Sunday, January 18, 2026

மனம் உடைந்த முரளி

ராதே கிருஷ்ணா 18-01-2026


மனம் உடைந்த முரளி 


அம்பத்தூரில் ஏகாம்பர ஐயர் தெருவில் கந்தசுவாமி அவர்களின் வீட்டில் 1950ம் வருடம் ஜூன் மாதம் 5ம் தேதியில் பிறந்தேன். LIC ரங்கா ராவ் லட்சுமி தம்பதியினருக்கு இரண்டாவதாக பிறந்தேன். எனது அக்கா பாமா அவர்கள் முதலில் பிறந்தார்கள், அடுத்து நான் பிறந்தேன். குடும்பத்தில் மூத்த மகனாகப்பிறந்தேன். மூத்தவனாகப்பிறந்தவன் படும் கஷ்ட நஷ்டங்களைப்பற்றி நான் விவாதிக்க வரவில்லை.  எனக்கு அடுத்ததாக பிருந்தா, சந்திரா , மற்றும் அடுத்து அனந்தபத்மநாபன் 1959ல் பிறந்தான், ஆறாவதாக ராகவேந்திரன் 1961ம் ஆண்டு பிறந்தான்.

மூத்தவனாகப்பிறந்ததால் குடும்பத்தலைவரின் பொறுப்புகளில் நானும் பங்கேற்க வேண்டும் என்றாகியது. அப்பா அவருக்குரிய கட்டுப்பாட்டுகளோடு அவருக்கு துணையாக அம்மாவும் நடந்துகொண்டார்கள்.  முதலில் அக்கா பாமாவின் திருமணம் 1971ம் வருடம் நடந்தது. பாவா அவர்கள் டெலிக்ராப் ஆபீசில் பனி புரிந்தார். எனது அக்கவின் திருமணம் நடந்தபோது எனக்கு உபநயனம் நடந்தது. அவர்களுக்கு இரட்டையர் என்று  ஒரு மகளும் மகனும் இருவருக்கும் ஒரு மணி நேரம் வித்தியாசத்தில் 1974ம் ஆண்டு அக்டோபர் 9ம் தேதியில் பிறந்தனர்.

அது ஒரு சுவையான சம்பவம், இப்போது அதைப்பற்றி விவரிக்கப்போவதில்லை. அடுத்ததாக பிருந்தாவிற்கு திருநெல்வேலி மாப்பிள்ளையுடன் இனிதாக திருமணம் நடந்தது. அவளை புகுந்தவீட்டிற்கு நான் அழைத்துச்சென்று விட்டு வந்தேன்.  அவர்கள் ஆவடிக்கு அருகில் கோவர்தகிரியில் லட்சுமிபுரம் இடத்தில் வீடு அமைத்து வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கு இரண்டு மகன்கள் ரங்கநாதன் சத்யநாராயணா என்றும் சூர்யகலா என்று பெண்ணும் பிறந்து வளர்ந்தார்கள்.  சந்திராவிற்கு அனந்தபத்மநாபன் என்பவருக்கு மனம் முடித்து மகன் ஒன்று மகள் ஒன்று பிறந்து வெளிநாட்டில் வசித்து வருகின்றனர். அதன்பிறகு அனந்தபத்மநாபன் அனந்தவராத சதுர்தசி அன்று பிறந்தான். டிகிரி படிப்பு முடித்து சேஷாசயீ என்பவரது மகள் ஜெயந்தியை மணந்து அமெரிக்காவில் பிறந்த தன இரண்டு மகள்கள்களுக்கு மனம் முடித்து இன்பமாக வரழ்ந்து வருகின்றனர். இளையபிள்ளையாக ராகவேந்திரன் 1961ல் பிறந்து ஆன் மூலம் அரசாளும் என்பதற்கு ஏற்ப விஜயலக்ஷ்மி என்பவரை மணந்து இரண்டு மகள்களைப்பெற்று வளர்த்து மணமுடித்து அமெரிக்காவில் வாழ்ந்து வருகின்றனர்.

நம் கதைக்கு வருவோம். 1966ம் ஆண்டு பள்ளிப்படிப்பு முடித்து, அப்பாவின் விருப்பத்திற்கு நியூ காலேஜில் சேர்ந்து படித்தேன். மகர ராசியில் பிறந்த நான் தனது உச்ச கிரகமான சனி வாசம் செய்யும் இடத்திலேயே பிறந்தேன்.

சனி விளையாட ஆரம்பித்தது. PUC யில் மதிப்பெண் குறைவாகப்பெற்றதால் அதன் பிறகு மீண்டும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றேன். அதற்குள் ஒரு வருடம் வீணாகுமே என்று ஆவடி பாலிடெக்னிக்கில் சேர்ந்து எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் டிப்ளமோ சேர்ந்து, விருப்பப்படமாக எலக்ட்ரானிக்ஸ் எடுத்து 1970 ல் முடித்து வந்தேன். 

முதலில் டன்லப் பாக்டரியில் பராமரிப்பு பணியில் இரண்டு வாரம் வேலை செய்தேன். பிறகு கொரட்டூர் துணை மின் நிலையத்தில் தொழில் பழகுணராக சேர்ந்து ஒருமாதம் பனி புரிந்தேன். 

அப்பா அவர்கள் என்னை கடிந்துகொண்டு , வேலை தேடும் விளம்பரங்களைப்பார்ப்பதையே இல்லை என்று கேட்டார். IIT யில் வேலை சேர விளம்பரம் வந்துள்ளது என்றார். அதற்கு நான் அனுப்பி எனக்கு அபப்ளிகேஷன்  வந்து விட்டது என்றேன், காண்பித்துவிட்டேன். 

அப்பாவின் சாஸ்வதநிதியின் மாதாந்தரியத்தொகையை நான் ஆதம்பாக்கம் சென்று கட்டிவந்தேன்.

பிருந்தாவின் திருமணத்திற்கு என்னால் ஆனா உய்தவி செயதேன். அம்பத்தூரில் ப்ருத்விபக்கத்தில் இருக்கும் சுதாவின் சித்தி சித்தப்பா இருந்தார்கள். அவர்கள் மூலம் திருவல்லிக்கேணியில் இருக்கும் திரு, வெங்கோபாச்சார் நாகம்மாள் அவர்களின் மகள் சுதாவை அம்பத்தூரில் சித்தி வீட்டில் பெண் பார்த்து அக்டோபர் 30ம் தேதியில் திருச்சான்னூரில் (கீழ் திருப்பதி) சபா மண்டபத்தில் இனிதே நடந்தேறியது.

முதலில் கல்பாக்கததில் 15, முதல் அவின்யூவில் இருந்தேன். அப்போது மோகன் மாலதி என்பவரது நட்பு கிடைத்தது. சாத்தனூர் பயணத்தின் போது ஏற்பட்ட நட்பின் காரணமாக மோகன் மாலதி அவர்களுடன் சேர்ந்து ஒரே வீட்டில் வசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.சில மாதங்களில் சுதா பிரசவத்திற்கு சென்னை வந்துவிட்டாள். 

வாராவாரம் வெள்ளிக்கிழமை மலை கல்பாக்கம் - தாம்பரம், நுணக்கம்பக்கம், அம்பத்தூர் என்று சரியாக 8:10க்கு வீடு வந்து சேருவேன்.

ஜூலை மாதம் 22ம் தேதி ராஜகோபால் பிறந்தான்.   சில மாதங்களுக்குப்பிறகு திருக்கழுக்குன்றத்தில் சுப்பிரமணிய முதலியார் மூலமாக வீடு பார்த்து குடியேறினோம். நான் அங்கிருந்து காலையில் 7:15 மணிக்கு    108 நம்பர் பஸ்ஸில் கல்பாக்கம் சென்று ஆபிஸ் பஸ் பிடித்து ஆபீஸ் செல்வேன். மலையில் வீட்டிற்குச்செல்வேன். பஸ்ஸில் வரும்போதே அங்குள்ள கண்ணியப்பா மற்றும் புவநேசவரி தியேட்டரில் என்ன படம் என்று பார்த்து  மறுநாள் மாலை அந்த படத்திற்க்குப்போவோம். சுமார் 2 வருடம் அந்த வாழ்க்கை தொடர்ந்தது.