Friday, May 17, 2019

அன்புடன் அந்தரங்கம்!

ராதே கிருஷ்ணா 18-05-2019



அன்புடன் அந்தரங்கம்!


பதிவு செய்த நாள்

12மே
2019 
00:00
அன்புள்ள அம்மாவுக்கு —
என் வயது, 29, படிப்பு, பி.காம்., கணவர் வயது, 33. எங்களுடையது, பெற்றோரின் சம்மதத்துடன் நடந்த காதல் திருமணம். என் கணவர் வீட்டில், இத்திருமணத்தில் அவ்வளவாக சம்மதமில்லை. வேறு வழியில்லாமல் ஏற்றுக் கொண்டனர்.
மத்திய அரசு பணியில் உள்ளார், என் கணவர். அவருக்கு, இரு தம்பிகள். எங்களுக்கு, ஐந்து வயதில் ஒரு மகள் இருக்கிறாள்.
கணவரின் ஒரு தம்பிக்கு, சமீபத்தில் திருமணமானது. வீட்டில், சகல மரியாதைகளும் அவருக்கு தான் கிடைக்கிறது. அவரையும், அவர் மனைவியையும் தலையில் வைத்து கொண்டாடுகின்றனர், மாமனார் - மாமியார். 
வீட்டு விசேஷமானாலும், அவர்கள் உறவினர் வீட்டு விசேஷமானாலும், தம்பியும், அவர் மனைவிக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிப்பர்.
நாங்கள் ஒதுக்கப்பட்டவர்கள் போல் இருக்க வேண்டும். தனிக்குடித்தனம் போகலாம் என்றால், என் கணவர் மறுக்கிறார். 'என் ஜாதிகார பெண்ணை திருமணம் செய்திருந்தால், வீட்டிலும், உறவினர் மத்தியிலும் மரியாதை கிடைத்திருக்கும்...' என்று, அவர் சொல்லியபோது, சுக்கு நுாறாகிப் போனேன்.
இப்போது, இன்னொரு தம்பிக்கு பெண் பார்த்து வருகின்றனர். அவருக்கும் திருமணமாகி, மூன்றாவது மருமகளும் வந்து விட்டால், எங்கள் நிலை என்னாகுமோ... நினைத்தாலே, 'பகீர்' என்கிறது.
ஒரே வீட்டில், தனி தீவாக இருப்பது, ஒவ்வொரு நாளும் படு இம்சையாக இருக்கிறது. நான் என்ன செய்ய வேண்டும் அம்மா.
— இப்படிக்கு,
உங்கள் மகள்,


அன்பு மகளுக்கு —
பெரியோரால் பார்த்து நடத்தி வைக்கப்படும் திருமணங்களுக்கு கிடைக்கும் மரியாதையும், கவனிப்பும், காதல் திருமணங்களுக்கு ஒரு போதும் கிடைக்காது; அவர்கள், இரண்டாம் பட்சம் தான்.
இன்னொரு கோணத்தையும் பார்க்க வேண்டும் மகளே... 
உங்களது காதல் திருமணம் நடந்து, ஆறு ஆண்டுகளாகி விட்டன. காதல் திருமணம் மூலம் வந்தவளோ, பெற்றோரால் பார்த்து நிச்சயிக்கப்பட்ட திருமணம் மூலம் வந்தவளோ, எப்படி இருந்தாலும், நீ பழைய மருமகள். புதிதாக நடந்த கொழுந்தனார் திருமணத்தை, கணவன் வீட்டார் கொண்டாடுவது, தலையில் வைத்து கூத்தாடுவது, இயல்பான விஷயம் தானே...
உன்னை புறக்கணிப்பதாக, புகார் கூறுவது கூட, உன் தாழ்வு மனப்பான்மையாக இருக்கக் கூடும். நாளை, உன் கொழுந்தனும், அவர் மனைவியும், பழைய ஜோடி ஆகி விடுவர். இளைய கொழுந்தனுக்கு திருமணம் ஆகும்போது, அவனும், அவன் மனைவியும், கணவன் வீட்டாரால் கொண்டாடப்படுவர்.
கடைசி மகனுக்கு திருமணமாகி, மூன்று மருமகள்களுடன் இருந்து பார்த்த பிறகு, யார் சிறந்தவள் என, மனத்தராசில் எடை பார்க்கப்பட்டு, சிறந்த மருமகள் நீ என, கொண்டாடப்படும் காலமும் வரலாம்.
காதல் திருமணம் செய்த உனக்கும், உன் கணவனுக்கும், வெற்றிகரமான தாம்பத்யம் மற்றும் மகளின் ஒளிமயமான எதிர்காலம் முக்கியமா அல்லது புகுந்த வீட்டு வானவில் மரியாதைகள் முக்கியமா என யோசி.
புகுந்த வீட்டு மரியாதைகளும் வேண்டாம், அதே நேரத்தில் உள்ளுக்குள்ளேயே இருந்து, இரு தரப்பும் அவதிப்படவும் வேண்டாம் என்றால், ஏன் ஊமையாய் இருந்து குமைகிறீர்கள்... உறவு சிறை, புழுக்கமாக, புகைச்சலாக இருந்தால், தனிக்குடித்தனம் போய் விடு.
'பெற்றோருக்கும், மனைவி, மகளுக்கும் இடையே, இருதலை கொள்ளி எறும்பாய் ஏன் தவிக்கிறாய் கணவா... வா... தனிக்குடித்தனம் போய் விடலாம்...' என, கணவனை மூளை சலவை செய். காதலிக்கும்போது, செய்த சாகசத்தில் ஒரு பகுதியை திருமணத்திற்கு பின் செய்ய தெரியாதா உனக்கு?
ஆணும், பெண்ணும், ஒவ்வொரு உறவு நிலையில் நின்று, சக உறவுகளிடம் முதல் மரியாதை எதிர்பார்ப்பது, மனித மனங்களின், 'ஈகோ' செய்யும் மாய்மாலம். ஒரு மனிதருக்கு எவ்வளவு தேவைப்படுமோ அவ்வளவு, 'ஈகோ' இருந்தால், அது, வாழ்க்கையில் பல சிறப்புகளை கொடுக்கும்; மிதமிஞ்சி இருந்தால், நிம்மதியை கெடுக்கும்.
பணத்தையும், மரியாதையையும் நாம் தேடி போகக் கூடாது... அவை, நம்மை நாடி வரவேண்டும். அமைதியுடன், குடும்ப வாழ்க்கையில் நிரந்தர வெற்றி பெறு, மகளே!
— என்றென்றும் தாய்மையுடன், 
சகுந்தலா கோபிநாத்.

அம்மாக்களின் ராணி அம்மா!

Radhe Krishna 18-05-2019



அம்மாக்களின் ராணி அம்மா!

பதிவு செய்த நாள்

12மே
2019 
00:00
படுக்கையில் புரண்டு படுத்தேன். தலைமாட்டிலிருந்த, 'ஸ்மார்ட் போன்' சிணுங்கியது. அரை இருட்டில் எடுத்து பார்த்தேன்.
கனடா நாட்டில், கணவனுடன் வசிக்கும், மகள் யாழினி குறுஞ்செய்தி அனுப்பியிருந்தாள். இருபதுக்கும் மேற்பட்ட குறுஞ்செய்திகள், 'வாட்ஸ் - ஆப்'பில் வந்து குவிந்திருந்தன.
'உலகில் எத்தனையோ பெண்களுக்கு, பாசமான, தன்னலமற்ற தாய்கள் கிடைத்திருக்க, எனக்கு மட்டும் ஓரவஞ்சனை தாய், ஏன்; ஒரு கண்ணில் வெண்ணெய்யும், மறு கண்ணில் சுண்ணாம்பும் வைத்து பார்ப்பது, ஏன்; மகன்களை தலையில் துாக்கி வைத்து கொண்டாடுவதும், மகள்களை காலில் இட்டு நசுக்குவதும் சரியா?
'மகளுக்கு திருமணம் செய்து வைத்ததும், கடமை முடிந்தது என, தாய், மகள் உறவை கத்தரிக்கிறாயே, இது நியாயமா; மகனுக்கு செய்யும் செலவில், நுாற்றில் ஒரு பங்கைதான் மகளுக்கு செய்திருக்கிறாய்; உள்ளத்தில் ஒன்றும், உதட்டில் ஒன்றும் வைத்து, 'வாட்ஸ் - ஆப்'பில் பேசும் உன் பேச்சு, எனக்கு எட்டிக்காயாய் கசக்கிறது; நானும், என் கணவரும், மகளும் பாச தேசத்திலிருந்து வெளியேற்றப்பட்ட அகதிகள்...'
- நெருப்பு துண்டங்களாக கனந்தன, குறுஞ்செய்திகள்.
எனக்கு கண்ணீர் துளிர்த்தது. 'மகள், யாழினி - மகன், இளஞ்சேரனின் பெற்றோரான நாங்கள், இருவர் மீதும் பாரபட்சமில்லாத அன்பைத்தானே பொழிந்தோம். மூத்தவள், மகள் என்பதால், அவளை எவ்வளவு அதிகபட்சம் படிக்க வைக்க முடியுமோ அவ்வளவு படிக்க வைத்தோமே! 
'நானாவது, முன்கோபக்காரன். மகளிடம் சிறு விஷயத்துக்கெல்லாம் கோபித்துக் கொள்வேன். ஆனால், என் மனைவி, தன் மகளுக்கு சேவகம் செய்யும், தாதியாக அல்லவா செயல்பட்டாள். பேத்தியை இரண்டு ஆண்டு, தன் பாதுகாப்பில் வைத்தல்லவா வளர்த்தாள்.
'இந்த குறுஞ்செய்திகளை வினோதா படிக்க நேர்ந்தால், உச்சந்தலையில் கோடாலியால் வெட்டி, இரண்டாக பிளக்கப்பட்டது போலல்லவா, துடித்துப் போவாள். எதனால், இந்த திடீர் புகார் குறுஞ்செய்திகளை அனுப்பியிருக்கிறாள், யாழினி?
'என்னை பற்றி குற்றச்சாட்டுகள் எதுவும், அந்த குறுஞ்செய்திகளில் இல்லையே... ஏன்? மருமகனுக்கு தெரிந்து தான் அனுப்பி இருப்பாளா அல்லது மருமகன் அனுப்பச் சொல்லி அனுப்பியிருப்பாளா? போனில் திட்டிப் பேச சங்கோஜப்பட்டு, குறுஞ்செய்திகள் தயாரித்து அனுப்பி இருப்பாளோ?' என, பல எண்ணங்கள், மனதில் தோன்றின. 
மனைவி வினோதா அயர்ந்து துாங்குவதை பார்த்தேன். 'இவள் விழிப்பதற்கு முன், 'வாட்ஸ் - ஆப்' குறுஞ்செய்திகளை அழிக்க முயற்சிப்போம்...' என,'ஸ்மார்ட் போனை' நோண்ட ஆரம்பித்தேன்.
தொண்டையை செருமும் சப்தம் கேட்டு, திரும்பினேன். அழுதழுது வீங்கிய முகத்துடன் வினோதா.
''குறுஞ்செய்திகளை அழிக்க முயற்சி பண்ணாதீங்க... அதை நான், விடிகாலை, 4:00 மணிக்கே படிச்சிட்டேன்.''
''என்ன குட்டிம்மா, இப்படி அனுப்பியிருக்கா?''
பதில் பேசாமல் மவுனித்தாள்.
''மகளுக்கு செய்வதைத்தான், மகனுக்கு செய்திருக்கிறோம். ஒரு பைசா அதிகமில்லை, ஒரு பைசா குறைவில்லை. திருமணமாகி, ஏழு ஆண்டுக்கு முன் செட்டிலானவள், இப்போதுதான் படித்து வரும் தம்பியை பார்த்து பொறாமைப்படலாமா? இதை இப்படியே விடக்கூடாது.''
''விமானம் ஏறிப்போய் சண்டை போடப் போறீங்களா?''
''இல்லை... மகள் பிறந்ததிலிருந்து இதுவரை, அவளுக்கு என்ன செலவு செய்திருக்கிறோம்... மகன் பிறந்ததிலிருந்து அவனுக்கு என்ன செலவு செய்திருக்கிறோம் என, முழு வெள்ளை அறிக்கை தயாரிக்கப் போறேன்... தயாரித்த பின், நகலை, மகளுக்கு தொலை நகல் பண்ணப் போறேன்.''
''வேண்டாம்... விட்டு விடுங்கள்.''
''யார் தடுத்தாலும் கேளேன்,'' என்றபடி, மடி கணினியை கையில் எடுத்தேன். பக்கத்தை இரண்டாக பிரித்து, இடது பக்கம் யாழினிக்கு, வலதுபக்கம் இளஞ்சேரனுக்கு. இடது மேல் மூலையில், யாழினி பெயரை பிறந்த தேதியுடனும், வலது மேல் மூலையில், இளஞ்சேரன் பெயரை பிறந்த தேதியுடனும் எழுதினேன்.
யாழினி - 11.11.1988.
மகள் பிறந்த போது ஆன மருத்துவ செலவு; வயது, 1 - 4 வரை ஆன செலவு; ஆரம்ப கல்வி செலவு; பிளஸ் 2 வரை படித்ததற்கான செலவு; இளநிலை, முதுநிலை மின் பொறியியல் படித்ததற்கான செலவு; மஞ்சள் நீராட்டு விழா செலவு; முதுகலை மேலாண்மை படித்தது, முதுநிலை பட்டய படிப்பு யோகா படித்தது, மின் தணிக்கை பற்றிய பட்டய படிப்பு படித்தது...
வரன் பார்க்க ஆறு மாதம் அலைந்த செலவு; திருமண செலவாக, மண்டப வாடகை, நகை, திருமண விருந்து, சீர் செனத்தி இதர இதர; பேத்தி பிறந்த போது மருத்துவ செலவு; பிறந்ததிலிருந்து இதுவரையிலான உணவு, ஆடை, மருத்துவம், பண்டிகை மற்றும் பாக்கெட் மணி செலவு; மொத்தம் ---- லட்சங்கள்.
இளஞ்சேரன் - 16.07.1992.
மகன் பிறந்த போது மருத்துவ செலவு; வயது, 1 - 4 வரை ஆன செலவு; ஆரம்ப கல்வி செலவு; பிளஸ் 2 வரை படித்ததற்கான செலவு; இளநிலை மின் பொறியியல் படித்ததற்கான செலவு, சென்னையில் சில பட்டய படிப்புகள் படித்ததற்கான செலவு; அமெரிக்காவில் மேல் படிப்புக்கு ஆகும் செலவு...
மகனுக்கும், மகளுக்கும் ஏழு வயது வித்தியாசம். பண வீக்கம், 20 சதவீதத்தை மகனின் செலவிலிருந்து கழித்துவிட வேண்டும்; மகனுக்கான திருமண செலவு காத்திருக்கிறது என்பதால், உத்தேச செலவு; பிறந்ததிலிருந்து இதுவரையிலான உணவு, ஆடை, மருத்துவம், பண்டிகை மற்றும் பாக்கெட் மணி செலவு; மொத்தம் ---- லட்சங்கள்.
மகன் - மகளுக்கு செய்த செலவு ஒப்பீட்டை மனைவியிடம் கொடுத்து, ''ஏதாவது விட்டுப் போயிருச்சான்னு பாரு!''
''நானே கிழித்துப் போட்டால் மனம் வருத்தப்படுவீர்கள். நீங்களே கிழித்துப் போட்டு விடுங்கள்!''
''சிலவற்றை ஆதாரப்பூர்வமாக, எழுத்துப்பூர்வமாக காட்டினால் தான், எதிராளி ஒத்துக்கொள்வார்.''
''செலவழித்த பணத்தை பட்டியலிட்டு காட்டி விட்டீர்கள்... இருவரின் மீதும் கொட்டின பாசத்தை அளந்து எழுத முடியுமா... இருவருக்கும் நான் புகட்டிய தாய் பாலை, எத்தனை கோடிகளில் காட்டுவது...
''இத்தனை, செ.மீ., உன் மீது பொழிந்தேன் என மழையும், இத்தனை மூட்டைகள் நெல்லை, உங்கள் உணவுக்கு ஈந்தேன் என வயலும், இத்தனை, கி.மீ., வேகத்தில், உங்கள் மீது சாமரம் வீசினேன் என காற்றும், மனிதரிடம் சொல்லிக் காட்டுமா... பிள்ளைகளுக்கு கொடுத்த முத்தமும், அணைப்பும், தாலாட்டும், சீராட்டும் பெற்றோரின் இதயங்களுக்கு நெருக்கமானவை.''
''உன் மீது துளி கூட நன்றி இல்லாமல், உன்னை வசைபாடியிருப்பதை, என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.''
''நம் மகள், திருமணத்திற்கு முன் எப்படியோ, திருமணத்திற்கு பிந்திய ஏழு ஆண்டுகளில், சகலத்துக்கும் என்னை தான் சார்ந்திருந்தாள். அவள் மனதில் உள்ள எல்லா நல்லது, கெட்டதுகளையும் என்னிடம் தான் கொட்டித் தீர்த்திருக்கிறாள். நுாற்றுக்கணக்கான வேண்டுதல்களை நிறைவேற்றிய இறைவன், லேட்டஸ்ட் வேண்டுதலை நிறைவேற்றவில்லை என்று, இறைவனை நாம் கழுவி கழுவி ஊத்துவதில்லையா?''
''நன்றாக சமாளிக்கிறாய், வினோதா.''
''ஐதராபாத்தில், 27 லட்சம் ரூபாய் கட்டி, அடுக்குமாடி குடியிருப்பை வாங்கினாள், நம் மகள். இன்னும் அதை ஒப்படைக்காமல், அவன் ஏமாற்றுகிறான். அந்த கோபத்தை என்னிடம் காட்டுகிறாள். பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் நம் மருமகனுக்கு, பணி நீட்டிப்பை இழுத்தடித்து, மூன்று மூன்று மாதமாய் தருகின்றனர். அந்த கோபத்தை என்னிடம் காட்டுகிறாள்... 
''கணவனும் தனிமையில் வாடக்கூடாது, தானும், தன் குழந்தையும் தனிமையில் வாடக்கூடாது என கருதி, கனடாவிற்கு போன, நம் மகளால் பெரிதாய் எதுவும் சேமிக்க முடியவில்லை. அந்த கோபத்தை என்னிடம் காட்டுகிறாள். கல்விக்கு முக்கியத்துவம் தராமல், விளையாட்டுக்கு முக்கியத்துவம் தருகின்றனவே, கனடா பள்ளிகள் என்ற கோபம். அந்த கோபத்தை என்னிடம் காட்டுகிறாள்...
''மதுரையில் உள்ள நம் வீட்டை, இரண்டு பங்குகளாக பிரிக்காமல், மகனுக்கே கொடுத்து விடுவோமோ என்ற சந்தேகம் அவளுக்கு. அந்த கோபத்தை என்னிடம் காட்டுகிறாள். பணம் கொடு பணம் கொடு என, மருமகனின் சொந்தங்கள், அவரை நச்சரிக்கின்றன. மருமகனிடம் உபரியாக இருந்தால் தானே தருவதற்கு...
''மனைவியின் பேச்சை கேட்டு, இவன் தரமாட்டேன் என்கிறான் என நினைத்து, மருமகன் வீட்டு சொந்தங்கள், நம் மகள் மீது வெறுப்பை உமிழ்கின்றன. அந்த கோபத்தை என்னிடம் காட்டுகிறாள், நம் மகள்.''
''மகளின் நெருப்பு வார்த்தைகளுக்கு, ஆறுதல் வியாக்கியானம் தருகிறாய், வினோதா.''
''உங்க மகளின் முன்கோபமும், யோசிக்காமல் வார்த்தைகளை கொட்டி விடுகிற குணாதிசயமும், உங்களிடமிருந்து தானே அவளுக்கு வந்திருக்கு. உங்க முன் கோபங்களுக்கெல்லாம் பட்டியல் தயாரிச்சு நான் காட்டியிருந்தா, 32 ஆண்டு, நாம் குடும்பம் நடத்தி இருக்க முடியாது... உறவுகள் நீடிக்க, சகிப்புணர்ச்சியும், விட்டுக் கொடுத்தலும், எதையும் எதிர்பாரா அன்பும், பழிவாங்காத உள்ளமும் தேவை.''
''உன்னை திட்டினா, எனக்கு ரத்தம் கொதிக்குதே.''
''பிரச்னை எனக்கும், என் மகளுக்கும்... நாங்க கொஞ்சிக்குவோம், சண்டை போட்டுக்குவோம், இடையில் நீங்க ஏன் மூக்கை நுழைக்கிறீங்க?''
''நல்லா இருங்கம்மா... இனி, நான் தலையும் நீட்டல, வாலையும் நீட்டல,'' என, அறைந்து கும்பிட்டான்.

தொடர்ந்து, 15 நாட்களாக, வினோதா, மகளுடன் தொடர்பு கொள்ள முயற்சித்த போதெல்லாம், யாழினி போனை எடுக்கவே இல்லை. 16வது நாள், எதிர்முனை உயிர்த்தது. 'யாழி குட்டி... நல்லாருக்கியா...' ஒரு டன், தாய் பாசத்தை கொட்டி, நலம் விசாரித்தாள் வினோதா.
'வண்டி வண்டியா திட்டி, குறுஞ்செய்தி அனுப்பி இருக்கேன். கொஞ்சம் கூட சூடு சொரணை இல்லாம, குசலம் விசாரிக்கிற...' வழிப்பம் காட்டினாள், யாழினி.
'தாய் - மகள் அன்புக்குள்ள, எதுக்கடி சூடு, சொரணை... ஐதராபாத் கட்டுமான உரிமையாளரிடம் இருந்து அடுக்குமாடி குடியிருப்பை வாங்கி தர்றது, எங்க பொறுப்பு. மதுரையில் உள்ள வீட்டில் பாதி பங்கு, உனக்கு தான். மருமகனுக்கு பணி நீட்டிப்பு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, ஐதராபாத் திரும்பி வந்து, பணியை தொடரலாம். 
'ஏழு மாதத்தில் பணி ஓய்வு பெறுகிறார், அப்பா. உன் மகளுக்கு தங்க சங்கிலி, வளையல், கொலுசு, பிளாட்டின மோதிரம் செஞ்சு போடுவோம். மகள் படிப்பை பற்றி அதிகம் கவலைப்படாதே. எல்லாம் நல்லதற்கே. பேரன் - பேத்தி எடுக்கும்போது, எது பாரபட்சமில்லாத பாசம் என்பதை நீ முழுமையாய் உணர்வாய். கடைசியாக, ஒரு வார்த்தை... குஞ்சு மிதிச்சு கோழி சாகுமா...' எதிர்முனை நெகிழ்ந்து உருகி ஓடியது.
இப்போதெல்லாம் அம்மாகாரியும், மகக்காரியும் மணிக்கணக்கில் போனில் கதைக்கின்றனர். இடையில் போன் வாங்கி ஒரு சில வார்த்தைகளை உதிர்த்து, பேத்தியிடம் கொஞ்ச ஆரம்பித்தேன். 
'தாத்தா... பிக்பாஸ்ல ஜெயிச்ச ஆரவ், முஸ்லிமாம்... அவனோட உண்மையான பேரு நபீஸ். சினேகனும், ஜூலியும் கல்யாணம் பண்ணிக்க போறாங்களாம் தாத்தோவ்!'
'சபாஷ்டி கல்லுளிமங்கி!' ஆரவாரித்தேன்.

ஆர்னிகா நாசர்

Friday, May 10, 2019

ஒரு சாமானியனின் அமெரிக்க பயண அனுபவம்!

ராதே கிருஷ்ணா 11-05-2019




ஒரு சாமானியனின் அமெரிக்க பயண அனுபவம்! (1)

எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05மே
2019 
00:00

உலக வரைப்படத்தில் மட்டுமே அமெரிக்காவை பார்த்திருந்த எனக்கும், என் மனைவிக்கும், அமெரிக்கா செல்லும் வாய்ப்பு, சமீபத்தில் கிட்டியது.
அமெரிக்காவில் உள்ள என் மருமகன் மூலம், சென்னை அமெரிக்க துாதரகத்தில், 'ஆன்லைனில்' விசாவிற்கு விண்ணப்பித்து, நேர்காணல் தேதி வாங்கினோம்.
அமெரிக்க விசா வாங்குவது அவ்வளவு எளிதல்ல என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், நடைமுறையில் பெரிய சிரமமாக இருக்கவில்லை. நேர்காணல் தேதியன்று சென்னை, அண்ணாசாலையில் உள்ள அமெரிக்க துாதரகத்திற்கு சென்றோம்.
வரிசையில் காத்திருந்தோம். அருகில் இருந்தவர்கள், 'என்ன கேள்வி கேட்பர், அதற்கு எப்படி பதில் சொல்ல வேண்டும்...' என்று பேசி, பதில்களை மனப்பாடம் செய்து கொண்டிருந்தனர். அவர்களின் பயமும், பதற்றமும் எங்களையும் தொற்றிக் கொண்டது.
எங்களுக்கு முன் இருந்தவர்களை அழைத்து, சில கேள்விகளை கேட்ட அமெரிக்க துாதரக பெண் அதிகாரி, அவர்களின் விசா விண்ணப்பத்தை தள்ளுபடி செய்தார். இது, எங்களை மேலும் கலங்கடித்தது.
அடுத்து எங்கள் முறை. 'வணக்கம், வாருங்கள்...' என, தமிழில் அழைத்தார். தயக்கத்துடன் இருவரின் பாஸ்போர்ட்டை நீட்டினோம். அவற்றை சரி பார்த்த அப்பெண்மணி, எங்களை மீண்டும் பார்த்தார்.
'எத்தனை நாட்கள் அமெரிக்காவில் தங்க உள்ளீர்கள்...' எனக் கேட்டார். 'அதிகபட்சமாக ஆறு மாதம்...' என்றோம். சிறிது நேரம் கழித்து, 'உங்களுக்கு, விசா வழங்கப்பட்டு விட்டது; உங்கள் அமெரிக்க பயணம் இனிதாக வாழ்த்துக்கள்...' என்று ஆங்கிலத்தில் கூறி, பாஸ்போர்ட்களை வைத்துக் கொண்டார். விசா முத்திரையிட்டு, 'கூரியர்' மூலம் வீடு வந்து சேரும் என்று கூறப்பட்டது.
விசா கிடைத்த சந்தோஷத்தில், விமான பயணத்திற்கான டிக்கெட் போடும் வேலையில் இறங்கினோம். 'எமிரேட்ஸ்' விமானத்தில், துபாய் வழியாக, சிகாகோ சென்று திரும்புவதற்கான டிக்கெட், கைக்கு வந்து சேர்ந்தது.
'கையுடன் எடுத்து செல்லும் சுமைகளையும் சேர்த்து, ஒரு நபர், அதிகபட்சமாக, 53 கிலோ எடுத்து செல்லலாம்...' என்று கூறினர். சுமைகளை எடை போட்டு, 'பேக்' செய்து கொண்டோம். எதையெல்லாம் எடுத்துச் செல்லக் கூடாது என்பதற்கு, விமான நிறுவனத்தில் இருந்து ஒரு பட்டியல் கொடுத்தனர். அவற்றை தவிர்த்து, மற்றவற்றை எடுத்து, சென்னை விமான நிலையத்திற்கு சென்றோம்.
அதிகாலை, 4:30 மணிக்கு விமானம். குடியுரிமை மற்றும் பாதுகாப்பு சோதனைகளை முடித்து, விமானத்தில் ஏறினோம். அதுவரை பெரிய விமானங்களில் நான் பயணித்தது இல்லை. 'போயிங் 777' ரக விமானம் அது; கப்பல் போல இருந்தது. எங்களுக்கு உரிய இருக்கையில் அமர்தோம்.
சரியான நேரத்தில், விமானம் துபாய் நோக்கி பறக்கத் துவங்கியது.
இந்த நேரத்தில், என்னை அறியாமல், என் முதல் விமானப் பயணம் நினைவிற்கு வந்தது. கிட்டத்தட்ட, 15 ஆண்டுகளுக்கு முன், 'ஏர்டெக்கான்' விமான நிறுவனம், சென்னை - டில்லி இடையே, குறைந்த கட்டண சேவையை துவங்கியது.
இந்த விமானத்தில், பத்திரிகையாளர்களும் அழைத்துச் செல்லப்பட்டனர். என்னையும், புகைப்பட நண்பர், மாரியப்பனையும், 'தினமலர்' சார்பில், அனுப்பி வைத்தார், அந்துமணி. டில்லி சென்று, ஒரு நாள் முழுவதும் நகரை சுற்றிப் பார்த்து, மாலை அதே விமானத்தில், சென்னை திரும்பிக் கொண்டிருந்தோம்.
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், மழை பெய்ய துவங்கியது. நேரம் செல்லச் செல்ல காற்றின் வேகமும், மழைப் பொழிவும் அதிகரித்ததால், அவ்வப்போது விமானம் தள்ளாடத் துவங்கியது.
முதல் பயணம் என்பதால், மிகவும் பயந்து விட்டோம். நண்பர் மாரியப்பனோ, பிள்ளை குட்டிகளை நினைத்து அழும் நிலைக்கு சென்று விட்டார். ஒரு வழியாக விமானம், சென்னையில் தரையிறங்கியதும் தான் எங்களுக்கு மூச்சே வந்தது.
மறுநாள் காலை, அழைத்தார், அந்துமணி.
'டில்லி பயணம் எப்படியிருந்தது?' என்று கேட்டார்.
விமானத்தில் பட்ட பாட்டை வரி விடாமல் கூறினேன். அதைக் கேட்டு, குலுங்கி குலுங்கி சிரித்த அவர், 'முதல் விமானப் பயணம் அப்படி தான் பயமாக இருக்கும். அடுத்தடுத்து சென்றால் சரியாகி விடும்...' எனக் கூறினார்.
அந்த நினைவுகளை அசை போட்டபடியே, விமானத்தில் அமர்ந்திருந்தேன். கிட்டத்தட்ட நான்கு மணி நேர பயணத்திற்கு பின், துபாயை அடைந்தது, விமானம். அங்கு, சிகாகோ புறப்படும் விமானத்திற்கு மாற வேண்டும். சிரமமில்லாமல், அந்த விமானத்தையும் பிடித்தோம்.
பல்வேறு நாடுகளில் இருந்து, சிகாகோ செல்ல வரும் பயணியர் ஒருங்கிணைக்கப்பட்டு, விமானத்தில் ஏற்றப்படுகின்றனர். கிட்டத்தட்ட, 350 பயணிகளுடன், அந்த விமானம் புறப்பட்டது. '15 மணி நேர பயணத்திற்கு பின், சிகாகோவில் தரையிறங்கும்...' என்று, விமானி அறிவித்தார்.
இருக்கைக்கு முன் வைக்கப்பட்டுள்ள கையடக்க, 'டிவி'யில், விமானம் எவ்வளவு உயரத்தில், எத்தனை கி.மீ., வேகத்தில், எந்த நாட்டிற்கு மேல் பறந்து கொண்டிருக்கிறது போன்ற தகவல்கள் வந்தபடி இருந்தன. மேலும், திரைப்படங்களும் பதிவு செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்தன. நாங்கள் சில ஆங்கில, தமிழ் படங்களை பார்த்து, நேரத்தை கடத்தினோம்.
நாங்கள் சென்ற விமானம், 50 ஆயிரம் அடி உயரத்தில், மணிக்கு, 950 கி.மீ., வேகத்தில் பறந்து கொண்டிருப்பதாக, 'டிவி'யில் தெரிய வந்தது; பிரமித்துப் போனாம்.
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், காலை உணவு வந்தது. டிக்கெட் வாங்கும்போதே, சைவம் என்று குறிப்பிட்டிருந்ததால், வெண் பொங்கல், 'ஸ்டப்டு' பஜ்ஜி, சாலட் என, உணவு வகைகள் பரிமாறப்பட்டன. ஜூஸ், காபி, டீ, 'உற்சாகபானம்' என, எது வேண்டுமானாலும் தருகின்றனர்.
ஒரு கப் டீ சாப்பிட்டுவிட்டு, கண் அயர்ந்த சமயம், எங்கள் இருக்கைக்கு பின் இருந்து, ஒரு பெண், அலறும் சத்தம் கேட்டது. அதிர்ச்சியடைந்து திரும்பி பார்த்தபோது, ஒரு இளம் பெண், இருக்கையின் மீது எழுந்து நின்று, புரியாத பாஷையில் கத்திக் கொண்டிருந்தார்...
— தொடரும்.

எஸ்.உமாபதி 





ஒரு சாமான்யனின் அமெரிக்க பயண அனுபவம்



பதிவு செய்த நாள்

12மே
2019 
00:00


விமான பின் இருக்கையில் அமர்ந்திருந்த இளம் பெண் திடீரென அலறியதில், பயணிகள் அனைவரும் அரண்டு போயினர். விசாரித்ததில், அப்பெண், ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் என்பதும், மனநிலை பாதிக்கப்பட்ட அவர், சிகிச்சைக்காக பெற்றோருடன் அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்லப்படுவதும் தெரிய வந்தது. இதையறிந்த பயணிகள், அமைதி அடைந்தனர்.
சிறிது நேரத்தில், எங்கள் அருகில் காலியாக இருந்த இருக்கையில், அப்பெண் அமர்ந்தார். உள்ளுக்குள் லேசான உதறல். முதலில் அமைதியாக இருந்த அவர், பின்னர் சரளமான ஆங்கிலத்தில், எங்களுடன் பேச துவங்கினார்.
ஆங்கிலம் எனக்கு சரியாக தெரியவில்லை என்றாலும், அவர் பேசியதை புரிந்து கொள்ள முடிந்தது. அரைகுறை ஆங்கிலத்தில் நானும், என் மனைவியும் பதில் அளித்தோம். 'கொஞ்ச நேரத்திற்கு முன் கூச்சலிட்டு, ஆர்ப்பாட்டம் செய்த பெண்ணா இவர்...' என்று நினைக்கும் அளவிற்கு, மிகவும் புத்திசாலித்தனமாக பேசினார்.
அருகில் அமர்ந்திருந்த தன் தாய், தொந்தரவு செய்ததாலேயே சத்தம் போட்டதாக கூறினார். மிகவும் அழகான அந்த இளம் பெண், விரைவில் குணமாக, கடவுளை வேண்டிக் கொண்டோம்.
கிட்டத்தட்ட, 15 மணி நேர பயணத்திற்கு பின், விமானி பேசினார்...
'நாம் அமெரிக்காவின் அழகிய நகரான, சிகாகோவில், இன்னும் சில நிமிடங்களில் இறங்கப் போகிறோம்...' என, அறிவித்தார்; மனம் துள்ளல் போட்டது. அருகில் இருந்த ஜன்னல் வழியாக பார்த்தேன். மேகக் கூட்டம் விலகி, வானளாவிய கட்டடங்கள் தெரியத் துவங்கின. சில விநாடிகளில் விமானம், சிகாகோவில் தரையிறங்கியது.
எங்களை வரவேற்க மகள், மருமகன் மற்றும் பேத்தி வந்திருந்தனர்.
10 நிமிடங்களில் விமான நிலையத்தை விட்டு வெளியேறி, சிகாகோவின் புறநகரில் உள்ள வீட்டிற்கு சென்றோம்.
சிறிது ஓய்விற்கு பின், அமெரிக்காவை சுற்றிப் பார்க்க வேண்டிய பயண திட்டங்களை கூறினார், மருமகன். சிகாகோவில் இருந்து புறப்பட்டு,
ஆறு நாள் பயணமாக, பல நகரங்களுக்கு, திட்டமிடப்பட்டிருந்தது.
அதற்கான ஏற்பாடுகளை பயண நிறுவனம், செய்திருந்தது. நபர் ஒன்றுக்கு, 500 டாலர் கட்டணம். இந்திய மதிப்பில், 35 ஆயிரம் ரூபாய். வேன் மற்றும் தங்குமிட செலவுகளை அந்நிறுவனம் செய்யும்.
சாப்பாடு, சுற்றுலா தலங்களில் வசூலிக்கப்படும், நுழைவு கட்டணம் ஆகியவை, நம் பொறுப்பு.
குறிப்பிட்ட நாளில், 16 பேர் பயணம் செய்யும் வகையிலான சொகுசு வேன் வந்தது. கடைசி நிமிடத்தில் பலர், தங்கள் பயணத்தை ரத்து செய்து விட்டதால், ஆறு பேர் மட்டுமே புறப்பட்டோம்.
சீனாக்காரர் ஒருவர் வழிகாட்டியாக இருக்க, இன்னொரு சீனர், வேனை இயக்கினார். ஐந்து மணி நேர பயணம். அமெரிக்க சாலைகளில், 50 கி.மீ., துாரத்திற்கு ஒரு, 'மோட்டல்' என, ஆங்கிலத்தில் சொல்லப்படும் உணவகங்கள் உள்ளன.
அனைத்து பிரபல உணவு நிறுவனங்களுக்கும் அங்கு கடைகள் உள்ளன. பழங்கள், காய்கறிகள் துவங்கி, வீட்டு உபயோக பொருட்கள் வரை அனைத்தும் கிடைக்கின்றன. நாம் கையில் எடுத்து செல்லும் உணவுகளை சாப்பிட, சாப்பாட்டு அறை இருக்கிறது.
நாங்கள் எடுத்து சென்ற புளி சாதத்தை சாப்பிட்டு, காபியை வாங்கி குடித்த பின், பயணத்தை தொடர்ந்தோம். சாப்பாட்டு அறைக்கோ, கழிவறைக்கோ கட்டணம் கிடையாது.
கிட்டத்தட்ட, ஐந்து மணி நேர பயணத்திற்கு பின், டெட்ராய்ட் நகரத்தை அடைந்தோம். ஒரு அழகிய தொழில்நகரம், டெட்ராய்ட்.
இங்கு, ஏராளமான கார் உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளன. இதனால், இந்நகருக்கு, 'மோட்டார் சிட்டி' என்ற பெயரும் உண்டு.
அமெரிக்க அதிபர்களுக்கான, பாதுகாப்பான, குண்டு துளைக்காத கார்கள், இந்நகரில் இருந்து தான் தயாராகி செல்கின்றனவாம்.
இங்குள்ள, ஹென்றி போர்டு மியூசியம் பிரபலமானது. கிட்டத்தட்ட, 10 ஏக்கரில் அமைந்துள்ள இந்த மியூசியத்தை வலம் வந்தால் போதும்... அமெரிக்க சரித்திரத்தை, கண்டுபிடிப்புகளை தெரிந்து கொள்ள முடியும்.
டெட்ராய்ட் நகரில் தான், மிகப் பிரபலமான கார் நிறுவனங்களான, 'ஜெனரல் மோட்டார்ஸ்' நிறுவனத்தின் தலைமையகம் உள்ளது. துறைமுகத்தின் அருகே, வானளாவ நீண்டிருக்கும், அந்த கட்டடம், பிரமிப்பூட்டுகிறது.
நகரின் முக்கிய இடங்களை சுற்றிப் பார்த்தோம். இரவு நெருங்கியதால், டெட்ராய்ட்டின் புறநகர் பகுதியில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டோம்.
மறுநாள், பயணத்திற்கான மதிய உணவை தயார் செய்த பின், படுக்கைக்கு சென்றோம். காலை, 7:00 மணிக்கே கிளம்ப வேண்டும் என்று வழிகாட்டி கூறியிருந்ததால், சீக்கிரமே எழுந்து, புறப்பட தயாரானோம்.
நாயகரா அருவியை நோக்கி பயணத்தை தொடர்ந்தோம். 'ஐந்து மணி நேர பயணத்தில் நயாகரா சென்றடையலாம்...' என்று அறிவித்த வழிகாட்டி, அந்த பிரம்மாண்ட அருவியின் அருமை, பெருமைகளை கூறியபடி வந்தார்.
நயாகராவை எங்கள் வேன் நெருங்கிக் கொண்டிருந்த நிலையில், அங்குள்ள ஒரு ஆபத்து குறித்து, வழிகாட்டி கூறியது, அதிர்ச்சியளித்தது.
- தொடரும்.

* பயணத்தின் போது, சைவ உணவுகள் கிடைப்பது அரிது என்பதால், வீட்டில் இருந்தே இரண்டு, மூன்று நாட்களுக்கான உணவை எடுத்துச் செல்வது உத்தமம். வாழை மற்றும் ஆப்பிள் பழங்கள் தக்க சமயத்தில் கை கொடுக்கும்
* தண்ணீரை விலை கொடுத்து தான் வாங்க வேண்டும் என்பதால், தண்ணீர் பாட்டில்களை அதிகமாக எடுத்து செல்லலாம். தங்கும் ஓட்டல்களில் அவற்றை நிரப்பிக் கொண்டால், குடிநீருக்காக கூடுதல் பணம் செலவிட அவசியம் இருக்காது
* ஓட்டல்களில், காலை உணவை இலவசமாக கொடுத்து விடுவர். சாப்பிட்ட பின், அங்கு வைக்கப்பட்டுள்ள, பழங்கள், பிரட், பிஸ்கட், தயிர், பால் பாக்கெட்டுகள் மற்றும் உலர் பழங்களை, 'பேக்' செய்து கொண்டால், பயணத்தின் போது கைகொடுக்கும்.

- எஸ்.உமாபதி


ஒரு சாமானியனின் அமெரிக்க பயண அனுபவம்! (3)


பதிவு செய்த நாள்

19மே
2019 
00:00


நயாகரா குறித்து, வழிகாட்டி கூறிய ஆபத்து என்னவாக இருக்கும் என, குழம்பிக் கொண்டிருந்த நேரத்தில், அவரே அது குறித்து கூறத் துவங்கினார்...
'அமெரிக்கா - கனடா நாட்டின் எல்லையில் உள்ளது, நயாகரா. இதனால், நயாகரா பாதையில் சாலையில் செல்வதற்கு பதிலாக பலர், கனடா நாட்டு சாலையில் சென்று, அந்நாட்டிற்குள் நுழைந்து விடுவர். கனடா அதிகாரிகள் அவர்களை பிடித்து, விசா இல்லாமல், நாட்டிற்குள் நுழைந்ததாக கூறி, நடவடிக்கை எடுப்பர்.
'இந்த பிரச்னையில் இருந்து தப்பி வருவது, பெரும் சிக்கல் என்பதால், நயாகரா சாலையில் சரியாக பயணிக்க வேண்டியது அவசியம்...' என்றார்.
அவர் கூறியது உண்மை தான். அமெரிக்கா - -கனடா எல்லையில், சாலைகள் மிகவும் அருகருகே அமைந்திருந்தன. கொஞ்சம் தவறினாலும், கனடா சாலையில் திரும்பி விடும் சூழ்நிலை இருப்பதை பார்த்தோம்.
எங்களின் வேன் டிரைவர், அடிக்கடி நயாகரா சென்று வந்தவர் என்பதால், சரியாக எங்களை அழைத்து போய் சேர்த்தார். அடுத்த எட்டு நாட்களில், குளிர் காலத்திற்காக, நயாகரா அருவி மூடப்பட உள்ளது என்ற நிலையில், நாங்கள் அங்கு இறங்கினோம். குளிர், ஊசியாய் உடம்பு முழுவதும் குத்த, எப்படியும் அந்த பிரமாண்ட அருவியை பார்த்தே தீர்வது என்ற பிடிவாதத்துடன், அருவி நோக்கி புறப்பட்டோம்.
'ஈரி' என்ற பிரமாண்டமான ஏரியில் இருந்து புறப்படும் நயாகரா ஆறு, கிட்டத்தட்ட, 56 கி.மீ., ஓடி, 'ஒன்டாரியோ' என்னும் ஏரியில் கலக்கிறது. இடையில், அமெரிக்க-ா - கனடா எல்லையில், அருவியாக கொட்டுகிறது. அமெரிக்க பகுதியில் ஒன்று, கனடா பகுதியில் இரண்டு என, இந்த பிரமாண்ட அருவி, மொத்தம் மூன்றாக பிரிந்துள்ளது.
அமெரிக்க பகுதியில், நயாகரா அருவி, 53 மீ., பள்ளத்தில் அமைந்துள்ளது. நுழைவு கட்டணம் செலுத்திய பின், அருவியை காண, ராட்சத, 'லிப்ட்' மூலம் இறங்கினோம். அங்கு, அருவியின் சாரலில் நனையாமல் இருக்க, தலையையும் மூடிக் கொள்ளும் வகையிலான, 'பிளாஸ்டிக் கோட்' தந்தனர்.
அதை அணிந்து, பிரமாண்ட படகில் ஏறி, நயாகராவை ரசிக்க புறப்பட்டோம். 10 நிமிட பயணத்தில், நயாகரா அருவி காட்சி தந்தது. உலகின் பிரமாண்ட அருவியை பார்த்த அந்த நொடியில், வியப்பின் உச்சத்திற்கே சென்றோம்.
மெல்ல மெல்ல அருவியை ஒட்டிச் சென்றது, படகு. அதிலிருந்து தெறித்த நீர் திவலைகள், எங்கள் மீது ஸ்பரிசித்த போது, ஒப்பற்ற அந்த பேரருவி, பன்னீர் தெளித்து எங்களை வரவேற்கிறதோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.
ஏற்கனவே கடும் குளிரான நிலையில், அருவியின் சாரல், குளிரை மேலும் அதிகப்படுத்தினாலும், அதை பொருட்படுத்தாமல் அந்த அற்புத அருவியை வைத்த கண் வாங்காமல் பார்த்து, ரசித்தோம். 1,100 அடி அகலத்தில், 160 அடி உயரத்தில், நிமிடத்திற்கு, 60 லட்சம் கன அடி என்ற அளவில், விண்ணிலிருந்து கொட்டுவது போல் நயாகரா கொட்டிக் கொண்டிருந்தது.
அரை மணி நேரம் அருவியை ரசித்த பின், படகு, கரை திரும்பியது. பிரிய மனமில்லாமல் நயாகராவை திரும்பித் திரும்பி பார்த்தபடி, கரை சேர்ந்தோம். அந்த வேளையில் பசி வயிற்றைக் கிள்ளியது. எங்களை, இந்திய ஓட்டல்கள் இருக்கும் பகுதிக்கு அழைத்துச் சென்றார், வழிகாட்டி. வரிசையாக சிறிதும், பெரியதுமாக கடைகள் இருந்தன.
வட மாநிலத்தவர் தான், குறிப்பாக, குஜராத்தியர் தான் கடை வைத்துள்ளனர். சமோசா, சுண்டல் முதற்கொண்டு, 'சிக்கன் கபாப்' வரை கிடைக்கிறது. சமோசா சாப்பிட்டு, மசாலா டீயை ருசித்தோம்.

நயாகராவில், இந்திய - சீன முகங்களே அதிகம் தென்பட்டன. இது குறித்து, வழிகாட்டியிடம் கேட்ட போது, 'இங்கு மட்டுமல்ல, எல்லா சுற்றுலா தலங்களிலும் இந்த இரு நாட்டவர்கள் தான் அதிகம் தென்படுவர். அமெரிக்கர்கள் அதிகம் வரமாட்டார்கள். கை நிறைய சம்பளம் என்பதால், இந்தியர்கள், சீனர்கள் அதிகமாக வருகின்றனர்.
'அமெரிக்கர்கள், ஐந்து ஆண்டு காலம் சேமித்த பின்னரே, சுற்றுலா வர முடியும். இந்திய - சீன நாட்டினர் மீது, அமெரிக்கர்கள் அதிருப்தியடைய இதுவும் ஒரு காரணம்...' என்றார்.

நயாகரா அருவியை பார்த்த திருப்தியுடன், அங்கிருந்து நியூயார்க் புறப்பட்டோம். ஆறு மணி நேர பயணம். பார்க்க வேண்டும் என, நான் பல ஆண்டுகளாக கனவு கண்டு கொண்டிருந்த நகரம் அது.
இப்போது, என் கனவு நினைவாகப் போகிறது என்ற மகிழ்ச்சியில் இருந்தபோது, எங்கள் டிரைவர், வேனின் வேகத்தை திடீரென குறைத்தார். அவர் முகத்தில் ஒரு பயம்.
அதே நேரத்தில், எங்கள் வேனை தாண்டி, மின்னல் வேகத்தில் இரண்டு போலீஸ் கார்கள், 'சைரன்' ஒலித்தபடி கடந்தன. சில நிமிடங்களில் எங்களுக்கு முன் சென்ற வாகனங்கள் திடீரென நிற்க, எங்கள் வேனும் நின்றது. ஒன்றும் புரியாமல் நாங்கள் வேனுக்குள் அமர்ந்திருந்தோம்.
— தொடரும்.

எஸ். உமாபதி

ஒரு சாமானியனின் அமெரிக்க பயண அனுபவம்! (4)


பதிவு செய்த நாள்

26மே
2019 
00:00
நயாகராவில் இருந்து, நியூயார்க் நகருக்கு சென்று கொண்டிருந்த எங்கள் வேன், திடீரென நின்றதும், போலீஸ் கார்கள் மின்னல் வேகத்தில் எங்களை கடந்து சென்றதும், திகைப்பில் ஆழ்த்தியது. என்ன நடக்கிறது என்று பார்த்தோம். 
எங்களை கடந்து சென்ற போலீஸ் கார்களில் இருந்து இறங்கிய போலீசார், முன்னே சென்று கொண்டிருந்த ஒரு காரை மடக்கி, விசாரித்துக் கொண்டிருந்தனர். அரை மணி நேரத்திற்கு பின், கார்கள் மெல்ல நகரத் துவங்கின. 
விசாரித்ததில், குறிப்பிட்ட அந்த கார் டிரைவர், அனுமதிக்கப்பட்டிருந்த வேகத்திற்கு அதிகமாக ஓட்டி வந்ததாகவும், அதனால், போலீசார் மடக்கி, அபராதம் விதித்தனராம்.
இந்த நேரத்தில், அமெரிக்க போலீசை பற்றியும், அங்குள்ளோர், போக்குவரத்து விதிகளை மதிப்பது குறித்தும் சொல்லியே ஆக வேண்டும்... 
எல்லா சாலைகளிலும், வாகனங்கள் செல்ல வேண்டிய வேகம் குறித்த அறிவிப்பு பலகைககளை, தெரியும்படி வைத்துள்ளனர். என்ன அவசரம் என்றாலும், வாகன ஓட்டிகள் அந்த அளவை மீறுவதில்லை. மீறுபவர்கள் உடனடியாக பிடிக்கப்பட்டு, அபராதம் விதிக்கப்படுகின்றனர். 
குழந்தைகளுக்கு கண்டிப்பாக, 'பேபி சேர்' எனப்படும், பாதுகாப்பான இருக்கைகள் இருக்க வேண்டும். நம் ஊர் போல, குழந்தைகளை மடியிலோ அல்லது தனி இருக்கையிலோ அமர வைத்து அழைத்துச் சென்றால், அபராதம் நிச்சயம். வாகன ஓட்டியும், முன் சீட்டில் அமர்ந்திருப்பவரும், 'பேபி சேரில்' அமர்ந்திருக்கும் குழந்தையும் கண்டிப்பாக, 'சீட் பெல்ட்' அணிந்திருக்க வேண்டும். 
சிக்னல்களில் கார்கள், எந்த தடத்தில் வந்தனவோ, அதிலேயே, முன் உள்ள வாகனத்திற்கு பின், இடைவெளி விட்டு நிற்க வேண்டும். தடம் மாறி, மாற்று தடத்தில் முன் வந்து வாகனத்தை நிறுத்தினால், தண்டனை. விபத்து போன்ற காரணங்களால் போக்குவரத்து நிறுத்தப்பட்டால், எவ்வளவு நேரம் ஆனாலும் வாகனங்கள் காத்திருக்கின்றன.
பாதசாரிகள் குறுக்கிட்டால், அவர்கள் சாலையை கடக்கும் வரையில், வாகனங்கள் பொறுமையாக நிற்கின்றன. சாலை விதிகளை அங்குள்ள அனைவரும் மதிக்கின்றனர். 

நியூயார்க் நகரில் உள்ள, 'டைம்ஸ் ஸ்கொயர்' சர்வதேச அளவில் சுற்றுலா பயணியரை கவரும் இடமாக உள்ளது. 
ஒருபுறம், மின் விளக்குகளின் விஞ்ஞான வித்தை பிரமிப்பூட்டிய நிலையில், மறுபுறம், கலைஞர்களின் தெரு முனை நடனங்கள், சுற்றுலா பயணியரை வியப்பின் உச்சத்திற்கே அழைத்து செல்கிறது.
ஆங்காங்கே சிறு சிறு குழுக்களாக பல்வேறு நடன நிகழ்ச்சிகள், யதார்த்தமாக நடக்கின்றன. அவற்றை நீண்ட நேரம், பயணியர் ரசிக்கின்றனர். நள்ளிரவை எட்டிய நிலையில், ஓட்டல் அறைக்கு திரும்பினோம். 

மறுநாள் பொழுது விடிந்ததும், நியூயார்க் நகரின் பிரபலமான, 'நியூயார்க் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்' கட்டடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டோம். 
அங்கு ஒரு விஷயம், என்னை மிகவும் கவர்ந்தது. அங்குள்ள, எருது சிலை அருகே, தள்ளுவண்டி கடைகளில், பல்வேறு பரிசுப் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. அதில், இந்திய நாட்டின் தேசிய கொடியும் தென்பட்டது.
விசாரித்தபோது, சுற்றுலா வரும் இந்தியர்கள், மூவர்ணக் கொடியை அதிகமாக வாங்குவதாக கூறினர். கடல் கடந்து வசிக்கும் நம்மவர்களின் நாட்டுப் பற்றுக்கு, மனதிற்குள் ஒரு சலாம் போட்டு, நகர்ந்தோம். 

அடுத்ததாக, பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டு, உருக்குலைந்து, மண்ணோடு மண்ணாகிப் போன, 'டூவின் டவர்' எனப்படும், இரட்டை கோபுரம் இருந்த இடத்திற்கு சென்றோம்.
இறங்கியவுடன், ஒரு இனம் புரியாத சோகம், மனதை அழுத்தியது. எண்ணத்திரையில், வானுயர்ந்து நின்ற இரட்டை கோபுரங்களும், அடுத்தடுத்து, அவற்றின் மீது மோதிய விமானங்களும், அதை தொடர்ந்து கம்பீரமாக நின்ற அந்த கட்டடங்கள், தீயில் வெந்த சருகுபோல் சரிந்து விழுந்ததும், நினைவுக்கு வந்தன. 
இரட்டை கோபுரங்கள் இருந்த இடத்தில், ஒரு நினைவுச் சின்னம் அமைத்துள்ளனர். அதன் பக்கவாட்டுச் சுவர்களில், பலியான, 3,000 பேரின் பெயர்களை பொறித்து வைத்துள்ளனர். அங்கு வரும், அமெரிக்க சுற்றுலா பயணியர், மெழுகுவர்த்தி ஏற்றி, பலியானவர்களின் ஆன்மா சாந்தியடைய, பிரார்த்தனை செய்வதை பார்த்தபோது, மனம் கனத்தது.
நாங்களும் மவுன அஞ்சலி செலுத்தி, அந்த நினைவிடத்திற்கு அருகில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உலக வர்த்தக மைய கட்டடத்திற்குள் நுழைந்தோம்.
மொத்தம், 104 மாடிகள் உடைய அந்த கட்டடத்தின், 100வது மாடிக்கு, ஒரு ராட்சத லிப்ட், 49 வினாடிகளில் எங்களை அழைத்து போய் சேர்த்தது. அங்கு, இரட்டை கோபுர தாக்குதல் மற்றும் புதிய கட்டடம் கட்டப்பட்டது குறித்து விளக்கம் அளித்தனர். 100வது மாடியில் இருந்து பார்க்கும் போது, நியூயார்க் நகரின் பிரமாண்டம் தெரிந்தது.
ஒரு புறம் கடல், மறுபுறம் விண்ணுக்கு சவால்விடும் வகையிலான கட்டடங்கள். பார்க்க பார்க்க பரவசமாக இருந்தது. சிற்றுண்டி சாலை மற்றும் புத்தக சாலை ஆகியவை, அந்த மாடியில் அமைந்துள்ளன.
உலக வர்த்தக மைய கட்டடத்தை அணு அணுவாக ரசித்த பின், அடுத்ததாக, சுதந்திர தேவி சிலையை பார்க்க கிளம்பினோம்.
- தொடரும்.

எஸ். உமாபதி 



ஒரு சாமானியனின் அமெரிக்க பயண அனுபவம் (5)


பதிவு செய்த நாள்

02ஜூன்
2019 
00:00
அமெரிக்காவின் பிரசித்தி பெற்ற, சுதந்திர தேவி சிலையை பார்க்க புறப்பட்டோம். தங்கள் நட்பை வெளிப்படுத்தும் வகையில், பிரான்ஸ் நாட்டு மக்கள், அன்புடன் அளித்த இச்சிலை, 1886ல் நிறுவப்பட்டது. பிரமிப்புடன், அந்த வரலாற்றுச் சின்னத்தை பார்த்த மன நிறைவுடன் திரும்பினோம். 
அடுத்து, வாஷிங்டன் நகருக்கு பயணித்தோம். 'உலக போலீஸ்காரன்' என்று அழைக்கப்படும், அமெரிக்காவின் இன்றைய தலைநகரம், எங்களை அன்புடன் வரவேற்றது. ஒட்டு மொத்த அமெரிக்காவின் அதிகார மையமான, வெள்ளை மாளிகை, ஆப்ரகாம் லிங்கன் நினைவரங்கம், அமெரிக்க காங்கிரஸ் கட்டடம் என, பல புகழ் பெற்ற இடங்கள் உள்ள, வாஷிங்டன் நகரை வலம் வந்தோம். 
அங்கிருந்து, பிலடெல்பியா நகருக்கு பயணமானோம். அமெரிக்க புரட்சிக்கு வித்திட்ட, இந்நகரத்துக்கு, அரசியல் வரலாற்றில் மிக முக்கிய இடம் உள்ளது. அமெரிக்காவின் முதல் தலைநகராக விளங்கிய, இந்நகரில், சுதந்திர பூங்கா, அங்குள்ள, 'லிபர்ட்டி பெல்' என்றழைக்கப்படும், பழமை வாய்ந்த மணி ஆகியவை, சுற்றுலா பயணியரை அதிகமாக கவர்கின்றன. 
சிகாகோ ஒரு அழகான நகரம். அமெரிக்காவின் பல பெரிய நகரங்களை பார்த்திருந்தாலும், சிகாகோவின் அழகிற்கு ஈடு இணை இல்லை என்றே கூறலாம். அங்குள்ள, 'பிக் பஸ்' மூலம், நகரின் முக்கியமான சுற்றுலாத் தலங்களை, இரண்டே மணி நேரத்தில் கண்டு ரசிக்கலாம். 'பிக் பஸ்' எனப்படும், மாடி பஸ்சில் அமர்ந்து, வானுயர்ந்து நிற்கும் கட்டடங்களை பார்த்து ரசிக்க, ஆயிரம் கண்கள் போதாது. 
அமெரிக்க பயணம் முடிந்து, நாடு திரும்புவதற்காக, சிகாகோ விமான நிலையத்தில் இருந்து, 'எமிரேட்ஸ்' விமானம் மூலம் புறப்பட்டோம். விமானம் பறக்கத் துவங்கியதும், என் சிந்தனை முழுவதும் எல்லா வளங்களும் இருந்தும், இந்தியா ஏன், அமெரிக்கா போல வளர்ச்சி காணவில்லை என்ற கேள்வியிலேயே இருந்தது.
மிகப்பெரிய ஞானிகள், விஞ்ஞானிகள், அரசியல், சட்ட மேதைகளை உருவாக்கி, உலகிற்கு தந்துள்ளது, இந்தியா. ஆனால், ஏன் இன்னும் வளர்ச்சி காணாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது...
அமெரிக்காவின் செல்வச் செழிப்பு பிரமிக்க வைக்கிறது. எல்லா இடங்களிலும் ஒரே சீரான நடைமுறை காணப்படுகிறது. அரசு அலுவலகங்கள், காவல்துறை, தனியார் நிறுவனங்கள், திட்டமிட்டு செயலாற்றுகின்றன; எங்கேயும் விதிமீறல் இல்லை. இந்த ஒழுக்கம் தான், அந்த நாட்டின் முன்னேற்றத்திற்கு காரணம் என்று எண்ணத் தோன்றியது.
இது எப்படி சாத்தியம், என்ன காரணம் என்று யோசித்தபோது, ஒரே ஒரு அம்சம் தான், நினைவுக்கு வந்தது. அது, தண்டனை; தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், தண்டனை நிச்சயம் என்பது, அங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சாலை விதிகளில், சிறு மீறல் என்றால் கூட, சிறு தண்டனை நிச்சயம் என்பதால், மக்கள் அங்கு சட்டத்தை மதிக்கின்றனர்; எதற்கும் தங்களை சமரசம் செய்து கொள்ளாமல் நடவடிக்கை எடுத்து, தண்டனை பெற்று தருகின்றனர், சட்டத்தை செயல்படுத்துவோர். 
ஆனால், இந்தியாவில், சட்டத்தை செயல்படுத்த வேண்டிய ஆளும் வர்க்கமும், அதிகாரிகளும், சோடை போய் விடுகின்றனர். தண்டனையில் இருந்து தப்ப, ஏராளமான வழிமுறைகள் இங்குள்ளன. மக்கள் அதை பயன்படுத்திக் கொள்கின்றனர். விளைவு, எல்லாவற்றிலும் ஊழல்.
இந்தியாவிலும் சட்டம் சரியாக செயல்படுத்தப்பட்டால், அமெரிக்காவை விட, பன்மடங்கு வளர்ச்சி பெறுவது உண்மை. அந்த நாள் விரைவில் வரவேண்டும் என்று, இறைவனை வேண்டிக் கொண்டிருந்த நிலையில், விமானம் சென்னையில் இறங்கியது.
பெட்டிகளை சேகரித்து, மின்சார ரயிலில், சென்னை மக்களோடு மக்களாக கரைந்து போனோம். 
முற்றும்

எஸ். உமாபதி

Wednesday, May 8, 2019

பி.சுசீலா

ராதே கிருஷ்ணா 09-05-2019


பி.சுசீலா


பி. சுசீலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigationJump to search
பி. சுசீலா
With P Susheela.jpg
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்புலப்பாக்க சுசீலா
பிறப்புநவம்பர் 13, 1935(அகவை 83)
விஜயநகரம்ஆந்திரப் பிரதேசம்)
இசை வடிவங்கள்பின்னணிப் பாடகி, கருநாடக இசை
தொழில்(கள்)பாடகி
இசைக்கருவி(கள்)இசைக்கலைஞர்
இசைத்துறையில்1952-2007
பி. சுசீலா அல்லது புலப்பாக்க சுசீலா (பிறப்பு: நவம்பர் 131935இந்தியாவின் முன்னணி திரைப்படப் பின்னணிப் பாடகி. இவர் தமிழ்தெலுங்குமலையாளம்கன்னடம் உட்படப் பல இந்திய மொழிகளில் நாற்பதாண்டுகளாக 25,000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார்.[1]

வாழ்க்கைச் சுருக்கம்

சுசீலா ஆந்திரா மாநிலத்தில் உள்ள விஜயநகரத்தில் புலப்பாக்க முந்தராவ், சிறீசம்மா ஆகியோருக்கு பிறந்தார்.[2] சுசீலாவுக்கு 5 சகோதரிகளும் 3 சகோதரர்களும் உள்ளனர்.[3] இவரது தந்தை ஒரு வக்கீல்லாக இருந்தார். அங்குள்ள பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றவர். ஆந்திராவின் புகழ்பெற்ற இசை மேதை துவாரம் வெங்கடசாமி நாயுடுவிடம் முறையாக இசை பயின்றவர்.[4]

இசைத் துறை

சுசீலா 1950 ஆம் ஆண்டில் சென்னை வானொலியில் பாப்பா மலர் நிகழ்ச்சியில் பாடத்தொடங்கினார். சுசீலாவின் இசைத்திறமையைக் கண்ட இயக்குநர் கே. எஸ். பிரகாஷ்ராவ் தனது பெற்றதாய் படத்தில் முதன் முதலில் பின்னணி பாட வைத்தார். 1953 ஆம் ஆண்டில் இப்படத்தில் ஏ. எம். ராஜாவுடன் இணைந்து பெண்டியாலா நாகேஸ்வரராவின் இசையமைப்பில் எதுக்கு அழைத்தாய் என்ற பாடலைப் பாடினார். 1955 இல் வெளிவந்த கணவனே கண் கண்ட தெய்வம் படத்தில் இடம்பெற்ற எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும்உன்னைக் கண் தேடுதேஎன்ற பாடல்கள் சுசீலாவுக்குப் பெயரை வாங்கிக் கொடுத்தன. சுதர்சனம் இசையமைத்த "டொக்டர்" என்ற சிங்களப் படத்திலும் பாடியுள்ளார்.
பல பாடல்களுக்கு ஏராளமான விருதுகளை வாங்கியுள்ளார். 1969 ஆம் ஆண்டில் அகில இந்தியப் பாடகிக்கான பரிசைப் பெற்றுக் கொண்டார். இவர் கடைசியாக 2008 ஆம் ஆண்டில் வெளிவந்த சில நேரங்களில் என்ற திரைப்படத்தில் பொட்டு வைத்த என்ற பாடலைப் பாடினார்.
1957 ஆம் ஆண்டில் டாக்டர் மோகன்ராவ் என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு ஜெய் கிருஷ்ணா என்ற மகன் உள்ளார்.[5]

விருதுகள்

பி. சுசீலா பாடிய சில பாடல்கள்:

  • ஆலயமணியின் ( பாலும் பழமும் )
  • யாருக்கு மாப்பிள்ளை ( பார்த்தால் பசி தீரும் )
  • பார்த்தால் பசி ( பார்த்தால் பசி தீரும் )
  • காவேரி ஓரம் ( ஆடிப்பெருக்கு )
  • இளமை கொலுவிருக்கும் ( ஹலோ மிஸ்டர் ஜமின்தார் )
  • தண்ணிலவு ( படித்தால் மட்டும் போதுமா )
  • முத்தான முத்தல்லவோ ( நெஞ்சில் ஓர் ஆலயம் )
  • அமுதைப் பொழியும் ( தங்கமலை ரகசியம் )
  • பருவம் எனது ( ஆயிரத்தில் ஒருவன் )
  • தூது செல்ல ( பச்சை விளக்கு )
  • பக்கத்து வீட்டு ( கற்பகம் )
  • நெஞ்சத்திலே நீ ( சாந்தி )
  • லவ்பேர்ட்ஸ் ( அன்பே வா )
  • அத்தான் என் அத்தான் ( பாவமன்னிப்பு )
  • சிட்டுக்குருவி ( புதியபறவை )
  • அத்தை மகனே ( பாத காணிக்கை )
  • கண்ணன் வருவான் ( பச்சை விளக்கு )
  • கொஞ்சி கொஞ்சி ( கைதி கண்ணாயிரம் )
  • ஆயிரம் பெண்மை ( வாழ்க்கைப் படகு )
  • ஆடாமல் ஆடுகிறேன் (ஆயிரத்தில் ஒருவன் )
  • நினைக்கத் தெரிந்த மனமே ( ஆனந்த ஜோதி )
  • நீ இல்லாத ( தெய்வத்தின் தெய்வம் )
  • அழகே வா ( ஆண்டவன் கட்டளை )
  • உன்னைக் காணாத ( இதய கமலம் )
  • என்னை மறந்ததேன் ( களங்கரை விளக்கம் )
  • இதுதான் உலகமா ( ஆடிப்பெருக்கு )
  • கண்ணிழந்த ( ஆடிப்பெருக்கு )
  • மாலைப் பொழுதின் ( பாக்கியலெட்சுமி )
  • மலரே மலரே ( தேன் நிலவு )
  • மன்னவனே ( கற்பகம் )
  • நாளை இந்த வேளை ( உயர்ந்த மனிதன் )
  • நான் உன்னை வாழத்தி பாடுகிறேன் ( நூற்றுக்கு நூறு )
  • காதல் சிறகை ( பாலும் பழமும் )
  • ஆண்டவனே உன் ( ஒளிவிளக்கு )
  • ராமன் எத்தனை ( லெட்சுமி கல்யாணம் )
  • தங்கத்திலே ஒரு ( பாகப்பிரிவினை )
  • சொன்னது நீ தானா ( நெஞ்சில் ஓர் ஆலயம் )
  • என்ன என்ன ( வெண்ணிற ஆடை )
  • அத்தானின் முத்தங்கள் ( உயர்ந்த மனிதன் )
  • காட்டுக்குள்ளே திருவிழா ( தாய் சொல்லைத் தட்டாதே )
  • அத்தை மகள் ( பணக்கார குடும்பம் )
  • பாலிருக்கும் ( பாவமன்னிப்பு )
  • பார்த்த ஞாபகம் ( புதிய பறவை )
  • உன்னை ஒன்று ( புதிய பறவை )
  • என்னை பாட வைத்தவன் ( அரசகட்டளை )
  • அம்மாம்மா காற்று வந்து ( வெண்ணிற ஆடை )
  • காண வந்த ( பாக்யலெட்சுமி )
  • மறைந்திருந்து ( தில்லானா மோகனாம்பாள் )
  • பச்சை மரம் ( ராமு )
  • தேடினேன் வந்தது ( ஊட்டி வரை உறவு )
  • சிட்டுக்குருவிக்கென்ன ( சவாளே சமாளி )
  • இரவுக்கு ஆயிரம் ( குலமகள் ராதை )
  • உனக்கு மட்டும் ( மணப்பந்தல் )
  • தமிழுக்கும் அமுதென்று ( பஞ்சவர்ணக்கிளி )
  • வெள்ளிக்கிழமை ( நீ )
  • ரோஜா மலரே ( வீரத்திருமகன் )
  • ஹலோ மிஸ்டர் ( ஹலோ மிஸ்டர் ஜமின்தார் )
  • தாமரை கன்னங்கள் ( எதிர்நிச்சல் )
  • காத்திருந்த கண்களே ( மோட்டார் சுந்தரம் பிள்ளை )
  • மதுரா நகரில் ( பார் மகளே பார் )
  • அனுபவம் புதுமை ( காதலிக்க நேரமில்லை )
  • என்னருகே நீ இருந்தால் ( திருடாதே )
  • காற்று வந்தால் ( காத்திருந்த கண்கள் )
  • மெளனமே பார்வையால் ( கொடி மலர் )
  • பால் வண்ணம் ( பாச மலர் )
  • போக போக தெரியும் ( சர்வர் சுந்தரம் )
  • வளர்ந்த கலை ( காத்திருந்த கண்கள் )
  • பார்த்தேன் சிரித்தேன் ( வீரத்திருமகள் )
  • ஒருத்தி ஒருவனை ( சாரதா )
  • ஒரே கேள்வி ( பனித்திரை )
  • நெஞ்சம் மறப்பதில்லை ( பனித்திரை )
  • இயற்கை என்னும் ( சாந்தி நிலையம் )
  • ஒரு காதல் தேவதை ( சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு )
  • யாதும் ஊரே ( நினைத்தாலே இனிக்கும் )
  • ஆயிரம் நிலவே வா ( அடிமைப் பெண் )
  • மாதமோ ஆவணி ( உத்தரவின்றி உள்ளே வா )
  • என் கண்மணி ( சிட்டுக்குருவி )
  • விழியே கதையெழுது ( உரிமைக் குரல் )
  • தங்கத் தோணியிலே ( உலகம் சுற்றும் வாலிபன் )
  • மஞ்சள் நிலவுக்கு ( முதல் இரவு )
  • பேசுவது கிளியா ( பணத்தோட்ட )
  • அன்று வந்ததும் ( பெரிய இடத்துப் பெண் )
  • அன்புள்ள மான்விழியே ( குழந்தையும் தெய்வமும் )
  • வாழ நினைத்தால் ( தாயில்லாமல் நானில்லை )
  • அடுத்தாத்து அம்புஜத்த ( எதிர் நீச்சல் )
  • அமைதியான நதியினிலே ( ஆண்டவன் கட்டளை )
  • நான் மலரோடு ( இரு வல்லவர்கள் )
















Settings
Ranga Rao Murali
muralisudha.geo@yahoo.com




முதல் பக்கம் » கின்னஸ் சுசீலா

கின்னஸ் சுசீலா

01 ஜன,1970 - 05:30 IST
எழுத்தின் அளவு:

 Share
 Tweet
 Share
பாடும் வானம்பாடியான பி.சுசீலா, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, இந்தி, ஒரியா, சமஸ்கிருதம், சிங்களம் என 9 மொழிகளில் சுமார் 40,000-க்கும் அதிகமான பாடல்களை பாடியிருக்கிறார். 17,695 பாடல்களை தனியாக பாடியதற்காக சுசீலாவின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

தேசிய அளவில், மிகச்சிறந்த பின்னணி பாடகிக்கான விருதை, ஐந்து முறை பெற்றவர். பத்மபூஷண், கலைமாமணி, மற்ற மாநில விருதுகள் உள்ளிட்ட விருதுகளும் வாங்கியுள்ளார்.

ஹிந்தி திரை உகின் புகழ் உச்சியில் மின்னிய லதா மங்கேஷ்கர், ஷம்ஷாத் பேகம், ஆஷா போஷ்லே உட்பட பலரால் பாராட்டப்பட்டவர் இவர். இந்தியாவின் மிகப் பெரிய இசை மேதை நௌஷாத் அலி, "அக்பர்" படத்தில் (இந்தியில் "மொகலே - ஆசம்" திரைப்படம்) அவர் பாடிய பாடலைக் கண்டு வெகுவாகப் பாராட்டியது பல பத்திரிகைகளில் வெளியாகி அவருக்கு புகழ் சேர்த்தது.

ஜி.ராமநாதன், கே.வி.மகாதேவன், விஸ்வநாதன் ராமமூர்த்தி, ஏ.எம்.ராஜா, சங்கர் கணேஷ், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உட்பட இந்தியாவின் அனைத்து புகழ் பெற்ற இசையமைப்பாளர்களுடன் பணியாற்றிய இவர், பி.பி.ஸ்ரீனிவாஸ், ஏ.எல்.ராகவன், ஏ.எம்.ராஜா, கண்டசாலா, ஜேசுதாஸ், எஸ்.பி.பி என அனைத்து பிரபலங்களுடன் இணைந்து பாடல்களைப் பாடியுள்ளார் சுசீலா. இசை அரசர் டி.எம்.சவுந்தர்ராஜன் உடன் அதிக பாடல்கள் பாடியிருக்கிறார்.

பழம்பெரும் நடிகைகளான சரோஜாதேவி, கே.ஆர்.விஜயா உட்பட பத்துக்கும் மேற்பட்ட கதாநாயிகளுக்கு 100 படங்களுக்கு மேல் பாடிய பெருமை பெற்றவர் பி.சுசீலா.

சுசீலாவும்... விருதும்...
1.1969 ஆம் ஆண்டு நாளை இந்த வேளை பார்த்து என்ற உயர்ந்த மனிதன் திரைப்பட பாடலுக்காக தேசிய விருது பெற்றுள்ளார்.

2.1972 ஆம் ஆண்டு சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு என்ற சவாலே சமாளி திரைப்பட பாடலுக்காக தேசிய விருது பெற்றுள்ளார்.

3. 1977 ஆம் ஆண்டு ஜும்மடி நாதம் சய்யனி பாதம் என்ற சிரி சிரி முவ்வா தெலுங்கு திரைப்பட பாடலுக்காக தேசிய விருது பெற்றுள்ளார்.

4. 1983 ஆம் ஆண்டு ஆகுலோ ஆகுனை என்ற மேக சந்தேசம் தெலுங்கு பட பாடலுக்காக தேசிய விருது பெற்றுள்ளார்.

5. 1984 ஆம் ஆண்டு எம் எல் ஏ ஏடுகொண்டலு என்ற தெலுங்கு படத்தில் பாடியதற்காக தேசிய விருது பெற்றுள்ளார்.

6. சிறந்த பாடகிக்கான தமிழக அரசின் விருதினை மூன்று முறை பெற்றுள்ளார்.

7. சிறந்த பாடகிக்கான கேரள அரசின் விருதினை இரண்டு முறை பெற்றுள்ளார்.

8. சிறந்த பாடகிக்கான ஆந்திர அரசின் விருதினை ஏழு முறை பெற்றுள்ளார்.

9. 2008 ஆம் ஆண்டு மத்திய அரசால் பத்மபூஷண் விருது கொடுத்து கவுரவிக்கப்பட்டார்.
« தினமலர் முதல் பக்கம்சினிமா முதல் பக்கம் »









































































































முதல் பக்கம் » மயக்கும் பாடல்கள்

தனி பாடல்கள்

பாடல் முதல் வரிதிரைப்படம்
1உன்னை கண் தேடுதேகணவனே கண்கண்ட தெய்வம்
2அன்பில் மலர்ந்த நல் ரோஜாகணவனே கண்கண்ட தெய்வம்
3அமுதைப் பொழியும் நிலவேதங்கமலை ரகசியம்
4நீலவண்ண கண்ணனே உனது எண்ணம்மல்லிகா
5அழைக்காதேமணாளனே மங்கையின் பாக்கியம்
6உன்னழகை கன்னியர்கள் சொன்னதினாலேஉத்தமபுத்திரன்
7சின்னஞசிறு கண்மலர்பதிபக்தி
8உன்னைக் கண்டு நானாடகல்யாணப் பரிசு
9தங்கத்திலே ஒரு குறைபாகப்பிரிவினை
10சொக்குதே மனம் சுத்துதே ஜகம்பாக்தாத் திருடன்
11கலையே என் வாழ்க்கையின் திசைமீண்ட சொர்க்கம்
12கண்கள் இரண்டும் என்றும் உன்னைக் கண்டுமன்னாதி மன்னன்
13மாலைப் பொழுதின் மயக்கத்திலேபாக்கிய லஷ்மி
14காணவந்த காட்சி என்ன வெள்ளி நிலவேபாக்கிய லஷ்மி
15காதல் எனும் வடிவம் கண்டேன்பாக்கிய லஷ்மி
16மலரே மலரே தெரியாதாதேன் நிலவு
17அத்தான் என்னத்தான்பாவ மன்னிப்பு
18மயங்குகிறாள் ஒரு மாதுபாசமலர்
19ஆலய மணியின் ஓசையைபாலும் பழமும்
20காதல் சிறகை காற்றினில்பாலும் பழமும்
21பார்த்தால் பசி தீரும்பார்த்தால் பசி தீரும்
22சொன்னது நீதானா சொல்நெஞ்சில் ஓர் ஆலயம்
23முத்தான முத்தல்லவோநெஞ்சில் ஓர் ஆலயம்
24அத்தை மகனே போய் வரவாபாதகாணிக்கை
25காவேரி ஓரம்ஆடிப்பெருக்கு
26நினைக்கத் தெரிந்த மனமேஆனந்த ஜோதி
27நெஞ்சம் மறப்பதில்லைநெஞ்சம் மறப்பதில்லை
28ஆயிரம் இரவுகள் வருவதுண்டுகற்பகம்
29அத்தைமடி மெத்தையடிகற்பகம்
30கண்ணா கருமை நிற கண்ணாநானும் ஒரு பெண்
31கங்கை கறை தோட்டம்வானம்பாடி
32என்னை எடுத்து தன்னைக் கொடுத்துபடகோட்டி
33அவள் மெல்ல சிரித்தாள்பச்சை விளக்கு
34கண்ணுக்கு குலமேது கர்ணாகர்ணன்
35என்னுயிர்த் தோழிகர்ணன்
36கண்கள் எங்கேகர்ணன்
37பார்த்த ஞாபகம் இல்லையோபுதிய பறவை
38உன்னை ஒன்று கேட்பேன்புதிய பறவை
39சிட்டுக்குருவிபுதிய பறவை
40அழகே வா அருகே வாஆண்டவன் கட்டளை
41உன்னை நான் சந்தித்தேன்ஆயிரத்தில் ஒருவன்
42உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்லஇதயக்கமலம்
43மலர்கள் நனைந்தன பனியாலேஇதயக்கமலம்
44என்னை மறந்ததேன் தென்றலேகலங்கரை விளக்கம்
45ஓஹோ ஹோ… ஓடும் எண்ணங்களேநீலவானம்
46தமிழுக்கும் அமுதென்று பேர்பஞ்சவர்ணக்கிளி
47கண்ணன் வருவான்பஞ்சவர்ணக்கிளி
48நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்சாந்தி
49உன்னைத்தான் நானறிவேன்வாழ்க்கைப் படகு
50கண்ணன் என்னும் மன்னன் பேரைவெண்ணிறாடை
51என்ன என்ன வார்த்தைகளோவெண்ணிறாடை
52ஒரு நாள் யாரோமேஜர் சந்திரகாந்த்
53கோமாதா எங்கள் குலமாதாசரஸ்வதி சபதம்
54தேடினேன் வந்ததுஊட்டி வரை உறவு
55மன்னவன் வந்தானடி தோழிதிருவருட்செல்வர்
56ராமன் எத்தனை ராமனடிலஷ்மி கல்யாணம்
57நலந்தானா நலம்தானாதில்லானா மோகனாம்பாள்
58மறைந்திருந்து பார்க்கும்தில்லானா மோகனாம்பாள்
59நாளை இந்த வேளை பார்த்துஉயர்ந்த மனிதன்
60இறைவன் வருவான்சாந்தி நிலையம்
61கடவுள் ஒரு நாள் உலகைக்காணசாந்தி நிலையம்
62சொல்லவோ சுகமான கதைசிவந்த மண்
63வசந்தத்தில் ஓர் நாள்மூன்று தெய்வங்கள்
64சிட்டுக் குருவிக்கென்ன கட்டுப்பாடுசவாலே சமாளி
65ஒரு ஆலயம் ஆகும் மங்கை மனதுசுமதி என் சுந்தரி
66கலைமகள் கைப் பொருளேவசந்த மாளிகை
67சுகமோ ஆயிரம்துணையிருப்பாள் மீனாட்சி
68டார்லிங் டார்லிங் டார்லிங்ப்ரியா
69ராஜா சின்ன ராஜாபூந்தளிர்
70ஏ.. தென்றலேநெஞ்சத்தை கிள்ளாதே
71மானே ஒரு மங்கல சிப்பிகடல் மீன்கள்
72ராகவனே ரமணா ரகுநாதாஇளமைக் காலங்கள்
73ராசாவே உன்னை காணாத நெஞ்சுவைதேகி காத்திருந்தாள்
74காலைத் தென்றல் பாடி வரும்உயர்ந்த உள்ளம்
75வரம் தந்த சாமிக்குசிப்பிக்குள் முத்து
76ஆசையிலே பாத்தி கட்டிஎங்க ஊரு காவக்காரன்
77ஆடம் நேரம் இதுதான்சூரசம்ஹாரம்
78பூ பூக்கும் மாசம்வருஷம் 16
79கற்பூர பொம்மை ஒன்றுகேளடி கண்மணி
80பூங்காவியம் பேசும் ஓவியம்கற்பூர முல்லை
81என் ராஜாவின் ரோஜா முகம்சிவகாமியின் செல்வன்
82பதினாறு வயதினிலேஅன்னமிட்ட கை
83ஆடுமடி தொட்டில் இனிஅவள் ஒரு தொடர்கதை
84இன்று வந்த இந்த மயக்கம்காசேதான் கடவுளடா
85மனமேடை மலர்களுடன் தீபம்ஞான ஒளி
86தாயின் முகம் இங்கு நிழலாடுதுதங்கைக்காக
87நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்நூற்றுக்கு நூறு
88தை மாத மேகம் அது தரையில் ஆடுதுகுழந்தைக்காக
89கையோடு கை சேர்க்கும் காலங்களேகாவியத் தலைவி
90சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்ராமன் எத்தனை ராமனடி
91எண்ணம் போல கண்ணன் வந்தான்பூவும் பொட்டும்
92மாறியது நெஞ்சம்பணமா பாசமா
93சொல்ல சொல்ல இனிக்குதடாகந்தன் கருணை
94வெள்ளி மணி ஓசையிலேஇரு மலர்கள்
95எங்கே நீயோ நானும் அங்கேநெஞ்சிருக்கும்வரை
96பொன் மேனி தழுவாமல்யார் நீ?
97பச்சை மரம் ஒன்றுராமு
98அம்மம்மா காற்று வந்துவெண்ணிறாடை
99அழகன் முருகனிடம்பஞ்சவர்ணக்கிளி
100கண்ணுக்கு மை அழகுபுதிய முகம்

சுசீலா சுவாரசியம்

55Shares
 Share
 Tweet
 Share

« சினிமா முதல் பக்கம்மேலும் சுசீலா சுவாரசியம் »




முதல் பக்கம் » சுசீலா சுவாரசியம்