பா 3 மகள்கள் 3 மகன்களை பெற்றனர்.  மூத்தவள் பாமா பாய் , முரளியாகிய நான், பிருந்தா பாய் , சந்திரா , மற்றும் அனந்தபத்மநாபன், ராகவேந்திரன் ஆகா அறுவராக வளர்க்கப்பட்டோம்.

அப்பா L .I .C யில் பணி  புரிந்து வந்தார். அப்பா புரசைவாக்கம் முத்தியால்பேட்டை பள்ளியில் படித்து முடித்தார். அரண்மனைக்காரன் தெருவில் ஒரு வீட்டில் வசித்து வந்தார். அப்பாவும் அவரது அண்ணண் சீதாபதி ராவ் அவர்களும் சேர்ந்து 1950 ல் இரண்டு மனைகள் (two grounds  கிரௌண்ட்ஸ் ரூபாய் 350/- க்கு  30x 80 அடி நிலம் வாங்கினார்கள் . 

சிலவருடங்கள் கழித்து பெரியப்பா அவர்கள் தூங்க பாய் அவர்களை மணந்து வடகிழக்கு ரயில்வேயில் கரக்பூரில் வாழ்ந்து வந்தனர். 

பெரியப்பாவிடமிருந்து அப்பா அவர்கள் அவரது மனையை ரூபாய் 750/-க்கு வாங்கினார். அப்பா ஒரு வீட்டைக் கட்டி வாழ்ந்து வந்தனர். 

மாமா ரங்கநாதன் அவரது தாயார் சரஸ்வதி பாய் அவர்கள் அம்பத்தூர் வீட்டிலேயே தங்கி   இருந்தார்கள். மாமா B & சி மில்லில் பனி புரிந்து வந்தார். எனது அம்மாவின் தங்கைகள் காவேரி சரோஜா இருவரும் இங்கேயே இருந்தார்கள்.எங்களது பெரியப்பா ராஜகோபால் என்கின்ற ராஜகுட்டி மாமாவும் எங்களுடனே இருந்தார்கள். அவர் பாட்மிண்டன் நன்கு விளையாடுவார். பிறகு சற்று புத்தி ஸ்வாதீனம் சற்று குறைவாக இருந்ததால் அவருண்டு என்று இருந்தார். காலையில் அம்பத்தூர் ஸ்டேஷன் மார்க்கெட் வரை சென்று ஸ்டேஷனுக்கு பின்னால் இருந்த உடுப்பி ஹோட்டல் அருகே நின்று கொண்டு இருப்பார். மேனேஜர் அங்கேயே அழைத்து டிபன் சாப்பிடச்சொல்லுவார், சாப்பிட்டவுடன் வீடு திரும்புவார். வரும் வழியில் பொட்டுக்கடலை வாங்கி வருவார். எனக்கும் பிருந்தாவிற்கும் கொடுப்பார். 

பின்பக்கம் கிணற்றிலிருந்து அங்குள்ள தொட்டி நிறைய தண்ணீர் நிரப்புவார்.

முரளி ஐந்து வயது வந்தவுடன் பள்ளியில் சேர்க்க ஏற்பாடு செய்தனர். அப்பா அம்மா வீட்டிற்கு முன்னேயே ஒரு பிள்ளையார் கோயில் கட்டி அதற்கு வேண்டிய அபிஷேக ஆராதனைகள் செய்து  வந்தனர். 

அப்போது எதிர்வீட்டில் இருந்த குருவம்மா மூலமாக ஒரு அரச மரம் நட்டு அருகிலேயே ஒரு வேப்பமரம் நட்டு இரண்டிற்கும் விவாஹம் செய்வித்து பூஜைகள் செய்தனர்.  எங்களது வீடு சிறிது பள்ளத்தில் இருந்ததால் பள்ளம் ரங்காராவ் என்றே பிரசித்தி.

அடுத்து முரளி கல்வி ஆரம்பம். எதிரில் சங்கம் ஸ்கூலில் சேர்த்தனர்.

முதல் நாள் கோவிந்தன் அவர்கள் மேளதாளத்துடன் புது துணிகளுடன் தொப்பியுடன் பள்ளிக்குச் சென்றேன்.  எனது முதல் டீச்சர் கோவிந்தம்மா அவர்கள். 

ஏகாம்பர ஐயர் தெருவில் எந்த வீட்டில் வேண்டுமானால் சுதந்திரமாக நுழையலாம், யாரும் எதுவும் சொல்லமாட்டார்கள்.

ஒருபுறம் ஜெயா கணேசர் கோயில் இந்தப்பக்கம் பத்ர விநாயகர் கோயில் .

பள்ளத்தில் எங்கள் வீடு, மேற்புறம் ரங்கா அண்ணா, அடுத்து அலமேலு மாமி ராமமூர்த்தி , துரைசுவாமி , ஆதிநாராயண சாஸ்திரிகள் , ராமகிருஷ்ணன், கந்தசுவாமி ஐயர் (சேதுராமன், கனகா) , உள்புறமாக ஐயங்கார் வீடு, சர்மா குடியிருப்பு வீடுகள், வேணுகோபால் ஐயங்கார், நாராயணன் ( அப்பாயி மாமா), ராம ராவ் (மகன்கள் வெங்கட்ராமன், கோபி, கணேசன் மற்றும் லலிதா மகள் ) , அடுத்து இறுதியாக ராமநாத வாத்யார் வீடு, அடுத்து ஜெயா கணேச கோயில்.   எதிர்புறம் பார்வதி பால்கார குடும்பம், குப்புஸ்வாமி, ஜெயராம் ஐயர், கம்பௌண்டர்  ஸ்ரீனிவாசன் (டன்லப்), ரெட்டியார் (மனோகர் பிரபாகரன்) .  சுக்கல் வீடு, ரவி, ஹரி, ஆனந்த் வீடு, கணபதி ராவ் (தெலுங்கு) வீடு.

பிறகு மஹா கணேச ஸ்கூலில் படித்தேன். அதற்கு சுவாமிநாத ஐயர் தான் பொறுப்பாளர். அவர் அப்பாவின் நபர் ஆவர். மற்றும் பின் தெருவான சின்னஸ்வாமி ஐயர் தெருவில் வசித்து வந்தார்.  ஐந்தாண்டுகள் அங்கேயே படித்து வந்தேன். அப்போதிருந்த தலைமை ஆசிரியர் சங்கரன்.  வொவ்வறு நாளும் ஒரு பழம் அல்லது காய்கறி பற்றி பேசச் சொல்லுவார். 

அதாவது வாழை , பல, மாங்கனி பற்றி சுவையானக்கட்டுரை எழுதுவோம்.

அப்போது மாலை வேளையில் அங்கு ராமாயணம், மஹாபாரதம் 

அவற்றைப்பற்றி பேசவேண்டும்.  இவ்வாறாக நாட்கள் உருண்டன. ஆறாவது வகுப்பு வரவேண்டும். சர் ராமஸ்வாமி முதலியார் உயர்நிலைப்பள்ளியில் ஆறாவது முதல் பதினொன்றாவது வகுப்பு வரை படித்தேன். பத்தாவது வகுப்பு வந்தவுடன் இன்ஜினியரிங் பிரிவில் படித்தேன். மற்றது செகிரேட்டரியல் (காமெர்ஸ் ).  அப்போது தலைமை ஆசிரியர் பத்மநாபன்,  இங்கிலீஷ் வாத்யார் சுப்ரமணியம் (எப்போதும் வெள்ளை வேஷ்டி சட்டை, அப்பா மாதிரி) , சுசீலா மேடம், ராதாகிருஷ்ணன் சவுட் மாஸ்டர், கலாநிதி தமிழ் டீச்சர். ராமன்பிள்ளை இன்ஜினியரிங் வகுப்பு எடுத்தார்.

பருவம் பதினாறு வயது வந்தவுடன் பள்ளிப்படிப்பு முடிந்தது. கல்லூரி செல்லவேண்டும்.  அப்பாவின் விருப்பம் காலேஜ் சேர்ந்து டிகிரி வாங்கவேண்டும். Pre-Univercity படிக்க நியூ காலேஜ் , ராயபேட்டைச்  சேர்ந்தேன், ஒரு வருடம் கல்லூரி அனுபவம். அப்போது காலேஜ் அருகில் ஒரு குடும்பம் அறிமுகமாகியது. எனது மாமா (தொட்ட ராஜா மாமா, ராஜி என்கிற ராஜலக்ஷ்மி அத்தை மற்றும் குட்டிம்மா, தாரா, கீதா 3 மகள்கள்) வீடு.

எனது விதி விளையாடியது. இறுதித் தேர்வில் தமிழில் தேர்ச்சி பெறவில்லை.  அதனால் படிப்பு தொடர 1967ல் (M C M P ) முருகப்பா 

செட்டியார் மெமோரியல் பாலிடெக்னிக் சேர்ந்தேன். இதன் அனுபவமே தனித்த தன்மை பெற்றது. அம்பத்தூர் அடுத்தது ஆவடி ஸ்டேஷன். நடுவில் உள்ளது பாலிடெக்னிக். இதன் விவரம் சற்று நேரம் கழித்து பார்ப்போம்.

நம் வீட்டு சமாச்சாரம் பார்ப்போம். உடன் பிறந்தவர்கள் பாமா பாய் , பிருந்தா , சந்திரா , அனந்து, ராகவேந்திரன் வளர்ந்தோம். பாமா பத்தாவது வகுப்பு தேர்வாகாமல் நின்றுவிட்டாள் . பிருந்தா நன்றாக படித்து திறமையானவளாக திகழ்ந்தாள். டைலரிங் சிறப்பு கவனம் செலுத்தி தேர்ச்சி பெற்றாள். அடுத்து சந்திரா சரிவர படிப்பு ஏறாததால் நின்றுவிட்டாள்.  

அப்பாவின் பொறுப்பு ஆரம்பமாகியது. பாமாவிற்கு மனம் முடிக்க ஆரம்பித்தார்.  மணமகன் ஒருவர் ஒருவராக வந்தனர். அவர்களை பஸ் ஸ்டாண்டிலிருந்து வீட்டிற்கு அழைத்து வரும் பொறுப்பு என்னுடையது. 

அப்பா சென்னை அண்ணா சாலையில் எல்.ஐ .சி யில் பனி புரிந்தார். 

அப்பாவின் தினம் வேலை.

தினமும்  காலையில் 8:10க்கு சாப்பிட உக்கார்ந்து 8:20க்கு ஆபீஸ் புறப்படுவார். குஞ்வ்வா  காலையில் மடியாக வந்து சமையல் செயது ரெடியாகவேண்டும். அவருக்கு சுற்று முற்று காரியங்களை அம்மா பார்க்கவேண்டும். அம்மா காபி கலப்பது, காய்கறி நறுக்குவது பாட்டிக்கு உதவுவது அம்மாவின் வேலை. அப்பா ரசம் சாதம் முடித்ததும் மோர் வர நேரமாகும். அப்பாவிற்கு மோர், மற்றவர்க்கு மோர் என தயார் செய்ய நேரமாகும். அப்பாவிற்கு அழுத்தம் அதிகமாகும். அப்பா வெள்ளை வேஷ்டி, முழுக்கை வெள்ளை சட்டை அணிந்து வரும்போது செருப்பு எடுத்து வைக்கவேண்டும். மிதி வண்டி (சைக்கிள்) தயாராக இருக்கவேண்டும்.  ஸ்டேஷனில் சைக்கிள் ஸ்டாண்டில் வைத்துவிட்டு ட்ரெயின் எற பிளாட்பாரம் சென்று அவரது நம்பர்களுடன் ஏறவேண்டும்.

நண்பர்கள் சப்தரிஷி மாமா (எஸ்.ராமச்சந்திரன்,  ஆர்.எஸ்.மணி மற்றும் பலர். சென்ட்ரலில் இறங்கி அண்ணாசாலை ஆபீஸ் செல்ல பஸ்ஸில் செல்லவேண்டும்.  மாலையில் இதே போன்று சென்ட்ரல் அம்பத்தூர் என்று வந்து சைக்கிளில் வீடு வந்து சேரவேண்டும். இரவு 7 மணிக்கு வந்தது இளைப்பாறி அவரது ஈஸிசேரில் உட்காரவேண்டும். சுற்றிலும் அம்மா குழந்தைகளுடன் நலன் விசாரிக்கவேண்டும். விவரங்கள் பேசவேண்டும்.

இதுதான் அன்றாட வழக்கம். அப்பா வெள்ளிக்கிழமை மாலை ஆபீஸ் முடிந்ததும் ப்ரொஅட்வய்யில் கொத்தவால்சாவடி சென்று வாரத்திற்குண்டான காய்கறிகள் வாங்கி ரயில் ஏறி அம்பத்தூர் வரவேண்டும். நான் ஸ்டேஷனில் அவருக்கு காத்திருந்து காய்கறிகள் பையைத்தூக்கிவரவேண்டும்.

அப்பா வழக்கமாக சீவல், பொடி கடைக்கு (ஒரே கடை) சென்று வாங்கி வருவார்.

அக்கா பாமாவிற்கு வரன் அமைந்தது. ராஜகோபாலன் டெலெக்ராம் (Central  டெலிக்ராப்  ஆபீஸ், பிராட்வே).  சைதாப்பேட்டையில் வாடகை வீட்டில் இருக்கிறார். அம்மாவுடன் இருக்கிறார்.  உறவினர்கள் இருக்கிறார்கள்.

கல்யாண ஏற்பாடு ஆரம்பமாகியது. சென்னை நாட்டுக்குப் பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள சத்திரம் முடித்தோம். எனக்கு உபநயனம் செய்ய தீர்மானித்தார்கள்.  

1967 ல் ஆரம்பித்து 1970 ல் பாலிடெக்னிக் படிப்பு எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் டிப்ளமோ (எலக்ட்ரானிக்ஸ் விருப்ப பாடம்) முடித்தேன்.

ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை, பிறகு எழுதி இரண்டாவது வகுப்பில் தேர்ச்சி பெற்றேன்.

வேலை தேடும் படலம் ஆரம்பமாகியது.  வீட்டில் பாமா கல்யாணம் வேலை மும்முரமாக நடந்தது. 

அப்பா ஸ்டெனோகிராப்ர் வேலை பார்த்தார்.  வீட்டில் H M V ரேடியோவில் அப்பா சுதந்திர முன் தினம் நாட்டின் ஜனாதிபதி பேசியதை shorthand எடுத்து விவரங்களை எழுதி மறுநாள் பேப்பரில் வரும் செயதியுடன் ஒப்பிட்டுப்பார்த்து சரி பார்ப்பார். அத்தனை தேர்ச்சி பெற்றவர்.

எங்களது பெரியப்பா ரயில்வேயிலிருந்து ஒய்வு பெற்று அம்பத்தூர் வந்து கமலாபுரம் காலனியில் அமர்ந்தார். அவரது தூங்க பாய் மனைவியுடன் இன்பமாக வாழ்ந்து வந்தார். அடுத்த வீட்டில் கோபாலகிருஷ்ணன் என்ற நண்பருடன் இன்பமாக இருந்தார். குழந்தைகள் இல்லை. அதனால் குமார் என்கின்ற சிறுவனை முறையாக குலதெய்வம் சிந்தலவாடி நரசிம்மஸ்வாமி சந்நிதியில் தத்து எடுத்தார். நாங்கள் எல்லோரும் சிந்தலவாடி செல்ல வண்டியி சென்றோம். வழியில் அப்பாவிற்கு சித்தப்பா ரங்கநாத மனைவி கமலா இறந்த செய்தி தெரிந்தது. அப்பா அதனை இப்போது தயாருக்கும் தெரிவிக்கவேண்டாம் அன்று கூறி மறைத்து விட்டார். திரும்பி வரும்போது தெரிவித்தார்.

அப்பாவின் செயல்,  சென்னையிலிருந்து திருச்சி செல்ல காலை ஆகும்.  யாரும் தூங்காமல் இருக்க பந்தயம் வைப்பார்.  ஆனால் இரவு 2 மணி முதல் 3 மணிக்குள் கண் அசந்துவிடும்.

பெரியப்பா வாரம் தவறாமல் ஞாயிற்றுக்கிழமை காலியில் சைக்கிளில் எங்கள் வீட்டிற்கு வந்து செல்வார்.

குஞ்சவ்வா கும்மோணவ்வா அக்கா சரஸ்வதி  ஆக பலர் எங்கள் வீட்டில் இருந்தனர்.

பெரியப்பா ரயில்வேயிலிருந்து 60வது வயதில் 

ஒய்வு பெற்று அம்பத்துர் வந்து நண்பர் மூலமாக அம்பத்தூர் எஸ்டேட்டில் உள்ள எஸ்.எஸ். பார்மசியில் சேர்ந்து 19 வருடம் வேலை செயதார் என்பது குறிப்பிடத்தக்கது.

அம்பத்தூரில் தொட்ட ராஜ மாமா, சிக்க ராஜா மாமா இங்குவந்து விட்டார்கள். மோகன்  சௌந்தர்யாவுடன் சிக்கராஜ மாமா ரங்கநாதன் பாமா அத்தை வசித்தார்கள். கண்ணன், ஸ்ரீகாந்த் மனம் புரிந்து அம்பத்தூரில் வசித்து வந்தார்கள். 

சஞ்சீவி எல்.ஐ.சி.யில் வேலை பார்த்தான். குட்டிம்மா, தாரா மனம் புரிந்து தங்கள் தங்கள் குடும்பத்துடன் இருக்கிறார்கள். கீதா கோபால் என்பவரை மணந்து அமெரிக்காவில் வாழ்ந்து வந்தாள் . துரதிருஷ்டவசமாக அவர் கோபால் இப்போது இல்லை. 

குட்டிம்மா இரண்டு மகன்கள், ஒரு மகள் என்று வாழ்ந்து வருகின்றனர்.

தாரா முரளி  தன்னுடைய இரண்டு மகள்களுடன் அமெரிக்கா இந்தியா என்று வாழ்ந்து வருகிறார்கள்.

சஞ்சீவி மனம் முடித்து மகன் மகளுடன் அம்மாவுடன் வாழ்ந்து வருகிறார்கள். மாமா இப்போது இல்லை.

சிங்கராஜா மாமா பாமா அதை இப்போது இல்லை. மோகன் அகால மரணம் அடைந்து சௌந்தர்யா மகன் வருணுடன் வாழ்த்து வருகிறாள்.

பாமா கல்யாணம் முடிந்து சைதாப்பேட்டையில் இருந்தனர், வாழ்க்கை என்பது பிரச்னை, அதை மீண்டு வருவதே நம் கடமை. மூத்தவன் என்பதால் நான் குறுக்கிட ஆரம்பித்தேன். அப்பாவிடம் பெரியப்பாவிடம் விசாரித்தேன், சரியான பாதில் வரவில்லை.  நானே சென்று பாவாவிடம் விசாரித்ததில் இருவருக்கும் மனஸ்தாபம் ஏதும் இல்லை, இருவருக்கும் உள்ள மனா வேறுபாடு தான் என்றும் எல்லாம் சரியாகிவிடும் என்றனர். முடிவுக்குவந்தது.

நானும் வேலைக்கு முயன்றேன். ஒரு கட்டத்தில் டன்லப் பேக்டரி யில் வருடாந்திர பராமரிப்பு நேரத்தில் 15 நாட்கள் வேலை பார்த்தேன், காலையில் உள்ளே சென்றால் மாலை வரும் போது உடல் முழுதும் ரப்பர் பொடியில் ஒரே கருப்பாகி வருவேன். நன்றாக குளித்து வந்தால் தான்  சரியாகும். 

அடுத்ததாக கொரட்டூர் மின்சார சப்-ஸ்டேஷனில் ரூபாய் 150/-க்கு வேலை செய்தேன்.

அப்பா ஒரு நாள் என்னிடம் வேலை தேடுவதே இல்லை, விளம்பரம் பார்ப்பதே இல்லை என்றார். ஐ .ஐ டி விளம்பரத்தைக் காண்பித்தார். 

அப்பாவிடம் நான் முன்னமே இதைப்பார்த்து அனுப்பிவிட்டேன் , இதை அப்ப்ளிகேஷனும் வந்துவிட்டது என்றேன்.

ஜனவரி யில் நேர்காணல் வருவதற்கு அழைத்தார்கள். நானும் சென்றேன்.

அங்கு சுனார் 3000 பேர் வைத்திருந்தனர். பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்தனர். காலையில் 8 மணிக்கு சென்ற நான் வியந்துவிட்டேன். முதல் சுற்று முடிந்து பாதியாக தேர்ந்தெடுத்தனர். சாப்பாடு முடிந்து வராகி சொன்னார்கள். மதியம் 3 மணிக்கு 350 பேரை அழைத்தார்கள். பிறகு நேர்காணல் செய்து 13 பேரைத் தேர்வு செய்தவர்கள். அதில் நானும் ஒருவராக இருந்தேன். மகிழ்ச்சி அடைந்தேன். தமிழ் நாடு சென்னையிலிருந்து நரசிம்மன் (நான்), கிருஷ்ணன், தங்கவேல், சுப்ரமணியம், நடேசன், பழனிச்சாமி, சாந்தி, தேவசகாயம், ஸ்ரீனிவாசன் மற்றும் 

T .V .லக்ஷ்மி .  கர்நாடக குல்பர்காவிலிருந்து சஞ்சீவச்சார்யா கட்லூர் , மேற்கு வங்காளத்திலிருந்து பாஸு, கேரளாவிலிருந்து அச்சுதன் ஆகா 13 பேர் தேர்வு செய்யப்பட்டோம்.

1971 ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி Trainee பயிற்சி பெற்றவராக சேர்ந்தோம்.  

சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ் சென்டரில் ரூபாய் 150/- மாதம் உதவித்தொகை என வேளையில் அமர்ந்தோம். சென்னை ஐ ஐ டி ஜெர்மனி உதவியுடன் செயல் படுகிறது. எங்களது பயிற்சி ஆரம்பமாகியது. மேலாளர்கள் குமாரவேல், ஜெயராமன், சந்தானகிரிஷ்ணன், ரங்கநாதன் மற்றும் ரங்காச்சாரி என பலரது கண்காணிப்பில் பனி புரிந்தோம். ஜேர்மன் ப்ரோபஸ்சோராக professor  எங்களது வேலைக்கு பயிற்சிகொடுத்தார்.

காலையி 8 மணிக்கு சரியாக வந்துவிடுவார்.  முதலில் அனைத்து அறைகளுக்கும் பவர் எஸ்ட்டென்ஷன் extention போர்ட்ஸ் ரெடி செய்தோம்.

hivlem போர்ட்ஸ் மத்தியபட்டறையிலிருந்து அறுத்துக் கொண்டுவரவேண்டும். அதற்கு காத்திருந்தால் யாருக்காகவும் காத்திருக்கவேண்டாம், நான் வருகிறேன் வாருங்கள் அன்று கூறி வந்துவிடுவார்.

இந்தியா கலாச்சாரத்திற்கும் ஜேர்மன் கலாச்சாரத்திற்கும் உள்ள வேறுபாடு.

15 மாதங்கள் ஆனதும் அனைவருக்கும் அறிவியல் உதவியாளர் என நியமன கடிதம் கிடைக்கப்பெற்றோம். நாங்கள் 13 பெரும் வேறு வேறு பிரிவுகளுக்கு பிரிக்கப்பட்டோம்.

அதில் எனக்கு எலக்ட்ரிகல் செக்ஷன் . அங்குள்ள கருவிகளை பழுது பார்க்கும் வேலை. ரூபாய் 470/- அடிப்படை சம்பளம், மற்றும் அகவிலைப்படி ரூபாய் 15/-.  ஆகஸ்ட் 1971 முதல் ஜனவரி வரை பயிற்சியாளர், ஜனவரி 2, 1973 முதல் அறிவியல் உதவியாளராக வேலை செய்தோம்.  

அங்கிருந்தபோது கல்பாக்கம் IGCAR ல் அறிவியல் மேலாளர் பதவிக்கு விளம்பரம் வந்ததைப்பார்த்து நானும் அனுப்பினேன். 1977 ஜனவரி யில் அனடந்த நேர்காணலில் தேர்ந்தெடுக்கப்பட்டு மே மாதம் ஆர்டர் லெட்டர் வந்தது. நண்பர்கள் ஐ ஐ டி யில் ப்ரமோஷன் இல்லை. இது கல்லூரி மாதிரி இருப்பதால் நமக்கு மேலிருப்பவர் ஒய்வு பெறவேண்டும் அல்லது இறக்கவேண்டும் அப்போது தான் ப்ரமோஷன். முதலில் இதை விட்டு கல்பாக்கம் சேர்ச் சொன்னார்கள். 

அதனால் மே 31ம் தேதி மாலை விடுவிக்கப்பட்டு மறுநாள் ஜூன் மாதம் முதல் தேதி கல்பாக்கம் சேர் முடிவு செய்தேன்.

மாலையில் புறப்பட்டு செங்கல்பட்டு வல்லம் கிராமத்தில் உள்ள எனது பெரியப்பா வீட்டிற்குச் சென்றேன்.

ஸ்ரீனிவாச ராவ் எங்களது பெரியப்பா, அதாவது அவரது அம்மாவும் எனது அப்பாவின் அம்மாவும் அக்கா தங்கைகள்.  பெரியவர் ராஜகோபால் ராவ் ,

இவரது இரண்டாவது மனைவி சரோஜா (பெங்களூரு கெங்கேரி )

செங்கல்பட்டு ஸ்ரீனிவாச ராவ் , கிரோம்பேட்டை  ராமச்சந்திர ராவ் ,  சஞ்சீவி கக்கா , ரங்கநாத ராவ். சகுந்தலா அத்தை சஞ்சீவி ராவ், காவேரி அத்தை கோபாலக்ருஷ்ண ராவ் ஆவர்.

மே 31ம் தேதி மாலை

 வல்லம் சென்றடைந்தேன். அங்கு மாரு நாள் காலையில் பெரியப்பாவுடன் கல்பாக்கம் சென்றேன். அங்கு கௌசல்யா கௌசல்யா பானு இருந்தனர். அவர்களுக்கு பஸ் நேரம் பார்த்து டைம் மணி இவ்வளவு என்பார்கள்.

பெரியப்பாவை கேட்டில் விட்டு விட்டு நான் உள்ளே சென்றேன். வேளையில் சேர்த்துவிட்டு மாலையில் வந்து பெரியப்பாவுடன் வீட்டிற்கு வந்தோம். மறு நாள்  காலையில் நான் மட்டும் கல்பாக்கம் சென்று 35 முதல் அவின்யு  தங்குமிடம் சாவி பெற்றுக்கொண்டேன். இங்கு இரண்டு பேர் ஒரு அறைக்கு என மூன்று அறைகளில் மொத்தம் 6 பேர் இருந்தோம்.

மறு நாள் வேலையை ஆரம்பித்தேன். எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் வேலை. என்னுடன் ராமநாதன், தியாகராஜன் சேர்ந்தனர். ரியாக்டர் ஆரம்ப நிலையில் உள்ளதால், எங்களுக்கு ஆவணங்கள் தயார் செய்யும் வேலை.

எனக்கு சுப்பா ராவ் ,தலைமை, தியாகராஜன் அவர்களுக்கு ராமநாதன் தலைமை. மற்றும் குருஸ்வாமி, D .S ,ராவ், பிரகாஷ் ராஜ்  இருந்தனர்.

சுமார் 53 சிஸ்டம்ஸ் ஆவணங்கள் புத்தக வடிவில் தயார் செய்யவேண்டும் ஒவ்வொன்றும் 200 பக்கங்கள் கொண்டது. இவை அவனம்கள், வரைபடங்கள் ஆகும்.  இவைகளை நீல அச்சு பிரிவில் இருந்து கொண்டுவந்து ஒவ்வொன்றும் சுமார் 20 காப்பிகள் எடுத்து வரிசைக்கிரமமாக அடுக்கி , சரிபார்த்து, பிணைப்புப்பிரிவிற்கு அனுப்பி புத்தக வடிவம் செயது பல பிரிவுகளுக்கு  கொடுக்கவேண்டும்.

ரியாக்டர் கட்டிடத்திற்கே செல்ல சில வருடங்கள் ஆயிற்று. அதற்காக எங்கள் இருவரையும் என்னை R E L அணு உலை பொறியியல் ஆய்வகத்திற்கும் , தியாகராஜனை R D L   மறு செயலாக்க வளர்ச்சி ஆய்வகம் பிரிவிற்கும் சென்று வேலை செய்தோம் . பாஸ்ட்  பிரீடெர் சோதனை உலை கட்டிடம் தயாரானதும் அங்கு சென்றோம்.

அங்கு எலக்ட்ரானிக்ஸ் பிரிவிற்கு தேவையான கருவிகளை சோதனை செயது வாங்கினோம். தியாகராஜன் செயல்முறை கருவிகளை ஆர்டர் செயது இரண்டு பிரிவுகளை உருவாக்கினோம்.

இத்தோடு இதை  நிறுத்திக்கொள்வோம் 

நமது கதைக்கு வருவோம்.

பாமா ராஜகோபாலன் இரண்டு (ஒரு மகன் ஒரு மகளென) குழந்தகளைப்பெற்று வளர்த்து படிக்கவைத்து மனம் முடித்து நல்லதொரு வாழ்வினை அளித்தார்கள்.  மற்றோரு பெண்ணைப்பெற்று வளர்த்து ஆளாக்கி மனம் முடித்து ஆசைக்கொரு மகள், ஆஸ்திக்கொரு மகன் பெற்று நல்வாழ்வு வாழ்ந்து  வருகிறார்கள்.

பாமா பாவா இருவரும் இப்போது இல்லை.

பிருந்தாவிற்கு மணமுடிக்க தயாரானோம்.

நானும் பிருந்தா கல்யாணத்திற்கு முடிந்த அளவு அப்பாவிற்கு உதவ செயது மனம் முடித்தோம். திருநெல்வேலி மாப்பிள்ளை  சுகமாக ஆவடிக்கருகில் கோவர்தனகிரியில் வீடு கட்டி இரண்டு மகன்களும் ஒரு மகளும் பெற்று வளர்த்து படிக்க வைத்து வாழ்ந்து வந்தனர். 

பிருந்தாவும் பாவாவும் அகால மரணம் அடைந்தார்கள். அதற்கான காரணங்களை ஆராய முற்படவேண்டாம். 

எனக்கும் கல்பாக்கம் வந்து சேர்ந்ததும் மனம் முடிக்க தயாரானார்கள். 

அம்பத்தூரில் அப்போது நான் பாட்மிண்டன் விளையாடுவதைப்பார்த்த சுதாவின் சித்தி துளசி கோபாலக்ருக்ஷ்ணா ராவ் அவர்கள் சுதா குடும்பத்தாருடன் கலந்து பேசி பெண் பார்க்கவும் ஏற்பாடு செய்தனர்.

நானும் பார்த்தது ஒண்ணே ஒன்னு கண்ணே கண்ணு என்று சரி என்றேன்.மனமும்  முடிந்தது.    திருச்சானூர் சத்திரத்தில் சுற்றம் சூழ வந்திருந்து கோலாகலமாக நடந்தது. 1977 அக்டோபர் 30ம் தேதி இனிதாக முடிந்தது.  

சுதாவை கல்பாக்கம் அழைத்துச் சென்று நண்பர்களிடம் கலந்து பேசினோம். ஜூன் 19ம் தேதி பெண் பார்த்து அக்டோபர் 30 ல் மனம் முடித்தோம்.  என்னுடன் நண்பர்கள் திருவேங்கடசாமி, ஹரிபால், கணபத்திரமான், சங்கரன், பிறகு வந்த குப்புசுவாமி ஆவர்.

முதல் அவின்யூ 7ம் நம்பர் வீட்டில் உள்ள மாலதி மோகன் நண்பர்களானார்கள். இது ஒரு தனிக்கதை.

கல்பாக்கத்தில் அப்போது வாரம் ழுஞாயிற்றுக்கிழமை தோறும் சென்னைக்கு மார்கெட்டிங் ட்ரிப் பஸ் (ஒன்று அல்லது இரண்டு) வரும். அதில் கல்பாக்கம் மக்கள் வந்து வேண்டியதை வாங்கிச் செல்வர்.

அது போல் சாத்தனூர் ட்ரிப், மற்றும் வேறு வேறு ஊர்களுக்கு பஸ் சென்று நிம்மதியாக வருவார்கள்.

அது போல் ஒரு முறை சாத்தனூர் ட்ரிப் வந்தது. அப்போது நானும் சுதாவை அழைத்துக்கொண்டு போகலாம் என்று ஆவலுடன் சாத்தனூர் ட்ரிப்க்கு டிக்கெட் வாங்கினோம். அந்த பஸ்ஸில் எங்களுக்கு பின் சீட்டில் மாலதி மோகன் மற்றும் இரண்டு பெண் சிறுமிகள் வந்தனர். நாங்கள் பேசிக்கொண்டே வந்தோம்.  அப்போது எங்களைப்பற்றி  விசாரித்தனர். 

அவர்கள் உடனே நீங்கள் எங்கள் வீட்டிற்கு வாருங்கள். வந்து தங்கிக்கொள்ளலாம். அவர்கள் வீடு மூன்று அறைகள் உள்ள வீடு. நீங்கள் ஒரு அறையில் தாங்கிக்கொள்ளலாம். மாலதி அவரது கணவரை விட விவரம் தெரிந்தவர். அவர்கள் பேசி , எங்களிடம் பீன்கள் வெப்து தாங்கிக்கொள்ளலாம் என்றும் மற்ற விவரங்கள் பேசினார்கள். மாதாந்திர செலவுகளை இரண்டாக பிரித்து சரி செயது கொள்ளலாம் என்றும் கூறினார். இது ஒரு நல்ல சகுனத்தைக்காட்டியதைப்போல் உணர்ந்தோம்.

ஏனெனில் நான் தனியாக டார்மிட்டரி ரூமில், சுதா அம்பத்தூர் வீட்டில் இருப்பதை விட இது பரவாயில்லை என்று முடிவு செய்தோம். இதை அப்பா அம்மாவிடம் கூறி அவர்கள் ஒப்புதலுடன் அவர்கள் வீட்டில் தாங்கினோம் ,

சில மாதங்கள் சென்றதும் சுதா கருவுற்றாள். அதனால் சுதா அம்பத்தூர் சென்றாள். நான் 35, முதல் அவின்யூ சென்றேன். வெள்ளிக்கிழமை மாலை 108  பஸ் பிடித்து தாம்பரம் வந்து அங்கிருந்து நுங்கம்பாக்கம் வந்து அங்கிருந்து பாலம் தாண்டி வந்து 15A பஸ் பிடித்து அம்பத்தூர் வந்துவீட்டிற்கு வருவேன்.  காலம் பொன்னானது என்பதை உணர்ந்து எனது பயணம் தொடங்கியது. ஆபீஸ் முடித்து சிட்ரஸ் எனும் சதுரங்கப்பட்டினம் இடத்தில் இறங்கி 108 பஸ் 4:45க்கு பிடித்து தாம்பரம், நுங்கம்பாக்கம் வந்து 15எ பஸ் பிடித்து அம்பத்தூர் வீட்டிற்கு வருவேன் . 

சுதா சரியாக காத்திருப்பாள். அதன் சுகமே தனி. இரவு சாப்பிட்டுவிட்டு குடுமபத்தினருடன் அளவிலாவி பேசிவிட்டு படுப்போம். ஞாயிறு அன்று அம்மாவின் சாப்பாடு அப்பாவுடன் அமர்ந்து அக்கா தங்கைகளுடன் தம்பிகளுடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவோம்.  குடும்பத்தினர் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் சுகமே சந்தோஷத்தைக்கொடுக்கும். அதை இப்போது பார்க்கமுடியவில்லை. காலம் மாறிப்போச்சு. அதை இப்போதும் ஸ்ரீ ஹரி ஹரிணி மகள் ஷ்ரவ்யா பண்டிகைக்காலங்களில் ஒன்றாக அமர்ந்து ஒருவர்க்கொருவர் கை  கோர்த்து ரெடி என்று கூறியவுடன் சாப்பிட ஆரம்பிப்போம். அதைப்பார்த்து நாங்கள் மகிழ்ச்சி அடைவோம். 

மாலையில் நான் அங்கிருந்து புறப்பட்டு திருவல்லிக்கேணி வந்து மாமனார் மாமியார் தம்பிமார்களுடன் மனதார பேசி சாப்பிட்டு இரவு தூங்குவோம். மொட்டை மாடியில் பேசுவதே அது ஒரு சுகம் தான். 

திங்கள் காலையில் 4 மணிக்கு எழுந்து குளித்து ரெடி யாவேன் . ரக்து பாலு நாகராஜன் என்று அவர்கள் என்னை அண்ணா சாலைக்கு சைக்கிள் இல் கொண்டு வந்து விடுவார்கள். 108 பஸ் பிடித்து சட்ராஸ்சில் இறங்கி ஆபீஸ் பஸ் பிடித்து ஆபீஸ் வருவேன்.  திங்கள் முதல் வெள்ளி மலை வரை ஹாஸ்டல் சாப்பாடு, கேரியர் சாப்பாடு எண்டு காலத்தை ஓட்டினேன். 

அம்பத்தூர் திருவல்லிக்கேணி இடையே பலவித குழப்பங்கள், பேச்சுக்கள் எழுந்தன. அதைப் பிறகு பார்ப்போம்.

நண்பர்கள் ராஜகோபால் உமா, சங்கரன் அவர்கள் அருகில் உள்ள திருக்கழுகுக்குன்றத்தில் வீடு பார்க்க ஆரம்பித்தோம். அங்கிருந்து வரலாம் என்று எண்ணினோம். கல்யாண உடனே தலை தீபாவளி வந்தது. திருவல்லிக்கேணியில் மாடியில் சுதா அப்பா அம்மா குடும்பத்தினர், கீழே சுதாவின் சித்தப்பா குடும்பம், முன் போர்ஷனில் பிரேமா மாமி ஜெயராஜ் அவர்கள் ஸ்ரீகாந்த் ஹேமமாலினி என்று இருவருடன் இருந்தனர். நடு போர்ஷனில் பிரபாகரன் பரிமள இருந்தனர். மற்றோரு போர்ஷனில் கோபால் குடும்பத்தினர் இருந்தனர். சுதாவின் சித்தப்பா ஆச்சார் ப்ரோஹிதர் வேலை செய்பவர். திருச்சானூர் சபா சத்திரத்தில் வேத பண்டிதராக இருந்தார். வருடம் தோறும் 3 நாட்கள் நடைபெறும் வேத  நிகழ்ச்சிகளுக்கு தலைவராக இருந்தார். உத்தராதி  மடத்தின் ஸ்வாமிகள் தலைமையில் 3 நாட்கள் நிகழ்ச்சிகள் நடக்கும். ப்ரவசனங்கள், பஜனைகள், வேத விவாதங்கள் , பூஜைகள் நடைபெறும். அருகில் உள்ள அனைத்து  மண்டபங்களும் பண்டிதர்கள் பல ஊர்களிலிருந்து வந்து கலந்துகொண்டு சிறப்பாக நடக்கும்.  நானும் சரியாக டிசம்பர் மாதம் நடக்கும் சபா நிகழ்ச்சிகளுக்கு தவறாமல் கலந்து கொண்டு வருவது வழக்கம்.  

திருக்கோயிலூர் ரகூத்தம ஸ்வாமிகளு ஆராதனை டிசம்பர்  மாதம் வரும் வைகுண்ட ஏகாதசி தவாதசி திரயோதசி தினம் சிறப்பாக நடக்கும்.  அங்கு ஆனது நண்பர் T ,V .குமார்   பாலிடெக்கனிக்கில் படித்தவர். அவரது வீட்டில் தங்கி ஆராதனை நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு வருவேன்.  அருகில் தபோவனம் ஞானானந்த ஸ்வாமிகள் குடில் உள்ளது. அதையும் பார்த்து வருவேன். அருகில் திருவரங்கம் கோயில் உள்ளது. ஸ்ரீரங்கத்திற்கு இணையானது, பெரியது. அது திவ்ய தேசங்களில் வராதது, ஆனாலும் பிரசித்தி பெற்ற கோயில் இது. ப்ருந்தாவனத்திலிருந்து மண்ணச்சநல்லூர் வழியாக ஆற்றைக்கடந்து மறுபக்கம் சென்றால் அந்த கோயில் வரும். அந்த தென்பெண்ணை ஆற்றில் நீர் இருக்காது, மணலாக இருக்கும், அதனால் இறங்கி நடந்து சென்றால் அந்தக்கோயிலை சென்றடையலாம். ஆற்று மேம்பாலம் கடந்து திருக்கோயிலூர் உலகளந்த பெருமாள் கோயில் வழியாக செல்லும் ஒரு பஸ்ஸில் சென்று 15 கிலோமீட்டர்கள் கடந்து சென்று கோயில் பார்க்கலாம். மிகப்பெரிய கோயில் சாயனக்கோலத்தில் பெருமாள் காட்சியளிக்கிறார். அதன் மேற்புறம் அகண்ட இடமாக உள்ளது. எல்லாவற்றையும் கண்டு மகிழ்வேன்.  வைகுண்ட ஏகாதசி அன்று மாலையில் பெருமாள் அபிஷேகம் அலங்காரம் பார்த்து வேதங்கள் வாசித்து காலையில் ஸ்வாமி புறப்பாடு பார்த்தபின் , ஆற்றைத்தாண்டி மணம்பூண்டி பிருந்தாவனம் வந்து  அதிகாலையில் 4 மணிக்கு குளித்து ஸ்வாமிகள் பூஜைக்கு அமர்ந்து கண்டுகளித்து வேதங்கள் ஓதி மண்களாரதி பார்த்து, பிருந்தாவன அபிஷேகம் பார்த்து தவாதசி பாரணை முடித்து ஸ்வாமிகள் தீர்த்தம் அருந்தி வீட்டிற்கு வருவேன்.  

குமாரின் மனைவி ஸ்கூல் டீச்சர் , மகள் தீபா படிக்கிறாள். இளைப்பாறிவிட்டு மாலையில் திருவரங்கம் தபோவனம் பார்த்து விட்டு வருவேன்.

மறுநாள் திரயோதசி அபிஷேகம் சுமார் 11 மணிக்கு மேல் ஆரம்பம் வெகு ஸ்ம்பரமாக நடக்கும்.  இது முழுதும் அங்குள்ள வியாபாரிகள் சமர்ப்பிக்கும் பழங்கள் முந்திரி, திராட்ஷை கல்கண்டு, மாதுளை என அண்டா  அண்டாவாக அளித்து பிருந்தாவன அபிஷேகம் சிறப்பாக நடக்கும்.  வாழைப்பழம், நாட்டுச்சக்கரை, கல்கண்டு, முந்திரி, மாதுளை ,வெள்ளை சக்கரை, இளநீர், பால், தயிர், என அபிஷேகம் செய்வர். ஸ்வாமிகள் பூஜா முடித்து 11:30மணிக்கு அபிஷேகம் செய்யும்போது சூரியனின் வெளிச்சத்தில் கல்கண்டு மாதுளை வீசும்போது அதன் ஜொலிக்கும் விதமே மனதை அள்ளிக்கொண்டு போகும். பூஜா முடித்து மங்கலராதி செயது பிறகு அலங்கார பந்தி , ஸ்வாமிகள் போஜனம் , பிறகு அங்கு வந்திருக்கும் பல்லாயிரக்கான பக்தர்கள் உணவு அருந்துவது கண்கொள்ளாக்காட்சியாகும். மண்பாண்டங்களில் சாம்பார், ரசம், பாயசம் , மற்றும் முறம் முரமாக சாதம் பரிமாறுவார்கள். அன்றெல்லாம் பந்தல் போட்டு மண் தரையில் தான் வாழ இல்லை போட்டு உணவு பரிமாறுவார்கள்.  முடித்து மாலையி தென்னாங்கூர் பாண்டுரங்கன் கோயில் வந்து அங்கு ஆருத்திரா தர்சனம் பார்த்து பாண்டுரங்கனை தரிசித்து, ஞானானந்த ஸ்வாமிகள் ஆராதனை நிகழ்ச்சிகளை பார்த்து கல்பாக்கம் வீட்டிற்கு வருவேன்.  சுதா எனக்காக காத்திருப்பாள்.

திருவல்லிக்கேணி வருவோம்,  சுதாவின் அம்மா மடி மடி யாக சமைத்து அனைவருக்கும் பரிமாறுவார்கள். அம்மா பூஜை புனஸ்காரம் என வீட்டிலேயே அனைத்தும் செய்வார்கள். அப்பா அதற்க்கு மாறுபட்டவர். அவர் உண்டு அவர் வேலை உண்டு .  காலையில் அவரது வக்கீல் வீடு சென்று அன்றைய வேலைகளை சரி பார்த்து வீடு திரும்புவார். வருமான வரித்துறை வக்கீலிடம் பணி புரிந்து வந்தார். எலடாம்ஸ் ரோட்டில் 37ம் நம்பர் வீட்டில் இருக்கும் ஜெயராமன் என்பவர் . அவர் வீட்டிற்குச் சென்று அன்றைய வேலைகளை கவனித்து வீடு திரும்புவார்.  அவருக்கு உதவியாக வீட்டில் ரகு , ராமு, நாகராஜன், பாலு, கிட்டு இருப்பார்கள்.  வீடே ஒரு ஆபீஸ் ஆக இருக்கும். வீட்டில் 4 டைப்  ரைட்டிங் மெஷின்கள் இருக்கும். அதற்க்கு ஆட்கள் வேலையில் அமர்த்தி அவற்றை சரிபார்த்து, அப்பாவின் சம்மதத்துடன் ஹைகோர்ட் சென்று சமர்ப்பிப்பார்கள். வீடே ஒரு ஆபீஸ் ஆகா இருந்தது.  காலப்போக்கில் டைப் ரைட்டர் எல்லாம் மாறி கம்யூட்டர் வந்தது. விவரங்களை கம்ப்யூட்டரில் எழுதி சரிபார்த்து நகல்கள் எடுத்து சமர்ப்பிப்பார்கள்.

அப்பா தினமும் காலையில் மாம்பழம் கீதா கேப் ஹோட்டல் சென்று 2 இட்லி சாப்பிட்டு திரும்புவார். மதியம் சாப்பாடு , மாலையில் காபி கொறுக்குத்தீனி , இரவு  டிபன்.  சுகாதாரம் பார்த்து சாப்பிடுவார். சுதவை அழைத்துக்கொகொண்டு ஹோட்டல் ஸ்வாகத் சென்று டிபன் வாங்கித்தருவார்.

மறக்கமுடியாத நிகழ்ச்சி : தலை தீபாவளிக்கு எனது சின்ன மாமனார் மாடி குளிக்கும் அறையில் சுடச்சுட அந்த வெந்நீரில் நீர் வைத்து, எனக்கு தலைக்கு எண்ணெய் வைத்து இப்படி அப்படி தலையில் தட்டி சுகமாக வெந்நீர் குளியல் , இன்றும் மனதை விட்டு அகலாமல் இருக்கிறது.

நம் கதைக்கு வருவோம்,

வாராவாரம் அம்பத்தூர் திருவல்லிக்கேணி வந்து கல்பாக்கம் வருவது நடந்தது.  ஜூலை மாதம் 22ம் தேதி காலையில் சுதாவிற்கு பிரசவ வலி வந்தது. நான் ஆபீஸ் சென்றேன். சென்னை பாமகுரோவ் ஹோட்டல் அருகில் உள்ளது சரோஜா நர்சிங் ஹோம். அங்கு தான் ராஜா  பிறந்தான். சரோஜா  நர்ஸிங் ஹோமில் நான் சென்று பார்த்து வந்தேன்.

பிறகு நாள் ஒரு மேனி பொழுதொரு வண்ணமுமாக ராஜா வளர்ந்தான். 

சுதா அம்பத்தூருக்கு அழைத்துக்கொண்டு வந்து விட்டார்கள் அவளது அப்பா அம்மா. 

திருக்கழுகுக்குன்றத்தில் வீடு பார்த்து சுதாவுடன் குடும்பம் நடத்த அப்பா அம்மாவுடன் கலந்து பேசி முடிவு செய்தோம். ரெட்டியார் சந்தில் ஒரு வீடு பார்த்தோம். சுப்பிரமணிய முதலியார் வீடு அது. அவர் கவரத்தெருவில் வசித்து வருகிறார். பழையகாலத்து வீடு, நேராக ஹால், மற்றும் அறைகள்,  சமையல் அரை, பின்கட்டு, அன்று இருந்தது. பக்கத்து வீட்டு கிணறு பொதுவானது. அந்தவீட்டில் இருப்பவர் சோடா கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அவர் அவரது மனைவி , மற்றும் நான்கு மகள்கள் ஜெயந்தி, சித்ரா, சாந்தி, வசந்தி மற்றும் கணேசன் என்று இவருடன் வசித்து வந்தனர்.  அவர்கள் ராஜாவை அன்புடன் பார்த்துக்கொண்டு வந்தார்கள். 

நான் அங்கிருந்து காலியில் 7:15 மணிக்கு பஸ் பிடித்து கல்பாக்கம் ஆபீஸ் செல்வேன், மாலையில் 4:45க்கு கே.வீ . ஆர் பஸ் பிடித்து 4:55க்கு வருவேன். வரும்போது அங்குள்ள இரண்டு சினிமா தியேட்டர்களில் என்ன படம் ஓடுகிறது என்று பார்த்து வந்து சுதாவிடம் அன்று மாலைக்கு சினிமா சென்று விடுவோம். கண்ணியப்ப , புவனேஸ்வரி இரண்டு தியேட்டர்கள் இருக்கிறது. சிவன் கோயில் சென்று ஸ்வாமி தர்ஷனம் செயது அம்பாள் அருள் பெற்று வருவோம். அங்குள்ள தேங்காய் கடைக்காரர் நட்பைப்பெற்றோம். கேசவ நாயக்கர் கடை அது. அவரது மகன்கள் நடத்தி வந்தார்கள். பெரியவர் நித்தியானந்தம், சுகுனன், சக்தி, முரளி, பாண்டு  மற்றோருவர் என நடத்தி வந்தனர். அங்கு மாலைப்பொழுதைக்கழிப்பேன். பிறகு வீடு வந்து சேருவேன்.  

ராஜாவிற்கு ஒருவர் தாயத்து காட்டினார். ஒரு நாள் இரவு அழ ஆரம்பித்தவன் நிற்கவேயில்லை. நானும் சுதாவும் ராஜாவைத் தூக்கிக்கொண்டு கண்ணியப்ப தியேட்டர் அருகில் ஒருவரிடம் சென்று காண்பித்தோம். அப்போது அந்த தாயத்தை கழற்றி எறிந்து விட்டோம் .

பிறகு சரியாயிற்று, உறங்கினான். சாந்தி வசந்தியிடம் விளையாடி மகிழ்வான். சித்ரா ஜெயந்தி மாமி அனைவரும் உற்ற துணையாக இருந்தார்கள். அங்கிருந்த சங்கு குளத்தில் லட்ச தீப உட்சவம் நடந்தது.  

அந்தக்குளத்திலிருந்து 12 வாதங்களுக்கு ஒருமுரளி ஒரு சங்கு வரும், அதை கோயிலில் வைத்து பாதுகாத்து வந்தனர்.  வேதகிரீஸ்வரர் கோயிலில் மலை மேல் இரண்டு கழுகுகள்  சரியாக மதியம் குருக்கள் கொண்டுவரும் பிரசாதத்தை உண்டு பறந்து செல்லும். தினம் அது வருவதைக்கான பக்தர்கள் வருவார்கள். 1979 டிசம்பர் வரை அங்கு இருந்தோம். 

கல்பாக்கத்தில் அருகில் உள்ள ஊர்களில் வசிப்போர் தங்களது வீடுகளை வேண்டியவர்களுக்கு ஆபீஸ்க்கு தெரிவிக்காமல் வாடகைக்கு விடுவார்கள்.  அந்த வகையில் பண்ணாரி என்பவரிடம் பேசி சிங்கள் யூனிட் வீடு (ஒரே ரூம் சமையல் அறை , பாத்ரூம் உடன்) எடுத்துக்கொண்டு வசித்தோம் . பிறகு டபுள் யூனிட்டில் வசித்தோம். அருகில் முருகன் என்பவரும் வசித்து வந்தார். அப்போது ஒரு நாள் எனது நெய்வேலி மாமா வந்தார். 

பிறகு 9 டைப் வீடு பார்த்து அதில் வசித்து வந்தோம். ஒரு ஹால் , ஒரு சமையல் ரூம் என்று இருக்கும். அப்போது நான் ஹைதெராபாத் E C I L  ஆபீஸ்க்கு நான், சுப்பா ராவ், S .R .சிங் மூவரும் ஆளுக்கு 15 நாள் என்று சென்றுவருவோம்.  

1981 ம் வருடம் டிசம்பர் மாதம் எனக்கு வீடு கொடுக்கப்பட்டது. 7 டைப் வீடு 31, 5th அவின்யூ வில் வாசிக்க ஆரம்பித்தோம். எதிர் வீட்டில் நண்பர் திருவேங்கடசாமியும், மேலே பெரியசாமியும்,அதற்க்கு மேலே சாரங்கபாணி என்பவரும் இருந்தனர்.

எதிர் வீட்டில் திருவேங்கடசாமி, மேலே இரண்டாவது மாடியில் சத்தி ராஜ் என்பவரும் இருந்தனர்.

இங்கு 15 வருடங்கள் வசித்து வந்தோம். அதன்பிறகு சட்ராஸ் கிழக்கு 49 நம்பர் வீட்டில் இருந்தோம்.

ஒரு வருடம் கழித்து 15, முதல் அவின்யூ வில் வசித்த விஜேந்திர ராவ் ஒய்வு பெற்றதைத்தொடர்ந்து அந்த வீட்டிக்கு நாங்கள் வந்தோம். 

2010 ஜூன் மாதம் 30 ம் தேதி ஒய்வு பெரும் வரை வசித்து வந்தோம். ஒய்வு பெற்றபிறகு ஆகஸ்ட் மாதம் காலி செய்து சென்னை வந்தோம் அம்பத்தூர் வந்தோம். அங்கிருந்து திருவல்லிக்கேணி சுதா வீட்டிற்கு வந்தோம். 

ஆபீஸில் 1977 ஜூன் 1ம் தேதி சேர்ந்து SA /B ஆக சேர்ந்து , 1980 ல் SA /C , பிறகு 1984ல் SO /B , பிறகு 1988ல் SO /C , பிறகு SO /D , பிறகு SO /E , இறுதியாக 2009 ல் 

SO /F ப்ரோமோஷன் பெற்று 2010 ஜூன் மாதம் 30ம் ஒய்வு பெற்றேன்.

SO /E ,  SO /F ப்ரோமொஷன் பெறுவதற்கு நேர்காணலுக்கு பம்பாய்ச்சென்று பதவி உயர்வு பெற்றேன். 

1982 முதல் 1984 வரை ஹைராபாத் ECIL சென்று வந்தோம். அப்போது ECIL ஹாஸ்டலில் தங்கி வருவோம். ஆபீஸ் அருகிலேயே உள்ளது. மாலை நேரம் அங்கிருந்து ஒரு ஒரு இடமாக ஆபீஸ் பஸ்ஸில் சென்று சுற்றிப்பார்த்து வருவேன். தெலுங்கு படங்கள் பார்த்து வருவேன்.

ஆபிஸில் பலவித எலக்ட்ரானிக்ஸ் கருவிகளை பார்த்து பரிசோதித்து வாங்கி பரிசோதனை சாலை உருவாக்கினோம்.

எனக்கு மேலாளராக R .சுப்பா ராவ், S .R சிங் இருந்தனர், பிறகு S.ராமச்சந்திரன்,  C .P பிள்ளை அதற்கு மேலே P .R வேணுகோபால் இருந்தனர். வேணுகோபால் பிறகு A .T . வாசுதேவன் வந்தனர். இப்படியாக பலருடன் சேர்ந்து வேலை செய்ய வாய்ப்பு கிடைத்தது. அதில் பலவித லாப நஷ்டங்கள் இருந்தது. அதைப்பற்றி இங்கு வேண்டாம்.

எனக்கு மேலே இருந்த S .ராமச்சந்திரன், C .P .பிள்ளை கொடுத்த தொந்தரவுகளால் இன்ஸ்ட்ருமெண்ட்டேஷன் பிரிவிலிருந்து 1995ல் திரு . S L .நரசிம்ஹன் பாதுகாப்புப்பிரிவில் இருந்து என்னை அங்கு வருகிறாயா என்று கேட்டார். நானும் சரி என்று தொழிற்பாதுகாப்புப்பிரிவிற்குச் சென்றேன்.  அவர் தயவால் முதல் காரியம் ஆஃபீஸிலிருந்து 

வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள தடையில்லா சான்றிதழ் பெற்றேன். (No Objection Certificate ).

1997ல் பிராந்திய தொழிலாளர் நிறுவனம், சென்னை (R .L .I . சென்னை ) யில் ஒரு வருட Safty Diploma தொழிற்ச்சாலை பாதுகாப்பு டிப்ளமோ படிப்பு படித்தேன். 1997ல் நாங்கள் சடராஸ் கிழக்கு வீட்டில் வசித்து வந்தோம். திங்கள் காலை கல்பாக்கத்திலிருந்து  R .L .I . சென்னை அடையாறு வருவேன். மாலையில் திருவல்லிக்கேணி சுதாவின் வீட்டிற்குச்செல்வேன். வெள்ளிள்ளிக்கிழமை மாலை கல்பாக்கம் வருவேன். இப்படியாக ஒருவருட படிப்பு படித்தேன். இதில் சுவாரஸ்யமான விஷயம் ஒன்று உள்ளது. இந்தபடிப்பு படிக்க , நான் முன்னதாக படித்த கல்லூரியிலிருந்து பரிமாற்றச்சான்றிதழ் கொண்டு வரவேண்டும் என்றனர். அதனால் 1970ம் ஆண்டு வரை படித்த பாலிடெக்னிக் சென்று அங்கு முதல்வரிடம் விவரம் சொல்லிக்கேட்டேன். 27 வருடம் கழித்துக்கேட்டால் எப்படி என்றார். அங்கு வேலை செய்யும் வடிவேலு என்பவர் அன்றும் வேளையில் இருந்தார். அவரிடம் பழக்கம்  இருந்ததால் , என்னுடைய படித்த எண் விவரம் இருந்ததால் , நான் பரிமாற்றச்சான்றிதழ் வாங்கவில்லை என்பதாலும், என்னுடைய சான்றிதழ் இருந்தது . முதல்வர் கையொப்பம் பெற்று R .L .I . சென்னை யில் கொடுத்து ஒரு வருடம் படித்தேன். 

இது ஒரு டிப்ளமோ படிப்பு, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் பிரிவில் வருகிறது. எட்டு பாடங்கள் , இரண்டு செயல் பிரிவுகள் (Laboratory ) என பரிட்சை எழுதவேண்டும். project work ப்ராஜெக்ட் வேலை, assignement  என்று இரண்டு புத்தகங்கள் எழுதிக்கொடுக்கவேண்டும்.

முதல் 4 மாதங்கள் ஜூன் முதல் செப்டம்பர் வரை வகுப்புகள் நடக்கும். காலை 9:30 மணி முதல் 1 மணி வரை, மதியம்  2 முதல் மாலை 5:30 மணி வரை பலவித வகுப்புகள் நடக்கும். ஓஸோபெர் மாதம் தன்னுடைய ஆபீஸ் சென்று ப்ராஜெக்ட் வேலை முடிக்கவேண்டும். ஆபீஸ்க்கு உதவும் வகையில் ப்ராஜெக்ட் செய்யவேண்டும், அதுவும் மேல் அதிகாரிகள், R .L .I .அதிகாரிகள் ஒப்புதலுடன் இருக்கவேண்டும். ஓஸோபெர் மாதம் 15 நாட்கள் தொழிற்ச்சாலைகள் டூர் Tour சென்று பார்த்து வர வேண்டும். நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி வரை வகுப்புகள் நடக்கு. ஏப்ரல் மாதத்தில் பரீட்ச்சை எழுதவேண்டும்.  உள்ளூர் தொழிற்ச்சாலைகள் பார்த்து வரவேண்டும்.

முதலில் பெங்களூரு சென்று நிறைய தொழிற்ச்சாலைகள் பார்த்தோம். இரண்டாவதாக சென்னையில் உள்ள தொழிற்சாலைகள் பார்த்தோம்.

நான் ப்ராஜெக்ட் ஒர்க் சோடியம் பயன்பாடுகள் குறித்து தயார் செய்தென். மற்றது தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (PPE ) பற்றி எழுதினேன். பரிட்சை மடிந்தது , ப்ராஜெக்ட் ஒர்க் முடிந்தது.  ப்ராஜெக்ட் ஒர்க் முடிக்க 10 நாட்கள் இரவு 10 மணி வரை ஆஃபிஸில் வேலை செயது முடித்தேன். பிள்ளைகள் இந்த 48 வயதில் இந்த உழைப்பு தேவையா என்றனர். அதன் பலன் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று தொழிற்ச்சாலை பாதுகாப்பு ஆஃபீஸர் ஆகா பனி புரிந்தேன்.  AERB வருடாந்திர இன்ஸ்பெக்ஷன் வேலைகள் செய்தென்.  மாதாமாதம் மீட்டிங் நடத்தி வேலை செய்யும் இடத்தில் பாதுகாப்பு அவசியத்தை உணர்த்தி வேலை செய்தென்.


வீட்டு கதைக்கு வருவோம்.  பாமா கல்யாணம் முடிந்து குரு, லதா,சுமதி அன்று பிள்ளைகளுடன் அவரவர்க்கு மனம் முடித்து அவரவர் குடும்பத்துடன் மக்களுடன்  சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள்.   பாமா பாவா இருவரும் இயற்கை எய்தினார்கள்.

பிருந்தாவிற்கு திருநெல்வேலி மாப்பிள்ளை பார்த்து மனம் முடித்து இரண்டு மகன்கள் ஒரு மகள் என வளர்ந்து வந்தனர்.  பிருந்தா பாவா இருவரும் அகால மரணம் அடைந்தனர். கோவர்தனகிரியில் தனி அதிகாரத்துடன் இருந்தனர். அவர்கள் மரணத்த்திற்குப்பின் அவர்கள் மகளான சூர்யகலாவிற்கு ராஜாவை முடிக்க பேசி என்னிடம் அனுமதி கேட்க நானும் சரியென்று க்கூறினேன். அவர்களது திருமணம் 2004 நவம்பர் மாதம் 118ன் தேதி போரூரில் சங்கீத கல்யாண மண்டபம் ( நடிகர் விஜய் மண்டபம்) அதில் நடந்தது. ராஜா B .E கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரியதர்ஷினி காலேஜ் வாணியம்பாடியில் படித்தான். சூர்யா BSc பையோடெக் படித்து journalism ஜௌர்னலிசம் படித்தாள். ராஜா சூர்யாவை தன்னுடன் மொரிஷியஸ் அழைத்துச்சென்றுவிட்டான். அங்கு சில காலம் இருந்தனர். அப்போது எங்களையும் அழைத்துச்சென்று 35 நாட்கள் இருந்து பார்த்து வந்தோம். பிறகு அங்கிருந்து USA அமெரிக்கா சென்று வாழ்ந்து வருகின்றனர். ஆசைக்கு ஒரு மகள் சஹானா ராஜ் என்ற பெயருடன் படித்து வருகிறாள். சூர்யா பலவித வழிகளில் தன திறமையைக்காண்பித்து வருகிறாள். ராஜா கம்ப்யூட்டர் செயலில் நுட்பங்களை அறிந்து செயல் பட்டு வருகிறான். எங்களையும் 5 முறை அழைத்துச்சென்று எல்லா இடங்களையும் காண்பித்து வருகிறான். 


அடுத்து சந்திரா , அவளுக்கு மார்கண்டேயன்கோட்டை வரன் பார்த்து, உத்தமபாளையம் மாமா குடும்பத்தில் கிருஷ்ணா ராவ் அவர்கள் மகன் அனந்தபத்மநாபன் அவர்களுடன் மனம் முடித்து ஆசைக்கு ஓவர் மகள், ஆஸ்திக்கொரு மகன் என்று கார்த்திக் என்ற குருராஜன் ஆனந்த், சுதா என்று இருவரையும் வளர்த்து மனம் முடித்து, கார்த்திக் அமெரிக்காவிலும், சுதா லண்டனிலும் வசித்து வருகின்றன. கார்த்திக்கிற்கு பரினீதா என்ற பெண்நும், சுதாவுக்கு இரண்டு மகன்கள், ஒரு பெண் என்று வளர்ந்து வருகிறார்கள். சந்திரா பாவா உடல் நலக்குறைவால் மரணத்தைத் தழுவினார். கார்த்திக் பொறுப்பாக இறுதிக்காரியங்களை முடித்து அம்மா சந்திராவை தன்னுடன் அமெரிக்காவிற்கு அழைத்துச் சென்று விட்டான்.

அடுத்து அனந்தபத்மநாபன் (அனந்து)  Maths கணக்குப்பிரிவு படித்து சென்னை யில் சோழமண்டலம் கம்பெனியில் வேலை பார்த்து, பிறகு மஸ்கட் சென்று வேலை பார்த்தான். பிறகு ஜெயந்திக்கு மனம் முடிக்கப்பட்டது. அசோக் நகர் சேஷசாயீ ருக்மணி அம்மாள் இவர் மகள் ஜெயந்தி. அப்பா ரயில்வேயில் வேலை, அம்மா தமிழ் எழுத்தாளர், பள்ளி மேலாளர் என்று புகழ் பெற்றவர். அணைந்து இருவரும் அமெரிக்காவில் குடிஉரிமை பற்று பல வருடங்களாக வாழ்ந்து தங்கள் இரண்டு மகள்கள் சினேகா , சாதனா ராவ் இருவருக்கும் அங்கேயே மனம் முடித்து , சினேகா ஜேசன் பெக், மற்றும் சாதன ராவ் சிவம் வாழ்ந்து வருகின்றனர். சினேகா பெக் அவர்களுக்கு கேட்டேன் பெக், மாயா எண்று மகன் மகள் வளர்ந்து வருகிறார்கள்.  அனந்தவிற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மாற்று அறுவைச்சிகிச்சை நடந்து நலமாக வாழ்ந்து வருகிறார்கள்.

அடுத்து ராகவேந்திரன் ஆறாவது பிள்ளை மூலம் நட்சத்திரம் ஆன் மூலம் அரசாளும் என்பதற்க்கேற்ப  , விஜி என்கின்ற விஜயலட்சுமியை மனம் முடித்து அமெரிக்காவில் வெகு வெகு சிறப்பாக இரண்டு பெண்களுடன் குடும்பம் நடத்தி வருகின்றனர். விஜி யின் அப்பா வெங்கட் ராவ் அமைதியான சாது மனிதர், மனைவியுடன் குடும்பம் நடத்தி வருகிறார்கள். அவருக்கு 82 வயதாகிறது. அவர்களு தங்கள் மகன் ராஜேஷ் சந்தோஷி யுடனும், மகள் விஜி ராகவுடனும் அமெரிக்காவில் குடியிர்மை பெற்று வாஸ்த்து வருகிறார்க. ராஜேஷ் சந்தோஷிக்கு ஒரு மகள் வளர்ந்து வருகிறாள். விஜி ராகாவிற்கு இரண்டு மகள்கள் லேகா, மாளவிகா என்று வளர்ந்து, லேகாவிற்கு அலோக் டேவ் என்பவருடன் மனம் முடித்து வாழ்ந்து வருகிறார்கள். மற்றவள் மாளவிகாவிற்கும் திருமணம் நிச்சயமாகியிருக்கிறது.


பிருந்தா பாவா ராகவேந்திரன் அவர்களின் குமரத்தியை எங்களது மகன் ராஜாவிற்கு மணமுடித்தோம். அடுத்து ரங்கா என்ற ரங்கநாதன் இருமுறை ஹாங்காங் சென்று வந்தான். அப்பா அம்மா இறந்ததால் திரும்பி வந்து விட்டான். அவனுக்குப் பெண் பார்க்க வேண்டியதாயிற்று. அவனும் எங்களுக்கு ஒத்துழைத்தான். மற்றோரு ரங்காராவ் என்பவர் SBI யில் பணி புரிபவர் மகள் அர்ச்சனாவை பெண்பார்த்தோம். அன்று ஞாயிற்றுக்கிழமை 3 மணிக்கு பம்மல் சென்று அவர்கள் வீட்டில் பெண் பார்க்கும் படலம் நடந்தது. ரங்கா வும் சரியென்றதால் ஆண்ட்ரே மாலை 6 மணிக்கு மேல் மற்ற விஷயங்கள் பேசினோம். நிசசயதார்த்தம் வியாசராஜா மடத்தில் நடந்தது. திருமணம் ஆகஸ்ட் 31ம் தேதி நடந்தேறியது. ரங்கா அர்ச்சனா ஆசைக்கொரு மகளாக வர்ஷாவை பெற்று வளர்த்து நன்கு படிக்கவைத்து ஆளாக்கினார். ரங்கா அர்ச்சனா வர்ஷா பம்மலில் அவர்களது (அர்ச்சனா) அப்பா அம்மா இருக்கும் வீட்டிற்கு அருகேயே ஒரு வீட்டில் சந்தோஷமாக வசித்து வருகின்றனர்.

அடுத்து மூர்த்தி என்கிற சத்யநாராயணா உடல் நலக்குறைவால் மரணம் ஏய்தினான். 

ரங்கா கோவர்தனகிரி வீட்டை மாற்றம் செயது அபார்ட்மெண்ட் கட்டினான்.


நம் கதைக்கு வருவோம். இங்கு அம்பத்தூர் கற்ற அனுபவங்கள் பார்ப்போம்.

அப்பா வீட்டிற்காக ரூபாய் 5000/- அம்பத்துர் சாஸ்வத நிதியில் கடன் வாங்கினார். அவரது நண்பர் சுந்தரம் உதவினார். மற்றும் ஆதம்பாக்கம் நிதியில் கடன் வாங்கி இருந்தார். மாதம் தோறும் அதை அங்கு சென்று கட்டி வந்தேன். 

அப்பா 45 வருடங்கள் தோரும் மார்கழி மாத விடியற்காலை பஜனை செய்து ஜனவரி மாத இறுதி வாரம் சனி ஞாயிறு கிழமைகளில் ராதா கல்யாணம் நடத்தி வந்தார். எங்கள் வீட்டின் முன் இருந்த காலி இடத்தில் பந்தல் போட்டு படர விநாயகர் சந்நிதி எதிரில் விமரிசையாக நடத்தினார். நண்பர்கள் கோபால், ராமஸ்வாமி, நரசிம்மன், ராம ராவ், B N  சுக்கல்  , சப்தரிஷி மாமா, R .S .  மணி மாமா மற்றும் பலர் உதவியுடனும் அவர்கள் மூலம் வசந்த், ஏகாம்பரம் போன்றவர்களிடம் நண்கொடை பெற்று இரண்டு நாட்கள் விமரிசையாக நடத்தி வந்தார். திரு.ராமகிருஷ்ண ஐயங்கார் அவர்கள் தலைமையில் பல பாகவதர்கள் கலந்துகொண்டு சிறப்பாக நடத்தி வந்தார். இரண்டு நாட்களும் எங்கள் வீட்டின் பின்புறம் சமையல் , வீட்டில் எல்லா அறைகளிலும் சாப்பாடு போடப்பட்டது. பாகவதர்கள் சம்பாவனை ஆசீர்வாத மந்திரங்கள் ஓத பல மந்திராட்ஷதை பெற்று பகவத் அருள் பெற்றோம். அம்மா பெரிதும் உதவினார்கள். 

கண்ணன் அவர்கள் P .A .சிஸ்டம் (மைக், ஸ்பீக்கர்) அண்ட் லைட்டிங் , ராதாகிருஷ்ணர் பெரிய படம் ராஜகோபால் ராவ் அவர்கள் வீட்டிலிருந்து கொண்டு வருவோம். மறு  தினம் இரவு ஆஞ்சநேய உத்சவம் முடிந்தபிறகு பஜனை நாமாவளி சொல்லியபடி ஆரத்தி எடுத்தபிறகு கொண்டு சேர்த்து விடுவோம்.  

சனிக்கிழமை மதியம் தோடய  மங்களம் ஆரம்பித்து குரு கீர்த்தனைகள் வரிசைக்கிரமமாக பாடி, அஷ்டபதி 12 வரை பாடி மதியம் உணவிற்கு சிறிது நேரம் ஒதுக்குவோம். 2 மணிக்கு 12- 24 அஷ்டபதிகள் பாடி, தரங்கிணி  கீர்த்தனைகள் பாடி , பாதராஜல ராமதாஸ் கீர்த்தனை, புரந்தர தாஸர் , ரங்கவிட்டலர்  சதாசிவ ப்ரஹ்மேந்திராள் , ஸ்ரீ கோபாலகிருஷ்ண பாரதி , ஒத்துக்காடு மஹாகவி  ஸ்ரீ வேங்கட சுப்பைய்யர் , ஸ்ரீ தியாகராஜர், கபீர் தாஸ் , மீரா பாய் கீர்த்தனைகள் என நேரத்திற்கேற்ப பாடி மாலை நேரம் இளைப்பாறிவோம். இரவு உணவிற்குப்பிறகு பூஜாதித்யாநாம் , திவ்யநாமம் டோலோட்சவம் என்று பாடி மகிழ்வோம்.  பூஜோபசார கீர்த்தனைகள் பாடி, கோபிகா கீதம் பாடி அங்கனாம் அங்கனாம் பாடி ஸ்வாமியை சயனோத்சவம் படுக்கவைத்து நாலு புறமும் காவலுக்கு நின்று , காலையில் ஸ்வாமிக்கு முன் கண்ணாடியில் ஸ்வாமி தர்ஷனம் காண்பித்து பால் பருகக்கொடுத்து மங்களம் பாடி முடிப்போம்.  காலை 5 மணி வரை முடிந்தவுடன், நேராக குளித்துவிட்டு ராதா கிருஷ்ண லக்ஷர்ச்சனை செயது, உஞ்சவிருத்தி பஜன் , இரண்டு வீதிகள் சென்று வருவோம். கிருஷ்ணரை அழைத்துக்கொண்டு ராதா இருக்கும் வீடு சென்று இருவரையும் ஆராதித்து நாமாவளி பஜனையோடு மணப்பந்தலுக்கு அழைத்துவருவோம். பெண் வீட்டார் சீர் பட்சணங்களை பெண்கள் தட்டுகளை பஜனையோடு எடுத்து வருவோம்.  

      சுருக்கமாக தோடய மங்களம், குரு கீர்த்தனை கல்யாண அஷ்டபதி பாடி கௌரி கல்யாணம் பாடி, முத்துக்குத்தல் லலிதா லவங்க அஷ்டபதி (3வது) பாடி பாகவதர்கள் நர்தனமாக முத்துக்குத்தல் செய்த அட்ஷதயை ஸ்வாமிக்கு சேர்ப்பித்து, கோலோலக வ்ருத்தாந்த சூர்ணிகை ராதா க்ருஷ்ணர்களது சொல்லி  (பூர்வம்)  ஆஞ்சநேய உத்சவம் கீர்த்தனைகள் பாடி , மாங்கல்யம் அணிவித்து மங்களாரத்தி செயது முடிப்போம். 

பிறகு, பாகவதர்கள் ஆசீர்வாதம் மந்திரங்கள் ஓதி நமஸ்கரங்கள் செய்து  அருள்மற்றும்  பாகவதர்கள் ஆசீர்வாதம் பெறுவோம். மாலையில் 5 மணி முதல் 7 மணி வரை, கச்சேரிகள், பிரவசனம், உபன்யாசங்கள் கேட்போம். T S .பாலகிருஷ்ண சாஸ்திரிகள் காலட்ஷேபம் , வயலின் கச்சேரிகள் போன்ற நிகழ்ச்சிகள் ஏற்பாடு செயது கேட்போம். இரவு ஸ்வாமிக்கு மங்களாரத்தி செயது நாமாவளியோடு பழைய போஸ்ட் ஆபீஸ் ரோடு  ராஜகோபால் ராவ் வீட்டிற்கு எடுத்துச்சென்று கற்பூர ஆரத்தி எடுத்து ப்ரசாதத்துடன் முடிப்போம்.

இது செய்யும்போது அப்பா அம்மா எனக்கு பிருந்தாவிற்கு கண்களில் நீர் பெருகும். பிறகு அன்று இரவே சீர் பட்ஷானங்களை பொட்டலமாக்கி உபாயதாரர்களுக்கு கொடுக்க எடுத்து வைப்போம். இவ்வாறாக அப்பா 45 ராதாகல்யாணம் நடத்தி மகிழ்ந்தோம்.  அப்பா பத்ர விநாயகர் கோயிலுக்கு  சந்தா வசூலிக்க எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பது எனக்குத்தெரியும். ரூபாய் ஒன்று, இரண்டு என்று ராமகிருஷ்ணன் போன்றவர்களிடம் வசூலித்து குருக்கள் டுரைஸ்வாமியிடம் கொடுப்போம். அவருக்குப்பின் அவரது மகன் பாலு வருவார். அவரது மகன் வருவார். கோயில் சாவியையும் அபிஷேசத்திற்கு நீர் எடுக்க குடத்தையும் அம்மா எடுத்துக்கொடுப்பார். பிற்காலத்தில் அம்மாவின் உடல் நலக்குறைவால் குடத்தையும் சாவியையும் வைத்துக்கொள்ள எதிர் வீட்டில் இருந்த ராம்நாராயன் அவரது மனைவியிடம் கூறியபோது வைத்துக்கொள்ள மறுத்துவிட்டார்கள். அம்மா 1998 ம் வருடம் டிசம்பர் மாதம் 11ம் நாள் இறந்தார்கள். அதற்க்கு முன் 1996ல் உடம்பு முடியாமல் படுத்துவிட்டார். தெற்கு பார்க் தெருவில் உள்ள டாக்டர் ராகவேந்திரன் அவர்களை அழைத்து வந்து பார்க்கச்சொன்னார்கள். அவர் உள்ளேயே வராமல் பிள்ளைகளுக்குச்சொல்லி அனுப்புங்கள் அன்று கூறிச்சென்றுவிட்டார். எனக்கு போன் செய்து  நான் கல்பாக்கத்திலிருந்து அம்பத்தூர் வருவதற்கு மதியம் 3 மணி ஆகியது.  அப்பா நான் பிருந்தா மூவரும் காரில் அம்மாவை பின் இருக்கையில் படுக்கவைத்து கால்கள் வெளியே நீட்டியபடி , ரபீந்திரநாத் டாக்டர், டாக்டர் பட் மற்றும் stead ford ஹாஸ்பிடல், மற்றும் இரண்டு டார்கள் கிளினிக்கிற்கு அழைத்துச்சென்று காண்பித்ததில் , இவர் சுகர் (sugar ) நோயாளி, அதனால் வேறு ஹாஸ்பிடல் செல்லவும் என்றனர். அப்போது ஸ்ரீகாந்த் அண்ணா நகர் SMF ஹாஸ்பிடல் , தேவி ஹாஸ்பிடல் கூறினான். எனக்கு SMF ஹோச்பிடலில் CHSS வசதி உள்ளது. அங்கு அழைத்துச்சென்று டாக்டர் சேஷாத்திரியைப்பார்த்தோம். இரவு 11 மணிக்கு மேல் ஆகிவிட்டது. அவரிடம் நீங்கள் பார்க்கிறீர்களா என்றும், வெளியே கார் நிற்கிறது, அனுப்பிவிடவா என்றும் கேட்டோம். அவர் காரை அனுப்பிவிடுங்கள், நான் பார்க்கிறேன் என்றார். நன்றாக குணமடைந்து இரண்டு வருடங்கள் இருந்து பிறகு 1998 டிசம்பர் 11ல் இறந்தார். அம்மாவின் காரியங்களை அம்பத்தூர் வீட்டிற்கு முன்புறம் நடத்தினோம். ராகவேந்திரன் வந்திருந்தான். அனந்து வரவில்லை. நாகராஜா அசார் பிறகு அனந்து வரும்போது 10 நாள் காரியம் செய்யவேண்டும் என்றார்.

அப்பா தனியாக அவர் முன்புறம் கட்டிய வீட்டில் வசித்து வந்தார். பிருந்தா வந்து பார்த்துக்கொள்வார். அப்பா உடல் நலக்குறைவாக இருக்கும்போது கிட்ட என்ற கிருஷ்ணமூர்த்தி  கோயில் கணக்குகளைக்கொடுக்குமாறுக்கேட்டுக்கொண்டு நான் பார்த்துக்கொள்கிறேன் என்றான். R S மணி முன்னிலையில் பெற்றுக்கொண்டான். 2001 ஜனவரி மாதம்  அப்பாவை கல்பாக்கம் வருமாறு அழைத்தோம், அவர் மறுத்துவிட்டார். பிறகு அவரை கல்பாக்கம் அழைத்து வந்தோம். டாக்டரிடம் காண்பித்ததில் அவர் மருந்துகள் கொடுத்திட்டார். அப்பா கல்பாக்கம் வந்ததில் மிகவும் மெலிந்து விட்டார். 

வீட்டிற்கு வெளியே உட்காருவார். சுதாவிடம் ஆட்டோ வந்து விட்டதா கேட்பார், அம்பத்துர் போகவேண்டும் என்பார். சிறிதுநேரம் கழித்தது சரி வீட்டிற்கு போகலாம் என்று வந்து விடுவார். வீட்டிலேயே அறையில் மலஜலம் கழிக்க ஆரம்பித்தார். சுதாவிடம் நீ எவ்வளவு அழகாக பார்த்துக்கொள்கிறாய் என்று வாழ்த்திடுவார். அந்த வாழ்த்துக்கள் தான் இன்று நாங்கள் சுகமாக இருப்பதற்குக்காரணம். பிருந்தா எங்களிடம் இங்கு வந்து SMF ஹாஸ்பிடலில் காண்பிக்க வற்புறுத்தியதால் சென்னைக்கு SMF ல் காண்பிக்க டாக்டரிடம் கடிதம் வாங்கினோம். டாக்டர் அங்கு செல்வதால் பிரயோஜனமில்லை என்றார். இருப்பினும் கேட்பதால் கொடுக்கிறேன் என்றார். அப்போது ராகவேந்திரனுடன் நானும் சுதாவும் காரில் கிளம்பினோம். வழியில் பல்லாவரம் பஸ் நிலையம் அருகில் வரும்போது வேஷ்டியிலேயே மாலா கழித்து , அருகில் உள்ள ஹோட்டலில் ரூம் எடுத்து அப்பாவிற்கு உடைகள் மாற்றி சரிசெயது கிளம்பி அம்பத்தூர் வந்து சேர்ந்தோம்.  என் வீடு நிலம் சரியாக உள்ளது. 1987ல் அப்பாவிடல் ரூபாய் 30000/-க்கு sale deed விற்பனைப்பத்திரம் பதிவு செய்தோம். ஆனால் அணைந்து ராகவேந்திரன் நிலம் எதுவும் செய்யவில்லை. அப்பா பெயரிலேயே இருந்தது.  வீட்டின் முன்புறம் இன்ஷா 1/2 கிரௌண்ட் நிலம் தன்னுடையது என்றும் என் வீட்டின் நிலத்திலிருந்து பின் புறம் சுக்கை தெரு வரை உள்ள நிலத்தில் பாதி அவருடையது என்றும் பாத்திரம் உள்ளது என்றும் சொல்லி,  முன் புறம் நிலத்தை உங்களுக்குக்கொடுத்துவிடுகிறேன், பின் புறம்  நிலத்தை எனக்குக்கொடுத்துவிடுங்கள் என்று கேட்டார். இல்லையெனில் முன்புற நிலத்தில் நான் பேக்டரி factory வைப்பேன் என்றும் கூறினார். அப்படி செய்தால் அணைந்து வீட்டிற்குச்செல்ல வழியில்லை என்பதாலும், கோர்ட் விவகாரம் பல வருடங்கள் ஆகும் என்பதாலும், அப்பா அதற்க்கு ஒப்புக்கொண்டு முன் புறம்  நிலத்தை அப்பா வாங்கிக்கொண்டார். பின்புற நிலத்தை அவர் வாங்கி வீடும் கட்டிக்கொண்டார்.  இது சரியல்ல என்பதற்கு சாட்சி,  அவரும் அவரது மகனும் இறந்து விட்டனர். அப்பா அதில் வீடு ராகவேந்திரன் மூலமாக கட்டி அதில் வாழ்ந்து வந்தார். 

கோயிலை தன வசம் ஆக்கிய கிட்டா சிறிது விளையாட ஆரம்பித்தான். முன்புற நிலத்தில் ரதகல்யாணம் செய்ய அப்பா ஆரம்பித்தார். அதனால் அந்த நிலத்தை தனக்குக்கொடுக்கும்படி கேட்டான். அதற்க்கு அப்பா அப்படி எதுவும் சொல்லவில்லை மாறாக தானே வீடு கட்டி அதில் வாழ்ந்து வந்தார். அதனால் நிலத்தைக்கொடுக்கமுடியாது என்றும் திட்டவட்டமாகக்கூறிவிட்டேன்.  என்னுடைய நிலத்தில் பிரச்னை இல்லை. முன்புற நிலத்தைக்கொடுத்தால் வீட்டின் வழியில்லை, இது ஒருபுறம் இருக்க,  அது ராகவேந்திரன் நிலம், அதைக்கொடுக்க எனக்கு அதிகாரம் இல்லை. இது 3 பேர் சம்பத்தப்பட்ட விஷயம் அதனால் அது கொடுக்கமுடியாது என்றும் , இந்த 35 வருடங்கள் என்னக்கு கிட்டாவிற்கும் எந்தவித சம்பந்தமுமில்லை, அதுவரை அவன் நடத்திய எந்த விழாவிற்கும் எங்களுக்கு போனும் இல்லை, அழைப்பும் இல்லை. இந்த பேச்சு இதோடு முடிவடைந்தது என்றும் கூறி முடித்துவிட்டேன். அவரது அண்ணன் கோபால்  , அவரது மனைவி சரோஜா ஓசும்போதெல்லாம் இது பற்றிக்கேட்பார். நானும் நிலம் கொடுக்கமுடியாது, அது பற்றி பேச்சு வேண்டாம் என்றும் கூறி விடுவேன். அவரது அண்ணா பாலுவும் ஒருமுறை இதுபற்றி கேட்டான், முடியாது என்று கூறிவிட்டேன். அவன் வேறு சில நபர்கள் மூலம், என் திருவல்லிக்கேணியில் இருக்கும் நரசிம்மன் மூலம் கேட்கச்சின்னான், அவர் அதற்கு எனக்கு முரளிக்கு இருக்கும் பேச்சு நின்றுவிடும், நான் கேட்கமாட்டேன் என்றும் தெரிவித்தார். 

பஜனைக்கு வரும்போதும் இது பற்றிக்கேட்பார், இதுபற்றி பேச்சு வேண்டாம் என்றும் கூறிவிட்டேன்.

அப்பாவின் நிலங்கள் சுமார் ஒன்றரை ஏக்கர் நிலம் சிந்தலவாடியிலிருந்தது. அதை அன்று இருந்த சோழன் அம்பலக்காரர் , பிறகு அவரது மகன் வீரமலை அதன்பிறகு அவரது மகள் இந்திராணி பார்த்துக்கொண்டிருந்தார்கள். அப்பாவுடன் பெரியப்பா நிலமும் இருந்தது. பெரியப்பாவின் பேச்சுக்கு அவருக்கு அவ்வப்போது பணம் கொடுத்துவிடுவார். அப்பாவிற்கு கொடுக்காமல் கல்யாணகளின் போது சிறிது சிறிதாகக்கொடுத்து கணக்கு சரியாகிவிட்டது என்றும் கூறிவிட்டனர். 1995லேயே கணக்கு பூஜ்யம் ஆகிவிட்டது என்றும் அப்பா கைப்பட லெட்டர் கொடுத்துவிட்டார். அதை பதிவு செய்ய வருடங்கள் பல ஆகியது. வாரிசு உரிமைச்சான்றிதழ்  பெற நாட்கள் ஓடின. அதற்குள் பாமா , பிருந்தா பாவா இறந்துவிட்டதால் அவர்கள் வாரிசு ரங்கா சூர்யா பாமாவின் கணவர் பாவா அவர்களிடம் ஆதார் கார்டு  விவரம் மற்றும் அணைந்து ராகவேந்திரன், சந்திரா  என பலரது சான்றிதழ்களைப்பெற்று, அதற்க்காக அதற்காக நான் பெங்களூரு சென்று வந்தது என நாட்கள் ஓடின. ராகவேந்திரன் அனந்து சான்றிதழ்கள் பெற்று இந்திராணிக்கு அனுப்பி அவள் பதிவு செய்ய காலம் ஓடியது.  இறுதியாக ரங்கநாதனை எங்களுடன் வருமாறு கேட்டுக்க்கொண்டோம். அவனுக்கு எங்களுடன் வந்து நிலங்கள் மூன்று பாகமாக பதிவு செய்தனர். இந்திராணி அவர்களது அக்காவிற்கும், மற்றோரு அக்காவிற்கும், அக்கமகனுக்கும் என பிரித்துக்கொடுத்துவிட்டாள் .  இத்துடன் சிந்தலவாடி முடிந்தது.

சிந்தலவாடி நரசிம்மஸ்வாமி கோயில்.

அப்பாவுடன் பல இடங்களுக்குச்சென்று வரும் வாய்ப்பு, பல கஷ்ட நஷ்டங்களில் எனது பங்கு என பங்கு பெற்றதுண்டு. சிந்தலைவடிக்கு ப வருடங்களாக பலமுறை வஹீன்று வந்துள்ளேன். சோழன் அம்பலக்காரர், வீரமலை, இந்திராணி என பலரையும் பார்த்து வந்திருக்கிறேன். அனால் நிலங்கள் எண்டு உள்ளது என்ற கேள்விக்கு பாதி இல்லை, பார்க்கவும் இல்லை. திருச்சி செல்வோம்  அங்கிருந்து லாலாப்பேட்டைக்கு ற்றின் அல்லது பஸ் என செல்வோம். அங்கிருந்து லவுந் பஸ் பிடித்து சிந்தலவாடி கோயில் தரிசிப்போம் உணவருந்திவிட்டு மஹாதானபுரம் அல்லது கோல்தலை வந்து திருச்சிக்கு பஸ் பிடித்து ஹோட்டல் கல்பனாவின் இரவு டிபன் சாப்பிட்டுவிட்டு இரவி ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் பிடித்து சென்னைவந்து அம்பத்துர் வருவோம். கல்பாக்கம் வந்த பிறகு இரவு 11 மணிக்கு rockfort எக்ஸ்பிரஸ் ட்ரெயின் பிடித்து அதே வழி. மறுநாள் செங்கல்பட்டில் காலியில் 4 மணிக்கு வருவோம். உடனே ஒரு பஸ் கிளம்பும். ஆனால் ஓடி ஓடி வரவேண்டும், சிறிது நேரம் தப்பினால் 5:30க்குத்தான் அடித்த பஸ். பிற்காலத்தில் 5 மணிக்கு பஸ் என பலவாறாக கோயில் தர்ஷனம் செய்து வந்தோம் .

நான் தனியாகச்சென்றால் லாலாபேட்டையிலிருந்து கல்பாக்கம் பிரிஎந்து வானவரம்பன் என்பவர் லாலாபேட்டையில் துணிக்கடை வைத்துள்ளார். அவரிடமிருந்து சைக்கிள் ல் கோயில் சென்று தரிசித்து வரும் பொது கொடுத்துவிட்டு வருவேன்.

முற்காலத்தில் அப்பாவுடன் செல்லும்போது திருச்சியிலிருந்து லாலாப்பேட்டைக்கு, அல்லது மஹாதானபுரத்திற்கு ரயிலில் சென்று லவுந் பஸ் பிடித்து கோயிலுக்குச்செல்வோம்.

ஒருமுறை நானும் சுதாவும் அத்திம்மாவும் மஹாதானபுரம் இறங்கி அங்கிருந்து பால் வண்டி லாரியில் ஏறி கோயிலுக்குச்சென்று வந்தோம். ஆண்டு பஸ் strike , அதனால் பஸ் கிடையாது. ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் அ கோயிலுக்குச்சென்று வந்தோம். 



அப்பா அம்மா குருஜியின் பாகவத சம்மேளன சமாஜத்தில் அங்கத்தினராக இருந்து, யாத்திரைகளுக்குச்சென்று வந்தனர். 1988 ஜனவரியில் அப்பாவைப்பார்க்கச்சென்றேன். அன்றிலிருந்து இன்று வரை நானும் ஒரு அங்கத்தினராக இருந்து வருகிறேன். குருஜியுடன் ரிஷிகேஷ், ஹரித்துவார், குருவாயூர் என யாத்திரைகளுக்குச்சென்று வந்திருக்கிறேன். அங்கு சமூக சேவைகளில் பங்கு பெற்று என்னால் முடிந்த அளவு உதவி செய்தென். பூஜைகளில் பங்கு பெரும் வாய்ப்பு கிட்டியது. தென்னாங்கூரில்  உள்ள கோயில்களில்  நடக்கும் பூஜா காரியங்களில் பங்கு பெற்றேன். பாண்டுரங்கன் கோயில் கும்பாபிஷேகத்திலும் , மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தில் அங்கேயே சில நாட்கள் தங்கியிருந்து சேவை செய்யும் வாய்ப்பு கிட்டியது. கோபுர உச்சியில் ஏறி அபிஷேகம் பார்க்கும் தர்ஷனம் கிட்டியது.  முதல் கும்பாபிஷேகத்தில் பாண்டுரங்கன் கோயில் கோபுரம் மேலே சுமார் 10 அடி மேலே ஏறி கலசம் 10 அடி .  கலசத்தில் வரகு நிரப்பும் பணி , மேலே ஏறி மேலிருந்து தீர்தப்ரோக்ஷணம் செய்யும் வாய்ப்பு. இரண்டாவது கும்பாபிஷேகத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் கோபுரம் மேலே ஏறி தீர்த்தேப்ரோக்ஷணம் செய்யும் பாக்கியம் கிட்டியது. மேலிருந்து தீர்த்தம் தெளிக்க , தீ அணைப்பு வண்டி மூலம் அதன் குழாயில் இருந்து நீரை மேலே அண்டாவில் ரொப்பி அங்கிருந்து நீர் தெளித்தோம்.

குரு மஹா பூஜையின் போது பங்கு கொண்டு பிரசாதங்கள் பெற்றேன்.

குருஜி மண்டபத்தில் முதன் முறையாக, குருஜியின் உடல் கிடைக்காததால் துளசிச்செடியை குருஜி பிருந்தாவனத்தில் பிரதிஷ்டை செய்யும் பாக்கியம் பெற்றேன்.

இப்போது குருஜி நாமானந்தா  இருவரும் இல்லை. நிரஞ்சனானந்தா எங்கிருக்கிறார் என்பதும் தெரியவில்லை.

குருஜி ருத்ரப்ரயாகையில் உயிரை நீத்தார். நாமானந்தா டெல்லியில் உயிரை நீத்தார்.


திருவல்லிக்கேணி குடும்பம் ஒரு பார்வை 

எனது  மாமனார் பாலாவதானி வெங்கோபாச்சார் பத்மா  என்கிற நாகம்மா அவர்கள்.  சுதாவின் அப்பாவின்  தம்பி சேஷாச்சார் ராதா என்கிற சாவித்ரி குடும்பம் வசித்து வந்தார்கள். சுதாவுடன் பிறந்தவர்கள் பெரிய அண்ணன் நாகராஜன், பாலு,ரகு , ராமு,  கிட்டு என்கிற கிருஷ்ணமூர்த்தி ஆவர். 

சித்தப்பா சித்தி , அப்பா அம்மா எவரும் இப்போது இல்லை.

சுதாவின் அண்ணன் தம்பிகள் அனைவரும் அப்பாவிற்கு உதவியாக கோர்ட் வேலைகளைப்பார்த்து வந்தனர். கிட்டு ஹைதராபாத்தில். சென்ட்ரல் யூனிவர்சிட்டி ஆப்  இந்தியா வில் பனி புரிந்து ஒய்வு பெற்று வாழ்ந்து வருகிறார்கள். 

நாகராஜனுக்கு லட்சுமி என்பவரை (கதிரி குடும்பத்தினர்) கதிரியில் மனம் முடித்து வந்தனர். 

நாகராஜனுக்கு ரமேஷ், சுரேஷ் என இரு மகன்கள், ரமேஷ் டிவிஎஸ்ஸில் ஸ்ரீபெரும்புதூரில் வேலை பார்த்து வருகிறான். அவர்கள் அனைவரும் பெருங்குளத்தூரில் வசித்து வருகிறார்கள். ரமேஷ் கிருத்திகா என்பவரை மணந்து மகள் ஒன்று , மகன் ஒன்று பெற்று வளர்த்து வருகிறார்கள்.

பாலு கீதாவை மணந்து சுமதி மகளைப்பெற்று  வளர்த்து சுனிலுடன் மனம் முடித்து இன்பமாக வாழ்ந்து வருகிறார்கள்.

ரகு ஐகோர்ட்டில் வேலை செய்து ஒய்வு பெற்று, தன இரு மகன்களையும் ஹைகோர்ட்டில் வேலைக்கு ஏற்பாடு செய்துவிட்டான்.  ரகு விஜயா என்கிற பரிமளாவை மணந்து நாகேந்திரன் ஸ்ரீதர், ஸ்ரீநாத் என்கிற முரளியைப்பெற்று வளர்த்து , ஸ்ரீதருக்கு வித்யாலக்ஷ்மியை மனம் முடித்து அவர்கள் குழந்தை கிருஷ்ணா உடன்  இன்பமாக இருக்கிறார்கள்.

ராமு சந்தியா என்கிற நளினியை மணந்து ராஜேஷ், நாகப்ப்ரியா அன்று மகன் மகளைப்பெற்று வளர்த்து அவர்களுக்கு மனம் முடித்து , ராஜேஷ் சஹானா மனம் முடித்து ஒரு மகனுடன் இன்பமாக வாழ்ந்து  வருகிறார்கள்.  பிரியா சந்தோஷ் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள்.

கிட்டு ஜெயா என்கிற வாணியை மணம்முடித்து நாகப்பரீத்தி மகள், விஷால் மகன் பெற்று வளர்த்து ப்ரீத்திக்கு மனம் முடித்து ப்ரீத்தி விக்னேஷ் இன்பமாக வாழ்ந்து வருகிறார்கள்.

எனக்கும் சுதாவிற்கும் மனம் ஆனா பிறகே திருவல்லிக்கேணி குடும்பத்தார் மக்களுக்கு திருமணம் ஆகியது. மாலதி அனந்தராவ் பெரியவர்கள் முன்பே திருமணம்  ஆகிவிட்டது.  என்னுடைய மாமனாரும் சிறிய மாமனாரும் என்னை முன் வைத்து திருமண காரியங்களை நடத்தினர். அந்தப்பெருமை எனக்கே உரியது, மகிழ்ச்சியாகவும் இருந்தது.

சேஷாச்சார் அவர்களுக்கு மூத்த மகள் மாலதி ஆனந்த ராவ் அவர்கள், அடுத்த ஸ்ரீநிவாஸாச்சார் என்கிற சீனு, அடுத்து மஞ்சு, பரிமள, ஈஷா, உமா மற்றும் பார்த்து என்கிற பார்த்தசாரதி ஆவர். சீனு அண்ணாசாலையில் உள்ள டெலிக்ராப் ஆபீஸில் பனி புரிந்து வந்தார். யீனுவிற்கு முதல் மனைவி சில தினங்களில் இறந்துவிட்டார்.  பிறகு ரமா என்பவரை மணந்து பாலாஜி, சித்ரா என மகன் மகளைப்பெற்று வளர்த்து மனம் முடித்து சித்ரா அரவிந்த் . பாலாஜி திவ்யா  இன்பமாக வாழ்ந்து வந்தனர். பாலாஜிக்கு அனிருத் மகன் வளர்ந்து வருகிறான். சித்ரா அரவிந்திற்கு அனன்யா மகளும் இப்போது ஒரு மகன் பிறந்திருக்கிறான்,

மஞ்சு கிருஷ்ணமுர்த்தி என்பவரை மணந்து இன்பனாக வாழ்ந்து வருகிறார்கள். கிருஷ்ணமுர்த்தி மின்சாரத்துறையில் பனி புரிந்து ஒய்வு பெற்று அன்னான் குடும்பத்தாருடன் இருந்து வருகிறார்கள்.

பரிமளா சாமாராவ் என்பவரை மணந்து ரேவதி மகளை பெற்று வளர்த்தனர். பரிமளா அகால மரணம் அடைந்து விட்டார்.  சாமராவ் தனித்து விடப்பட்டார். மகள் ரேவதிக்கு மனம் முடித்து அவர்கள் சந்தோஷமாக ஒரு மகளுடன் வாழ்ந்து வருகிறார்கள். 

மூத்தவள் மாலதி அனந்த ராவ் அவர்கள் இரண்டு மகன்கள் , இரண்டு பெண்கள் என வளர்த்து மனம் முடித்து வாழ்ந்து வருகிறார்கள்.ஆனந்த ராவ் வாலாஜாவில் போஸ்ட் மாஸ்டர் ஆகா பணிபுரிந்து ஒய்வு பெற்றவர்.

மகன் குரு, மகள்கள் பிருந்தா விஜி இவர்களுக்கு மனம் முடித்து இன்பமாக இருக்கிறார்கள்.   விஜி ரமேஷ், பிருந்தா சத்யநாராயணா அபைவரும் அவரவர் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார்கள்.  

உஷா நாகராஜன் என்பவரை மணந்து ஸ்ரீராம் மகனைப்பெற்று வளர்த்து கோயில் வழிப்பாட்டு முறைகளில் சிறப்புற வளர்ந்து வருகிறான் . உஷா இப்போது இல்லை, இறந்துவிட்டாள். 

உமா சத்தியநாராயணா என்பவரை மணந்து சங்கீதா மகள், பாலாஜி மகனை வளர்த்து ஆளாக்கினார்கள். மகள் சங்கீதாவிற்கு மனம் முடித்து வாழ்ந்து வருகிறார்கள்.

பார்த்து அஞ்சி என்கிற அஞ்சனாவை மணந்து வெங்கடேஷ் மகனை வளர்த்து மனம் முடித்து இன்பமாக  ireland ல் வாழ்ந்து வருகிறார்கள்.

1977 அக்டோபர் 30ம் தேதி எனக்கும் சுதாவிற்கும் திருமணம் திருச்சானூர் சபா சத்திரத்தில் நடந்தது. அப்போது அம்பத்தூர் ரகு கிரோம்பேட் உஷா கணவர் மோகன், பாலிடெக்னிக் நபர் சௌந்தரராஜன் வந்திருந்தனர். 

ராஜகோபால், ராதிகா என்கிற ஆர்த்தி , ஸ்ரீ ஹரி மூவர் எங்களது மக்கள். 

மூவரையும் B .E  படிக்கவைத்த  பெருமை எங்களுக்கு. அதில் முழுப்பெருமையும் சுதாவையே சாரும். படிப்பு விஷயத்தில் அவள் தான் பார்த்துக்கொள்வாள். பணவிஷயம் என்னுடையது. படிப்பு விஷயத்தில் நாங்கள் பணம் பார்க்கமாட்டோம். என்ன வேண்டுமோ , எதை வாங்கவேண்டுமோ அதை வாங்கித்தருவோம். 

ராஜா பிரியதர்ஷினி காலேஜ் வாணியம்பாடியில் படித்தான். முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றான். 

ராதிகா (ஆர்த்தி) கோவை CIT யில் ECE பிரிவில் தேர்ச்சி பெற்றாள்.

ஸ்ரீஹரி அண்ணா யூனிவர்சிட்டி யில் 56 ரேங்கில் இருந்தான். அதில் 20 பேர் வராததால் 36வது ரேங்கில் இருந்தான். ஸ்ரீஹரி திருச்சி REC யில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தான். NTSE படிப்பில் தேர்ச்சி பெற்றான். ராதிகாவும் கணக்குப்பிரிவில் 0.1% ரேங்கில் வந்தாள். 

ராஜா மொரிஷியஸ் அமெரிக்கா என்று வசித்து வந்தான்.

ஆர்த்தி CTS இல் பணிபுரிந்து அமெரிக்காவில் நிலையான வேலையே வாங்கி அமெரிக்கா குடியுரிமைபெற்று சுரேஷ் என்பவரை மனது ஸ்ரவன் ஸ்ரீனிவாஸ், ஸ்ரீமன் ஸ்ரீனிவாஸ் என்று இரண்டு மகன்களைப்பெற்று சிறப்புற அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார்கள். எங்களுக்கு என்ன வேண்டுமோ அதை அவர்க இருவரும் ராஜா ஆர்த்தி வாங்கிக்கொடுக்கிறார்கள். 

இங்கு எண்களைப்பார்த்துக்கொள்ள ஸ்ரீஹரி ஹரிணி என்பவரை மணந்து ஷ்ரவ்யா , கௌரி என்கிற த்ரிஷ்யா என்ற இரு மக்களுடன் எங்களையும் பார்த்துக்கொள்கிறார்கள்.  

நாங்கள் இங்கு திருவல்லிக்கேணி பெங்களூரு என்று மாறி மாறி சென்றுவந்த சந்தோஷமாக வாழ்ந்து வருகிறோம்.

ஹரிணியின் அப்பா அம்மா மேற்கு மாம்பலத்தில் இருக்கிறார்கள். அன்னான் சந்தியா என்பவரை மணந்து துபாயில் நாமாக வாழ்ந்து வருகிறார்கள்.

ஹரிணியின்  அத்தை மேற்கு மாம்பலத்திலும் , சித்தப்பா சிங்கப்பூரிலும் இருக்கிறார்கள்.

Tuesday, June 18, 2024

|| கருட புராணம் கூறும் தீட்டு || 18-06-2024

 ராதே கிருஷ்ணா 18-06-2024


|| கருட புராணம் கூறும் தீட்டு ||


|| கருட புராணம் கூறும் தீட்டு ||


தீட்டுள்ளவன் வீட்டில் தீட்டற்றவன் தெரிந்து சாப்பிட்டால் அன்றையபொழுது அவனுக்குத் தீட்டு.


தீட்டுப்போகும் தினத்தில் சுமார் காலை எட்டரை மணிக்கு (ஸங்கவ காலம்) மேல்தான் தீர்த்தமாடி தீட்டை முடிக்க வேண்டும்.


பிறப்பு, இறப்பு, மாதவிடாய் (தூரம்) இவை சூர்ய உதயத்திற்கு பதினொன்றேகால் நாழிகை(270 நிமிடங்கள்)க்கு முன் ஏற்பட்டால் முதல் நாள் கணக்கு. அதன் பிறகானால் மறுநாள் கணக்கு.


ப்ரேதத்தின் பின் போனாலும் க்ஷவரம் செய்து கொண்டாலும் இரு முறை ஸ்நானம் செய்ய் வேண்டும்.


ஸந்யாசிகளுக்கு (முன் ஆச்ரம) மாதா, பிதாக்களின் மரணத்தில் மட்டும் ஸ்நாநம்.


88 அடிகளுக்குள் பிணம் (சவம்) இருந்தால், எடுக்கும்வரை, சமைப்பது, சாப்பிடுவது கூடாது.


ஸந்யாசியின் சவமானால் அந்தப் பகுதிக்கே தீட்டுக் கிடையாது.


நகரங்களுக்கு மேற்படி தோஷங்கள் எதுவுமில்லை.


ஸ்நானம் பண்ணமுடியாத அளவிற்கு நோயுள்ள தீட்டுகாரனின் தீட்டுப்போக வேண்டுமானால், தீட்டற்ற ஒருவன் தீட்டுள்ளவனைத் தொட்டுவிட்டு தீர்த்தமாடி பின் தொட்டு தீர்த்தமாடி என பத்து முறை தீர்த்மாடவேண்டும்.


அதுபோல் நோயுள்ள தூர ஸ்த்ரீயை மற்றொருத்தி 12 முறை தொட்டு தீர்த்தமாடி வேறு உடை உடுத்தச் செய்தால் சுத்தி. இரண்டிலும் புண்யாஹவாசனம் முக்கியம்.


ச்ராத்தத்தின் நடுவில் (ச்ராத்த சங்கல்பம் ஆனபின்) தீட்டுத் தெரிந்தால் ச்ராத்தம் முடியும்வரை கர்த்தாவுக்குத் தீட்டில்லை.


வரித்தபின் போக்தா (ச்ராத்த ஸ்வாமி)க்கு தீட்டுத் தெரிந்தால் சாப்பிட்டு முடியும்வரை தீட்டில்லை.


விவாஹத்தில் உத்வாஹ சங்கல்பத்தின் பின் தீட்டுத் தெரிந்தால் சேஷ ஹோமம் வரை தீட்டில்லை.


ஸந்யாசிகளின் மரணத்தினால் அவரின் பங்காளிகளக்குத் தீட்டில்லை, அவப்ருத ஸ்நாநம் மட்டும். ராஜாங்கத்தால் கொலை தண்டனை விதிக்கப்பட்டவனுக்கு உடனே கர்மா செய்யலாம்.


துர் மரணம் செய்து கொண்டவனுக்கு 6 மாதம் கழித்து கர்மா செய்ய வேண்டும் என்பது விதி ஆயினும் 24 நாட்கள் கழித்து செய்வது என்றும் ஒரு விதி உள்ளது.


தற்செயலாய் துர்மரணம் அடைவோருக்கு தீட்டு, தர்பணம் முதலியவை உண்டு.


தற்கொலை செய்துகொண்டவனுக்கு தீட்டு, தர்பணம் இவை இல்லை.


கர்மா செய்பவனுக்கு 11ம் நாள் கர்மாவிற்குப் பின் தீட்டுப் போகும்.


கல்யாணமான பெண் இறந்தால் அவள் பிறந்த வீட்டுப் பங்காளிகளுக்கு தீட்டில்லை.


பிறப்புத் தீட்டுள்ளவனை 4 நாளைக்கு மேல் தீண்டினால் அதிகம் தோஷமில்லை.


ஒரு தீட்டுக் காரன் மற்றொரு தீட்டுக்காரனைத் தொடக் கூடாது.


தீட்டுள்ளவன் வீட்டுக்கும் அவன் சாமான்களுக்கும் தீட்டுண்டு.


பிரம்மச்சாரிகள் கர்மா செய்தால் அதனுடன் தர்பணம் (உதகதானம்) தனியாக இல்லை.


மனைவி கர்பமாக இருக்கும்போது தானம் வாங்குதல், தூரதேச யாத்திரை போதல் கூடாது.


சவத்துக்கு முன்னாலும், பக்கவாட்டிலும் போகக் கூடாது.


சஞ்சயனம் ஆனபின் துக்கம் விசாரித்தால் ஆசமனம் மட்டும் போதும்.


சிராத்த தினத்தன்று துக்கம் விசாரிக்கச் செல்லக் கூடாது.


தன் மனைவி கர்பமாய் இருக்கும்போது தாய், தந்தை தவிர மற்றவர்களின் சவத்தை சுமக்கலாகாது.


ப்ரம்மச்சாரிகள் தாய் தந்தை சவத்தைத் தவிர மற்வர்கள் சவத்தைச் சுமக்கக்கூடாது.


தீட்டுக் காரர்கள் ஆலயத்திற்குள் செல்லக் கூடாது.


தீட்டுக்காரர்களை தீட்டில்லாதவர்கள் நமஸ்கரிக்கக் கூடாது. தீட்டுக்காரரும் அப்படியே.


ஜனன, மரண தீட்டிலும் ஏகாதசி, துவாதசி விரதம் விடக் கூடாது. உபவாஸம் மட்டும், பூஜை கிடையாது.


சாவு தீட்டுக்காரர் மெத்தை போன்றவற்றில் படுக்கக் கூடாது. தினமும் தீர்த்தமாடவேண்டும்.


சிசுக்கள் இறந்தால் புதைத்த தினம் முதல்தான் தீட்டு. தீட்டில் வேறு தீட்டு சோ்ந்தால்?” பங்காளிகளைப் பொறுத்தவரையில் ஒரு தீட்டு காத்துக் கொண்டிருக்கும்போது மற்றொரு தீட்டு வந்தால் முன் வந்த தீட்டு முடியும்போது பின் வந்த தீட்டும் முடிந்துவிடும்.


உதாரணமாக 10நாள் தீட்டில் 4ம் நாள் மற்றொரு 10 நாள் தீட்டு வந்தால் முன் வந்த தீட்டின் 10ம் நாளுடன் பின் வந்த தீட்டும் முடிந்துவிடும்.


ஆனால் முன் வந்த 3 நாள் தீட்டுடன் பின் வந்த 10 நாள் தீட்டு முடியாது.


பத்துநாள் தீட்டின் இடையில் வந்த 3 நாள் தீட்டுடன் 10 நாள் தீட்டு முடியாது. 10ம் நாள்தான் சுத்தி.


பத்தாம் நாள் இரவில் வந்த புதிய பத்து நாள் தீட்டிற்கு அதிகப்படியாக 3நாள் மட்டும் காத்தால் போதும்.


ஆனால் பிறப்புத் தீட்டின் இறுதியில் வரும் பிறப்புத் தீட்டிற்காக மேலும் 3 நாள் காக்கத் தேவையில்லை.


மரணத் தீட்டு ஜனனத் தீட்டைக் காட்டிலும் பலம்


மரணத் தீட்டின்போது வந்த பிறப்புத் தீட்டு மரணத் தீட்டுடன் முடியும்.


பெற்ற குழந்தை பத்துநாள் பிறப்புத் தீட்டிற்குள் இறந்தால் அதற்காகத் தனியாகத் தீட்டில்லை. பிறந்ததிலிருந்து 10 நாள் விலகும். ஒரு வேளை 10ம் நாள் மரணமானால் மேலும் 2 நாள் அதிகரிக்கும். 10ம் நாள் இரவு ஆனால் 3 நாள்.


பங்காளிகளுக்கு மேற்படி 3 நாள் தீட்டில்லை.


அதிக்ராந்தாசெளசம் என்பது தீட்டுக்காலம் முடிந்தபின் தீட்டுப்பற்றி அறிந்தவருக்கு விதிக்கப்படுவது.


பிறப்புத் தீட்டில் அதிக்ராந்தாசெளசம் இல்லை.


பத்து நாள் தீட்டை பத்தாம் நாளுக்குமேல் 3 மாதங்களுக்குள் கேட்டால் 3 நாள் தீட்டு.


மூன்று மாதத்திற்கு மேல் 6 மாதத்திற்குள் கேட்டால் ஒன்றரை நாள்.


6 மாதத்திற்கு மேல் ஒரு வருடத்திற்குள் ஒரு நாள்.


அதன் பிறகு ஸ்னானம் மாத்திரம்.


3 நாள் தீட்டை பத்து நாட்களுக்குள் கேட்டால் 3நாள் தீட்டு. பத்து நாட்களுக்குப் பிறகு ஸ்னானம் மாத்திரம்.


1 நாள் தீட்டுக்கு அதிக்ராந்த ஆசெளசம் கிடையாது.


மாதா பிதாக்களின் மரணத்தில் புத்திரர்களுக்கும், கணவனனின் மரணத்தில் பத்தினிக்கும் எப்போது கேட்டாலும் அதிலிருந்து 10 நாள் தீட்டு உண்டு. ”தீட்டு முடிவில் யார் யாருக்கு க்ஷவரம் உண்டு?” சில தீட்டின் முடிவில் புருஷர் (ஆண்)களுக்கு ஸர்வாங்க க்ஷவரம் (வபனம்) செய்து கொண்டால்தான் தீட்டுப் போகும் என்பது சாஸ்திரம். ஸர்வாங்கம் என்பது :

தலையில் சிகை (குடுமி) தவிர்த மற்ற இடம்


முகம், கழுத்து


இரு கைகளிலும் மணிக்கட்டிலிருந்து முழங்கைக்குக் கீழ் உள்ள ஒரு சாண் இடம் தவிர்த்து மற்ற இடம்.


கழுத்துக்கீழே பாதங்கள் வரை, பிறப்புறுப்பு உட்பட பின் முதுகு தவிர்த்த மற்ற அனைத்து இடங்களிலும் உள்ள ரோமங்களை அறவே அகற்றுவது ஸர்வாங்க க்ஷவரம் ஆகும். 


கீழ்கண்ட மரண தீட்டுகளின் முடிவில் (முடிகின்ற நாள் அன்று – அதாவது பத்து நாள் தீட்டில் 10ம் நாள் காலை)ஸர்வாங்கம் அவசியம்.


இறந்த பங்காளி தன்னைவிட வயதில் பெரியவரானால். வயதில் சிறியவர்களுக்கு வபனம் தேவையில்லை ஆனால் தர்பணம் உண்டு.


மாதாமஹன், மாதாமஹீ, மாமன், மாமி, மாமனார், மாமியார் இவர்கள் மரணணத்தில் வனம் உண்டு.


இறந்தவர் பெரியவரா இல்லையா என ஸந்தேஹம் இருந்தால் வபனம் செய்து கொள்வதே சிறந்தது.


தீட்டு முடியும் தினம் வெள்ளிக் கிழமையானால் முதல்நாளான வியாழக் கிழமையிலேயே வபனம் செய்து கொள்ள வேண்டும். எக்காரணத்தாலும் வெள்ளிக்கிழமை க்ஷவரம் செய்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ”ஜனனத்தால் (பிறப்பால்) ஏற்படும் தீட்டுகள்” கல்யாணமாகாத ஆண், பெண் இருபாலருக்கும் எந்தத் தீட்டும் இல்லை.


பிரசவத்தினால் ஏற்படும் தீட்டு பிரசவித்த பத்து நாளுக்குப் பிறகு எவரும் காக்கத் தேவையில்லை.


பெண் குழந்தையைப் பெற்றவளுக்கு 40 நாட்கள் தீட்டு


ஆண் குழந்தையைப் பெற்றவளுக்கு 30 நாட்கள் தீட்டு


பிறந்தது பெண் குழந்தையானால் கீழ்கண்டவர்களுக்கு பத்து நாட்கள் தீட்டு: குழுந்தையின் உடன் பிறந்தோர்.

மறுமனைவி(களு)க்குப் பிறந்த ஸஹோதரர்கள்

அதுபோல குழந்தையின் தகப்பனாரின் ஸஹோதரர்கள்

குழந்தையின் தகப்பனாரின் தகப்பனார்

(பிதாமஹர்) அவரின் ஸஹோதரர்கள். மேற்கண்டோர் திருமணமான ஆண்களானால் அவர்களது மனைவிகளுக்கும் அதே அளவு தீட்டு.

குழந்தை ஈன்றவளின் பெற்றோருக்கு 3 நாள் தீட்டு

குழந்தை பெற்றவளின் ஸஹோதரன், மாமா, பெரியப்பர, சித்தப்பா போன்றவர்களுக்கு தீட்டில்லை ஆயினும் அவர்களில் யாருடைய பொருட் செலவிலாவது ப்ரஸவம் ஆனால், ப்ரஸவம் எங்கு நடந்தாலும் செலவு செய்தவர்களுக்கு ஒரு நாள் தீட்டுண்டு. ”பெண்களுக்கும் மட்டும் ஏற்படும் தீட்டுகள்” ஜனனத்தில் குழந்தை பெற்றவளுக்கு மட்டும் சட்டி தொடடுதல் அதாவது சமையலறைக்கு வந்து சமையல் செய்ய வீட்டுக் காரியங்களில் அனைவருக்கும் உள்ள பத்து நாள் தீட்டு முடிந்தவுடன் ஈடுபட முடியாது. ஆண் குழந்தையானால் 30 நாளும், பெண் குழந்தையானால் 40 நாளுக்குப்பிறகே வீட்டுக் காரியங்களில் ஈடுபட முடியும்.


இனி மரணத்தினால் பெண்களுக்கு மட்டில் (கணவர் மற்றும் கணவர் குடும்பத்தாருக்குக் கிடையாது) ஏற்படும் தீட்டுகள் விபரம் கீழ்வறுமாறு —

பெண்களுக்கு திருமணத்தின் மூலம் கோத்திரம் வேறு படுகிறது. கணவனின் கோத்திரத்தை (சந்ததியைச்) சேர்ந்தவர்களின் பிறப்பு இறப்பே அவளுக்கும் உரியதாகும். ஆயினும் பிறந்தகத்தைச் சேர்ந்த சிலரது மரணத்தினால் பெண்களுக்கு மட்டும் 3 நாள் வரை தீட்டு சம்பவிக்கும் இந்த தீட்டு அவர்களுடைய கணவருக்குக் கிடையாது. தூரமான ஸ்த்ரீ தனித்திருந்து தீட்டுக் காப்பது போல இதை அவள் மட்டும் காக்க வேண்டியது.


பெண்களின் கீழ்க்கண்ட உறவினரின் மரணத்தில் அவளுக்கு மட்டும் 3 நாள் தீட்டு: உபநயனமான உடன்பிறந்த ஸஹோதரன்


உபநயனமான மருமான் (ஸஹோரதன் பிள்ளை)


உபநயனமான ஸஹோதரியின் பிள்ளை


இளைய அல்லது மூத்த தாயார் (தந்தையின் வேறு மனைவிகள்)


பக்ஷிணீ என்பது இரண்டு பகலும் ஓர் இரவும் அல்லது இரண்டு இரவும் ஒரு பகலும் கொண்ட நேரம். பகலின் அல்லது இரவின் கடைசீ பகுதியில் அறியப்பட்டாலும் அந்த பொழுது தீட்டில் கழிந்துவிட்டதாகவே பொருள்.

கீழ்கண்ட பட்டியலில் உள்ளவர்களின் மரணத்தினால் பெண்களுக்கு பக்ஷிணீ தீட்டு. (ஒன்றரை நாள்) தந்தையுடன் பிறந்த பெரியப்பா, சித்தப்பா


தாயுடன் பிறந்த சித்தி, பெரியம்மா


தாயின் ஸஹோதரர்கள் (மாதுலன்)


தந்தையின் ஸஹோதரிகள் (அத்தை)


மேல் நான்கு வகையினரின் பெண்கள், பிள்ளைகள்


தந்தையின் தந்தை – பிதாமஹன்


தந்தையின் தாய் – பிதாமஹி


தாயின் தந்தை – மாதாமஹன்


தாயின் தாய் – மாதாமஹி


உடன் பிறந்த ஸஹோதரி


ஸஹோதரியின் பெண்கள்


மருமாள் (ஸஹோதரனின் பெண்)


கீழ்கண்டவர்கள் உபநயனமான ஆண், விவாஹமான பெண் மரணத்தால் பெண்களுக்கு மட்டும் 1 நாள் தீட்டு. தாயின் மூத்தாள் அல்லது இளையாள் (ஸபத்னீ மாதா)குமாரன்


ஸபத்னீ மாதா புத்ரீ (குமாரத்தி)


ஸபத்னீமாதா ஸஹோதர, ஸஹோதரிகள்


ஸபத்னீமாதா பிள்ளையின் பிள்ளை, பெண்


ஸபத்னீ மாதா பெண்ணின் பிள்ளை, பெண்


ஸபத்னீமாதா ஸஹோதரியின் பிள்ளை,பெண் ”மரணத்தினால் ஏற்படும் தீட்டுகள்” மரணத்தினால் ஏற்படும் தீட்டுகள் ஒருநாள், ஒன்றரை நாள், மூன்று நாள், பத்து நாட்கள் என நான்கு வகைப்படும். அவை தனித்தனியாக பிரித்து கீழே வகைப்படுத்தி வழங்கப்பட்டுள்ளன. முதலில் பத்துநாளில் ஆரம்பித்து, பின் மூன்று நாள், ஒன்றரை நாள், ஒரு நாள் என எந்தப் பகுதியில் தங்களுடைய உறவு முறை வழங்கப்பட்டுள்ளது என தீர்மானித்துக்கொள்ளவும். சில சமயம் இருவிதமான உறவு முறைகள் இருக்கலாம். அப்படி இருக்கும்போது அதிகப்படியான தீட்டு எந்த உறவினால் ஏற்படுகிறதோ அந்தத் தீட்டையே அநுஷ்டிக்கவேண்டும்.

10 நாள் தீட்டு பங்காளிகளில் யார் ஒருவர் இறந்தாலும் 7 தலை முறைகளுகு்கு உட்பட்ட அனைத்து ஆண்கள் மற்றும் அவர்கள் மனைவிகளுக்கும் 10 நாள் தீட்டு உண்டு. பிறந்து பத்து நாட்களே ஆன புருஷ (ஆண்)குழந்தை இறந்தால் கீழ்க்கண்டவர்களுக்கு பத்து நாள் தீட்டு.

இறந்தவர் (குழந்தை)யின் தந்தை


தாய், மற்றும் மணமான ஸஹோதரார்கள்


மேற்படி இறந்தது மணமாகாத ஒரு பெண் (குழந்தை) ஆனாலும் மேற்கண்ட அனைவருக்கும் 10 நாள் தீட்டு.


7 வயதுடைய உபநயனம் ஆன பையன் இறந்தால் பங்காளிகள் அனைவருக்கும் 10 நாள் தீட்டு. 7 வயதுக்கு மேல் இறந்தது ஆண் ஆனால் உபநயனம் ஆகியிருந்தாலும் இல்லாவிட்டாலும் பங்காளிகள் அனைவருக்கும் 10 நாள் தீட்டு. 3 நாள் தீட்டு கீழ்க்கண்ட உறவினர்களின் மரணத்தில் ஆண்களுக்கும் அவர்களுடைய மனைவிகளுகு்கும் 3 நாள் தீட்டு. தாயின் தந்தை (மாதாமஹர்)


தாயின் தாய் (மாதாமஹி)


தாயின் ஸஹோதரன் (மாதுலன்)


மாமன் மனைவி (மாதுலானி)


மாமனார்


மாமியார்


தாயின் உடன் பிறந்த ஸஹோதரி (சித்தி,பெரியம்மா)


தந்தையின் ஸஹோதரிகள் (அத்தைகள்)


ஸஹோதரியின் மகன் (உபநயனமானவன்)மருமான்


உபநயனமான பெண்வயிற்றுப் பேரன்(தெளஹித்ரன்)


ஏழு தலைமுறைக்கு மேற்பட்ட பங்காளிகள் (ஸமானோதகர்கள்)


கல்யாணமான பெண்


கல்யாணமான ஸஹோதரி


ஸ்வீகாரம் போனவனைப் பெற்றவள் (ஜனனீ)


ஸ்வீகாரம் போனவனை ஈன்ற தந்தை (ஜனக பிதா)


ஸ்வீகாரம் போன மகன் (தத்புத்ரன்)


7 வயதுக்கு மேற்பட்ட கல்யாணமாகாத பங்காளிகளின் பெண்.


2 வயதுக்கு மேற்பட்ட ஆனால் உபயநயனமாகாத பங்காளிகளின் ஆண் பிள்ளைகள்.


7 தலைமுறைக்கு மேற்பட்ட பங்காளிகள். பக்ஷிணீ பக்ஷிணீ என்பது இரண்டு பகலும் ஓர் இரவும் அல்லது இரண்டு இரவும் ஒரு பகலும் கொண்ட நேரம். பகலின் அல்லது இரவின் கடைசீ பகுதியில் அறியப்பட்டாலும் அந்த பொழுது தீட்டில் கழிந்துவிட்டதாகவே பொருள். பகலில் அறியப்பட்டு பகல், இரவு, மறுநாள் பகலில் தீட்டு முடிந்துவிட்டாலும் மறுநாள் காலையிலேயே ஸ்னானத்திற்குப் பிறகு தீட்டுப் போகும்.

கீழ்கண்ட பட்டியலில் உள்ளவர்களின் மரணத்தினால் ஆண்களுக்கு பக்ஷிணீ தீட்டு. (ஒன்றரை நாள்). அத்தையின் பிள்ளை அல்லது பெண்


மாமனின் பிள்ளை அல்லது பெண்


தாயின் ஸஹோதரியின் பெண்கள்-பிள்ளைகள்


தன்னுடைய ஸஹோதரியின் பெண்


தன் ஸஹோதரனின் மணமான பெண்


சிற்றப்பன், பெரியப்பன் பெண்கள்


தன் பிள்ளை வயிற்றுப் பேத்தி (பெளத்ரீ)


பெண் வயிற்றுப் பேத்தி (தெளஹித்ரி)


உபநயனமாகாத பெண் வயிற்றுப் பிள்ளை (தெளஹித்ரன்)


உபநயனமாகாத மருமான் (ஸஹோதரி புத்ரன்)  கீழ்க்கண்டோர் மரணத்தில் புருஷர்களுக்கு ஒரு நாள் தீட்டு. (இளைய, மூத்தாள் தாயார்களுக்கு ஸபத்னீ மாதா என்று பெயர்). ஸபத்னீ மாதாவின் ஸஹோதரன், ஸஹோதரி


ஸபத்னீ மாதாவின் பெண் மற்றும் மேற்சொன்ன 3வகை உறவினரின் பெண்கள் பிள்ளைகள்.


ஸபத்னீ மாதாவின் தாய், தந்தை


ஸபத்னீ மாதாவின் பெரியப்பா, சித்தப்பா


கல்யாணமாகாத 6 வயதுக்குட்பட்ட (2 வயதுக்கு மேற்பட்ட) பங்காளிகளின் பெண்.


ஸ்வீகாரம் சென்ற ஆணின் பிறந்தகத்தில் உடன் பிறந்த (முன் கோத்ர) ஸஹோதரர்கள்


ஆறு மாதத்திற்கு மேற்பட்ட இரண்டு வயதிற்குட்பட்ட பங்காளிகளின் ஆண் குழந்தை.


கருட புராணம்

Friday, May 3, 2024

திருநாவுக்கரசர் தேவாரத் திருப்பதிகங்கள் 03-05-2024

Radhe Krishna 03-05-2024


https://shaivam.org/panniru-thirumurai/appar-thevaram-4-to-6-thirumurais-thalamurai-verses-1-3067/#gsc.tab=0


திருநாவுக்கரசர் தேவாரத் திருப்பதிகங்கள்


திருநாவுக்கரசர் தேவாரத் திருப்பதிகங்கள் - தலமுறைThirunavukkarasar tevaram from Four upto Six Tirumurais(verses 1-3067) 


உள்ளுறை 


சோழ நாட்டில் காவிரிக்கு வடகரையில் உள்ள தலங்கள்


சோழ நாட்டில் காவிரிக்குத் தென்கரையில் உள்ள தலங்கள்


பாண்டிய நாட்டில் உள்ள தலங்கள்


கொங்கு நாட்டில் உள்ள தலங்கள்


நடு நாட்டில் உள்ள தலங்கள்


தொண்டை நாட்டில் உள்ள தலங்கள்


துளுவ நாட்டில் உள்ள தலம்வட நாட்டில் உள்ள தலங்கள்


பொதுப் பதிகங்கள் 


சோழ நாட்டில் காவிரிக்கு வடகரையில் உள்ள தலங்கள் வரிசை எண்தலப் பெயர்பதிக எண்பாடல்


1கோயில்5.001 அன்னம் பாலிக்குந் 


கோயில்5.002பனைக்கை மும்மத 


கோயில்4.022செஞ்சடைக் கற்றை 


கோயில்4.023பத்தனாய்ப் பாட மாட்டேன் 


கோயில்4.080பாளையு டைக்கமு 


கோயில்4.081கருநட்ட கண்டனை கோயில்6.00


1அரியானை அந்தணர்தம் கோயில்6.002மங்குல் மதிதவழும்


2திருவேட்களம்5.042நன்று நாடொறும்


3திருக்கழிப்பாலை4.006வனபவள வாய்திறந்து திருக்கழிப்பாலை5.040வண்ண மும்வடி திருக்கழிப்பாலை4.030நங்கையைப் பாகம் திருக்கழிப்பாலை4.106நெய்தற் குருகுதன் திருக்கழிப்பாலை6.012ஊனுடுத்தி யொன்பது


4திருச்சாய்க்காடு4.065தோடுலா மலர்கள் திருச்சாய்க்காடு6.082வானத் திளமதியும்


5திருவெண்காடு5.049பண்காட் டிப்படி திருவெண்காடு6.035தூண்டு சுடர்மேனித்


6திருத்தோணிபுரம்5.045மாதி யன்று மனைக்கிரு திருக்கழுமலம்4.082பார்கொண்டு மூடிக் திருக்கழுமலம்4.083படையார் மழுவொன்று


7திருப்புள்ளிருக்குவேளூர்5.079வெள்ளெ ருக்கர வம்விர திருப்புள்ளிருக்குவேளூர்6.054ஆண்டானை அடியேனை


8திருநின்றியூர்5.023கொடுங்கண் வெண்டலை


9திருப்புன்கூர் -திருநீடூர்6.011பிறவாதே தோன்றிய


10திருஅன்னியூர்5.008பாற லைத்த படுவெண்


11திருமணஞ்சேரி5.087பட்ட நெற்றியர் பாய்புலித்


12திருக்குறுக்கை4.049ஆதியிற் பிரம னார்தாம் திருக்குறுக்கை4.050நெடியமால் பிரம னோடு


13திருக்குரக்குக்கா5.075மரக்கொக் காமென


14திருவோமாம்புலியூர்6.088ஆராரும் மூவிலைவேல்


15திருநாரையூர்5.055வீறு தானுடை வெற்பன் திருநாரையூர்6.074சொல்லானைப் பொருளானைச்


16திருக்கடம்பூர்5.019தளருங் கோளர வத்தொடு திருக்கடம்பூர்5.020ஒருவ ராயிரு மூவரு


17திருப்பந்தணைநல்லூர்6.010நோதங்க மில்லாதார்


18திருக்கஞ்சனூர்6.090மூவிலைவேற் சூலம்வல


19திருக்கோடிகா4.051நெற்றிமேற் கண்ணி திருக்கோடிகா5.078சங்கு லாமுன்கைத் திருக்கோடிகா6.081கண்டலஞ்சேர் நெற்றியிளங்


20திருமங்கலக்குடி5.073தங்க லப்பிய தக்கன்


21திருஆப்பாடி4.048கடலகம் ஏழி


22திருவலஞ்சுழி-திருக்கொட்டையூர்6.073கருமணிபோற் கண்டத்


23திருவின்னம்பர்4.072விண்ணவர் மகுட திருவின்னம்பர்4.100மன்னு மலைமகள் திருவின்னம்பர்5.021என்னி லாரும் எனக்கினி திருவின்னம்பர்6.089அல்லி மலர்நாற்றத்


24திருப்புறம்பயம்6.013கொடிமாட நீடெருவு


25திருவிசயமங்கை5.071குசையும் அங்கையிற்


26திருப்பழனம்4.012சொல்மாலை பயில்கின்ற திருப்பழனம்4.036ஆடினா ரொருவர் திருப்பழனம்4.087மேவித்து நின்று திருப்பழனம்5.035அருவ னாய்அத்தி திருப்பழனம்6.036அலையார் கடல்நஞ்ச


27திருவையாறு4.003மாதர்ப் பிறைக்கண்ணி திருவையாறு4.013விடகிலேன் அடிநாயேன் திருவையாறு4.038கங்கையைச் சடையுள் திருவையாறு4.039குண்டனாய்ச் சமண திருவையாறு4.040தானலா துலக மில்லை திருவையாறு4.098அந்திவட் டத்திங்கட் திருவையாறு4.091குறுவித்த வாகுற்ற திருவையாறு4.092சிந்திப் பரியன திருவையாறு5.027சிந்தை வாய்தலு திருவையாறு5.028சிந்தை வண்ணத்த திருவையாறு6.037ஆரார் திரிபுரங்கள் திருவையாறு6.038ஓசை ஒலியெலா


28திருநெய்த்தானம்4.037காலனை வீழச் திருநெய்த்தானம்4.089பாரிடஞ் சாடிய திருநெய்த்தானம்5.034கொல்லி யான்குளிர் திருநெய்த்தானம்6.041வகையெலா முடையாயும் திருநெய்த்தானம்6.042மெய்த்தானத் தகம்படியுள்


29திருமழபாடி6.039நீறேறு திருமேனி திருமழபாடி6.040அலையடுத்த பெருங்கடல்நஞ்


30திருக்கானூர்5.076திருவின் நாதனுஞ்


31திருஅன்பில்ஆலந்துறை5.080வானஞ் சேர்மதி சூடிய


32திருவானைக்கா5.031கோனைக் காவிக் திருவானைக்கா6.062எத்தாயர் எத்தந்தை திருவானைக்கா6.063முன்னானைத் தோல்போர்த்த


33திருப்பைஞ்ஞீலி5.041உடையர் கோவண சோழ நாட்டில் காவிரிக்குத் தென்கரையில் உள்ள தலங்கள் வரிசை எண்தலப் பெயர்பதிக எண்பாடல்


1திருவாட்போக்கி5.086கால பாசம் பிடித்தெழு


2திருக்கடம்பந்துறை5.018முற்றி லாமுலை யாளிவ


3திருப்பராய்த்துறை5.030கரப்பர் கால மடைந்தவர்


4திருக்கற்குடி6.060மூத்தவனை வானவர்க்கு


5திருச்சிராப்பள்ளி5.085மட்டு வார்குழ லாளொடு


6திருஎறும்பியூர்5.074விரும்பி யூறு விடேல்மட திருஎறும்பியூர்6.091பன்னியசெந் தமிழறியேன்


7திருக்காட்டுப்பள்ளி5.084மாட்டுப் பள்ளி


8திருவாலம்பொழில்6.086கருவாகிக் கண்ணுதலாய்


9திருப்பூந்துருத்தி5.032கொடிகொள் செல்வ திருப்பூந்துருத்தி4.088மாலினை மாலுற திருப்பூந்துருத்தி6.043நில்லாத நீர்சடைமேல்


10திருக்கண்டியூர்4.093வானவர் தானவர்


11திருச்சோற்றுத்துறை4.041பொய்விரா மேனி திருச்சோற்றுத்துறை4.085காலை யெழுந்து திருச்சோற்றுத்துறை5.033கொல்லை யேற்றினர் திருச்சோற்றுத்துறை6.044மூத்தவனாய் உலகுக்கு


12திருவேதிகுடி4.090கையது காலெரி


13திருக்கருகாவூர்6.015குருகாம் வயிரமாங்


14திருப்பாலைத்துறை5.051நீல மாமணி கண்டத்தர்


15திருநல்லூர்4.097அட்டுமின் இல்பலி திருநல்லூர்6.014நினைந்துருகும் அடியாரை


16திருச்சத்திமுற்றம்4.096கோவாய் முடுகி


17திருப்பழையாறைவடதளி5.058தலையெ லாம்பறிக் குஞ்சமண்


18திருவலஞ்சுழி5.066ஓத மார்கட லின்விட திருவலஞ்சுழி6.072அலையார் புனற்கங்கை


19திருக்குடமூக்கு5.022பூவ ணத்தவன் புண்ணியன்


20திருக்குடந்தைக்கீழ்க்கோட்டம்6.075சொன்மலிந்த மறைநான்கா


21திருநாகேச்சரம்4.066கச்சைசேர் அரவர் திருநாகேச்சரம்5.052நல்லர் நல்லதோர் திருநாகேச்சரம்6.066தாயவனை வானோர்க்கும்


22திருவிடைமருதூர்4.035காடுடைச் சுடலை திருவிடைமருதூர்5.014பாச மொன்றில ராய்ப்பல திருவிடைமருதூர்5.015பறையின் ஓசையும் திருவிடைமருதூர்6.016சூலப் படையுடையார் திருவிடைமருதூர்6.017ஆறு சடைக்கணிவர்


23திருக்குரங்காடுதுறை5.063இரங்கா வன்மனத் தார்கள்


24திருநீலக்குடி5.072வைத்த மாடும்


25திருநல்லம்5.043கொல்லத் தான்நம


26திருக்கோழம்பம்5.064வேழம் பத்தைவர்


27திருவாவடுதுறை4.056மாயிரு ஞால திருவாவடுதுறை4.057மஞ்சனே மணியு திருவாவடுதுறை5.029நிறைக்க வாலியள் திருவாவடுதுறை6.046நம்பனை நால்வேதங் திருவாவடுதுறை6.047திருவேயென் செல்வமே


28திருத்துருத்தி4.042பொருத்திய குரம்பை


29திருமயிலாடுதுறை5.039கொள்ளுங் காதன்மை


30திருச்செம்பொன்பள்ளி4.029ஊனினுள் ளுயிரை திருச்செம்பொன்பள்ளி5.036கான றாத கடிபொழில்


31திருநனிபள்ளி4.070முற்றுணை யாயி


32திருவலம்புரம்4.055தெண்டிரை தேங்கி திருவலம்புரம்6.058மண்ணளந்த மணிவண்ணர்


33திருவாக்கூர்6.021முடித்தா மரையணிந்த


34திருக்கடவூர்4.031பொள்ளத்த காய திருக்கடவூர்4.107மருட்டுயர் தீரவன் திருக்கடவூர்வீரட்டம்5.037மலைக்கொ ளானை மயக்கிய


35திருக்கடவூர்மயானம்5.038குழைகொள் காதினர்


36திருநள்ளாறு5.068உள்ளா றாததோர் புண்டரி திருநள்ளாறு6.020ஆதிக்கண் ணான்முகத்தி


37திருமீயச்சூர்5.011தோற்றுங் கோயிலுந்


38திருவீழிமிழலை4.064பூதத்தின் படையர் திருவீழிமிழலை4.095வான்சொட்டச் சொட்டநின் திருவீழிமிழலை5.012கரைந்து கைதொழு வாரையுங் திருவீழிமிழலை5.013என்பொ னேயிமை யோர்தொழு திருவீழிமிழலை6.050போரானை ஈருரிவைப் திருவீழிமிழலை6.051கயிலாய மலையுள்ளார் திருவீழிமிழலை6.052கண்ணவன்காண் கண்ணொளிசேர் திருவீழிமிழலை6.053மானேறு கரமுடைய


39திருவன்னியூர்5.026காடு கொண்டரங்


40திருக்கருவிலி5.069மட்டிட் டகுழ லார்சுழ


41திருஅரிசிற்கரைப்புத்தூர்5.061முத்தூ ரும்புனல் மொய்யரி


42திருச்சிவபுரம்6.087வானவன்காண் வானவர்க்கும்


43திருவாஞ்சியம்5.067படையும் பூதமும்


44திருக்கொண்டீச்சரம்4.067வரைகிலேன் புலன்க திருக்கொண்டீச்சரம்5.070கண்ட பேச்சினிற் காளையர்


45திருப்புகலூர்4.016செய்யர் வெண்ணூலர் திருப்புகலூர்4.054பகைத்திட்டார் புரங்கள் திருப்புகலூர்4.105தன்னைச் சரணென்று திருப்புகலூர்5.046துன்னக் கோவணச் திருப்புகலூர்6.099எண்ணுகேன் என்சொல்லி


46திருப்பயற்றூர்4.032உரித்திட்டார் ஆனை


47திருச்செங்காட்டங்குடி6.084பெருந்தகையைப் பெறற்கரிய


48திருமருகல்5.088பெருக லாந்தவம் பேதைமை


49திருநாகைக்காரோணம்4.071மனைவிதாய் தந்தை திருநாகைக்காரோணம்4.103வடிவுடை மாமலை திருநாகைக்காரோணம்5.083பாணத் தான்மதில் திருநாகைக்காரோணம்6.022பாரார் பரவும்


50திருக்கீழ்வேளூர்6.067ஆளான அடியவர்கட்


51திருப்பள்ளியின்முக்கூடல்6.069ஆராத இன்னமுதை


52திருவாரூர்4.004பாடிளம் பூதத்தி திருவாரூர்4.005மெய்யெலாம் வெண்ணீறு 


திருவாரூர்4.019சூலப் படையானைச் 


திருவாரூர்4.020காண்டலேகருத் தாய் 


திருவாரூர்4.021முத்து விதான மணிப்பொற் 


திருவாரூர்4.052படுகுழிப் பவ்வத் 


திருவாரூர்4.053குழல்வலங் கொண்ட 


திருவாரூர்4.101குலம்பலம் பாவரு 


திருவாரூர்4.102வேம்பினைப் பேசி 


திருவாரூர்5.006எப்போ தும்மிறை 


திருவாரூர்5.007கொக்க ரைகுழல் வீணை 


திருவாரூர்6.024கைம்மான மதகளிற்றி 


திருவாரூர்6.025உயிரா வணமிருந் 


திருவாரூர்6.026பாதித்தன் திருவுருவிற் 


திருவாரூர்6.027பொய்ம்மாயப் பெருங்கடலிற் 


திருவாரூர்6.028நீற்றினையும் நெற்றிமே 


திருவாரூர்6.029திருமணியைத் தித்திக்குந் 


திருவாரூர்6.030எம்பந்த வல்வினைநோய் 


திருவாரூர்6.031இடர்கெடுமா றெண்ணுதியேல் 


திருவாரூர்6.032கற்றவர்க ளுண்ணுங் 


திருவாரூர்6.034ஒருவனாய் உலகேத்த 


திருவாரூர்4.017எத்தீ புகினும் எமக்கொரு 


திருவாரூர்6.033பொருங்கைமதக் கரியுரிவைப்


53திருப்பெருவேளூர்4.060மறையணி நாவி


54திருத்தலையாலங்காடு6.079தொண்டர்க்குத் தூநெறியாய்


55திருச்சேறை4.073பெருந்திரு இமவான் திருச்சேறை5.077பூரி யாவரும் புண்ணியம்


56திருக்கடுவாய்க்கரைப்புத்தூர்5.062ஒருத்த னைமூ வுலகொடு


57திருஅவளிவணல்லூர்4.059தோற்றினான் எயிறு


58திருவெண்ணியூர்5.017முத்தி னைப்பவ ளத்தை திருவெண்ணியூர்6.059தொண்டிலங்கும் அடியவர்க்கோர்


59திருப்பூவனூர்5.065பூவ னூர்ப்புனி தன்றிரு


60திருப்பேரெயில்5.016மறையு மோதுவர்


61திருக்கன்றாப்பூர்6.061மாதினையோர் கூறுகந்தாய்


62திருவலிவலம்6.048நல்லான்காண் நான்மறைக


63திருக்கோளிலி5.056மைக்கொள் கண்ணுமை திருக்கோளிலி5.057முன்ன மேநினை யாதொழிந்


64திருவாய்மூர்5.050எங்கே என்னை இருந்து திருவாய்மூர்6.077பாட வடியார் பரவக்


65திருமறைக்காடு4.033இந்திர னோடு தேவர் 


திருமறைக்காடு4.034தேரையு மேல்க 


திருமறைக்காடு5.009ஓத மால்கடல் பாவி \


திருமறைக்காடு5.010பண்ணி னேர்மொழி யாளுமை 


திருமறைக்காடு6.023தூண்டு சுடரனைய 


பாண்டிய நாட்டில் உள்ள தலங்கள் 


வரிசை எண்தலப் பெயர்பதிக எண்பாடல்


1திருவாலவாய்4.062வேதியா வேத 


திருவாலவாய்6.019முளைத்தானை எல்லார்க்கும்


3திருப்புத்தூர்6.076புரிந்தமரர் தொழுதேத்தும்


4திருஇராமேச்சுரம்4.061பாசமுங் கழிக்க


5திருப்பூவணம்6.018வடிவேறு திரிசூலந் கொங்கு நாட்டில் உள்ள தலங்கள் வரிசை எண்தலப் பெயர்பதிக எண்பாடல்


1திருப்பாண்டிக்கொடுமுடி5.081சிட்ட னைச்சிவ னைச்செழுஞ்     


நடு நாட்டில் உள்ள தலங்கள் 


வரிசை எண்தலப் பெயர்பதிக எண்பாடல்


1திருவரத்துறை5.003கடவு ளைக்கட லுள்ளெழு


2திருத்தூங்கானைமாடம்4.109பொன்னார் திருவடிக்


3திருவதிகைவீரட்டானம்4.001 கூற்றாயின வாறுவி திருக்கெடிலவடவீரட்டானம்4.002சுண்ணவெண் சந்தனச் திருக்கெடிலவாணர்4.010முளைக்கதிர் இளம்பிறை 


திருவதிகைவீரட்டானம்4.024இரும்புகொப் பளித்த 


திருவதிகைவீரட்டானம்4.025வெண்ணிலா மதியந் 


திருவதிகைவீரட்டானம்4.026நம்பனே எங்கள் 


திருவதிகைவீரட்டானம்4.027மடக்கினார் புலியின் 


திருவதிகைவீரட்டானம்4.028முன்பெலாம் இளைய 


திருவதிகைவீரட்டானம்4.104மாசிலொள் வாள்போல் 


திருவதிகைவீரட்டம்5.053கோணன் மாமதி 


திருவதிகைவீரட்டம்5.054எட்டு நாண்மலர் 


திருவீரட்டானம்6.003வெறிவிரவு கூவிளநற் 


திருவதிகைவீரட்டானம்6.004சந்திரனை மாகங்கைத் 


திருவீரட்டானம்6.005எல்லாஞ் சிவனென்ன 


திருவதிகைவீரட்டானம்6.006அரவணையான் சிந்தித் 


திருவீரட்டானம்6.007செல்வப் புனற்கெடில


2திருமுதுகுன்றம்6.068கருமணியைக் கனகத்தின்


3திருக்கோவலூர்வீரட்டம்4.069செத்தையேன் சிதம்ப


4திருப்பாதிரிப்புலியூர்4.094ஈன்றாளு மாயெனக்


5திருமுண்டீச்சரம்6.085ஆர்த்தான்காண் அழல்நாகம்


6திருவாமாத்தூர்5.044மாமாத் தாகிய திருவாமாத்தூர்6.009வண்ணங்கள் தாம்பாடி


7திருவண்ணாமலை4.063ஓதிமா மலர்கள் 


திருவண்ணாமலை5.004வட்ட னைமதி சூடியை 


திருவண்ணாமலை5.005பட்டி ஏறுகந் தேறிப் 


தொண்டை நாட்டில் உள்ள தலங்கள் 


வரிசை எண்தலப் பெயர்பதிக எண்பாடல்


1திருஏகம்பம்4.007கரவாடும் வன்னெஞ்சர்க் திருஏகம்பம்4.044நம்பனை நகர திருஏகம்பம்4.099ஓதுவித் தாய்முன் திருஏகம்பம்5.047பண்டு செய்த பழவினை திருஏகம்பம்5.048பூமே லானும் பூமகள் திருஏகம்பம்6.064கூற்றுவன்காண் கூற்றுவனைக் திருஏகம்பம்6.065உரித்தவன்காண் உரக்களிற்றை


2திருக்கச்சிமேற்றளி4.043மறையது பாடிப்


3திருமாற்பேறு4.108மாணிக் குயிர்பெறக் 


திருமாற்பேறு5.059பொருமாற் றின்படை 


திருமாற்பேறு5.060ஏது மொன்று மறிவில 


திருமாற்பேறு6.080பாரானைப் பாரினது


4திருவாலங்காடு4.068வெள்ளநீர்ச் சடையர் 


திருவாலங்காடு6.078ஒன்றா வுலகனைத்து


5திருப்பாசூர்5.025முந்தி மூவெயி லெய்த திருப்பாசூர்6.083விண்ணாகி நிலனாகி


6திருக்காளத்தி6.008விற்றூணொன் றில்லாத


7திருவொற்றியூர்4.045வெள்ளத்தைச் சடையில் திருவொற்றியூர்4.046ஓம்பினேன் கூட்டை திருவொற்றியூர்4.086செற்றுக் களிற்றுரி திருவொற்றியூர்5.024ஒற்றி யூரும் ஒளிமதி திருவொற்றியூர்6.045வண்டோங்கு செங்கமலங்


8திருவான்மியூர்5.082விண்ட மாமலர் கொண்டு


9திருக்கழுக்குன்றம்6.092மூவிலைவேற் கையானை 


துளுவ நாட்டில் உள்ள தலம் 


வரிசை எண்தலப் பெயர்பதிக எண்பாடல்


1திருக்கோகரணம்6.049சந்திரனுந் தண்புனலுஞ் வட நாட்டில் உள்ள தலங்கள் வரிசை எண்தலப் பெயர்பதிக எண்பாடல்1திருப்பருப்பதம்4.058கன்றினார் புரங்கள்


2திருக்கயிலாயம்4.047கனகமா வயிர திருக்கயிலாயம்6.055வேற்றாகி விண்ணாகி திருக்கயிலாயம்6.056பொறையுடைய பூமிநீ திருக்கயிலாயம்6.057பாட்டான நல்ல பொதுப் பதிகங்கள் வரிசை எண்பதிகப் பெயர்பதிக எண்பாடல்


1திருசிவனெனுமோசை4.008சிவனெனு மோசையல்ல


2திருஅங்கமாலை4.009தலையே நீவணங்காய்


3திருநமச்சிவாயப்பதிகம்4.011சொற்றுணை வேதியன்


4திருதசபுராணம்4.014பருவரை யொன்றுசுற்றி


5திருபாவநாசத்திருப்பதிகம்4.015பற்றற் றார்சேற்


6விடந்தீர்த்ததிருப்பதிகம்4.018ஒன்றுகொ லாமவர்


7நெஞ்சம்ஈசனைநினைந்த4.074முத்தினை மணியைப்


8தனித் - திருநேரிசை4.075தொண்டனேன் பட்ட


9தனித் - திருநேரிசை4.076மருளவா மனத்த


10தனித் - திருநேரிசை4.077கடும்பகல் நட்ட


11குறைந்த - திருநேரிசை4.078வென்றிலேன் புலன்க


12குறைந்த - திருநேரிசை4.079தம்மானங் காப்ப


13ஆருயிர்த் - திருவிருத்தம்4.084எட்டாந் திசைக்கும்


14பசுபதி - திருவிருத்தம்4.110சாம்பலைப் பூசித்


15சரக்கறை - திருவிருத்தம்4.111விடையும் விடைப்பெரும்


16தனி - திருவிருத்தம்4.112வெள்ளிக் குழைத்துணி


17தனி - திருவிருத்தம்4.113பவளத் தடவரை


18தனி5.089ஒன்று வெண்பிறைக்


19தனி5.090மாசில் வீணையும் மாலை


20தனி5.091ஏயி லானையெ னிச்சை


21காலபாராயணம்5.092கண்டு கொள்ளரி


22மறக்கிற்பனே என்னும்5.093காச னைக்கன லைக்கதிர்


23தொழற்பாலனம் என்னும்5.094அண்டத் தானை அமரர்


24இலிங்கபுராணம்5.095புக்க ணைந்து புரிந்தல


25மனத்தொகை5.096பொன்னுள் ளத்திரள்


26சித்தத்தொகை5.097சிந்திப் பார்மனத் தான்சிவன்


27உள்ளம்5.098நீற லைத்ததோர் மேனி


28பாவநாசம்5.099பாவ மும்பழி பற்றற


29ஆதிபுராணம்5.100வேத நாயகன் வேதியர்


30க்ஷேத்திரக்கோவை6.070தில்லைச் சிற்றம்பலமுஞ்


31திருஅடைவு6.071பொருப்பள்ளி வரைவில்லாப்


32பலவகைத் - திருத்தாண்டகம்6.093நேர்ந்தொருத்தி ஒருபாகத்


33நின்ற - திருத்தாண்டகம்6.094இருநிலனாய்த் தீயாகி


34தனி - திருத்தாண்டகம்6.095அப்பன்நீ அம்மைநீ


35தனி - திருத்தாண்டகம்6.096ஆமயந்தீர்த் தடியேனை


36திருவினாத் - திருத்தாண்டகம்6.097அண்டங் கடந்த சுவடு


37மறுமாற்றத்-திருத்தாண்டகம்6.098நாமார்க்குங் குடியல்லோம் திருச்சிற்றம்பலம்

Read more at: https://shaivam.org/panniru-thirumurai/appar-thevaram-4-to-6-thirumurais-thalamurai-verses-1-3067/#gsc.tab=0

மஹாளய தர்ப்பணம்

 Radhe Krishna 03-05-2024


மஹாளய தர்ப்பணம் 

   

Sl.No. 

பிதரம்   

சர்மாணம் (அ)  

அம்மாதாம்  

கோத்ரம் (அ) கோத்ராம் 

ரூபம் (அ)  

ரூபாம் 

த-தந் -தர்யாமி  பாரதீ ரமண முக்கியப்ரானந்தர்கத 


ப்ரத்யும்னன் (அ) ஸங்கர்ஷனன் (அ)  

ஸ்ரீ வாசுதேவம் 

ஸ்வதா  

நமஸ்  

தர்ப்பயாமி 

 என்று  

முறை 









1. 

அஸ்மத்   

பிதரம் 

ரங்கராவ்  

சர்மாணம் 

ஜமதக்னி கோத்ரம்  

வசு  

ரூபம்  


ப்ரத்யும்னன்  

ஸ்வதா 

 நமஸ்  

தர்ப்பயாமி 

 என்று  

முறை  

2. 

பிதாமஹம் 

நரசிங்க ராவ்  சர்மாணம் 

ஜமதக்னி  

கோத்ரம் 

ருத்ர 

ரூபம் 


ஸங்கர்ஷணன் 

ஸ்வதா 

 நமஸ்  

தர்ப்பயாமி  

என்று  

முறை

3. 

ப்ரபிதாமஹம் 

ராமச்சந்த்ர ராவ்  

சர்மாணம் 

ஜமதக்னி  

கோத்ரம் 

ஆதித்ய  

ரூபம்  

  

ஸ்ரீ  

வாசுதேவம் 

ஸ்வதா 

 நமஸ்  

தர்ப்பயாமி  

என்று  

முறை  

4. 

மாதரம் 

லக்ஷ்மி  

அம்மாதாம் 

ஜமதக்னி  

கோத்ரம் 

வசு  

ரூபம் 



ப்ரத்யும்னன்  

ஸ்வதா 

 நமஸ்  

தர்ப்பயாமி  

என்று  

முறை

5. 

பிதாமஹீம்  

குப்பம்மா / நம்மாளு அம்மாள் தான்  

ஜமதக்னி  

கோத்ரம் 

ருத்ர 

ரூபம் 

  

ஸங்கர்ஷணன் 

 ஸ்வதா 

 நமஸ்  

தர்ப்பயாமி  

என்று  

முறை 

6. 

ப்ரபிதாமஹீம்  

லக்ஷ்மி  

அம்மாதாம் 

ஜமதக்னி  

கோத்ரம் 

  ஆதித்ய  

ரூபம் 

  

ஸ்ரீ  

வாசுதேவம் 

ஸ்வதா 

 நமஸ்  

தர்ப்பயாமி  

என்று  

முறை 


ஸாபத்வீக 

மாதரம் 

(அம்மாதாம்) 





ஸ்வதா 

 நமஸ்  

தர்ப்பயாமி  

என்று  

முறை 

7. 

 மாதாமஹம்  

(தாயாரின் தந்தை) 


நரசிம்ம ராவ் 

சர்மாணம் 

கௌண்டின்ய கோத்ரம்  

வசு  

ரூபம்  

  

  


ப்ரத்யும்னன்  

ஸ்வதா 

 நமஸ்  

தர்ப்பயாமி  

என்று  

முறை

8. 

மாதுப்பிதாமஹம்  

(மேற்படி தாயாரின் தந்தை) 

ரங்கோபாச்சார் 

சர்மாணம் 

கௌண்டின்ய கோத்ரம்  

ருத்ர ரூபம் 


ஸங்கர்ஷணன் 

ஸ்வதா 

 நமஸ்  

தர்ப்பயாமி  

என்று  

முறை

9. 

மாதுப்  

ப்ரபிதாமஹம் 

(மேற்படி தாயாரின் தந்தை) 

நரசிம்ம ராவ்  

  

சர்மாணம் 

கௌண்டின்ய கோத்ரம்  

ஆதித்ய  

ரூபம்     

  

ஸ்ரீ  

வாசுதேவம் 

ஸ்வதா 

 நமஸ்  

தர்ப்பயாமி  

என்று  

முறை

10

மாதா மஹீம்  (தாயாரின் அம்மா)

சரஸ்வதி

கௌண்டின்ய கோத்ரம்

வசு  

ரூபம்


ஸங்கர்ஷணன்

ஸ்வதா 

 நமஸ்  

தர்ப்பயாமி  

என்று  

முறை 



Sl.No. 

பிதரம்   

சர்மாணம் (அ)  

அம்மாதாம்  

கோத்ரம் (அ) கோத்ராம் 

ரூபம் (அ)  

ரூபாம் 

த-தந் -தர்யாமி  பாரதீ ரமண முக்கியப்ரானந்தர்கத 


ப்ரத்யும்னன் (அ) ஸங்கர்ஷனன் (அ)  

ஸ்ரீ வாசுதேவம் 

ஸ்வதா  

நமஸ்  

தர்ப்பயாமி  என்று  

முறை 

11. 

மாதுப் பிதாமஹீம்

(மேற்படி 

தாயாரின் 

அம்மா ) 

 துளசி அம்மாள் 

கௌண்டின்ய கோத்ரம்

ருத்ர ரூபம் 


ஸ்ரீ  

வாசுதேவம் 

ஸ்வதா 

 நமஸ்  

தர்ப்பயாமி  

என்று  

முறை

12. 

மாதுப் ப்ரபிதாமஹீம் ((மேற்படி தாயாரின் அம்மா ) 

லட்சுமி அம்மாள் 

கௌண்டின்ய கோத்ரம்

ஆதித்ய  

ரூபம்  


  ஸ்ரீ  

வாசுதேவம் 

ஸ்வதா 

 நமஸ்  

தர்ப்பயாமி 

 என்று  

முறை  

13. 

ஆத்ம பத்னீம் ( தன் மனைவி)


  ------------

வசு  

ரூபம்


ப்ரத்யும்னன்  

ஸ்வதா 

 நமஸ்  

தர்ப்பயாமி  

என்று  

முறை  

14. 

புத்ரம் 


----------

வசு  

ரூபம்

  

ப்ரத்யும்னன்

ஸ்வதா 

 நமஸ்  

தர்ப்பயாமி 

 என்று  

முறை  

15. 

தத் பத்னீம் 


-----------

வசு  

ரூபம்



ப்ரத்யும்னன்  

ஸ்வதா 

 நமஸ்  

தர்ப்பயாமி  

என்று  

முறை

16. 

துஹிதாம்

---------

வசு  

ரூபம்

  

ப்ரத்யும்னன்  

ஸ்வதா 

 நமஸ்  

தர்ப்பயாமி 

 என்று  

முறை 

17. 

தத் பர்த்தாரம்

----------------

  வசு  

ரூபம்

  

ப்ரத்யும்னன்  

ஸ்வதா 

 நமஸ்  

தர்ப்பயாமி  

என்று  

முறை

18. 

தத் புத்ரம்

------------

வசு  

ரூபம்


ப்ரத்யும்னன்  

ஸ்வதா 

 நமஸ்  

தர்ப்பயாமி 

 என்று  

முறை

19. 

பித்ருத்வயம் (பெரியப்பா / சித்தப்பா

சீதாபதி ராவ் /

ராஜகோபால் 

ஜமதக்னி கோத்ரம் 

  வசு  

ரூபம்


ப்ரத்யும்னன்  

ஸ்வதா 

 நமஸ்  

தர்ப்பயாமி 

 என்று  

முறை  

20. 

 தத்  பத்னீம் 

துங்கா பாய் 

ஜமதக்னி கோத்ரம்

வசு  

ரூபம்


ப்ரத்யும்னன்  

ஸ்வதா 

 நமஸ்  

தர்ப்பயாமி  

என்று  

முறை

21. 

தத் புத்ரம் 

--------------

வசு  

ரூபம்

ப்ரத்யும்னன்  

ஸ்வதா 

 நமஸ்  

தர்ப்பயாமி  

என்று  

முறை 

22.

மாதுலம்  (தாய் மாமன்

ரங்கநாத ராவ் 

கௌண்டின்ய கோத்ரம் 

வசு  

ரூபம்


ப்ரத்யும்னன்  

ஸ்வதா 

 நமஸ்  

தர்ப்பயாமி  

என்று  

முறை


Sl.No. 

பிதரம்   

சர்மாணம் (அ)  

அம்மாதாம்  

கோத்ரம் (அ) கோத்ராம் 

ரூபம் (அ)  

ரூபாம் 

த-தந் -தர்யாமி  பாரதீ ரமண முக்கியப்ரானந்தர்கத 


ப்ரத்யும்னன் (அ) ஸங்கர்ஷனன் (அ)  

ஸ்ரீ வாசுதேவம் 

ஸ்வதா  

நமஸ்  

தர்ப்பயாமி  

என்று  

முறை 

23.

தத் பத்னீம் 

-------------


வசு  

ரூபம்


ப்ரத்யும்னன்  

ஸ்வதா  

நமஸ்  

தர்ப்பயாமி 

என்று  

முறை

24. 

தத் புத்ரம் 

---------------

வசு  

ரூபம்


ப்ரத்யும்னன்  

ஸ்வதா  

நமஸ்  

தர்ப்பயாமி 

என்று  

முறை 

25. 

ப்ராதரம் (சகோதரர்)

-------------

வசு  

ரூபம்


ப்ரத்யும்னன்  

ஸ்வதா  

நமஸ்  

தர்ப்பயாமி  

என்று  

முறை

26. 

தத் பத்னீம் 

--------------

வசு  

ரூபம்

  

ப்ரத்யும்னன்  

ஸ்வதா  

நமஸ்  

தர்ப்பயாமி  

என்று  

முறை

27. 

தத் புத்ரம்

-----------

வசு  

ரூபம்


ப்ரத்யும்னன்  

ஸ்வதா  

நமஸ்  

தர்ப்பயாமி 

என்று  

முறை 

28. 

பித்ரு பஹனீம் (அப்பாவின் சகோதரிகள்)

லட்சுமி அம்மாள் / ருக்மிணி அம்மாள் / 
பேபி அத்தை / சரஸ்வதி பாய் 

பாரத் வாஜ /பாரத் வாஜ / ஆத்ரேய / கௌண்டின்ய 

வசு  

ரூபம்

  

ப்ரத்யும்னன்  

  ஸ்வதா 

நமஸ்  

தர்ப்பயாமி 

என்று  

முறை

29. 

தத் பார்த்தாராம் 

ராஜகோபால் ராவ் / ராஜகோபால் ராவ் / 
வெங்கட் ராவ் / 
நரசிம்ம ராவ் 

பாரத் வாஜ /பாரத் வாஜ / ஆத்ரேய / கௌண்டின்ய 

வசு  

ரூபம்

  

ப்ரத்யும்னன்  

ஸ்வதா 

 நமஸ்  

தர்ப்பயாமி  

என்று  

முறை

30.

தத் புத்ரம் 

சேஷகிரி ராவ் 

பாரத் வாஜ

வசு  

ரூபம்


ப்ரத்யும்னன்  

ஸ்வதா 

 நமஸ்  

தர்ப்பயாமி  

என்று  

முறை

31. 

மாத்ரு பஹிணீம் (அம்மாவின் சகோதரிகள்)
காவேரி / சரோஜா  கௌண்டின்ய /  விஸ்வா
மித்ர 

வசு  

ரூபம்  


  


ப்ரத்யும்னன்  

ஸ்வதா 

 நமஸ்  

தர்ப்பயாமி  

என்று  

முறை

32. 

தத் பர்த்தாரம்  அவர் கணவர் 

(not married )
ஸ்ரீனிவாச ராவ் 
கௌண்டின்ய /  விஸ்வா
மித்ர

வசு  

ரூபம்


ப்ரத்யும்னன்  

ஸ்வதா 

 நமஸ்  

தர்ப்பயாமி  என்று  

முறை

33. 

தத் புத்ரம் 

--------------

   வசு  

ரூபம் 

  

ப்ரத்யும்னன்  

ஸ்வதா 

 நமஸ்  

தர்ப்பயாமி  

என்று  

முறையாமி  

34.

ஆத்ம பஹிணீம் (அக்கா, தங்கைகள்))

பாமா பாய் / பிருந்தா பாய் 

காஸ்யப / பாரத் வாஜ கோத்ரம்

வசு  

ரூபம்


ப்ரத்யும்னன்  

ஸ்வதா 

 நமஸ்  

தர்ப்பயாமி  

என்று  

முறை


Sl.No. 

பிதரம்   

சர்மாணம் (அ)  

அம்மாதாம்  

கோத்ரம் (அ) கோத்ராம் 

ரூபம் (அ)  

ரூபாம் 

த-தந் -தர்யாமி  பாரதீ ரமண முக்கியப்ரானந்தர்கத 


ப்ரத்யும்னன் (அ) ஸங்கர்ஷனன் (அ)  

ஸ்ரீ வாசுதேவம் 

ஸ்வதா  

நமஸ்  

தர்ப்பயாமி  

என்று  

முறை 

35. 

தத்  பர்த்தாரம் 

 ராஜகோபாலன் / ராகவேந்திரன் 

காஸ்யப / பாரத் வாஜ கோத்ரம்

வசு  

ரூபம்



ஸ்வதா 

 நமஸ்  

தர்ப்பயாமி  

என்று  

முறை

36. 

தத் புத்ரம் 

சத்யநாராயணா (மூர்த்தி)பாரத் வாஜ கோத்ரம்

வசு  

ரூபம்


ப்ரத்யும்னன்  

ஸ்வதா 

 நமஸ்  

தர்ப்பயாமி  என்று  

முறை 

37. 

ஸ்வாசுரம் (மாமனார்)
வெங்கோபாச்சார் பாரத் வாஜ கோத்ரம்

வசு  

ரூபம்


ப்ரத்யும்னன்  

ஸ்வதா 

 நமஸ்  

தர்ப்பயாமி 

 என்று  

முறை

38. 

தத் பத்னீம் 

நாகம்மாள் (பத்மா)பாரத் வாஜ கோத்ரம்

வசு  

ரூபம்

  

ப்ரத்யும்னன்  

ஸ்வதா 

 நமஸ்  

தர்ப்பயாமி  

என்று  

முறை

39. 

தத் புத்ரம் 


-----------

வசு  

ரூபம்


ப்ரத்யும்னன்  

ஸ்வதா 

 நமஸ்  

தர்ப்பயாமி 

 என்று  

முறை  

40. 

ஸ்வாமினாம் (அ) தந்தை 

ரங்கா ராவ் ஜமதக்னி 

வசு  

ரூபம்

  

ப்ரத்யும்னன்  

  ஸ்வதா 

 நமஸ்  

தர்ப்பயாமி 

 என்று  

முறை

41. 

ஸக்ஹ்யம் (நண்பர்)
வர்தி கஸ்யப 

வசு  

ரூபம்

    

ப்ரத்யும்னன்  

ஸ்வதா 

 நமஸ்  

தர்ப்பயாமி  

என்று  

முறை

42.

குரும் (1) தந்தை (அ) வேறு குரு 

ரங்கா ராவ் 

ஜமதக்னி 

வசு  

ரூபம்  


ப்ரத்யும்னன்  

ஸ்வதா 

 நமஸ்  

தர்ப்பயாமி  

என்று  

முறை

43. 

தத் பத்னீம்
லக்ஷ்மி ஜமதக்னி

வசு  

ரூபம்  


  


ப்ரத்யும்னன்  

ஸ்வதா 

 நமஸ்  

தர்ப்பயாமி  

என்று  

முறை  

44. 

தத் புத்ரம்


------------

வசு  

ரூபம்  


ப்ரத்யும்னன்  

ஸ்வதா 

 நமஸ்  

தர்ப்பயாமி  என்று  

முறை

45. 

    

  



46.