Thursday, October 31, 2019

காந்தாரியின் சாபம்

ராதே கிருஷ்ணா 31-10-2019


காந்தாரியின் சாபம்

யாதவ குலம் பல கிளைகள் கொண்டது...

இதில் காந்தாரியின் சாபம் கிருஷ்ணன் பிறந்த கிளைக்கு மட்டுமே சார்ந்தது. விதரப்ப்பம், சேதி இப்படி பல நாடுகளில் யாதவர்கள் இருந்தார்கள். அழிந்தது துவாரகை யாதவர்கள் மட்டுமே.

கிருஷ்ணனைச் சார்ந்த யாதவர்கள் அழிந்தார்கள் என்பதுதான் உண்மை.
கிருஷ்ணனின் வம்சாவளியைக் அறியுங்கள்.


யதுவுக்கு சகஸ்ரஜித்து, குரோஷ்டு, நளன், நகுஷன் என்ற நான்கு பிள்ளைகள்
குரோஷ்டு மகன் துவஜினீவான்
துவஜினீவான் மகன் சுவாதி
சுவாதி மகன் ருசங்கு
ருசங்கு மகன் சித்திராதன்
சித்திராதன் மகன் சசபிந்து
சசபிந்துவுக்கு லக்ஷம் மனைவியரும் பத்து லக்ஷம் பிள்ளைகளும் உண்டு. அவர்களில் பிருதுசிரவன், பிருதுகர்மா, பிருதுகீர்த்தி, பிருதுயசன், பிருதுஜயன், பிருதுதானன் என்ற அறுவர் முக்கியமானவர்கள்.

அவர்களில் பிருது கீர்த்தி என்பவனின் மகன் பிருதுதமன்
பிருதுதமன் மகன் உசனன்
உசனன் மகன் சிதபு
சிதபுவின் மகன் ருக்குமகவசன்
ருக்குமகவசன் மகன் பராவிருத்து
பராவிருத்துக்கு ருக்குமேஷு, பிருது ருக்குமன், ஜ்யாமகன், பலிதன், ஹரிதன் என பிள்ளைகள் ஐவர்

ஜ்யாமகன் மகன் விதரப்ப்பன் (விதரப்ப்ப தேசத்தை உண்டாக்கியவன்)
விதரப்ப்பராஜனுக்கு கிருதன், கைசிகன், ரோமபாதன் (சேதி வம்சம் இவன் வழியில் வந்தது)


கிருதன் மகன் குந்தி
குந்தி மகன் திருஷ்டி
திருஷ்டி மகன் விதிருதி
விதிருதி மகன் தசரகன்
தசரகன் மகன் வியோமன்
வியோமன் மகன் நீமுதன்
நீமுதன் மகன் விகிருதி
விகிருதி மகன் பீமரதன்
பீமரதன் மகன் நவரதன்
நவரதன் மகன் தசரதன்
தசரதன் மகன் சகுனி
சகுனி மகன் காம்பி
காம்பி மகன் தேவராதன்
தேவராதன் மகன் தேவஷத்திரன்
தேவஷத்திரன் மகன் மது (இவனாலேயே கிருஷ்ணனுக்கு மாதவன் என்றும் பெயருண்டு)
மதுவின் மகன்  குருவமிசன்
குருவமிசன் மகன் அனு
அனு வின் மகன் புருஹோத்திரன்
புருஹோத்திரன் மகன் அம்சன்
அம்சன் மகன் சத்துவதன்
சத்துவதன் மகன் அந்தகன்
அந்தகன் மகன் பசமானன்
பசமானன் மகன் விடூரதன்
விடூரதன் மகன் சூரன்
சூரன் மகன் சமி
சமியின் மக பிரதிஷத்திரன்
பிரதிக்ஷத்திரன் மகன் போஜன்
போஜன் மகன் இருதிகன்
இருதிகன் மகன் தேவகர்ப்பன்
தேவகர்ப்பன் மகன் சூரன்
சூரன் மகன் வசுதேவன்
வசுதேவன் மகன்கள் கிருஷ்ணன் - பலராமன்


"I shall curse thee, O wielder of the discus and the mace! Since thou wert indifferent to the Kurus and the Pandavas whilst they slew each other, therefore, O Govinda, thou shalt be the slayer of thy own kinsmen! In the thirty-sixth year from this, O slayer of Madhu, thou shalt, after causing the slaughter of thy kinsmen and friends and sons, perish by disgusting means in the wilderness. The ladies of thy race, deprived of sons, kinsmen, and friends, shall weep and cry even as these ladies of the Bharata race!’"

இதுதான் காந்தாரியின் சாபம். இதை மொழிபெயர்த்தால்

நான் உனக்கு சாபமளிப்பேன், ஓ சக்ரத்தையும் கதையையும் கொண்டவனே! நீ கௌரவர்களும் பாண்டவர்களும் போரிட்டு ஒருவரை ஒருவர் அழித்துக் கொண்டு இருந்த போது சலனமின்றி இருந்தாய். ஓ கோவிந்தா, அதனால் நீயே உன் பங்காளிகள் அனைவரின் அழிவிற்கும் காரணமாவாய்.

மதுவை அழித்தவனே!, இன்றிலிருந்து முப்பத்தாறாவது வருடம், உன்னுடைய குலத்தைச் சார்ந்தவர்கள், உன் நண்பர்கள் மற்றும் குழந்தைகளின் அழிவிற்குக் காரணமாகி, பிறகு வனாந்திரந்தில் தனிமையில் கேவலமான முறையில் மரணமடைவாய். உன் குலப் பெண்கள், தங்கள் குழந்தைகள், பங்காளிகள் மற்றும் நண்பர்களை இழந்து இந்த பரத குலப் பெண்களைப் போலவே அழுது அரற்றுவார்கள்.


ஆக கிருஷ்ணனின் யாதவ வம்சாவழிக்கு மட்டுமே சாபம். மற்றபடி யாதவ இனத்திற்கான சாபமல்ல அது. 








No comments:

Post a Comment