Sunday, October 20, 2019

மகாபாரதக் கதை மாந்தர்கள்

ராதே கிருஷ்ணா 21-10-2019





கிருட்டிணன்

Jump to navigationJump to search
கிருட்டிணன்
Sri Mariamman Temple Singapore 2 amk.jpg
கிருஷ்ணர்
தேவநாகரிकृष्ण
சமசுகிருதம்Kṛṣṇa
தமிழ் எழுத்து முறைகிருஷ்ண
வகைவிஷ்ணுவின் அவதாரம்
இடம்மதுராபிருந்தாவனம்கோகுலம்துவாரகை
மந்திரம்ஓம் நமோ நாராயணா
ஆயுதம்சுதர்சன சக்கரம்
துணைருக்மணிச‌‌த்‌தியபாமா‌ஜாம்பவதி,நக்னசித்திகாளிந்திமித்திரவிந்தைஇலக்குமணைபத்திரை
நூல்கள்பாகவத புராணம்அரி வம்சம்விஷ்ணு புராணம்மகாபாரதம்உத்தவ கீதை மற்றும் பகவத் கீதை
கிருட்டிணன் இந்து சமய கடவுளாவார். இவர் விஷ்ணுவின் அவதாரங்களுள் ஒருவராக வைணவர்களால் கருதப்படுகிறார். இவர் விஷ்ணுவின் எட்டாவது அவதாரமாக கருதப்படுகிறார். மகாபாரத்திலும் பாகவத புராணத்திலும் இவரைப் பற்றி கூறப்பட்டுள்ளது. இந்து சமய பக்தி நெறியில் இவருடைய பக்தர்களே பெரும்பாலானவர்கள். இவரை தமிழர்கள் கண்ணன் என்ற பெயரிலும், வட இந்தியர் கண்ணையா என்ற பெயரிலும் அழைக்கின்றனர். இது தவிர, கேசவன், கோவிந்தன், கோபாலன், போன்ற பல பெயர்களால் வழங்கப்படுகிறார். வருடந்தோறும் ஆவணி மாதம் அட்டமி திதி, ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நாள் கிருட்ண ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.
கிருஷ்ணரின் கதைகள் இந்து மதத்தில் பரவலாக காணப்படுகின்றது. அவை அவரை பல்வேறு கோணங்களில் சித்தரிக்கிறது. ஒரு தெய்வ குழந்தையாக, குறும்புக்காரனாக, முன் மாதிரி காதலனாக என பல வகைகளில் குறிப்பிடப்படுகின்றது. அவரை பற்றிய குறிப்புகள் மகாபாரதம்அரி வம்சம்பாகவத புராணம் மற்றும் விஷ்ணு புராணம் போன்ற நூல்களில் உள்ளன.
கிருஷ்ண வழிபாடு, பால கிருஷ்ணர் அல்லது கோபாலன் என்ற பெயரில் 4 வது நூற்றாண்டின் தொடக்கத்திலேயே இருந்ததை அறிய முடிகிறது. சிலப்பதிகாரத்தில் கண்ணன் (திருமால்) கி.பி 2 ஆம் நூற்றாண்டில் இளங்கோவடிகளால் கூறப்பட்டவர். எனினும் கி.பி 10 ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் பக்தி இயக்கத்தின் மூலம் கிருஷ்ணர் வழிபாடு உச்சத்தை அடைந்தது. ஒரிசாவில் ஜெகன்னாதர், ராஜஸ்தான், மஹாராஷ்டிராவில் உள்ள விட்டலர், கேரளாவில் குருவாயூரப்பன்துவாரகையில்துவாரகாதீசர், இமயத்தில் பத்ரிநாதர் என கிருஷ்ணனை பல பெயர்களில், வடிவங்களில் வழிபடுகின்றனர். 1960 களில் உருவாக்கப்பட்ட இஸ்கான் அமைப்பு கிருஷ்ண வழிபாட்டை மேற்கத்திய நாடுகளுக்கும் கொண்டு சென்றது.கி.பி 6-9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆழ்வார்களால் திருமால் (கண்ணன்) வழிபடப்பட்டுள்ளார்.

பெயர்கள் மற்றும் புனைபெயர்கள்

கிருட்டிணன் என்ற தமிழ் சொல்லிற்கு கரிய மற்றும் அழகிய கண்களையுடையவன் என்று பொருள்படும். கிருட்டிணன் கரிய நிறமுடையவன் என்பதால் இப்பெயரிட்டு அழைக்கப்படுகின்றார். சில நேரங்களில் "கவர்ச்சிகரமான" எனவும் இச்சொல் மொழிபெயர்க்கப்படுகிறது.
கிருட்டிணன் பல்வேறு பெயர்கள், அடைமொழிகள் கொண்டுள்ளார். அவற்றுள் "பெண்களை வசீகரிப்பவர்" என பொருள்படும் மோகன், "பசுக்களை கண்டுபிடிப்பவன்" என பொருள்படும் கோவிந்தன், "பசுக்களை பாதுகாப்பவன்" என பொருள்படும் கோபாலன் ஆகியவை குறிப்பிடத்தக்கவை ஆகும். மேலும் ஆயர்களையும் பசுக்களையும் தொடர்மழையிலிருந்து காக்க, கோவர்தன மலையை குடை போல் தூக்கியதால் கோவர்தனன் என்றும், கோகுலத்தில் வளர்ந்ததால் கோகுலன் என்றும், இராதையின் உள்ளங்கவர் காதலன் என்பதால் இராதா கிருஷ்ணன் என்றும், வசுதேவர் - தேவகி இணையர்க்கு பிறந்ததால் வாசுதேவன் என அடைமொழிகளால் கிருஷ்ணரை கொண்டாடுகிறார்கள். பெரியாழ்வாரின் மூலம் கண்ணனின் வரலாறு தெரிந்து கண்ணனையே தன் கணவனாக எண்ணம் கொண்டவர் ஆண்டாள். திருவரங்கத்தில் கண்ணனுடன் வானுலகம் சென்றவர்.ஆண்டாள் தன்னை ஆயர் குலப்பெண்ணாகவே திருப்பாவையில் உருவகித்துக் கொள்கிறாள். ஆழ்வார்கள் கண்ணனை மணிவண்ணன் என்றும் அழைக்கின்றார்கள்.

கிருட்டிணனின் கதை

இளமை

விருஷ்ணி குலத்தின் சூரசேனரின் மகன் வசுதேவர் - தேவகி இணையருக்கு எட்டாவது குழந்தையாக மதுராவின் சிறையில் கிருட்டிணன் பிறந்தார். கொடுமைக்கார அரசனான கிருட்டிணரின் தாய்மாமன் கம்சனிடமிருந்து கிருஷ்ணரை காக்க, கிருஷ்ணர் பிறந்த நாளன்றே இவரை வசுதேவர் யமுனை ஆற்றுக்குப் அப்பால் உள்ள கோகுலத்தில் குடியிருந்த யாதவ குலத்தினரான நந்தகோபர் - யசோதை இணையரிடம் ஒப்படைத்தார்.
கோகுலம் வாழ் யாதவர்களின் தலைவர் நந்தகோபர் - யசோதா அவர்களால் வளர்க்கப்பட்டார். பின்னர் கோகுலம் வாழ் யாதவர்கள் பிருந்தாவனத்திற்கு இடம் பெயர்ந்தனர். குழல் ஊதி, மாடு மேய்த்து, நண்பர்களுடன் விளையாடி, வெண்ணெய் திருடி குறும்புத்தனம் செய்து காலத்தைக் கழித்த கிருட்டிணன் பிருந்தாவனத்தின் செல்லப் பிள்ளையானார். மேலும், இவரை தாக்க கம்சனால் ஏவப்பட்டு வந்த கொடிய அசுரர்களையும் வதம் செய்தார்.மேலும் இந்திரன் கோகுலத்தை அழிக்க பெரும் மழையை உண்டாக்கிய போது கோவர்த்தன மலையை குடையாக பிடித்து அவர்களை காப்பாற்றினார் எனவும் மேலும் யமுனை நதிக்கரையில் இருந்த காளிங்கன் என்ற பாம்பையும் அடக்கினார் என்று கூறப்படுகிறது.
அக்ரூரரின் வேண்டுகோளின் படி, பலராமன் மற்றும் கிருஷ்ணர் மதுரா சென்று தன் மாமன் கம்சனை அழித்து மதுராபுரியை தனது தாய் வழி தாத்தா உக்கிரசேனரிடம் ஒப்படைத்து விட்டு, கோகுலம் வாழ் யது குல மக்களுடன்சௌராஷ்டிர தீபகற்பத்தில் உள்ள கடற்கரை அருகே துவாரகை என்னும் புதிய நகரை உருவாக்கி வாழ்ந்தனர். சஙக கால புலவர் கபிலர் துவரை (துவாரகை) பற்றி கூறுகிறார்.
புராண நூல்கள் மற்றும் சோதிட கணிப்புகள் அடிப்படையில் கிருட்டிணனின் பிறந்த தேதி கி.மு 3228 ஆம் ஆண்டு சூலை 19 ஆகவும் மற்றும் அவரின் மறைவு கி.மு. 3102 ஆகவும் இருக்கும் என கருதப்படுகின்றது.[சான்று தேவை]

வாலிபம்

இள வயதில் பிருந்தாவனத்தில்[1] இருந்த பெண்களின் மனதில் இடம் பிடித்தார். இவர்களுள் ஒருவரான ராதையுடன் காதல் புரிந்தார்.
வாலிப வயதை அடைந்தவுடன் பலராமருடன் மதுரா சென்று, கம்சனை வென்று தன் தாத்தாவான உக்கிரசேனரிடம் ராச்சியத்தை ஒப்படைத்தார். தனது அத்தை மகன்களான பாண்டவர்களுடன், குறிப்பாக அருச்சுனனுடன் நட்பு கொண்டார். பின்னர் துவாரகை எனும் புது நகரை நிறுவி, மதுரா மக்களுடன் குடிபெயர்ந்தார்.

குடும்பம்

கிருஷ்ணன் மொத்தம் 16,008 மனைவிகளை கொண்டிருந்தார். அவற்றுள் எண்மனையாட்டி என அழைக்கப்பட்ட எட்டு மனைவிகள் முதன்மையானவர். அவர்கள் ருக்மணிச‌‌த்‌தியபாமா‌ஜாம்பவதி,நக்னசித்திகாளிந்திமித்திரவிந்தைஇலக்குமணைபத்திரை ஆவர். மற்றும் பிற 16, 000 பேர் அவரது சுதேசி மனைவிகள் அவர்கள் அனைவரும் வலுக்கட்டாயமாக நரகாசுரனின் மாளிகையில் அடைக்கப்பட்டிருந்தவர்கள். கிருஷ்ணர் நரகாசுரனை கொன்ற பிறகு அப்பெண்களை அவர்களின் குடும்பங்கள் ஏற்றுக்கொள்ள மறுத்ததால் அனைவரையும் கிருஷ்ணர் ஒரே நாளில் மணந்தார். அவர்களுக்கு புதிய அரண்மனை கட்டி ஒரு மரியாதையான இடத்தில் அவர்களை நிறுத்தினார். எனினும் அவர் தனது எட்டு மனைவிகளை தவிர மற்றவர்களுடன் எந்த வித தொடர்பும் கொண்டிருக்கவில்லை.
ருக்மிணிக்கு ஐந்து சகோதரர்கள். அவர்களின் பெயர்கள் ருக்மி, கருக்மன், ருக்மபாஹூ, ருக்மகேசன், ருக்மமாலி என்பன.
ருக்மணிக்கும் கிருஷ்ணருக்கும் பிறந்த குழந்தை பிரத்தியுமனன். இவருக்கும் ருக்மியின் மகளான ருக்மவதிக்கும் திருமணமானது. பிரத்யும்னன் - ருக்மவதிக்கு பிறந்தவர் அனிருத்தன் ஆவார். இவர் கிருஷ்ணனின் பேரனாவார்.[2] கிருஷ்ணர் - ஜாம்பவதிக்கும் பிறந்தவ மகன் சாம்பன் ஆவார்.

மகன்


கிருஷ்ணன் மகன் சாம்பன் கர்ப்பிணி பெண் வேடமணிந்து, முனிவர்கள் முன் சென்று தனக்கு என்ன குழந்தை பிறக்கும் என வேடிக்கையாக கேட்டதற்கு, உனக்கு உலக்கை பிறக்கும் என சாபமிட்டு கூறினர்.
கண்ணன் உபமன்யு முனிவரிடம் தனக்கு புத்திரபாக்கியம் வேண்டினார். அதற்கு உபமன்யு சிவபக்தியில் மூழ்கிநின்று, சிவபெருமானின் அருளைப் பெறுமாறு அறிவுரை வணங்கினார். கண்ணனும் கடுந்தவத்தினை மேற்கொண்டு சிவபெருமானை மகிழ்வித்தார். கண்ணனின் பாசுபத விரதத்தில் மகிழ்வுற்ற சிவபெருமான் உமையம்மையுடன் காட்சி தந்தார். கண்ணன் சிவபெருமானிடம், அவரின் அம்சமான ஒரு குழந்தை தனக்கு வேண்டுமென விண்ணப்பித்தார். சிவபெருமானும் கண்ணனுக்கு கேட்ட வரத்தினை அளித்தார். கண்ணன் மற்றும் ஜாம்பவதி தம்பதிகளுக்கு சிவபெருமானின் அம்சத்துடன் ஒரு குழந்தை பிறந்தது. அக்குழந்தை சாம்பன் என்று அறியப்படுகிறது.[3].
சங்க கால புலவர் கபிலர் இருங்கோவேல் தன் வேண்டுகோளை ஏற்காததால் ,உன முன்னோரில் ஒருவன் புலவர் கழாத்தலையை இழிவாக பேசியதால் துவரை என்ற மாநகரையும் ,இரு பெரு ஊர்களும் (துவாரகை,வேட்துவாரகை) அழிவை சந்தித்தன என்கிறார் .கிருட்டிணன் வழி வந்தவன் என்றும் இருங்கோவேலை தன் பாடலில் கூறுகிறார். சிந்து வெளி பகுதியிலே குஜராத்(துவாரகை) அமைந்துள்ளதாலும் கண்ணன் ஒரு திராவிடன் (தமிழன்) என்ற கபிலரின் பாடல் மூலமும் ,பாகவத புராணத்தின் மூலமும் தெரிய வருகிறது. அவ்விரு பாடல்கள்
'நீயே வடபான் முனிவன் றடவினுட் டோன்றி செம்புனைந் தியற்றிய சேனொடும் புரிசை உவரா வீகைத் துவரை யாண்டு நாற்பத் தொன்பது வேளிருள் வேளே.... ஒலியற் கண்ணிப் புலிகடி மால்.
வென்றி நிலைஇய விழுப்புக ழொன்றி இருபாற் பெயரிய வுருகெழு மூதூர் கோடிபல வூடுக்கிய பொருமணு குதவிய நீடுநிலை யரையத்து கேடுங் கேளினி நுந்தை தாய நிறைவுற வெய்திய ஒலியற் கண்ணி புலிகடிமாஅல் நும்போ லறிவி னுமரு ளொருவன் புகழ்ந்த கழாத்தலையை இகழ்ந்ததன் பயனே யியரே ரண்ணல் என்றும் பாடுகிறார்.
இப்பாடல்களின் மூலம் இருங்கோவேளை புலிகடிமால் என்கிறார். மால்-திருமால் ,திருமால் வழி வந்தவன். துவாரகை நகரை ஆண்டு 49 தலைமுறைகள் தொன்றுதொட்டு வந்த வேளிர் குல வேந்தரில் சிறந்த வேளிர் வேந்தன் நீ என அவனை புகழ்கிறார்.ஆனால் உண் முன்னோரில் ஒருவன் கழாத்தலை புலவனை இகழ்ந்ததன் காரணமாகவே அந்நகரங்கள் அழிவை சந்தித்தன என்கிறார். வேளிர்கள் கிருட்டிணனது நாட்டினர் என்றும் அவர்களில் 18 பிரிவினரை அகத்தியர் தமிழகம் அழைத்து வந்தார் என்ற விடயத்தை நச்சினார்கினியார்(14 ஆம் நூற்றாண்டு) கூறுகிறார்.இவை கபிலர் பாடல் மூலமும் தெரியவருகிறது.ஆனால் கபிலர் வடபான் முனிவன் என்றே குறிப்பிடுகிறார் மேலும் அம்முனிவன் அகத்தியர் என்று கூறவில்லை.

மகாபாரதத்தில் கிருஷ்ணன்


பார்த்தசாரதியாக, ஸ்ரீகிருஷ்ணர்
பாண்டவர்களின் தாயான குந்தி, கிருஷ்ணரின் சொந்த அத்தை ஆவாள். அருச்சுனனின் சிறந்த நண்பன் கிருஷ்ணன். திரௌபதி கிருஷ்ணரின் பக்தை ஆவாள். வீமன் மற்றும் அருச்சுனன் ஆகியவர்களைக் கொண்டு ஜராசந்தனை கொன்றவர். இந்திரப்பிரஸ்தத்தில்தருமன் நடத்திய ராஜசூய வேள்வி மண்டபத்தில், தன்னை அவமதித்த சிசிபாலனை தனது சக்கராயுதத்தால் வென்றவர். துரியோதனின் சூதாட்ட மண்டபத்தில், தருமன் சூதாட்டத்தில் தன் தம்பியர்களையும் தன்னையும் மற்றும் திரௌபதியையும் இழந்து நிற்கையில், திரௌபதியின் துயிலை துச்சாதனன் நீக்கும் போது, கிருஷ்ணனை சரணாகதி அடைந்த திரௌபதியின் மானத்தை காத்தவர் கிருஷ்ணன். 13 ஆண்டுகால வனவாசம் முடித்த பாண்டவர்களுக்கு, சூதாட்டத்தில் இழந்த இந்திரப்பிரஸ்தம் நாட்டை மீண்டும் பாண்டவர்களுக்கே திருப்பித்தர வேண்டி கௌரவர்களிடம் கிருஷ்ணன் தூதுவனாக அத்தினாபுரம் சென்றவர். குருச்சேத்திரப் போரில் அருச்சுனனுக்கு பார்த்தசாரதியாக அமைந்தவர். கர்ணனின் நாகஸ்திர கனையிடமிருந்து அருச்சுனனை காத்தவர். இறுதிப் போரில், சைகை காட்டி துரியோதனை கொல்வதற்கு வீமனுக்கு துணை நின்றவர். அஸ்வத்தாமன் ஏவிய பிரம்மாஸ்திரத்தினால் கொல்லப்பட்ட உத்தரையின் கர்ப்பப் பையில் இருந்த குழந்தை பிரிட்சித்திற்கு, கிருஷ்ணர் உயிர் கொடுத்தன் மூலம், பாண்டவர்களின் ஒரே வாரிசை காத்தருளினார்.

கிருஷ்ணரின் வேறு பெயர்கள்

மகாபாரதத்தின் உத்தியோகப் பருவத்தில்குரு நாட்டின் மன்னர் திருதராட்டிரன் தனது தேரோட்டியான சஞ்சயனிடத்தில், கிருஷ்ணரின் வேறு பெயர்களையும்; அதன் பொருளையும் உரைக்குமாறு கேட்டார். அதற்கு சஞ்சயன் கீழ்கண்டவாறு கிருஷ்ணரின் வேறு பெயர்களை, அதற்கான விளக்கத்துடன் திருதராட்டிரரிடம் கூறினார்.[4]
  1. ஹரி - இயற்கையின் அதிபர்
  2. கேசவன் - அளவிடப்பட முடியாதவன், வாயால் விவரிக்கப்பட முடியாதவன்.
  3. ஸ்ரீதரன் - இலக்குமியை மார்பில் கொண்டவன்
  4. வாசுதேவன் - அனைத்து உயிர்களில் வசிப்பவன்.
  5. விஷ்ணு - எங்கும் பரந்திருக்கும் இயல்பினன்.
  6. மாதவன் - பெரும் தவம் செய்பவன்.
  7. மதுசூதனன் - மது எனும் அசுரனை கொன்றதால் மதுசூதனன் என அழைக்கப்படுகிறான்.
  8. புண்டரீகாட்சன் - தாமரை போன்ற கண்களை உடையவன் (தாமரைக் கண்ணன்)
  9. ஜெனார்தனன் - தீயவர்களின் இதயங்களில் அச்சத்தை விளைவிப்பதால் ஜனார்த்தனன் என அழைக்கப்படுகிறான்.
  10. சாத்வதன் - சாத்வ குணம் அவனை விட்டு எப்போதும் விலகாததாலும், அவனும் சாத்வ குணத்தை விட்டு விலகாமல் இருப்பதாலும் சாத்வதன் என அழைக்கப்படுகிறான்;
  11. விருபாட்சணன் - "விருசபம்" என்பது "வேதங்களைக்" குறிக்கும், "இச்சணம்" என்பது "கண்ணைக்" குறிக்கும். இவையிரண்டும் இணைந்து, வேதங்களே அவனது கண்கள் என்றோ, வேதங்களே அவனைக் காண்பதற்கான கண்கள் என்றோ குறிக்கின்றன என்பதால், கிருஷ்ணணை விருஷபாட்சணன் என அழைக்கப்படுகிறான்,
  12. அஜா - எந்த உயிரிலிருந்தும் சாதாரண வழியில் தனது பிறப்பை எடுக்காததால் அஜா என அழைக்கப்படுகிறான்.
  13. தாமோதரன் - தேவர்களைப் போலல்லாமல் அவனது பிரகாசமும், அவனது சுயமும், படைக்கப்படாததாக இருப்பதாலும், சுயக்கட்டுப்பாடும், பெரும் பிரகாசமும் கொண்டிருப்பதாலும் தாமோதரன் என அழைக்கப்படுகிறான்.
  14. ரிஷிகேசன் - "என்றும் மகிழ்ச்சி" என்பதற்கு "ஹ்ரிஷிகா" என்றும் "ஈசா" என்பதற்கு "ஆறு தெய்வீகப் பண்புகள்" என்றும் பொருள். இன்பம், மகிழ்ச்சி, தெய்வீகம் ஆகியவற்றைக் குறிப்பது.
  15. மகாபாகு - தனது இரு கரங்களால் பூமியையும், வானத்தையும் தாங்கிப் பிடிப்பதால் மஹாபாஹு என அழைக்கப்படுகிறான்.
  16. அதாட்சன் - எப்போதும் கீழே வீழாதவன் என்பதாலும், எக்குறைவின்றியும் இருப்பதனாலும் அதாட்சன் என அழைக்கப்படுகிறான்.
  17. நாராயணன் - மனிதர்கள் அனைவருக்கும் புகலிடமாக இருப்பர்
  18. புருசோத்தமன் - ஆண் மக்களில் (புருசர்களில்) மேன்மையானவன் என்பதால் புருசோத்தமன் என அழைக்கப்படுகிறான்.
  19. சர்வன் - அனைத்துப் பொருட்களின் அறிவையும் கொண்டிருப்பதால் சர்வன் என்று அழைக்கப்படுகிறான்.
  20. சத்யன் - கிருஷ்ணன் எப்போதும் உண்மையில் இருக்கிறான், உண்மையும் எப்போதும் அவனில் இருப்பதால் சத்யன் என அழைக்கப்படுகிறான்.
  21. ஜிஷ்ணு - தனது ஆற்றலுக்கும், வெற்றிக்காகவும் ஜிஷ்ணு என அறியப்படுகிறான்.
  22. அனந்தன் - அழிவில்லாதவனாக இருப்பதால் அனந்தன் என்று அறியப்படுகிறான்.
  23. கோவிந்தன் - கோவிந்தன் என்ற சொல்லுக்கு பசுக்களின் தலைவன், கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவன், பூமியை தாங்குபவன் என்று பொருளாகும்.[5]
  24. அச்சுதன் - என்றும் நழுவாதவர்
  25. பத்மநாபன் - தொப்புளில் தாமரை மலரைக் கொண்டவன்
  26. கிருஷ்ணன் - ஏற்கனவே இருக்கிறது என்பதைக் குறிக்கும் "கிருஷி" மற்றும் "நித்திய அமைதி" என்பதைக் குறிக்கும் "ண" ஆகிய இரண்டு சொற்களுக்குள் தன்னை மறைமுகமாக ஐக்கியப்படுத்திக் கொள்வதால் அவன் கிருஷ்ணன் என்று அழைக்கப்படுகிறான். ( "க்ருஷ்" என்றால் கீறுதல் என்று பொருள். "கருஷ்" என்றால் பூமி என்று பொருள், "ண" என்றால் சுகம் என்று பொருள். "கிருஷ்ண" என்றால் கலப்பையினால் பூமி கீறப்படுவதால் விளையும் நன்மையைக் குறிப்பதாகும் என்றும் பொருள்).

கீதை


அருச்சுனனுக்கு, கிருஷ்ணர் விராட் விஸ்வரூபத்தை காட்டல்
பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே நடந்த குருட்சேத்திரப் போரில் தனது சேனையை கௌரவர்களிடம் கொடுத்துவிட்டு தான் ஆயுதம் ஏந்தாமல் அர்ஜூனனின் தேரோட்டியாக பணிபுரிந்தார். இந்தப் போர் தொடங்கும் முன் இவர் அர்ஜூனனிடம் மேற்கொண்ட உரையாடலே பகவத் கீதை ஆனது.

முடிவு


ஜரா எனும் வேடுவனின் அம்பால் தாக்கப்பட்ட கிருட்டிணன்
கிருஷ்ணன் துவாரகையில் மனைவியான ருக்மணி முதலியவர்களுடன் வாழ்ந்து யது குலங்களின் தலைவனாக விளங்கினார். கிருஷ்ண அவதார நோக்கம் முடிவடைந்த காரணத்தால், பகவான் ஸ்ரீகிருஷ்ணரை வைகுண்டத்திற்கு எழுந்தருள வேண்டும் என்ற தேவர்களின் வேண்டுதலுக்கு ஏற்ப, கிருஷ்ணர் வைகுண்டம் புறப்படும் போது அவரது பக்தரான உத்தவரின் வேண்டுதலுக்காக அவருக்கு ஆத்ம உபதேசம் செய்தார். இதனை உத்தவ கீதை என்பர். கிருஷ்ணர் ஒரு முறை பிரபாச பட்டினத்தின் காட்டில் அமர்ந்திருந்த போது, ஒரு வேடனின் அம்பு, கிருஷ்ணரின் காலில் தாக்கப்பட்டதால் உடலை பூவுலகில் வைகுந்தம் எழுந்தருளினார். சாம்பனுக்கு முனிவர்களின் சாபத்தின்படி யது குலங்களின் மக்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு தங்களை அழித்துக்கொண்டனர். துவாரகை நகரமும் கடலில் மூழ்கியது.

ஆராய்ச்சிகள்

துவாரகை கடலில் மூழ்கியதை தொல்பொருள் ஆய்வாளர் எஸ்.ஆர்.ராவ் அறிவியல் ரீதியாக ஆராய்ந்து தெரிவித்தார். 1980 இல் துவாரகேஷ் கோயிலின் முன்மண்டபத்தில் அவர் நிகழ்த்திய ஆய்வில் அக்கோயிலுக்கு கீழே இரண்டு அஸ்திவாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் அங்கு ஹரப்பா நாகரீகத்தின் பிந்தைய காலத்தைச் சுட்டும் சிவப்பு நிறப்பானை ஓடுகள் மற்றும் மணிகள் கண்டெடுக்கப்பட்டன.[6].பேட்துவாரகையில் கிடைத்த கூறுகள் எவையும் ஆரிய நாகரிகத்துடன் பொருந்தவில்லையாம். அதாவது ஆரிய சார்பாளராகிய எஸ்.ஆர்.ராவ் மூலமாக கண்டுபிடிக்கப்பட்டவை. ஆனால் அனைத்தும் சிந்து நாகரிகத்துடன் பொருந்தி போயிருந்ததாம்.

சமீபத்திய ஆராய்ச்சி

குஜராத்திலுள்ள துவாரகையில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆழ்கடல் ஆராய்ச்சியில் மூழ்கிய நகரம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.[7] அது மகாபாரதத்திலும் பாகவதத்திலும் கூறப்பட்டுள்ள துவாரகை நகரை ஒத்துள்ளது, மேலும் அங்கே கண்டெடுக்கப்பட்ட சங்குகள், நாணயங்கள் போன்றவை மகாபாரதத்தில் கூறப்பட்டுள்ள பொருட்களை ஒத்துள்ளன. இதனால் உண்மையிலேயே கிருஷ்ணன் என்ற மன்னன் வாழ்ந்திருக்கக் கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். துவாரகை கி.மு 1500 ல் முழுவதும் கடலால் கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. கி.மு1200 ல் இருந்தே ஆரியர்களின் காலம் வந்தாலும், கி.மு 1100 க்கு பிறகே ஆரியர்கள் ஒரு குழுவாக வாழ ஆரம்பிக்கின்றனர் என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். ஆரியர்களால் பயன்படுத்தப்பட்ட வண்ணம் தீட்டப்பட்ட சாம்பல் நிற மட்கலப் பண்பாடு கி.மு 1100க்கு முற்பட்டதல்ல என்று பி.பி.லால், ஆர்.எஸ்.கௌர், பி.கே.தாபர் போன்றோரால் கண்டுபிடிக்கப்பட்டன. இதற்கு முன்பே கிருஷ்ணன் இறந்திருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. கருமை நிறத்தவனான கிருட்டிணன் பாகவத புராணத்தில் தசா யாதவன் என்றே அழைக்கப்படுகிறான் ஆக தமிழனாக இருந்திருக்கலாம் என ரிக் வேதம் மூலமூம் ,கபிலர் பாடல் மூலமும் தெரிய வருகிறது.[8]

கிருஷ்ணரின் கோயில்கள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1.  கூட்டத்தினரை காப்பவன் கிருஷ்ணன்
  2.  தீபம் மே 02 2016 இதழ் பக்கம் 65
  3.  கூர்ம புராணம் - கிருஷ்ணனின் தவம்
  4.  கிருஷ்ணனின் பெயர்களும் பொருளும்! - உத்யோக பர்வம் பகுதி 70
  5.  வைணவத் தலங்களில் கோவிந்தா கோவிந்தா என்று அழைப்பது ஏன்?
  6.  இராமகிருஷ்ண விஜயம்; நவம்பர் 2007; பக்கம் 27
  7.  A.S. Gaur, Sundaresh and Sila Tripati (Number 21, 2005). "ANCIENT DWARKA: STUDY BASED ON RECENT UNDERWATER ARCHAEOLOGICAL INVESTIGATIONS" 77. பார்த்த நாள் செப்டம்பர் 06, 2012.
  8.  "History has it. Dwarka inundated by tsunami!". Times of India (Jan 4, 2005). பார்த்த நாள் செப்டம்பர் 06, 2012.
  9.  http://directory.krishna.com/temples

வெளியிணைப்புக்கள்




துரியோதனன்

Jump to navigationJump to search

வீமன் – துரியோதனன் கதாயுதப் போர்
துரியோதனன் மகாபாரதம் கதையின் முக்கியமான பாத்திரமாவான். இவன் கௌரவர்களில் மூத்த சகோதரனாவான். இவனுக்கு கடைசிவரை கர்ணன் உற்ற தோழனாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இவன் அரசனான திருதராஷ்டிரனதும்காந்தாரியினதும் மூத்த மகன். பானுமதி இவரது மனைவியாவர்.

பிறப்பு

வேத வியாசரின் அருளால் துரியோதனன் உள்ளிட்ட கௌரவர்கள் பிறந்தனர்.[1][2]
முதலில் துரியோதனனுக்கு சுயோதனன் என்ற பெயர்தான் வைக்கப்பட்டது. "பெரும்போர் வீரன்" என்பது அந்தப் பெயரின் பொருள். அந்தப் பெயரைப் பிறகு அவனே துரியோதனன் என்று மாற்றிக் கொண்டான். அதன் பொருள் "வெற்றிகொள்ளப்பட முடியாதவன்" அல்லது "போரில் கடுமையானவன்" ஆகும். அவன் பாம்பை தனது கொடிமரத்தின் கொடியாகப் பயன்படுத்தினான்.

வளர்ச்சி

துரியோதனனது உடல் மின்னலாலானது என்று சொல்லப்படுகிறது. தனது சகோதரர்களால், குறிப்பாக துச்சாதனனால் பெரிதும் மதிக்கப்பட்டான். அவன் தனது குருக்கள் கிருபர், மற்றும் துரோணரிடம் போர்ப்பயிற்சி பெற்றான். கதாயுத்தத்தில் நிபுணத்துவம் பெற பலராமரிடம் சீடனாக இருந்து நற்பெயர் பெற்று, அவனுக்குப் பிரியமான சீடனாக இருந்தான். கதாயுதத்துடன் கூடிய துரியோதனன் பீமனுக்கு நிகராக இருந்தான். கர்ணன், துரியோதனனின் உற்ற நண்பன்.

குடும்பம்

துரியோதனன் கலிங்க நாட்டின் இளவரசியான பானுமதியை மணந்து கொண்டான். அவனுக்கு லட்சுமணகுமாரன் என்ற மகனும், லட்சுமணா என்ற மகளும் இருந்தனர். அவர்கள் இருவரும் இரட்டையராவர். கிருட்டிணன் மகன் சாம்பன், இலட்சுமணாவை திருமணம் செய்து கொள்கிறான்.

பாத்திரம்

மகாபாரத இதிகாசத்தில் துரியோதனன் குருசேத்திரப் போரில் 18 அக்ரோணி படைகள் கொல்லப்பட்டது. குருச்சேத்திரப் போரின் 18வது நாள் இறுதிப் போரில், துரியோதனன், கதாயுதப் போர் புரிந்து வீமனால் கொல்லப்படுகிறார்.

மேற்கோள்கள்

  1.  http://www.sacred-texts.com/hin/m01/m01116.htm
  2.  http://mahabharatham.arasan.info/2013/06/115.html துரியோதனாதிகளின் பிறப்பு ஆதிபர்வம் பகுதி 115]

இவற்றையும் பார்க்க



பகுப்பு:மகாபாரதக் கதை மாந்தர்கள்

Jump to navigationJump to search

துணைப் பகுப்புகள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.

"மகாபாரதக் கதை மாந்தர்கள்" பகுப்பிலுள்ள கட்டுரைகள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 165 பக்கங்களில் பின்வரும் 165 பக்கங்களும் உள்ளன.


சகுனி

சகுனி மகாபாரதக் கதையில் வரும் கௌரவர்களின் தாயான காந்தாரியின் தம்பி ஆவார். இவர் தனது மருமகனான துரியோதனனிடம் மிகுந்த அன்பு கொண்டிருந்தார். இவர் பாண்டவர்களுடன் சூதாடி அவர்களுடைய நாட்டை தனது மருமகனுக்கு வென்று கொடுத்தார். சகுனியின் தந்தை சுபலன். சகுனியின் மகன் உல்லூகன்.
குருச்சேத்திரப் போர்க் களத்தில் சகாதேவனால் சகுனி கொல்லப்பட்டான்.
சகுனியின் சகோதரர்கள் வ்ருஷன், அசலன்.[1]

காந்தாரி - ஓர் விதவை

காந்தார நாட்டு மன்னன் சுபலன் இவரின் கடைசி மகன்தான் சகுனி. காந்தாரி திருமணம் குறித்து எழுந்த சர்ச்சை குறித்து விசாரித்து வர பீஷ்மர், ஒற்றர்களை காந்தார நாட்டுக்கு அனுப்பினார். காந்தாரியின் முதல் கணவருக்கு ஆயுள் இல்லை என்றும்,அதனால் காந்தாரியை ஒரு ஆட்டுக்கடாவுக்கு [2] மணம் செய்வித்தும்,பிறகு அந்த ஆட்டை பலியிட்டதாகவும் ஒற்றர்கள் தெரிவித்தார்கள், நுணுக்கமாய் அன்றைய சாத்திரப்படி பார்த்தால் காந்தாரி ஒரு விதவை.

சிறையில்

ஆடு மட்டும் பலி கொடுக்கப்படாமல் இருந்திருந்தால் கௌரவர்களின் தந்தை ஆட்டுகடாவாகியிருக்கும் என்று சோதிடர்கள் கூறியது பீஷ்மர்க்கு அதிக கோபத்தைத்தூண்டியது."என்னை சுவலன் ஏமாற்றிவிட்டான்,ஒரு விதவையையா? என் வீட்டுக்கு மருமகளாக கொண்டு வந்தேன்.உலகுக்கு தெரிந்தால் நகைப்புக்கு இடமாகுமே,சுவலன் குடும்பத்தை அழித்து அந்த ரகசியத்தை வெளிவராமல் செய்துவிடுகிறேன்" என்று சுவலனையும அவன் மகன்களையும் பிடித்து சிறையில் அடைத்தார்.ஒருகுடும்பத்தையே கொல்வது அதர்மம் என்பதை அறிந்த பீஷ்மர் தினமும் ஒரு கைபிடி அரிசி மட்டும் உண்ணக்கொடுத்தார்."ஒருகுடும்பத்தையே கொல்வது அதர்மம் என்பதை அறிந்த பீஷ்மர் அந்த நியதியை மீறாமல் சிறிது உணவே தருகிறார்.இன்னும் கொஞ்சம் உணவை கேட்பதும் நமக்கு அதர்மம் எனவே பட்டினி கிடந்துதான் மடியவேண்டும். உணவு தரப்படும்போது மகளின் வீட்டிலிருந்து ஓடுவதும்" அதர்மம் என்று சுவலன் அறிந்திருந்தார். நாட்கள் செல்லச் செல்ல,நிலைமை மோசமாகியது,சகோதரர்களுக்குள் உணவுக்காக சண்டை வந்தது,சுவலன் ஒரு யோசனை சொன்னான் "நம்மில் யாராவது புத்திசாலியானவன் ஒருவன் மட்டும் உணவை உண்டு பிழைத்து இந்த அநியாயத்தைச் செய்த பீஷ்மரை பழிவாங்கட்டும்" இந்த யோசனைக்கு அனைவரும் உடன்பட்டனர்.[3]

சகுனி தோற்றம்

வயதில் இளையவனான சகுனிதான் உணவை சாப்பிட தேர்ந்தெடுக்கப்பட்டான். கடும்பத்தில் சகுனியின் முன் பட்டினி கிடந்து ஒவ்வொருவராக மடிந்தனர். இறக்கும் முன் சுவலன் சகுனியின் கால்களில் ஒரு காலின் கணுக்காலை அடித்து உடைத்தான், "இனி நீ நடக்கும் போதெல்லாம் நொண்டுவாய், ஒவ்வோரு முறை நொண்டும் போதும் கௌரவர் செய்த அநீதியை நினைவில் கொள், அவர்களை மன்னிக்காதே" என்றார். சகுனிக்கு தாயத்தின் மீது ஒரு சபலம் உண்டு என்று சுவலனுக்கு தெரியும், சாகும் தறுவாயில் தன் மகனிடம் "நான் இறந்த பிறகு என் கை விரல் எலும்புகளை எடுத்து தாயக்கட்டையை உண்டாக்கு, அதில் என் ஆத்திரம் முழுவதும் நிறைந்து இருக்கும் நீ எப்படி தாயக்கட்டையை போட்டாலும் நீ விரும்பிய படியே எண்ணிக்கை விழும் நீயே எப்போதும் வெற்றி பெறுவாய்" என்றார். சிறிது காலத்தில் சுவலனும், அவனது பிள்ளைகளும் இறந்து போயினர். சகுனி மட்டும் தப்பிப் பிழைத்து கௌரவர்களுடன் பீஷ்மரின் கவனிப்பில், பாதுகாப்பில் வாழ்ந்தான். கௌரவர்களின் நண்பனாகக் காட்டிக்கொண்டான், ஆனால் பீஷ்மர் தன் குடும்பத்தை அழித்தது போல பீஷ்மரின் குடும்ப வீழ்ச்சிக்காக திட்டமிட்டுக்கொண்டே இருந்தான்.[3]

சகுனியின் திட்டம்

பாண்டவர்களின் இந்திரப்பிரஸ்தத்திலிருந்து அவமானப் பட்டு திரும்பிய துரியோதனன் மனமுடைந்து போயிருந்தான், பொறாமை எனும் தீ அவனுக்குள் பொங்கி வழிந்தது. அவர்களின் நாடு என்னுடையதைவிட செல்வமிக்கது, அவர்களின் செல்வாக்கோ மிகப் பெரியது என்ற தாழ்வான மன அழுத்தத்தில் இருந்தான். துரியோதனனின் மன ஓட்டத்தை அறிந்த சகுனி தனது திட்டத்தை அவனிடம் தெரிவித்தான். அறத்தில் தருமர் உயர்ந்தவராக இருக்கலாம் ஆனால் அவரிடம் கூட ஒரு பலவீனமுள்ளது, அவருக்கு சூதாட்டம் மிகவும் விருப்பம் அவரை சூதாட்டத்தற்கு அழையுங்கள், மோசமான ஆட்டம் ஆடுபவராக இருந்தாலும் ஒரு சத்திரியன் சூதாட முடியாது என்று சொல்லமுடியாது. "உனக்குப் பதிலாக நான் ஆடுகிறேன். நான் தாய ஆட்டத்தில் எவ்வளவு கெட்டிக்காரன் என்பது உனக்குத் தெரியும், நான் நினைக்கிறபடி தாயக்கட்டைகளை விழவைக்க முடியும், ஒவ்வொரு வெற்றியுடனும் பாண்டவர்கள் வைத்திருக்கும் எல்லாவற்றையும் உனக்கு பிடுங்கித் தருகிறேன், நீ இந்திரப்பிரஸ்தத்தின் மன்னனாக முடிசூட்டிக்கொள், பாண்டவர்கள் பிச்சைக்காரர்களாகி நிற்பார்கள்". இதற்கு துரியோதனன் இரட்டிப்பு சந்தோசமடைந்தான், ஆனால் தன் மாமன் குரு வம்சத்தையே அழிக்கப் போகிறான் என்பதை உணராத துரியோதனன்.[3]

சூதாட்டம்

ஹஸ்தினாபுரத்திலிருந்து சூதாட்டப்போட்டிக்கு அழைப்பு வந்தது,அதை ஏற்காவிட்டால் நன்றாக இருக்காது என்றார் தருமர். சூதாட்ட அழைப்பு வந்தபோது கிருஷ்ணன் துவாரகையில் சிசுபாலனின் சினேகிதர்களான சால்வன் மற்றும் தந்தவக்கிரனுடன் போர்புரிந்து கொண்டுருந்தார். சூதாட்ட நாளன்று கிருஷ்ணனோ,திரௌபதியோ தங்கள் அருகில் இருக்க வேண்டும் என்று காத்திராமல் சூதாட சென்றார்கள் பாண்டவர்கள்கௌரவர் சார்பில் சகுனியும், பாண்டவர் சார்பில் யுதிஷ்டிரனும் சூதாடினார்கள். துவக்கத்தில் பணயத்தொகை குறைவாக இருந்தது. சகுனி ஒவ்வொருமுறையும் தாயக் கட்டையை உருட்டிவிட்டு பார் நான் வென்றுவிட்டேன் என்பார். இழந்ததை எல்லாம் மீட்க வேண்டும் என்ற யுதிஷ்டிரனின் ஆசையை கிளரிவிட்டு, ஒவ்வொரு தடவையும் "நான்தான் வென்றேன், நான்தான் வென்றேன்", என்று யுதிஷ்டிரனின் விளையாட்டு வேகத்தைக் கூட்டி ஆட்டம் சூடுபிடித்து வரும் வேளையில் "போதும் நிறுத்துங்கள்" பின் வாங்குவதில் அவமானமில்லை, மதுராவை மீட்கும்போது 17 முறை கிருஷ்ணனும் பின் வாங்கியுள்ளார் என்றனர் பாண்டவர், ஆனால் தருமர் ஏற்க மறுத்துவிட்டார். பீஷ்மர்விதுரன்துரோணர்கிருபர் போன்றவர்கள் அமைதியாகப் பார்த்துக்கொண்டுருந்தனர். "இந்த பைத்தியக்கார ஆட்டத்தை நிறுத்துங்கள்" என்றார் விதுரன்திருதராஷ்டிரன் கூடாது, தருமர் ஒரு மன்னன் என்பதால் அவரே முடிவு எடுக்க தகுதியுள்ளவர் என்றார்.[3]

இழப்பு

தருமர் சூதாட்டத்தில் தனது ரதங்கள், சேனைகள், யானைகள், குதிரைகள், பணிப்பெண்கள், பணியாட்கள், நாடு என அனைத்தையும் இழந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பதினொராவது ஆட்டத்தில் தன் சகோதரர்கள் ஒவ்வொருவராக பணயம் வைக்க தொடங்கினார் முதலில் நகுலன், பின் சகாதேவன், தொடர்ந்து பீமன், வில்வித்தையில் தேர்ந்த அருச்சுனன் என எல்லோரையும் இழந்தார். இறுதியில் தருமர் தன்னையே வைத்து இழந்தார். ஆனால் ஆட்டத்தை மட்டும் நிறுத்தவில்லை. "திரெளபதியை பணயமாக வைக்கப்போகிறேன்" என்றார், மண்டபத்தில் இருந்த அத்தனை பேரும் அதிர்ந்தார்கள் துரியோதனன் புன்னகைத்து பணயத்தை ஏற்றுக்கொண்டார். பதினேழாவது முறையாக சகுனி தாயக்கட்டையை உருட்டினார். "பார் நான்தான் வென்றேன்" என்றார், அனைத்தையும் இழந்து நின்றார் தருமர்துரியோதனன் தம்பி துச்சாதனனை அழைத்து திரௌதியை சூதாட்ட மண்டபத்திற்கு வழுக்கட்டாயமாக இழுத்து வரச்செய்து துகிலுரியச் செய்தான். தொடர்ந்து பாண்டவர்களையும் அவ்வாறே செய்ய துரியோதனன் கட்டளையிட்டான் யாரும் எதுவும் பேசவில்லை, மூத்தவர்கள் பீஷ்மர் உட்பட அனைவரும் அமைதி காத்தனர்.[3]
இவர் பாண்டவர்களில் ஒருவரான சகாதேவனால் குருச்சேத்திரப் போரில் கொல்லப்பட்டார். சகுனியின் மகன் உல்லூகன் அபிமன்யுவால் கொல்லப்பட்டான்.

சான்றாவணம்

  1.  ஸ்ரீமஹாபாரத ஸாரம்; ஸ்ரீராமகிருஷ்ண மடம்; பக்கம்;779
  2.  ஜைன மகா பாரதம்.
  3. ↑ Jump up to:3.0 3.1 3.2 3.3 3.4 Jaya-An Illustrated Retelling of the MAHABHARATA-DEVDUTT PATTANAIK

வெளி இணைப்பு


தௌமியர்

Jump to navigationJump to search
தௌமியர்பாண்டவர்களின் புரோகிதர் ஆவார். 12 ஆண்டுகள் காடுறை வாழ்வின் போது பாண்டவர்களுடன் தங்கினார். சூரிய பகவானிடமிருந்து அட்சய பாத்திரம் பெற தருமனுக்கு மந்திரங்களை உபதேசித்தவர்.
விராட பருவத்தில் ஒரு ஆண்டு தலைமறைவு வாழ்க்கையை விராடனின் அரண்மனையில் கழிக்கும் போது எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என பாண்டவர்களுக்கு அறிவுரை வழங்கி, பின் துருபதன் நாடான பாஞ்சாலத்தில் சென்று தங்கினார்.
உத்தியோகப் பருவத்தில், சூதாட்ட விதிப்படி 12 ஆண்டு வன வாழ்வும், ஒராண்டு தலைமறைவு வாழ்வும் முடித்த பாண்டவர்களுகளுக்கு உரிய நாடு கோரி, அத்தினாபுரம் சென்று திருதராஷ்டிரனை சந்திக்க தூது சென்றவர்.[1]

மேற்கோள்கள்



சிகண்டி

Jump to navigationJump to search

சிகண்டியுடன் போர் செய்ய மறுக்கும் பீஷ்மர்
சிகண்டி இந்து தொன்மவியலில் மகாபாரதத்தில்வரும் ஒரு கதை மாந்தர். முதலில் பாஞ்சால மன்னன் திருபதனின் மகளாகப் பிறந்து சிகண்டினி எனப் பெயர் கொண்டவர்.குருச்சேத்திரப் போரில் பாண்டவர்கள் தரப்பில் தனது தந்தை துருபதன் மற்றும் தமையன் திருஷ்டத்யும்னனுடன் போரிட்டவன்.

முன்வரலாறு

முற்பிறவியில் அம்பா எனும் பெண்ணாக இருந்தபோது இவள் காசி அரசனின் மூத்த மகளாவாள். அம்பிகாஅம்பாலிகா என்போர் இவளது தங்கைகள் ஆவர். இவர்களுக்குச் சுயம்வரம் நடந்தபோது, அங்கிருந்த மன்னர்களையும், இளவரசர்களையும் தோற்கடித்து, இம் மூன்று பெண்களையும், பீஷ்மர் அவர்களது விருப்பத்துக்கு மாறாகக் கூட்டிச் சென்றார். அவர், இப்பெண்களை அத்தினாபுரத்து மன்னனான விசித்திரவீரியனுக்கு மணமுடித்துக் கொடுப்பதற்காக சத்யவதியிடம் ஒப்படைத்தார்.
அம்பா சால்வ நாட்டு மன்னனிடம் தனது மனதைப் பறிகொடுத்திருந்ததால் விசித்திரவீரியன் அவளை மணந்துகொள்ளாமல் அவளது தங்கைகள் இருவரையும் மட்டும் மணந்து கொண்டான். அம்பா தான் விரும்பியவனை நாடிச் சென்றாள். அவளைப் பீஷ்மர் கூட்டிச் சென்றதனால் அவன் அவளை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டான். பீஷ்மரிடம் திரும்பி வந்த அம்பா, தன்னை மணந்து கொள்ளுமாறு அவரை வற்புறுத்தினாள். பிரம்மச்சரிய விரதம் பூண்டிருந்த பீஷ்மர் அதனை மறுத்துவிட்டார். இதனால் மிகவும் அவமதிக்கப்பட்டதாக கருதி அவரைப் பழி வாங்க விரும்புகிறாள். பீஷ்மர் தன்னால் இறக்க வேண்டும் என கடும் தவம் இருக்கிறாள்.அவளே சிகண்டினி ஆக மறுபிறவி எடுக்கிறாள்.
அவள் பிறக்கையில் அவளை ஒரு மகன் போல வளர்க்க வேண்டும் என மன்னருக்கு அசரீரி கேட்கிறது. அதன்படியே போர்முறைகளில் பயிற்றுவிக்கப்பட்டு ஒரு இளவரசனைப்போல் வளர்கிறாள். ஒரு பெண்ணை திருமணமும் செய்துகொள்கிறாள். ஆனால் உண்மையை அறிந்த மனைவி அவளை அவமதிக்கிறாள். இதனால் மனமுடைந்த சிகண்டி பாஞ்சால நாட்டை விட்டு விலகி காட்டில் தற்கொலை செயதுகொள்ள முயல்கிறாள். அச்சமயம் ஒரு யட்சன் அவளைக் காப்பாற்றி அவளுடன் பாலின மாற்றம் செய்து கொள்கிறான்.[1]
சிகண்டி என்ற பெயருடன் ஓர் ஆணாகப் பாஞ்சாலம் திரும்புகிறான். தனது மனைவியுடன் இனிது வாழ்ந்து பிள்ளைகளையும் பெறுகிறான்.அவனது மறைவிற்குப் பின்னர் அவனது ஆண்மை யக்சனுக்குத் திரும்புகிறது.

குருச்சேத்திரப் போர்

குருச்சேத்திரப் போரின்போது, பீஷ்மர் அம்பாவின் மறுபிறவியே சிகண்டி என்பதனை அறிந்தவராக இருந்ததால் ஒரு பெண்ணிடம் போர் புரிதல் ஆண்மைக்கு இழுக்கு என்ற நிலையில், சிகண்டியுடன் போரிட மாட்டார் என்பதை அருச்சுனன் அறிந்தான்.அவரை நேரிடையாக வெற்றிகொள்ள முடியாத அருச்சுனன்,சிகண்டியை முன்னிறுத்தி பின்னால் இருந்து அம்பு மழை பெய்தான். இவ்வாறே சிகண்டியின் உதவியால் யாராலும் வெல்ல முடியாத பீஷ்மரை அருச்சுனன் வீழ்த்தினான்.
போரின் பதினெட்டாம் நாள் இரவில் அசுவத்தாமன் சிகண்டியை கொன்றான்.
ஜாவா நாட்டுவழக்கில் ஸ்ரீகண்டி என அறியப்படும் இவள், ஆணாக மாறுவதில்லை, ஆணுக்கு நிகரான பெண்ணாகக் கருதப்படுகிறாள்.

மேற்கோள்கள்

  1.  சிகண்டினியும்! ஸ்தூணாகர்ணனும்

வெளியிணைப்புகள்



Shikhandi


Jump to navigationJump to search
Shikhandi
Mahabharata character
Shikhandi
Kripa fights with Shikhandi (top right)
Information
GenderTransgender
FamilyDrupada (father)
Dhristadyumna (brother)
Draupadi (sister)
Shikhandi (Sanskritशिखण्डीŚikhaṇḍī, lit. lock on the crown of the head) is a character in the Hindu epic, the Mahabharata. He was born a baby girl, named "Shikhandini," to Drupada, the king of Panchala. Shikhandi fought in the Kurukshetra war for the Pandavas along with his father Drupada and brother Dhristadyumna.

Past Life

In the majority of the versions of the Mahabharata,[1] there is the story of Shikhandi being Amba in his previous birth.
Shikhandi had been born in a previous lifetime as a woman named Amba. Amba was the oldest daughter of the King of Kashi. Along with her sisters Ambika and Ambalika, she was taken from their Swayamvara by force by Bhishma, as punishment to the Kingdom of Kashi for not inviting Hastinapur nobility to the event. After defeating several kings, including Salwa, the King of Saubala, Bhishma absconded with the princesses and presented them for marriage to Vichitravirya, the crown prince of Hastinapur.[2]
Vichitravirya married only two sisters, because Amba told Bhishma that she had fallen in love with Salwa, and was not ready to marry anyone else. Hearing this from her, Bhishma sent Amba with grandeur to Saubala. But Salwa rejected her as well, in shame of losing the combat against Bhishma. Amba then returned to Bhishma and demanded that he marry her according to Kshatriya dharma, but Bhishma declined due to his vow of celibacy. Enraged at her humiliation, she tried to persuade other kings to wage a war with Bhishma and compel him to wed her. None agreed for they were afraid of incurring the wrath of the great warrior. Amba got Parashurama, Bhishma's guru, to champion her cause. However, not even Parashurama could defeat Bhishma.[2]
According to the summary by C. Rajagopalachari, she resorted to penance and received a garland of blue lotuses from Lord Kartikeya and it was foretold that anyone wearing the garland would become the cause of Bhishma's death. She went to the Panchal, as they were a mighty empire known for its military prowess. However, no one was willing to champion her cause, fearful of antagonizing Bhishma. Amba, in anger, hung the garland on the gates of King Drupada and left in agony.[3]
Amba did severe penance to Lord Shiva for a boon to cause Bhishma's death. Eventually, her prayers were answered. But, being a woman with no military training, she asked Shiva how she would accomplish her task, and he responded that her future incarnation would be the one to actually bring about Bhishma's demise. Eager to bring this about, Amba killed herself; in some versions of the story to explain the time gap between the abduction at Kashi and the Kurukshetra war, Amba keeps on killing herself until she is incarnated into satisfactory situation.[4] Amba was reborn as Shikhandini, the daughter of King Drupada.
In the Ganguly translation of the Chatahurdi compilation of the Mahabharat, Rishi Vaisampayana tells Janamejaya that Shikhandi was the incarnation of a rakshasa.[2]

Shikhandi's Gender

In most versions of the story, Shikhandi is male but born female. When Shikhandini changes his sex, he becomes Shikhandi, but is a eunuch.[1] According to C. Rajagopalachari's Mahabharata, when Shikhandini was still living as a young woman he discovered the garland of ever-blooming blue lotuses hung on the palace gate. Shikhandini put it around his neck. When Drupada saw his child wearing the garland, he became fearful of becoming Bhishma's enemy, and Shikhandini was banished from the kingdom. He performed austerities in the forest and was transformed into a male named Shikhandi.[5]
In another version of the story, Drupada desires an heir, and wanders the forest to settle his disquieted mind. He comes upon the toddler Shikhandini. When Drupada picks her up, a heavenly voice tells Drupada to raise her as a man. Drupada raised his daughter as a son and had Shikhandini married to a princess of Dasharna. She complained to her father, Hiranyavarna, that her husband was a woman. When the king sent people to check this fact, Shikhandini panicked and escaped into a forest, where she met a Yaksha who exchanged his sex with her. The Yaksha king sees the Yaksha as a girl and curses him that he will remain in the form till Shikhandi dies, keeping the sex-swap in place.[6] In many versions of the story, the change results in Shikhandi being a eunuch; in others, it doesn't.[7]
In some versions of the story, Amba is simply reborn as a male Shikhandi, sometimes whole and sometimes a eunuch. In even other versions, Shikhandi is a male but transgender, due to Shiva's boon that Amba will remember all the details of her past life.[4] In early versions of the Mahabharatha, Shikhandi is still Amba-reborn, but a straight female. Because Panchala doesn't practice gender discrimination, she is trained to become a warrior and fights in the Kurukshetra War (this being the original reason why Amba kills herself again and again, wanting to be born to a culture that will allow her to fight Bhishma). Her identity was hidden by her family. When she attained her youth, was married to daughter of Hiranyavarman, the king of the Dasarnakas. Hiranyavarman daughter when came to know her husband is woman, represented unto her companions everything, who informed her father. King Hiranyavarman, filled with fierce wrath, sent a war messenger unto Drupada. Drupada becomes alarmed because of the situation, and his wife advises him to please the gods with charity to the Brahmins. Sikhandini, who was listening, felt shameful, left home, filled with heavy sorrow, and went into a dense forest. There she met with a kind Yaksha named Sthuna, who, after asking her to share her troubles with him, exchanges his sex with hers, albeit for a limited time. Drupada, upon learning about the occurrence of this event, becomes overjoyed, and sends envoys to Hiranyavarman with the good news. Hiranyavarman, ever suspicious, then sent young ladies to ascertain Sikhandi's gender; the women confirmed Sikhandi's manliness to their king. Hiranyavarman went happily into Drupada's abode, and spent some time there as family. Meanwhile Kuvera comes there, and learning of Sthuna's condition, cursed the Yaksha to remain female. After the Yakshas beg him to set a limit to curse, he obliged, setting the curse duration to last until Sikhandi's death.[8][4]
In the Ganguly translation of the Chatahurdi compilation, Shikhandi has a son whose name was Kshatradeva.[9]

Battle of Mahabharatha


Bhishma refuses to fight Shikhandi
In the battle of KurukshetraBhishma recognised him as Amba reborn, and not wanting to fight a "woman" (or an actual woman, depending on the version), avoided battling Shikhandi. On the tenth day, Shikhandi rides in Arjuna's chariot, and together, they face Bhishma, forcing him to lower his weapons. Knowing that this would happen, Arjuna hid behind Shikhandi and attacked Bhishma with a devastating volley of arrows. Thus, Shikhandi was instrumental in Bhishma's death.

Death of Shikhandini:
Reference 1:
Somewhere it shows that Shikhandi was killed by Shakuni, Dusshasana, & Ashwatthama on 10th day, by trapping created by Shakhuni to save Bhisma, where he was brutally & severely injured by them, but he was alive for some time & finally bled to death after defeating Bhisma, because he was seen never in battlefield after 10th day, but somewhere explained that he was seen only on the 10th day.
Reference 2:
Shikhandi was finally killed by Ashwatthama on the 18th day of battle, killed dazed and confused, Shikhandi is killed in a sword fight with Ashwatthama when Ashwatthama, Kripacharya, and Kritaverma attacked the Pandava camp on the night of the final day of battle.[10] In some versions of the Mahabharat, Ashwatthama kills Shikhandi's lover (male or female) in front of him; in other versions, it is Shikhandini's partner (male/female) who is butchered.[4]

துருபதன்

Jump to navigationJump to search
துருபதன் பாஞ்சால தேசத்துப் பிரஷதனின் மகன். அக்கினி கோத்திர முனிவரின் மாணாக்கன். இவரும் துரோணாச்சாரியாரும் ஒரு சாலை மாணாக்கராயிருக்கும்போது, தனக்கு நாடு கிடைத்தால் பாதி நாட்டைத் துரோணாச்சாரியாருக்குத் தருவதாக வாக்களித்தார். பின்னர் நாடு கிட்டியவுடன், அங்குவந்த துரோணரைக் கண்டுகொள்ளவில்லை. சினமுற்ற துரோணர், "என் மாணாக்கனால் உன்னை சிறுமைப்படுத்துவேன்" என சூளுறைத்தார்.துரோணர் பீஷ்மரை அணுகி கெளரவருக்கும் பாண்டவருக்கும் வில்வித்தை கற்றுத்தர அனுமதி பெற்று அருச்சுனனைச் சிறந்த வில்லாளியாக்கினார். அவனைக் கொண்டே துருபதனைக் கட்டி இழுத்துவரச் செய்தார்.மனம் நொந்த துருபதன், "துரோணரைக் கொல்ல ஒரு மகனும் திட்டத்துய்மன், அருச்சுனனுக்கு மணம் புரிந்து வைக்க ஒரு மகளையும் திரெளபதி வேண்டித் தவமியற்றி அவ்வாறே பெற்றான்.
சிகண்டிசுமித்திரன்பிரியதர்சனன்சித்திரகேதுசுகேதுதுவசசேநன் ஆகியோரும் துருபதனின் மகன்களாவார்கள்.

வெளியிணைப்புக்கள்


105. Kalamuni Becomes The Target of His Own Abhichara Yagna

Kalamuni continues without interruption the Abhichara Yagna to kill the Pandavas. Shakuni and Duryodhana feel uncertain about the outcome, but Kalamuni assures about the infallibility of the homa, reminding that any obstacle in the demon's quest will bring harm only to him, as the demon had warned already that if the Pandavas couldn't be traced, the demon would return to kill the sage himself.
The spy who had been watching the proceedings reports to vidura and he is worried to learn that Kalamuni, the renowned expert in Atharva Veda is conducting the homa. He consults religious manuscripts and tells Kunti to pray to Lord Narayana as an counter-acting antidote to the evil spirit invoked by the homa. Kunti and Vidura's wife Sulabha start their uninterrupted worship.
Sage Narada goes to Yamaloka and tells Yama that the intended life span of the Pandavas is about to change with the homa letting out a demon who has gone in search of the Pandavas to eat them. Yama seeks Narada's help, who then whispers his plans to him.
In the meanwhile, the demon flying overhead notices Draupadi washing the Akshaya Patra. He figures out that if he lures Draupadi away, the Pandavas would rush in to save her and he would be able to locate them.
Accordingly, he assumes the form of a young boy and snatches the Patra and runs. Draupadi runs after him for a long distance, and faints out of sheer exhaustion. The Pandavs search far and wide and locate her. Yudhishtra sends Nakula and Sahadeva to bring water for Draupadi. When they attempt to drink the water to quench their thirst, a disembodied voice tells them not to drink the water, but they disobey the command. They lose their conscience as a result.
Soon it is the turn of Arjuna and Bhima to look for the missing brothers and to bring water for Draupadi, but they too meet a fate similar to their brothers. Finally, it is Yudhishtra's turn. He realizes the gravity of the situation and tells Draupadi to go back to her father's kingdom if he too is unable to return back, but Draupadi doesn't favor this. Yudhishtra asks her to wait for his return.
Yudhishtra is stunned to find his brothers lying like corpses and he too swoons. Not finding the Pandavas retyrn, Draupadi prays to Lord Shiva. The demon flying overhead once again finds Draupadi and assumes the form of a sage and enquires whay she is looking so forlorn. Draupadi tells the sage that her husbands have gone to fetch her water, but haven't returned still. The sage guffaws and says he now knows where the Pandavas are and that he has come to gobble them up. Leaving Draupadi alone, the demon comes to the lake and finds the Pandavas lying senseless on the ground. Thinking them dead, the demon is angry and his anger turns towards Sage Kalmuni.
At the sacrificial site, the fire extinguishes suddenly. Shakuni and Duryodhana realize that the demon has failed in his mission and try to run away. The demon appears and now demands his due.

துச்சாதனன்

Jump to navigationJump to search
இந்திய நாட்டின் புகழ் பெற்ற இதிகாசங்களுள் ஒன்றான மகாபாரதத்தின் கதைமாந்தர்களுள் ஒருவனே துச்சாதனன். இந்த இதிகாசத்தின்படி, கண்பார்வையற்ற மன்னனான திருதராட்டிரனுக்கும், அவனது மனைவியான காந்தாரிக்கும் பிறந்த நூறு பிள்ளைகளுள் ஒருவனே இவன்.

துச்சாதனன் பிறப்பு

காந்தாரி கர்ப்பமுற்றாளாயினும் அது நீண்டகாலம் நீடித்துச் சென்றதேயன்றிப் பிள்ளை பிறக்கவில்லை. வெறுப்புற்ற காந்தாரி தனது வயிற்றில் அடித்துக்கொண்டாள். திருதராட்டிரனின் தம்பியான பாண்டுவின் மனைவி ஏற்கனவே மூன்று பிள்ளைகளைப் பெற்றிருந்ததும் அவளுக்குப் பொறாமையை ஊட்டியிருந்தது. அவள் வயிற்றில் அடித்துக்கொண்டதனால் அவள் வயிற்றிலிருந்து சாம்பல் நிறமான தசைப் பிண்டம் ஒன்று அவள் வயிற்றிலிருந்து வெளிவந்தது. காந்தாரி மிகுந்த துயருற்றாள். அவளுக்கு நூறு புதல்வர்கள் பிறப்பார்கள் என வாழ்த்திய பெரியவரான வியாசரிடம் அவள் முறையிட்டாள். வியாசர் அப் பிண்டத்தை நூறு பாகங்களாகப் பிரித்து, நெய் நிறைந்த பானைகளிலே இட்டு மூடி அவற்றை மண்ணிலே புதைத்து வைத்தார். ஓராண்டின் பின் முதல் பானை திறக்கப்பட்டபோது அதிலிருந்து துரியோதனன் வெளிப்பட்டான். இரண்டாவது பானையில் இருந்து வெளிவந்தவனே துச்சாதனன் ஆவான். துச்சாதனன் துரியோதனன் மீது மிகுந்த பற்றுக் கொண்டிருந்தான். அவனுடன் இணைந்து பாண்டவர்களைக் கொல்வதற்காகப் பல திட்டங்களையும் தீட்டினான்.

துகிலுரிப்பு

பாண்டவர்களில் மூத்தோனாகிய தருமன் துரியோதனன் ஆகியோரின் சதிவலையில் வீழ்ந்து தனது பொருளெல்லாம் சூதிலே தோற்றான். பின்னர் தனது தம்பியரையும், மனைவியான திரௌபதி (பாஞ்சாலி)யையும் கூடப் பணயம் வைத்துச் சூதாடினான் அவர்களையும் இழந்தான். இதனைத் தொடர்ந்து, துரியோதனன் ஆணைப்படி திரௌபதியை அவைக்கு இழுத்துவந்த துச்சாதனன், அவளது சேலையை உரிய முற்பட்டான். கண்ணனுடைய சக்தியால் இழுக்க இழுக்கத் பாஞ்சாலியின் சேலை நீண்டுகொண்டே இருந்தது. இதனால் பாஞ்சாலி காப்பாற்றப்பட்டாலும் சினம் கொண்ட அவள், துச்சாதனனின் இரத்தத்தைக் கூந்தலில் தடவினாலன்றித் தனது கலைந்த கூந்தலை முடிப்பதில்லை எனச் சபதம் எடுத்தாள். பீமனும் அவனது நெஞ்சைப் பிளந்து இரத்தத்தைக் குடிப்பேன் எனச் சூளுரைத்தான்.

துச்சாதனன் இறப்பு

பாரதப் போரின்போது வீமன் துச்சாதனனுடன் போரிட்டு, அவனைக் கொன்றான். அவனது இரத்ததால் தன்னுடைய சபதத்தை நிறைவேற்றியதுடன் பாஞ்சாலியின் சபதமும் நிறைவேற உதவினான்.


தமிழில் முழு மஹாபாரதம்
வெளி இணைப்பு



அசுவத்தாமன்

Jump to navigationJump to search

குருச்சேத்திரப் போரில், அசுவத்தாமன் நாராயண கணையை ஏவுதல்
அசுவத்தாமன்மகாபாரதக் கதைமாந்தர்களுள் ஒருவன். இவன், துரோணாச்சாரியாருடைய மகனாவான். இவன் இந்துக்களின் நம்பிக்கைப்படி, ஏழு சிரஞ்சீவிகளுள் ஒருவன். துரோணாச்சாரியார் இவன்மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தார். குருச்சேத்திரப் போரின், அசுவத்தாமன் இறந்துவிட்டதாகக் தருமர் மூலம் கூறப்பட்ட வதந்தியை நம்பித் துரோணர் கவலையில் இருந்தபோது இளவரசன் திருஷ்டத்யும்னனின் வாளுக்கு இரையாகித் துரோணர் காலமானார்.
குருச்சேத்திரப் போரின் 18-ஆம் நாள் இரவில், கௌரவர் பக்கம் உயிர்பிழைத்திருந்த மூவரில் இவனும் ஒருவன். தனது தந்தையை நயவஞ்சகமாக கொன்ற பாண்டவர் படைகளின் தலைமைப்படைத்தலைவர் திருஷ்டத்யும்னனை தூக்கத்தில் இருக்கும்போது கொன்று பழி தீர்த்தவன். பாண்டவர்களின் ஐந்து குலக்கொழுந்துகளையும் (உபபாண்டவர்கள்), பாண்டவர் தவிர மற்ற பாண்டவ படைவீரர்களை அதே இரவில் கொன்றான்.

வெளி இணைப்புகள்


வீடுமர்

Jump to navigationJump to search

கங்கை பீஷ்மரை சந்தனுவிடம் கையளிக்கும் காட்சி.
பீஷ்மர் மகாபாரதத்தின் தலையாய கதைமாந்தர்களில் ஒருவர் ஆவர். பீஷ்மர் சாந்தனுவிற்கும் கங்கைக்கும் பிறந்தவர். சாந்தனு துஷ்யந்தனுக்கும்பரதனுக்கும் அடுத்த அரசன் ஆவார். பீஷ்மர் அரசியலை தேவர்களின் குருவான பிரகஸ்பதியிடம் இருந்தும், வேதங்களை வசிஷ்ட முனிவரிடமிருந்தும், வில்வித்தையை பரசுராமரிடம் இருந்தும் கற்றுக்கொண்டார். தன் தந்தை, சத்தியவதி பால் கொண்ட விருப்பினை நனவாக்க, அரசாட்சியை துறந்தது மட்டுமன்றி, மணவாழ்க்கையையும் துறந்தார். இதனால் இவர் பெற்றதே இச்சா மரணம் - தான் விரும்பும் நாளில், விரும்பும் நேரத்தில் மட்டும் மரணம் என்ற வரமாகும். மகாபாரதப் போருக்குப் பின்னர் தருமனுக்கு நல்லுபதேசங்களையும், அதனைத் தொடர்ந்து விஷ்ணு சஹஸ்ரநாமம் எனும் பக்தி நூலையும் தந்துள்ளார்.

தேவ விரதன்

எட்டு வசுக்கள் வேத காலக் கடவுளர்கள். இயற்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் பிரதிபலிப்பவர்கள். வசிட்டரின் பசுவைத் திருடிய பாவத்துக்காக, அவர்கள் மனிதப் பிறவி எடுக்க வேண்டுமெனவும் அந்த எட்டுப் பேரின் தலைவனான பிரபாசன், தன் மனைவியின் ஆசையை நிறைவேற்றவே பசுக்களை திருடியதால் அதிககாலம் பூமியில் வாழ்வான் என்று வசிட்டர் சாபமிட்டார். என்வரும் தங்கள் தவறுக்காக மன்னிப்பு வேண்டினர். வசிட்டரும் அவர்களை மன்னித்து எட்டு வசுக்களில் ஏழு பேர் பிறந்த உடன் இறந்துவிடுவார் என்றும் பிரபாசன் மட்டும் அதிக காலம் வாழ்ந்து தர்மத்தினை காப்பான் என்றும் மேலும் அவன் பூமியில் வாழும் வரை அவனை வெல்பவர் எவரும் இருக்கமாட்டார் எனவும் தனது சாபத்தினை மாற்றினார். அந்த பிரபாசனே சந்திர வம்சத்தில் சந்தனு மற்றும் கங்கை தம்பதியருக்கு எட்டாவது மகனான தேவ விரதன் பின்னாளில் கங்கையின் மைந்தனென்று அழைக்கப் பட்ட பீஷ்மர் ஆவார். பீஷ்மரை வெல்ல அகிலத்தில் எவரும் இல்லாத பொழுதும், தன் தந்தைக்கு வழங்கிய வாக்குறுதியின்படி அஸ்தினாபுரத்தினை காக்க கௌரவர் பக்கம் நின்று யுத்தம்புரிந்தார், மேலும் தர்மம் பாண்டவர் பக்கம் இருந்ததால் தன் உயிரையும் விட்டுக்கொடுத்து, தர்மத்தை காத்தார்.

அம்பையின் சபதம்

தம்பி விசித்திரவீரியனுக்காக காசி மன்னனின் மூன்று அரசகுமாரிகளை, சுயம்வரத்தின் போது கவர்ந்து வந்தார். அப்போது அம்பை மட்டும் சால்வன் என்ற அரசகுமாரனை விரும்பியதையடுத்து, அவளை சால்வனிடம் அனுப்பிவைத்தார். சால்வன் அவளை ஏற்க மறுத்துவிட்டான். மீண்டும் அம்பைபீஷ்மரிடம் வந்து தன்னை ஏற்கவேண்டினாள். பீஷ்மரோ தான் செய்துள்ள சபதத்தைக் கூறி ஏற்க மறுத்தார். "நான் எந்தப் பெண்ணுடனும் இருக்க மாட்டேன் என சபதம் மேற்கொண்டு இருக்கிறேன், சால்வனோ, விசித்ரவீர்யனோ உன்னை ஏற்காததால் நீ எங்கு போக விருப்பமோ அங்கே போகலாம்" என்று கூறிவிட்டார். இந்த அவமானத்திற்குப் பழி வாங்க ஒரு வீரனை உலகம் முழுக்க சுற்றித் தேடினாள், எல்லா சத்திரியர்களும் பீஷ்மருக்காக பயந்தார்கள். அவள் இறுதியில் பரசுராமனின் உதவியை நாடினாள், அவர் பீஷ்மரின் குரு. அம்பாவின் நிலையை அறிந்து அதிர்ந்துபோன பரசுராமர் தனது சீடருடன் சண்டையிட்டார், சண்டை பல நாட்கள், மாதங்கள் என நீடித்தது. இறுதியில் பரசுராமர் பீஷ்மரை யாராலும் தோற்கடிக்க முடியாது, அவராக மரணம் அடைவதைத் தவிர அவரை யாராலும் கொல்லவும் முடியாது சண்டையைத் தொடர்ந்தால் இருவரும் நிறைய ஆயுதங்களை விட்டுச்செல்லவேண்டிவரும் அவை உலகத்தையே அழித்துவிடும் என்பதால் சண்டையை நிறுத்திவிட வேண்டும் என்று பரசுராமன் சண்டையை நிறுத்தினார். குழம்பிய அம்பை, பீஷ்மரை கொல்ல தேவர்கள் எனக்கு வழி சொல்லாத வரை நான் ஊண், உறக்கம் கொள்ளப்போவதில்லை என சபதம் செய்து ஒற்றைக்காலில் நின்று சிவனை நோக்கி தவம் இருந்தாள். சிவன் அவள் முன் போன்றி "நீ பீஷ்மரின் மரணத்துக்கு காரணமாவாய் உனது அடுத்தப் பிறவியில்" என வரம் தந்து மறைந்தார். விரைவில் பீஷ்மர் மரணமடைய விரும்பிய அம்பா தீயில் குதித்து தற்கொலை செய்துகொண்டாள். ஊர்வசி, கங்கை, சத்தியவதி போன்ற பெண்கள் தங்களை விரும்பிய ஆண்களிடம் தான் விரும்பியதை பெற்றுக் கொண்டது மாதிரி இல்லாமல் அம்பை வெறும் அலங்காரப் பொருளாக கருதப்பட்டனர். [1]

போர்க்களத்தில் பெண்


சிகண்டியுடன் போர் செய்ய மறுக்கும் பீஷ்மர்
குருசேத்திரப் போரின் பத்தாம் நாள் போர்த் தொடங்கியவுடன்,அருச்சுனன் பீஷ்மரை நோக்கி பல அம்புகளை எய்தான்,எதுவும் அவரை அச்சுறுத்தவில்லை கோபம் கொண்ட கிருட்டிணன் தேரிலிருந்து கீழே குதித்து தனியே கீழே கிடந்த ஒரு சக்கரத்தை எடுத்துக் கொண்டு பீஷ்மரை தாக்க ஓடினார்."குருசேத்திரப் போரில் ஆயுதமே எடுக்க மாட்டேன்" என போருக்கு முன் சபதம் செய்துவிட்டு,இப்போது ஆயுதம் எடுத்துவட்டதை உணர்ந்து கிருட்டிணனை நோக்கி ஓடி "நான் பீஷ்மரைக் கொல்வேன்" என்று உறுதி எடுத்தான்."தனது மரண நேரத்தை தானே முடிவு செய்யும் வரத்தைப் பெற்றவராயிற்றே,அவரை கொல்ல முடியாது னாலும் அவரை செயல் இழக்கச் செய்தால், அவர் உடலை அசைக்க முடியாதபடி படுக்கவைத்துவிட்டாலே போதும்" "ஆனால் அவர் கையில் வில் இருக்கும் வரை அது முடியாது"."அப்படியானால் அவரை வில்லைப் பிடிக்காதபடி செய்" என்றார் கிருட்டிணன். "போர்க்களத்தில் வில்லை கீழே வைக்கமாட்டார்" என்றான் அருச்சுனன்."ஒரு பெண் நின்றால் கூட வில்லை வைக்க மாட்டாரோ?" என்று கிண்டலாக கேட்டார் கிருட்டிணன்."ஆனால் பெண்கள் போர்களத்தில் அனுமதிக்கப்படுவதில்லை"முடிவைத் தேடாமல் பிரச்சனையை மட்டுமே மனதில் கொண்டு பதில் சொன்னான் -அருச்சுனன்."திரௌபதியின் மூத்த சகோதரன் சிகண்டி ஆணா? பெண்ணா? அருச்சுனா சிகண்டி ஓர் ஆண் என்று நீ நம்பினால் தேரில் அவனை ஏற்றிக் கொண்டு போ,சிகண்டி ஒரு பெண் என்று பீஷ்மர் எண்ணினால் பீஷ்மர் வில்லை கீழே வைத்துவிட்டு நீ போர் விதிகளை மீறிவிட்டாய் என்று கூறுவார்,அவரை வெற்றி கொள்ள அதுதான் உனக்கு வாய்ப்பு"."இது அநியாயம்"-அருச்சுனன், அது ஒவ்வொருவர் கருத்தைப் பொறுத்தது-கிருட்டிணன்.[1]

அம்புப்படுக்கையில் வீடுமர்


அம்புகளின் படுக்கையில் வீடுமர்
சிகண்டி அருச்சுனன் தேரில் ஏறிக்கொண்டு பீஷமரை நோக்கி சவால்விட்டான்,சிகண்டியைக் கண்டதும் முற்பிறப்பில் தன்னை கொல்வேன் என்று வஞ்சினமுரைத்த பெண்ணென்றுணர்ந்து, பெண்ணை கொல்லல் அறமாகாது என்று வில்லை தாழ்த்தினார் பீஷ்மர்.இது தான் சமயம் என்றார் கிருட்டிணன்,சிகண்டியின் பின்னால் நின்ற அருச்சுனன் சரமாரியாக அம்புகளை பீஷ்மரை நோக்கி எய்தான்.மாபெரும் வீரரின் உடலை அம்புகள் துளைப்பதைக் கண்டு துரியோதனன் பிரமித்துப்போய் நின்றான், கௌரவர்களின் படைத்தலைவர் தன் தேரிலிருந்து கீழே விழுந்தார்.அவரது உடல் தரையில் விழாதபடி அம்புகள் தாங்கிக்கொண்டு இருந்தன.ஆயினும் தன் தந்தைக்காக கடவுளர்களிடம் பெற்ற இச்சா மரண வரத்தினால், அம்புப் படுக்கையில் இருந்தும் உயிர் நீங்காமல்,இருந்தார்.பீஷ்மர் கடவுளின் ஆயிரம் நாமங்களை (சஹஸ்வர நாமம்) சபிக்கத் தொடங்கினார்,அவர் அவற்றைச் சொல்லச் சொல்ல சூரியன் வடக்கு நோக்கி நகர்வதை பாண்டவர்கள் பார்த்தார்கள்.போர் முடிந்த பௌர்ணமியிலிருந்து எட்டாம் நாள் பீஷ்மர் உயிர் துறந்தார். [1]

வீடுமர் அம்புப்படுக்கையில் இருந்து அரனின் கடமைகள் குறித்துப் பாண்டவர்களுக்கு அறிவுரை கூறும் காட்சி

வெளி இணைப்பு

சான்றாவணம்

  1. ↑ Jump up to:1.0 1.1 1.2 Jaya-An Illustrated Retelling of the MAHABHARATA-DEVDUTT PATTANAIK

இதனையும் காண்க

தலைமுறை அட்டவணை

பிரதிபன்சுனந்தா
கங்கைசந்தனுசத்தியவதிபராசரர்பாக்லீகர்தேவாபி
பீஷ்மர்சித்திராங்கதன்விசித்திரவீரியன்வியாசர்சோமதத்தன்
(அம்பிகா மூலம்)(அம்பாலிகா மூலம்)(தாசி மூலம்)
திருதராட்டிரன்பாண்டுவிதுரன்பூரிசிரவஸ்2 மகன்கள்




காந்தாரி

Jump to navigationJump to search
காந்தாரி மகாபாரதக் கதையில் வரும் ஒரு கதைமாந்தர் ஆவார். இவர் காந்தார நாட்டு (இன்றைய காந்தகார்) மன்னனான சுபாலனின் மகள் ஆவார். காந்தார நாட்டு இளவரசன் சகுனி இவரது சகோதரர் ஆவார். காந்தாரி குருவம்சத்தைச் சேர்ந்த திருதராஷ்டிரனை மணந்து கொண்டார்.
திருதராஷ்டிரன் பிறவிக்குருடர் ஆகையால் பதிபக்தியின் காரணமாக காந்தாரியும் தனது கண்களைக் கட்டிக்கொண்டே வாழ்ந்தார். காந்தாரிக்கும் திருதராஷ்டிரனுக்கும் நூறு மகன்களும் ஒரு மகளும் பிறந்தனர். இவர்களது மகன்களே கௌரவர் எனப்பட்டனர்.
இவரது உயர்ந்த பதிபக்தியின் காரணமாக இவர் பல சக்திகள் பெற்று இருந்தார். தனது மகன்கள் அழியக் காரணமாக இருந்த கிருஷ்ணனை, இவர் கிருஷ்ணனின் குலம் அழிய சபித்தார். இதுவே கிருஷ்ணரின் யாதவ வம்சத்தின் அழிவுக்குக் காரணமாக அமைந்தது.

மேற்கோள்கள்

வெளி இணைப்பு



திருதராட்டிரன்

Jump to navigationJump to search

விதுரனின் வேண்டுதலுக்கு இணங்க சனத்சுஜாதர், திருதராட்டிரனுக்கு பிரம்ம ஞானம் உபதேசித்தல்
திருதராட்டிரன் , மகாபாரதக் கதையில் வரும் அத்தினாபுரத்தின் மன்னனான விசித்திரவீரியனின் முதல் மனைவி அம்பிகாவின் மகன் ஆவார். இவர் ஒரு பிறவிக்குருடர். காந்தாரி இவரது மனைவி ஆவார். திருதராட்டிரனுக்கு காந்தாரி மூலம் நூறு மகன்களும்துச்சலை எனும் ஒரு மகளும், பணிப்பெண் மூலம் யுயுத்சு என்ற மகனும் பிறந்தனர். இவரது மகன்களே கௌரவர்கள், இவர்களில் மூத்தவர் துரியோதனன் ஆவர். திருதராட்டிரன், பாண்டு மற்றும் விதுரனின் மூத்த சகோதரர் ஆகவும், பஞ்சபாண்டவர்களின் பெரியப்பாவாகவும் விளங்கினார். காந்தார தேசத்தின் இளவரசனும் சகுனி, காந்தாரியின் சகோதரன் ஆவார்.
குருச்சேத்திரப் போர் தொடங்குவதற்கு முன் திருதராஷ்டிரனுக்கு நீதிகளை கூறும் போது, சாகாநிலை பற்றி கூறுகிறார் விதுரர்கெளவர்கள் போரில் இறவாநிலையை அடைய வேண்டும் எனும் திருதராஷ்டிரனின் ஆசையை நிறைவேற்ற விதுரர்சனத்குமாரரை வரவழைக்கிறார். சனத்குமாரர், சாகாநிலையை அடையும் வழிகள் குறித்து திருதராஷ்டிரனுக்கு உபதேசிக்கிறார். [1] [2]

தலைமுறை அட்டவணை

பிரதிபன்சுனந்தா
கங்கைசாந்தனுசத்தியவதிபராசரர்பாலிகன்தேவாபி
பீஷ்மர்சித்திராங்கதன்விசித்திரவீரியன்கிருட்டிண த்வைபாயனன்(எ) வியாசர்சோமதத்தன்
(அம்பிகா மூலம்)(அம்பாலிகா மூலம்)(பணிப்பெண் மூலம்)
திருதராட்டிரன்பாண்டுவிதுரன்பூரிசிரவஸ்2 மகன்கள்

மேற்கோள்கள்

  1.  பகுதி 41 முதல் 46பி முடிய சனத்சுஜாதர், திருதராட்டிரனுக்கு இறப்பற்ற வாழ்வு அடைவது குறித்து உபதேசிக்கும் காணொலி
  2.  http://mahabharatham.arasan.info/2015/02/Mahabharatha-Udyogaparva-Section41.html

வெளி இணைப்பு



குந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigationJump to search
குந்தி மகாபாரதத்தில் கர்ணன் மற்றும் பஞ்ச பாண்டவர்களின் தாயார் அவார். இவர் பாண்டுவின் மனைவியாவார்.
யது குலத்தவரான சூரசேனர் வசுதேவருடைய தந்தை. வசுதேவர் கிருஷ்ணரின் தந்தை. குந்தி கிருஷ்ணனின் தந்தையாகிய வாசுதேவனின் சகோதரியுமாவார். சூரசேனனின் மகளாகிய பிருதை (பிரீதா) என்ற இயற்பெயருடைய இவர் குந்திபோஜ மன்னனால் தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டதால் குந்தி என்ற பெயர் பெற்றார்.

குந்திபோஜர் மகளாக வளர்தல்

சூரசேனரின் நண்பர் குந்திபோஜர். குந்திபோஜருக்குப் பெண்குழந்தை இல்லை. குந்திபோஜருடன் தாம் கொண்ட நட்பால் தனக்குப் பிறக்கும் பெண்ணை வளர்த்துக் கொள்ளத் தருவதாக வாக்களித்தார் சூரசேனர். பொய் போகாத வாக்குடைய சூரசேனர், தமக்கு முதலில் பிறந்த பெண் குழந்தையான பிருதையை (குந்தி) நண்பர் வளர்க்கக் கொடுத்தார்.[1]

மேற்கோள்கள்

  1.  மகாபாரத சாரம்; ராமகிருஷ்ண மடம்; பக்கம் 122

வெளி இணைப்பு



அரக்கு மாளிகை

Jump to navigationJump to search
அரக்கு மாளிகை (Palace of Lacquer or Lakshagraha) : அத்தினாபுர அரசகுமாரர்களில் முத்தவர் தருமரை பீஷ்மர் மற்றும் விதுரரின் ஆலோசனைப்படி திருதராட்டிரன் இளவரசர் ஆக்கினர். இதனால் மனம் நொந்த துரியோதனன் பாண்டவர்களை அஸ்தினாபுரத்திலிருந்து வெளியேற்ற தீர்மானித்தான்.
துரியோதனனின் சதிச்செயல்படி, திருதராட்டிரன்வாரணாவதம் எனும் கிராமத்தில் சென்று சிறிது காலம் தங்கி வாழ குந்தியுடன் பாண்டவர்களை அனுப்பி வைத்தான். பாண்டவர்கள் அத்தினாபுரத்தை விட்டு வாரணாவதம் செல்லும் போது, காடு தீப்பற்றி எரியும் போது எலிகள் மட்டும் வளையில் புகுந்து தப்பித்துக் கொள்ளும் என்ற விதுரரின் மறைமுக எச்சரிக்கையை தருமர் உணர்ந்து கொண்டார்.
துரியோதனன், புரோசனனைக் கொண்டு, வாரணாவதத்தில் ரகசியமாக எளிதில் தீப்பற்றும் அரக்கு மாளிகை ஒன்றை அமைத்தான்.
வாராணவதம் சென்ற பாண்டவர்கள், புரோசனனின் வேண்டுதலுக்கு இணங்க அரக்கு மாளிகையில் தங்கினர். விதுரனின் கையாள் ஒருவன் அரக்கு மாளிகையிலிருந்து வெளியேற சுரங்கம் ஒன்றை அமைத்தான். சில காலம் கழித்து புரோசனன் அரக்கு மாளிக்கைக்கு தீ வைக்கும் முன்னர், வீமன் அரக்கு மாளிக்கைக்கு தீ வைத்துவிட்டு, குந்தி மற்றும் தன் சகோதரர்களுடன் அரக்கு மாளிகையை விட்டு வெளியேறினான். தீயில் புரோசனன் அரக்கு மாளிகையில் மாண்டான்.[1]

மேற்கோள்கள்

வெளி இணைப்பு



Khandava Forest

From Wikipedia, the free encyclopedia
Jump to navigationJump to search

Krishna and Arjuna burn the Khandava forest and battle with the gods.
Khandava Forest (Khandava VanaSanskrit: खाण्डव वन, khāndəvə vənə) or Khandavprastha (Sanskritखाण्डवप्रस्‍थ) was an ancient forest mentioned in the epic Mahabharata.[1] It lay to the west of Yamuna river, in modern-day Delhi territory. Pandavas cleared this forest to construct their capital city called Indraprastha. This forest was earlier inhabited by Naga tribes led by a king named Takshaka.[2] Arjuna and Krishna cleared this forest by setting up a fire. The inhabitants of this forest were displaced. This was the root cause of the enmity of the Naga Takshaka towards the Kuru kings who ruled from Indraprastha and Hastinapura.[2]
The Mahabharata states that Indra was the protecting deity (deva) of Khandava forest, which is why the region was known as Indraprastha.[3] When the forest was being burned, Indra attacked Arjuna with his bolt (vajra), injuring him.[4] But Arjuna defeated all gods, Gandharvas and demons in that fierce battle and burnt the entire forest.[5] Chhapadeshwar Mahadev Mandir in Kharkhoda, Haryana was the part of Khandav Van.[6][7][8] Khanda village was named after the Khandava Forest.[9]
Indraprastha ("Plain of Indra"[1] or "City of Indra") is mentioned in ancient Indian literature as a city of the Kuru Kingdom. It was the capital of the kingdom led by the Pandavas in the Mahabharata epic. Under the Pali form of its name, Indapatta, it is also mentioned in Buddhist texts as the capital of the Kuru mahajanapada. It is often thought to have been located in the region of present-day New Delhi, particularly the Old Fort (Purana Qila), although this has not been conclusively confirmed. The city is sometimes also known as Khandavaprastha, the name of a forest region on the banks of Yamuna river which (according to the Mahabharata) had been cleared to build the city.

Barbareek's story in Mahabharata :
Barbareek was the son of Ghatotkach and Maurvi. Both his parents were excellent warriors and great sorcerers and thus Barbareek was a blessed and special child. He was mentored by Lord Krishna himself. When Barbareek was in his teens, he found a Yogi who had acquired great powers and he became his disciple. The great Yogi taught him all that he knew and Barbareek soon became a mighty warrior and defeating him was almost impossible. Finally he acquired 3 arrows from Agni that possessed power to wipe out an entire race. Thus armed Barbareek was invincible and could end any war in matter of few minutes. But Alas! Here comes the twist. As gurudakshina, his Guru asked for an oath from him that said, Barbareek would always support the losing and weak side in a war!
 When Mahabharata war was about to start, Barbareek wanted to join the Pandavas. He had two strong reasons to do so. One, Bheem was his paternal grandfather and two, Pandavas were relatively weaker than Kauravas. However Pandavas were in a fix. Having Barbareek on their side was a risky affair. He would switch sides as soon as Kaurava army would begin to lose, as per his oath. And so they sought Krishna's help. Krishna said to Barbareek, "you should have thought carefully before giving your word. This is such a silly oath. Because if you keep switching sides like this, you will destroy entire Kaurava-Pandava army and be left alone amidst the corpses". Barbareek did realise his mistake but it was too late and he couldn't go back on his words and neither was he ready to be a spectator in the great war. And so, Krishna (being his mentor) asked for his "head" as gurudakshina. Barbareek readily agreed and obliged. However he had this intense desire to see the great war. So Krishna kept his head alive and placed it on an altar atop a hill from where Kurukshetra was perceptible. He was renamed as Mahatma Barbareek for his great sacrifice.
 Post war, Barbareek was asked who was the greatest warrior in the war and he said, "I didn't see anyone except Krishna. Those who were killed were also Krishna and those who were killing were also Krishna. I only saw Krishna's sudarshana." The wisdom of Barbareek's words contained the essence of Gita.
Krishna then fused his head and body together and blessed him that in Kaliyuga he would be known and worshipped after Krishna's name and anyone who will worship him with piety will be blessed by the Lord himself. Thus Barbareek was renamed Khatu Shyam and there's a temple devoted to him in Rajasthan where devotees still seek the blessings of this warrior who never fought any war.


ஜயத்திரதன்

Jump to navigationJump to search
ஜெயத்திரதன் இந்து தொன்மவியலில் மகாபாரதத்தில் வரும் கதை மாந்தர்களில் ஒருவன். சிந்து நாட்டு அரசன் மற்றும் கௌரவர்களின் தங்கை துச்சலையின் கணவன். இவனது தந்தை விருத்தக்ஷத்ரன். ஜயத்ரதன் பிறந்தபோது ஓர் அசரீரி ’இவன் போரில் புகழ்படைத்து வீர சுவர்க்கம் அடைவான்’ எனக்கூறியது கேட்டு ஜயத்ரதன் தந்தை, ’என் மகன் தலையை தரையில் விழும்படி செய்பவன் தலை சுக்கு நூறாக வேண்டும்’ என்றான். [1]

முன் வரலாறு

காம்யக வனத்தில் தங்கியிருந்த பாண்டவர்கள் ஒருநாள் வேட்டைக்கு சென்றிருந்தபோது,திரௌபதி தனித்து இருந்தாள்.அப்போது அங்கு வந்த சிந்து நாட்டு மன்னன் ஜயத்ரதன் ஆசிரமத்தின் வெளியே நின்றுக்கொண்டிருந்த திரௌபதியை கண்டதும் காதல் கொண்டான்.அதை அவளிடம் வெளிப்படுத்தினான்.காமவயப்பட்ட அவன் அவளை தூக்கிச் செல்ல முயன்றான்.அவன் செயலை, உடன் இருந்தோர் தடுத்தும் கேட்கவில்லை.
வேட்டைக்குச் சென்ற ஐவரும் ஜயத்ரதன் திரௌபதியை அபகரித்து சென்றுவிட்டதை அறிந்தனர்.தேர் சென்ற சுவடை கொண்டு ஜயத்ரதனுடன் போரிட்டனர்.அவனை கயிற்றில் கட்டித் தேரில் ஏற்றி தருமரிடம் அழைத்து வந்தான் பீமன். தருமரின் ஆணையால் அவனை மொட்டையடித்து அனுப்புகின்றனர். நாணி தலைகுனிந்து திரும்பிய ஜயத்ரதன்,கங்கைக் கரைக்குச் சென்று பரமசிவனை நோக்கி கடும் தவமிருந்து அவரிடம் பாண்டவர்களை கொல்லத்தக்க வலிமையை வேண்டுகிறான்.கண்ணனின் துணை இருக்கும் வரை,பாண்டவர்களை யாராலும் கொல்ல முடியாது. ஆனாலும் ஜயத்ரதன் விடவில்லை. பாண்டவர்களுக்கு மிகப்பெரும் மனவலியை போரில் உண்டாக்க வரம் கேட்கிறான். அவன் வாக்கினையே அவனுக்கெதிராக ஈசன் திருப்புகிறார். அதன்படி,"ஒரே ஒரு நாளிற்கு, அர்ஜுனன்-கண்ணன் இணையை தவிர்த்து, போர் களத்தில் ஜயத்ரதன்  யாரைவேண்டுமானாலும் எளிமையாய் தோற்கடிக்கும் ஆற்றலை பெறுவான். அந்த நாளையும் ஜயத்ரதனே தேர்வு செய்துகொள்ளலாம்" என வரம் கொடுத்துவிட்டு மறைந்து விடுகிறார்.

குருச்சேத்திரப் போர்

அபிமன்யு வதம் - 13ஆம் நாள்

பதின்மூன்றாம் நாள் குருச்சேத்திரப் போரில் துரியோதனன் திட்டப்படி துரோணர் சக்கர வியூகம் அமைத்துப் போரை நடத்துகிறார். அன்றைய போரின் போது யுதிஷ்டிரரை சிறைப்பிடிக்க எண்ணி சக்கரவியூகமாக வளைத்து விடுகிறார்கள். இந்த அமைப்பை உடைத்து செல்லத் தெரிந்தவர்கள் பாண்டவர் தரப்பில் மூவர் மட்டுமே, அவர்கள் அருச்சுனன்கிருஷ்ணர் மற்றும் அபிமன்யு. ஆனால் அபிமன்யுவுக்கு உள்ளே போகத் தெரியுமே தவிர வெளியே வரத் தெரியாது. இருந்தாலும் அருச்சுனரும் கிருஷ்ணரும் அச்சமயம் யுத்த களத்தில் வேறிடத்தில் இருந்ததால் அபிமன்யு மட்டும் போகத் துணிகிறான். பின்னாலேயே பீமனும் மற்ற வீரர்களும் அவனுடனேயே உள்ளே நுழைவதாக ஏற்பாடு. ஆனால், யுதிஷ்டிரர் மீட்கப்பட்டு வெளி வந்த மறுகணம் அவர் உள்பட அபிமன்யுவைப் பின் தொடர்ந்த நான்கு பாண்டவர்களையும் ஜெயத்ரதன் முன்னேற விடாமல் தடுத்து விடுகிறான். (அர்ச்சுனன் தவிர மற்ற பாண்டவர்கள் நால்வரையும் எதிர்கொண்டு தடுக்கும் பலத்தினை அவன் வரமாய்ப் பெற்ற கிளைக்கதையும் மகாபாரதத்தில் உண்டு). அபிமன்யுவைத் தனியாக வளைத்து விடுகிறார்கள். துரோணர் ஆச்சர்யத்தில் கண்பிதுங்கிப் போகும் அளவுக்கு அத்தனை பேரையும் தனியாக சமாளிக்கிறான் சிறுவன். கடும் போராட்டத்துக்குப் பிறகு, அவனை வீழ்த்திக் கொன்று விடுகிறார்கள். அதை அறிந்த அருச்சுனன் அடுத்த நாள் சூரியன் மறைவதற்குள் ஜயத்ரதனை கொல்வதாகவும் அவ்வாறு இயலாவிடில் தீப்புகுவதாகவும் சபதம் செய்கிறான்.

ஜயத்திரதன் வதம்

இதனை பயன்படுத்தி அருச்சுனனை தீப்புக வைக்க துரியோதனன் ஜயத்திரதனை அடுத்த நாள் போரில் ஈடுபடாமல் ஒளிந்திருக்கச் செய்கிறான். கதிரவன் மறையும் நேரம் நெருங்கியும் ஜயத்திரதனைக் காணாது பாண்டவர்கள் கலக்கமடைகின்றனர்.அப்போது கிருஷ்ணர் தனது சுதர்சன சக்கரத்தால் சூரியனைத் தற்காலிகமாக மறைக்க ஜயத்திரதன் வெற்றிக்களிப்புடன் வெளிப்படுகிறான். கிருஷ்ணர் சக்கரத்தை இப்போது விலக்கி கொள்ள பகல்பொழுது மீள்கிறது. அருச்சுனன் அப்போது விட்ட அம்பு ஒன்று ஜெயத்திரதன் தலையை கவ்வி தன்னுடன் மேலே எடுத்து செல்கிறது. அவனது தந்தை பெற்ற வரமொன்றின்படி ஜெயத்திரதன் தலையை யார் தரையில் தள்ளினாலும் தள்ளுபவர் தலை சுக்கு நூறாக வெடித்து விடும். ஆகவே கண்ணன் அறிவுரையில் அருச்சுனன் அடுத்த மூன்று அம்புகள் செலுத்தி அத்தலையை ஊருக்கு வெளியே ஒரு பர்ணசாலைக்கு செலுத்துகிறான். அங்கு ஜெயத்திரதனின் தந்தை மடியில் அத்தலை போய் விழுகிறது. என்னவோ தன் மடியில் விழுந்து விட்டதே என்பதற்காக அதைச் சட்டென்று உதறிவிட தலை தரையில் விழ ஜயத்திரதனின் தந்தையின் தலை உடைகிறது.[2]

அர்ச்சுனனுக்கு கிருஷ்ணனின் "பொருள் பொதிந்த" கண்டனம்

"பாரதப் போரில் நீ ஒரு தர்மத்தை நிலைநாட்டுவதற்காக உபயோகப்படுத்தப் பட்டிருக்கும் கருவி மட்டுமே. உன்னை யார் சபதம் செய்யச் சொன்னது? அதுவும் கால நிர்ணயம் செய்து? சூரியனின் பயணத்துடன் உன் அபிலாஷைகளை ஏன் முடிச்சிடுகிறாய்? யாருக்காகவும் நிற்காது காலம், அதனைக் கருத்தில் கொள். நேர நிர்ணயம் செய்து உன் சபதங்களை எடுக்காதே. அதனால் விளையப் போவது பதற்றம் மட்டுமே. உன்னுடைய இயல்பான திறமை கூட அதனால் பங்கப்பட்டதை இன்று அனுபவ பூர்வமாகக் கண்டாய் அல்லவா? நான் மட்டும் சூரியனை மறைத்திருக்கா விட்டால் உன் கதி என்னவாகி இருக்கும் என்று யோசித்துப் பார்"

இரண்டு முறை சூரிய அஸ்தமனம் சாத்தியமா?

டாக்டர் வார்டெக் என்பவர் (மகாபாரத யுத்தம் கிமு.5561 அக்டோபர் 16 ஆம் நாள் தொடங்கி நவம்பர் 2 ஆம் நாள் முடிந்தது என்று ஏராளமான ஆதாரங்களுடன் எழுதியுள்ள கட்டுரை நூலில்) இரட்டை சூரியோஸ்தமனம் அறிவியல் பூர்வமாக சாத்தியமே என்று விளக்கி உள்ளார். அவருடைய விளக்கம்:
சூரியஒளி நேர்கோட்டில் பயணம் செய்தாலும், அது வளிமண்டலத்தைக் கடக்கும் போது ஒளிச் சிதறலுக்கு ஆட்படுகிறது. அதுவே தொடுவானத்துக்குக் கீழே சூரியன் இருப்பது போன்ற காட்சியைத் தருகிறது. கானல் நீர் ஏற்படும் விதம் போலத்தான் இதுவும். பூமிப் பரப்பினை ஒட்டி இருக்கும் காற்றின் வெப்பநிலைக்கும் அதனை அடுத்துள்ள காற்றடுக்கின் வெப்ப நிலைக்கும் இருக்கும் வித்தியாசமே கானல் நீர் ஏற்படக் காரணம். அதாவது பூமிப் பரப்பின் சூட்டினால் அதனை ஒட்டி இருக்கும் காற்றும் சூடடைந்து அடர்த்தி குறைந்து இருக்கிறது. அதற்கு மேலே இருக்கும் காற்றடுக்கு அடர்த்தி அதிகமாக இருக்கிறது. ஒளி அடர்த்தி அதிகமான ஊடகத்திலிருந்து அடர்த்தி குறைந்த ஊடகத்தினுள் செல்லும் போது விலகல் ஏற்படும். ஒரு பகுதி ஒளி விலகி பூமிப்பரப்புக்கு இணையாகவும், இன்னொரு பகுதி பூமியில் பட்டுத் தெரிப்பதாலும் தூரத்து மலையின் தலைகீழ் பிம்பம் பூமிப்பரப்புக்குக் கீழே மாயபிம்பமாகத் தெரியும். அதேபோல், சூடான கீழ்ப்பரப்புக் காற்றின் மீது பட்டுத் தெறிக்கும் சூரிய ஒளி ஒரு திரவக் கண்ணாடி போல் பூமிப்பரப்பில் விரிய அது ஒரு மாய தொடுவானத்தினைக் காட்சிப்படுத்துகிறது. நிஜமான தொடுவானம் வானத்தின் பிரதிபலிப்பில் மறைந்து விடுகிறது.
மகாபாரத யுத்தத்தின் போதும் இதே தான் நிகழ்ந்திருக்கும். நெருப்பு சார்ந்த ஆயுதங்களின் பிரயோகங்களால் யுத்த பூமி சூடாகி இருக்க, அதன் மேலான காற்று அடர்த்தி குறைவாகி எழும்பி இருக்க, மாலைச் சூரியனின் வட்டவடிவம் மாய நீள்வட்ட வடிவமாகி மாயத் தொடுவானத்தின் கீழ் மறைந்தது போன்ற தோர்றம் உருவாகி இருக்கும். அந்தக் கணத்தில் ஜயத்ரதன் வெளிப்பட்டிருக்கக் கூடும். அடுத்த கணங்களில் வெப்ப வேறுபாடு குறைய நிஜத் தொடுவானத்தில் சூரியன் தோற்றமளித்துப் பின் மறைந்திருக்கும். இந்த இடைவெளியில் ஜயத்ரதனின் வதம் நிகழ்ந்திருக்கும்.

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

  1.  ஸ்ரீமஹாபாரத ஸாரம்; ஸ்ரீராமகிருஷ்ண மடம்; பக்கம் 784
  2.  ஜெயத்ரதனைக் கொன்ற அர்ஜுனன்!

அபிமன்யு (மகாபாரதம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigationJump to search

அபிமன்யு
அரசிஉத்தரை
முழுப்பெயர்
அபிமன்யு
மரபுகுருவம்சம்
அரச குலம்சந்திர குலம்
தந்தைஅர்ஜுனன்
தாய்சுபத்திரை
இறப்புகுருச்சேத்திரம்

அபிமன்யு போரிடுமுன் விராடன் மகள் உத்தரையிடமிருந்து விடைபெறும் காட்சி
அபிமன்யு மகாபாரதக் கதையில் வரும் ஒரு முக்கியமான கதைமாந்தர் ஆவார். இவர் அர்ஜுனனுக்கும் கிருஷ்ணரின் சகோதரியான சுபத்திரைக்கும் பிறந்த மகன் ஆவார்.அபிமன்யு - உத்தரை தம்பதியர்க்கு பிறந்தவர் பரிட்சித்து.
அபிமன்யு தனது இளமைப்பருவத்தைத் தனது தாயின் ஊரான துவாரகையில் கழித்தான். இவர் தனது மாமன்களான கிருஷ்ணன் மற்றும் பலராமனிடம் போர்ப்பயிற்சி பெற்றார். பின்னர் இவனுக்கும் விராட மன்னனின் புதல்வி உத்தரைக்கும் திருமணம் நடந்தது. இவர் இந்திரனுடைய பேரன் ஆகையால் நிறைய வரங்கள் பெற்றிருந்தான். வில்வித்தையில் மிகச்சிறந்த வீரனாகவும் திகழ்ந்தான்.
குருச்சேத்திரப் போரின் பதின்மூன்றாவது நாளில் கௌரவர்கள் சக்கரவியூகம் அமைத்துப் போரிட்டனர். இதனுள் சென்று கடும்போர் புரிந்த அபிமன்யு, சக்கரவியுகத்திலிருந்து வெளிவர தெரியாதபடியால் எதிரிகளின் வாளுக்குப் பலியானான். துரோணர்கிருபர்கர்ணன்அஸ்வத்தாமன், பிரஹத்பாலன், கிருதவர்மன் ஆகிய அறுவரால் தாக்கபட்டு நிலைகுலையும் அபிமன்யு, பின் துச்சாதனனின் மகன் துர்முகனோடு கதாயுத்தம் புரிந்து அவனைக் கொன்று தானும் மரணத்தைத் தழுவுகிறார். [1][2]
மேலும் சக்கரவியூகத்தில் அருச்சுனன் தவிர்த்த மற்ற பாண்டவர்களை உட்புக இயலாதபடி, ஜெயத்திரதன் ஒருவனாக தடுத்துவிட்டான். இதனால் அபிமன்யுவின் மரணத்திற்கு முக்கிய காரணமாக விளங்கிய ஜெயத்திரதனை மறு நாள் போரில் கொல்வதாக அருச்சுனன் கொல்வதாக சபதம் ஏற்கிறான்.

மேற்கோள்கள்

  1.  Abhimanyu (Mahabharata)
  2.  http://www.mahabharataonline.com/rajaji/mahabharata_summary_81.php


ஜராசந்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigationJump to search

மற்போரில் ஜராசந்தனை வீழ்த்தும் பீமன்
ஜராசந்தன் இந்தியாவின் இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தின் கதைமாந்தர்களில் ஒருவனாவான். மகாபாரதத்தின்படி இவன் மகத நாட்டின் அரசனாக இருந்தவன். இந்த இதிகாசத்தின் இன்னொரு பாத்திரமும், திருமாலின் அவதாரமாகக் கருதப்படுபவனுமான கண்ணனுக்கு எதிரியாக இருந்த இவன் இறுதியில் பீமனால் கொல்லப்பட்டான்.

பிறப்பு

ஜராசந்தனின் பிறப்புப் பற்றி மகாபாரதம் பின்வருமாறு கூறுகிறது:
பிருகத்ரதன் என்பான் மகத நாட்டை ஆண்டு வந்தான். இவன் உடன்பிறந்தவர்களான இரு இளவரசிகளை மணந்து இல்லறம் நடத்திவந்த இவன் புகழ் பெற்ற அரசன். எல்லா வசதிகளும் பெற்று வழ்ந்து வந்தாலும் அவனுக்குப் பிள்ளையில்லாதது பெருங்குறையாக இருந்தது. காலப்போக்கில் வாழ்வில் வெறுப்புற்ற அவன் காட்டுக்குச் சென்று அங்கே சந்திரகௌசிகர் என்னும் முனிவரை அணுகி அவருக்குப் பணிவிடைகள் செய்து வாழ்ந்திருந்தான். பிருகரதனுக்கு இருந்த குறையை அறிந்த முனிவர் அவன்மீது இரக்கப்பட்டு, மாம்பழம் ஒன்றை அவனிடம் கொடுத்து அதனை அவனுடைய மனைவியிடம் உண்ணக் கொடுக்குமாறு கூறினார். அதை எடுத்துக்கொண்டு நாட்டுக்குச் சென்ற பிருகத்ரதன், அதைத் தனது இரண்டு மனைவியருக்கும் பகிர்ந்து கொடுத்தான். இதனால் இருவரும் கர்ப்பமுற்றனர். ஆனாலும் பாதிப் பழத்தையே ஒவ்வொருவரும் உண்டதால் அவர்கள் இருவருக்கும் பாதிப் பிள்ளைகள் இறந்து பிறந்தன. அதைக் கண்டு திகிலுற்ற பிருகத்ரதன் அவ்விரு பாதிப் பிள்ளைகளையும் நகருக்கு வெளியே எறிந்துவிடுமாறு ஆணையிட்டான்.
மனிதர்களைத் தின்னும் இராட்சசியான ஜரா என்பவள், இவற்றைக் கண்டெடுத்து எடுத்துச் செல்லவதற்காக இரண்டையும் சேர்த்தபோது அவ்விரண்டும் இணைந்து ஒரு ஆண்பிள்ளையானது. அதன் அழுகுரல் கேட்டு இரக்கப்பட்ட அந்த இராட்சசி அக் குழந்தையை எடுத்துச்சென்று அரசனிடம் கொடுத்து, அது தனக்குக் கிடைத்த கதையையும் சொன்னாள். அது தன்னுடைய குழந்தையே என்று அறிந்த அரசன் அதற்கு, ஜரா என்ற அந்த ராட்சசியின் பெயரை அடியொற்றி ஜராசந்தன் என்று பெயரிட்டான். அரசவைக்கு வந்த சந்திரகௌசிகர், ஜராசந்தனைப் பார்த்துவிட்டு, அவன் ஒரு புகழ் பெற்ற சிவபக்தனாக விளங்குவான் என்று கூறிச் சென்றார்.

வாழ்க்கை

ஜராசந்தன், மகத நாட்டின் ஆற்றல் மிக்க மன்னனாகிப் பெரும் புகழ் ஈட்டினான். மகத நாட்டைப் பல திசைகளிலும் விரிவுபடுத்தினான். பல மன்னர்களை அடக்கி மகதப் பேரரசனாக முடிசூட்டிக் கொண்டான். தனது மகளொருத்தியின் கணவனான கம்சனைக் கொன்ற கிருஷ்ணன் (கண்ணன்) மீது வெறுப்பைக்கொண்ட அவன், கண்ணன் ஆண்ட மதுராவைப் பதினெட்டுமுறை முற்றுகையிட்டுத் தாக்கியதாக மகாபாரதம் கூறுகிறது. ஒவ்வொரு முறையும் ஜராசந்தன் தோல்வியையே தழுவிய போதும், மிகவும் களைப்புற்றுப் பலவீனம் அடைந்த கண்ணன் மதுராவை விட்டுத் துவாரகைக்குச் சென்றான்.

இறப்பு

ஜராசந்தன் பல அரசர்களைப் பிடித்துச் சிறையிட்டிருந்தான்பீமன்அருச்சுனன் ஆகியோரோடு மதுராவுக்கு மீண்டுவந்த கண்ணன், ஜராசந்தனைக் கொன்று அரசர்களை விடுவிக்கும் நோக்குடன் அவன் அரண்மனைக்குச் சென்றான். பிராமணர்கள்போல மாறுவேடமிட்டுச் சென்ற அம்மூவரும், தங்களுள் ஒருவனுடன் போருக்கு வருமாறு அவனை அழைத்தனர். அதற்கு ஒப்புக்கொண்ட ஜராசந்தன் போர்புரிவதற்காக பீமனைத் தேர்ந்தெடுத்தான். 27 நாட்கள் நடைபெற்ற இச் சண்டையில், கண்னனின் ஆலோசனைப்படி, ஜராசந்தனை பீமன் நெடுக்குவாட்டில் இரு பாதிகளாகக் கிழித்து எறிந்து கொன்றான்.

மேற்கோள்கள்


வெளியிணைப்புக்கள்


























No comments:

Post a Comment