Monday, March 30, 2020

நாலாயிர திவ்ய பிரபந்தம்

ராதே கிருஷ்ணா 30-03-2020
























திவ்ய தேசங்கள்

பன்னிரு  ஆழ்வார்கள் பாடிய நாலாயிர திவ்ய பிரபந்த த்தில் இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலமே திவ்ய தேசம் என்று அழைக்கப்படுகிறது. இப்படிப் புகழ்பெற்ற திருத்தலங்கள் 108, அஃதே 108 திவ்ய தேசங்கள்
மேலும்...
வைணவ ஆச்சார்யர்கள்

ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ப்ரதாய த்தின், அடிப்படையே குருபரம்பரை தான். ஆசார்ய ஸம்பந்தம் இல்லாமல், எந்த செயலுக்கும், நடை முறைக்கும், அர்த்தம் இல்லாமல் போய்விடும் என்பார்கள் பெரியோர்கள். ஸ்ரீமந் நாராயணனை முதல்ஆசார்யராகக் கொண்டு
மேலும்...
திருவரங்கம்

காவிரி ஆற்றினால் சூழப்பட்டதும், மிகப் பெரிய அரங்கநாதசுவாமி கோயிலின் ஏழு சுற்று மதில்களுக்குள் அமைந்துள்ளதுமான திருவரங்கம் அல்லது ஸ்ரீரங்கம் என்னும் ஊர், 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு தீவு நகரம் ஆகும்.
மேலும்...

நாலாயிர திவ்ய பிரபந்தம்

ஸ்ரீ:
ஆழ்வார்  எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
ஸ்ரீமதே ராமானுஜாய நம:

ஸ்ரீமத் வரவரமுந
யே நம:
நாலாயிர திவ்யப் பிரபந்தம் ஞான, பக்திப் பாதைகளில் பல படிகள் இருக்கும் பொழுது, புத்தகங்கள் படித்து அவற்றைப்புரிந்துகொள்வது என்பது ஓர் படி. நமது பெரியோர் சொன்னதுபடி, ஒரு பக்தன் ஓர் ஆச்சர்யனை அல்லது குருவை நாடி, பணிந்து, தனக்கு உபதேசிக்குமாறு கேட்கவேண்டியது. இது பல சூழலில் நாம் ஆசார்யனைப்  பணியாமல் ஞானம் பெரும் தருணத்தில் நாம் படிக்கும் புத்தகம் அல்லது அறிவு சரியான இடத்தினின்று வருவதாக இருக்கவேண்டும். போகிற போக்கில் கிடைக்கும் அறிவு சரியானதாக இருக்க வாய்ப்பில்லை.எப்படி ஓர் பொறியைப்பற்றி அல்லது கருவியைப்பற்றி எழுதவேண்டுமென்றால் அதற்கான படிப்பை கற்றவர்களே தகுதியை உடையவராகின்றனர். மற்றையோர் எழுத முற்படும்பொழுது ஆழமாக  செல்லமுடியாது அல்லது தவறாக பொருள் சொல்லிவிடுவதைத் தவிர்க்கமுடியாது. ஆதலால் இந்த இணைய தளம் பிரத்தியேகமாக ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாய விஷயங்களை காட்டுவதாக அமைக்கப்பட்டுள்ளது.இதன் முதற்படியாக நாலாயிர திவ்விய பிரபந்தம் எடுத்துக்கொள்ளபட்டது. ஏனென்றால் சம்பிரதாயத்திற்கு புதிதான ஒரு புது பக்தன் முதலில் நாடுவது திவ்விய பிரபந்தத்தையே. "திராவிட வேதம்" என்று பெயர் பெற்ற இந்த அமிர்தத்தை(முக்திக்கு வித்தை)  ஆதி மூலமான ஸ்ரீமன் நாராயணன்  அரையர்கள் மூலமாக கேட்டருள்கிறார். அப்படிப்பட்ட பிரபந்தத்தை நாம் கற்றுத் தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம்.


இவ்வலை தளத்தில் நாம் பெறுவது,

  • நாலாயிர திவ்விய பிரபந்தம், மூலம், உரை மற்றும் தெளிவுரை
  • தமிழ் உரை: ஸ்ரீ காஞ்சி. பிரதிவாதி பயங்கரம். மஹா மஹிமோபாத்யாய, மகாவித்வான், அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள்
  • ஆங்கில உரை: ஸ்ரீ ராம பாரதி சுவாமி
  • கூடிய விரைவில் பாசுரம் ஓலி வடிவிலும் கேட்கலாம்

இனி மற்றைய சேவைகள்: (உதவிகள் வரவேற்கப்படுகின்றன)

  • தெலுங்கு மொழியிலும் உரை மற்றும் வியாக்கியானம் கொணர ஏற்பாடு.

  • கன்னட உரையாக்கம்

  • ஆங்கில உரையாக்கம்

  • தமிழில் எளிய உரை (ஸ்ரீ. காஞ்சி PBA சுவாமி உரையை அப்படியே பின்பற்றி)

- விக்ருதி, மாசி- புனர்பூசம், குலசேகராழ்வார் திருநக்ஷத்திரம்
nala_logo.png
உள்ளடக்கம்

பெரியாழ்வார்

ஆண்டாள்

குலசேகராழ்வார்

திருமழிசை ஆழ்வார்

தொண்டரடிப் பொடியாழ்வார்

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பொய்கையாழ்வார்

பூதத்தாழ்வார்

பேயாழ்வார்

திருமழிசை ஆழ்வார் ||

நம்மாழ்வார்

திருமங்கையாழ்வார் ||

திருவரங்கத்தமுதனார்

நம்மாழ்வார் ||






















































108 - திவ்ய தேசங்கள்

பன்னிரு  ஆழ்வார்கள் பாடிய நாலாயிர திவ்ய பிரபந்த த்தில் இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலமே திவ்ய தேசம் என்று அழைக்கப்படுகிறது. இப்படிப் புகழ்பெற்ற திருத்தலங்கள் 108, அஃதே 108 திவ்ய தேசங்கள்
எனப்படுகிறது. இனி 108 திவ்ய தேசங்களையும் அந்த திவ்ய தேசங்களின் தாயார் யார், பெருமாள் யார், அந்த தலம் எந்த மண்டலத்தில் இருக்கிறது, எந்த நகருக்கருகில் இருக்கிறது போன்ற விவரங்களை இந்த பட்டியலில் காணலாம்.


திவ்விய தேசம்
தாயார்
மூலவர்
உத்சவர்
மண்டலம்
எந்த நகருக்கருகில்
1
ஸ்ரீரங்கம்
(திருவரங்கம்)
ஸ்ரீரங்க நாச்சியார்
ஸ்ரீ ரங்கநாதன்
நம்பெருமாள்
சோழ நாடு
திருச்சிராப்பள்ளி
2
திருக்கோழி
(உறையூர், நிசுலாபுரி, உரந்தை)
ஸ்ரீ கமலவல்லி நாச்சியார்
ஸ்ரீ அழகிய மணவாளன்
--
சோழ நாடு
திருச்சிராப்பள்ளி
3
திருக்கரம்பனூர் (உத்தமர் கோவில், கடம்ப க்ஷேத்ரம்)
ஸ்ரீ பூர்வ தேவி
ஸ்ரீ புருஷோத்தமன்

சோழ நாடு
திருச்சிராப்பள்ளி
4
திருவெள்ளறை (வேதகிரி க்ஷேத்ரம்)
ஸ்ரீ செண்பகவல்லி நாச்சியார்
ஸ்ரீ புண்டரீகாக்ஷன்

சோழ நாடு
திருச்சிராப்பள்ளி
5
திருஅன்பில்
ஸ்ரீ அழகியவல்லி நாச்சியார்
ஸ்ரீ வடிவழகிய நம்பி
ஸ்ரீ சுந்தரராஜன்
சோழ நாடு
திருச்சிராப்பள்ளி
6
திருப்பேர்நகர் , அப்பக்குடத்தான்
ஸ்ரீ கமலவல்லி (இந்திரா தேவி)
அப்பலா ரங்கநாதன்

சோழ நாடு
திருச்சிராப்பள்ளி
7
திருக்கண்டியூர்
ஸ்ரீ கமலவல்லி
ஹர சாப விமோசன பெருமாள்
கமலநாதன்
சோழ நாடு
திருச்சிராப்பள்ளி
8
திருக்கூடலூர்,
ஆடுதுறை பெருமாள் கோவில்
ஸ்ரீ பத்மாசனி (புஷ்பவல்லி)
வையம் காத்த பெருமாள் (ஜகத்ரக்ஷகன்)

சோழ நாடு
கும்பகோணம்
9
திரு கவித்தலம் (கபிஸ்தலம்)
ஸ்ரீ ரமாமணிவல்லி (பொற்றாமரையாள்)
கஜேந்திர வரதன்

சோழ நாடு
கும்பகோணம்
10
திருப்புள்ளம் (பூதங்குடி)
ஸ்ரீ பொற்றாமரையாள் (ஹேமாம்புஜவல்லி)
ஸ்ரீ வல்விலி ராமர்

சோழ நாடு
கும்பகோணம்
11
திரு ஆதனூர்
ஸ்ரீ ரங்கநாயகி
ஸ்ரீ  ஆண்டளக்குமையன்

சோழ நாடு
கும்பகோணம்
12
திருகுடந்தை
(பாஸ்கர  க்ஷேத்ரம்)
ஸ்ரீ கோமளவல்லி (படிதாண்டா பத்தினி)
ஸ்ரீ சாரங்கபாணி

சோழ நாடு
கும்பகோணம்
13
திருவிண்ணகர்,
ஒப்பிலியப்பன் கோயில்
ஸ்ரீ பூமிதேவி நாச்சியார்
ஸ்ரீ ஒப்பிலியப்பன் (ஸ்ரீநிவாசன்)

சோழ நாடு
கும்பகோணம்
14
திரு நறையூர்,
நாச்சியார் கோயில்
ஸ்ரீ வஞ்சுளவல்லி நாச்சியார்
திருநறையூர் நம்பி

சோழ நாடு
கும்பகோணம்
15
திருச்சேறை
ஸ்ரீ சாரநாயகி (சார நாச்சியார்)
ஸ்ரீ சாரநாதன்

சோழ நாடு
கும்பகோணம்
16
திரு கண்ணமங்கை
ஸ்ரீ அபிசேக வல்லி
பக்த வத்சல பெருமாள்

சோழ நாடு
கும்பகோணம்
17
திருக்கண்ணபுரம் (கிருஷ்ணாரண்யா, பஞ்சக்ருஷ்ண, சப்த புண்ணிய க்ஷேதரம்)
ஸ்ரீ கண்ணபுர நாயகி
நீல மேகப் பெருமாள்
சௌரிராஜ பெருமாள்
சோழ நாடு
நாகப்பட்டினம்
18
திரு கண்ணங்குடி
ஸ்ரீ லோகநாயகி (அரவிந்த வல்லி)
ஸ்ரீ லோகநாதன் (சியாமளமேணிப் பெருமாள்)
தாமோதர நாராயணன்
சோழ நாடு
கும்பகோணம்
19
திரு நாகை,
நாகப்பட்டினம்
ஸ்ரீ சௌந்தர்ய வல்லி
நீலமேகப் பெருமாள்
சௌந்தர்யராஜன்
சோழ நாடு
நாகப்பட்டினம்
20
தஞ்சைமாமணி கோயில்
ஸ்ரீ செங்கமல வல்லி
நீலமேகப் பெருமாள்

சோழ நாடு
தஞ்சாவூர்
21
திரு நந்திபுர விண்ணகரம்,
நாதன் கோயில், தக்ஷின ஜகன்னாத்
ஸ்ரீ செண்பக வல்லி தாயார்
ஸ்ரீ ஜகந்நாதன் (நாதநாதன், விண்ணகர பெருமாள்)

சோழ நாடு
கும்பகோணம்
22
திரு வெள்ளியங்குடி
ஸ்ரீ மரகத வல்லி
கோலவல்வில்லி ராமன்
ஸ்ருங்கார சுந்தரன்
சோழ நாடு
சீர்காழி
23
திருவழுந்தூர்
(தேரழுந்தூர்)
ஸ்ரீ செங்கமல வல்லி
தேவாதிராஜன்
ஆமருவியப்பன்
சோழ நாடு
மயிலாடுதுறை
24
திரு சிறுபுலியூர்
ஸ்ரீ திருமாமகள் நாச்சியார்
அருள்மாக்கடல்  (ஜலசயனப் பெருமாள்)
க்ருபா  சமுத்ரப் பெருமாள்
சோழ நாடு
மயிலாடுதுறை
25
திரு தலைச் சங்க நாண்மதியம் (தலைச்சங்காடு)
ஸ்ரீ  தலைச்சங்க நாச்சியார்
நாண்மதியப் பெருமாள்  (வெண்சுடர் பெருமாள்)
வியோமஜோதிப்பிரான் (வெண்சுடர்பிரான், லோகநாதன்)
சோழ நாடு
மயிலாடுதுறை
26
திரு இந்தளூர்
ஸ்ரீ பரிமள ரங்க நாயகி (சந்திர சாப விமோசன வல்லி, புண்டரிக வல்லி)
பரிமள ரங்கநாதன் (மருவினிய மைந்தன், சுகந்தவன நாதன்)

சோழ நாடு
மயிலாடுதுறை
27
திருக் காவளம்பாடி,
திரு நாங்கூர்
ஸ்ரீ மடவரல் மங்கை
ஸ்ரீ கோபால கிருஷ்ணன் (ராஜ கோபாலன்)

சோழ நாடு
சீர்காழி
28
திருக் காழி ஸ்ரீராம விண்ணகரம், சிர்காழி
ஸ்ரீ லோக நாயகி (மட்டவிழ்குழலி)
திரு விக்ரமன் (தாடாளன்)
த்ரிவிக்ரம நாராயணன்
சோழ நாடு
சீர்காழி
29
திரு அரிமேய விண்ணகரம்,
திரு நாங்கூர்
ஸ்ரீ அம்ருதகட வல்லி
குடமாடுகூத்தன்
சதுர்புஜங்களுடன் கோபாலன்
சோழ நாடு
சீர்காழி
30
திருவண் புருடோத்தமம்,
திரு நாங்கூர்
ஸ்ரீ புருஷோத்தம நாயகி
ஸ்ரீ புருஷோத்தமன்

சோழ நாடு
சீர்காழி
31
திரு செம்பொன்செய் கோயில்,
திரு நாங்கூர்
ஸ்ரீ அல்லிமாமலர்  நாச்சியார்
ஸ்ரீ பேரருளாளன்
ஹேமரங்கர் (செம்பொன்னரங்கர்)
சோழ நாடு
சீர்காழி
32
திருமணிமாடக் கோயில்,
திரு நாங்கூர்
ஸ்ரீ புண்டரீக வல்லி தாயார்
ஸ்ரீ நாராயணன் (நந்தாவிளக்கு)
நாராயணன், அளத்தற்கரியான்
சோழ நாடு
சீர்காழி
33
திரு வைகுந்த விண்ணகரம்,
திரு நாங்கூர்
ஸ்ரீ வைகுந்த வல்லி
ஸ்ரீ வைகுந்த நாதன்

சோழ நாடு
சீர்காழி
34
திருவாலி மற்றும் திருநகரி
திருவாலி: ஸ்ரீ அம்ருதகட வல்லி, திருநகரி: ஸ்ரீ அம்ருத வல்லி
திருவாலி: ஸ்ரீ லக்ஷ்மி ந்ருசிம்ஹர் (வயலாளி மணவாளன்), திருநகரி: ஸ்ரீ வேதராஜன்
திருவாலி: ஸ்ரீ திருவாலி நகராளன், திருநகரி: ஸ்ரீ கல்யாண ரங்கநாதன்
சோழ நாடு
சீர்காழி
35
திரு தேவனார் தொகை,
திரு நாங்கூர்
ஸ்ரீ கடல் மகள் நாச்சியார், மாதவநாயகி
தெய்வநாயகன்
மாதவப் பெருமாள்
சோழ நாடு
சீர்காழி
36
திருத்தெற்றி அம்பலம்,
திரு நாங்கூர்
ஸ்ரீ செங்கமல வல்லி
செங்கண் மால் (ரங்கநாதன், ஸ்ரீ லக்ஷ்மிரங்கர்)

சோழ நாடு
சீர்காழி
37
திருமணிக்கூடம் ,
திரு நாங்கூர்
ஸ்ரீ திருமகள் நாச்சியார் (ஸ்ரீதேவி), பூதேவி
வரதராஜப் பெருமாள் (மணிகூட நாயகன்)

சோழ நாடு
சீர்காழி
38
அண்ணன் கோயில் (திருவெள்ளக்குளம்), திரு நாங்கூர்
ஸ்ரீ அலர்மேல்மங்கை, ஸ்ரீ பூவார் திருமகள் நாச்சியார், பத்மாவதி
ஸ்ரீநிவாசன், கண்ணன், நாராயணன், அண்ணன் பெருமாள்

சோழ நாடு
சீர்காழி
39
திரு பார்த்தன் பள்ளி,
திரு நாங்கூர்
ஸ்ரீ தாமரை நாயகி
ஸ்ரீ தாமரையாள் கேள்வன்
ஸ்ரீ பார்த்தசாரதி
சோழ நாடு
சீர்காழி
40
திருச்சித்திரக் கூடம் ,
சிதம்பரம்
ஸ்ரீ புண்டரீக வல்லி தாயார்
கோவிந்தராஜன்
தேவாதி தேவன் (பார்த்தசாரதி)
சோழ நாடு
சிதம்பரம்
41
திரு அஹீந்த்ரபுரம்,
ஆயிந்தை
ஸ்ரீ ஹேமாமபுஜ வல்லி தாயார் (வைகுண்ட நாயகி)
ஸ்ரீ தெய்வநாயகன்
ஸ்ரீ மூவராகிய ஒருவன், தேவநாதன்
நாடு நாடு
கடலூர்
42
திருக்கோவலூர்
ஸ்ரீ பூங்கோவை நாச்சியார்
த்ரிவிக்ரமன்
ஆயனார், கோவலன் (கோபாலன்)
நாடு நாடு
கடலூர்
43
திருக்கச்சி,
அத்திகிரி  (அத்தியூர், காஞ்சிபுரம், சத்யவ்ரத க்ஷேத்ரம்)
ஸ்ரீ பெருந்தேவி (மகாதேவி) தாயார்
ஸ்ரீ பேரருளாள வரதராஜன்

தொண்டை நாடு
காஞ்சிபுரம்
44
அஷ்டபுயகரம்,
காஞ்சிபுரம்
ஸ்ரீ அலர்மேல் மங்கை, பத்மாசனித் தாயார்
ஆதி கேசவ பெருமாள் (சக்ரதரர், கஜேந்திர வரதன்)

தொண்டை நாடு
காஞ்சிபுரம்
45
திருத்தண்கா,
தூப்புல், காஞ்சிபுரம்
ஸ்ரீ மரகத வல்லி
ஸ்ரீ தீபப் பிரகாசன் (விளக்கொளிப் பெருமாள், திவ்யப்ரகாசர்)

தொண்டை நாடு
காஞ்சிபுரம்
46
திரு வேளுக்கை,
காஞ்சிபுரம்
ஸ்ரீ வேளுக்கை வல்லி (அம்ருதவல்லி)
அழகியசிங்கர் (ந்ருசிம்ஹர், ஸ்ரீ முகுந்த நாயகன்)

தொண்டை நாடு
காஞ்சிபுரம்
47
திரு நீரகம்,
காஞ்சிபுரம்
ஸ்ரீ நிலமங்கை வல்லி

ஸ்ரீ ஜகதீச்வரர்
தொண்டை நாடு
காஞ்சிபுரம்
48
திருப் பாடகம்,
காஞ்சிபுரம்
ஸ்ரீ ருக்மிணி, சத்ய பாமா
பாண்டவ தூதர்

தொண்டை நாடு
காஞ்சிபுரம்
49
திரு நிலா திங்கள் துண்டம், காஞ்சிபுரம்
நேர் ஒருவர் இல்லா வல்லி (நிலாத்திங்கள் துண்ட தாயார்)
சந்திர சூட பெருமாள் (நிலாத்திங்கள் துண்டத்தான்)

தொண்டை நாடு
காஞ்சிபுரம்
50
திரு ஊரகம்,
காஞ்சிபுரம்
ஸ்ரீ அமுத வல்லி நாச்சியார் (அம்ருதவல்லி)
ஸ்ரீ த்ரிவிக்ரமன் (உலகளந்த பெருமாள்)

தொண்டை நாடு
காஞ்சிபுரம்
51
திரு வெஃகா,
காஞ்சிபுரம்
ஸ்ரீ கோமள வல்லி நாச்சியார்
ஸ்ரீ யதோக்தகாரி  (வேகாசேது, சொன்னவண்ணம் செய்த பெருமாள்)

தொண்டை நாடு
காஞ்சிபுரம்
52
திருக் காரகம்,
காஞ்சிபுரம்
ஸ்ரீ பத்மாமணி நாச்சியார் (ரமாமணி நாச்சியார்)
ஸ்ரீ கருணாகர பெருமாள்

தொண்டை நாடு
காஞ்சிபுரம்
53
திருக் கார்வானம்,
காஞ்சிபுரம்
ஸ்ரீ கமல வல்லி (தாமரையாள்)
ஸ்ரீ கள்வன்

தொண்டை நாடு
காஞ்சிபுரம்
54
திருக் கள்வனூர்,
காஞ்சிபுரம்
ஸ்ரீ அஞ்சில வல்லி நாச்சியார்
ஆதி வராஹப் பெருமாள்

தொண்டை நாடு
காஞ்சிபுரம்
55
திருப் பவளவண்ணம்,
காஞ்சிபுரம்
ஸ்ரீ பவள வல்லி
ஸ்ரீ பவளவண்ணன்

தொண்டை நாடு
காஞ்சிபுரம்
56
திருப் பரமேஸ்வர விண்ணகரம், காஞ்சிபுரம்
ஸ்ரீ வைகுண்ட வல்லி
ஸ்ரீ பரமபதநாதன் (வைகுந்தநாதன்)

தொண்டை நாடு
காஞ்சிபுரம்
57
திருப்புட்குழி
ஸ்ரீ மரகத வல்லி தாயார்
ஸ்ரீ விஜய ராகவப் பெருமாள்
ஸ்ரீ விஜய ராகவப் பெருமாள்
தொண்டை நாடு
காஞ்சிபுரம்
58
திரு நின்றவூர்
(தின்னனூர்)
ஸ்ரீ சுதா வல்லி (என்னைப் பெற்ற தாயார்)
ஸ்ரீ பக்தவத்சலப் பெருமாள் (பத்தராவிப் பெருமாள்)

தொண்டை நாடு
சென்னை
59
திரு எவ்வுள்
(புண்யாவ்ருத, வீக்ஷாரண்ய க்ஷேத்ரம்), திருவள்ளூர்
ஸ்ரீ கனக வல்லி (வசுமதி)
வைத்ய வீர ராகவப் பெருமாள்

தொண்டை நாடு
சென்னை
60
திரு அல்லிக் கேணி (திருவல்லிக்கேணி, ப்ரிந்தாரண்ய க்ஷேத்ரம்)
ஸ்ரீ ருக்மிணித் தாயார்
ஸ்ரீ வேங்கட கிருஷ்ணன்
ஸ்ரீ பார்த்தசாரதி
தொண்டை நாடு
சென்னை
61
திரு நீர்மலை
ஸ்ரீ அணிமாமலர் மங்கை
நீர்வண்ணன் (நீலமுகில்வண்ணன்)

தொண்டை நாடு
சென்னை
62
திரு இட வெந்தை
ஸ்ரீ கோமள வல்லி நாச்சியார்
லக்ஷ்மி வராஹப் பெருமாள்
நித்ய கல்யாணப் பெருமாள்
தொண்டை நாடு
சென்னை
63
திருக் கடல் மல்லை,
மஹாபலிபுரம்
ஸ்ரீ நில மங்கை நாயகி
ஸ்தல சயனப் பெருமாள்
ஸ்தலசயனதுரைவார் (உலகுய்ய நின்றான்)
தொண்டை நாடு
சென்னை
64
திருக்கடிகை,
சோளிங்கர்
ஸ்ரீ அம்ருத வல்லி
யோக ந்ருஸிம்ஹன்
அக்காரக்கனி
தொண்டை நாடு
சென்னை
65
திரு அயோத்தி,
அயோத்யா
ஸ்ரீ சீதாப் பிராட்டி
ஸ்ரீ ராமன்  (சக்கரவர்த்தித் திருமகன், ரகுநாயகன்)

வட நாடு
உத்தர் பிரதேஷ்
66
திரு நைமிசாரண்யம்
ஸ்ரீ ஸ்ரீஹரி லக்ஷ்மி (ஸ்ரீ புண்டரீகவல்லி)
ஸ்ரீ ஸ்ரீஹரி (தேவராஜன்)

வட நாடு
உத்தர் பிரதேஷ்
67
திருப் ப்ரிதி (நந்தப் பிரயாக்,
(ஜோஷி மடம்)
ஸ்ரீ பரிமள வல்லி நாச்சியார்
பரம புருஷன்

வட நாடு
உத்தராஞ்சல்
68
திருக் கண்டமென்னும் கடிநகர் (தேவப்ரயாகை)
ஸ்ரீ புண்டரீக வல்லி தாயார்
ஸ்ரீ நீலமேக பெருமாள் (ஸ்ரீ புருஷோத்தமன்)

வட நாடு
உத்தராஞ்சல்
69
திரு வதரி ஆசிரமம்
(பத்ரிநாத்)
ஸ்ரீ அரவிந்த வல்லி
ஸ்ரீ பத்ரி நாராயணன்

வட நாடு
உத்தராஞ்சல்
70
திரு சாளக்ராமம்
(முக்திநாத்)
ஸ்ரீ ஸ்ரீதேவி நாச்சியார்
ஸ்ரீ ஸ்ரீ மூர்த்தி

வட நாடு
நேபால்
71
திரு வட மதுரை
(மதுரா)
ஸ்ரீ சத்ய பாமா நாச்சியார்
கோவர்தனேசன் (பால க்ருஷ்ணன்)

வட நாடு
உத்தர் பிரதேஷ்
72
திருவாய்ப்பாடி,
கோகுலம்
ஸ்ரீ ருக்மிணி மற்றும் சத்ய பாமா
ஸ்ரீ நவ மோகன கிருஷ்ணன்

வட நாடு
உத்தர் பிரதேஷ்
73
திரு த்வாரகை
(துவரை, துவராபதி)
ஸ்ரீ கல்யாண நாச்சியார் (ஸ்ரீ லக்ஷ்மிஸ்ரீ, ருக்மிணி)
கல்யாண நாராயணன் (த்வாரகாதீசன், த்வாரகாநாத்ஜி)

வட நாடு
குஜராத்
74
திரு சிங்கவேழ்குன்றம், அஹோபிலம்
ஸ்ரீ செஞ்சு லக்ஷ்மி (ஸ்ரீ அம்ருத வல்லி)
ப்ரஹலாதவரதன் (லக்ஷ்மிந்ருசிம்ஹன்)

வட நாடு
ஆந்திரம்
75
திருவேங்கடம்
(திருப்பதி, திருமலை, ஆதிவராஹ  க்ஷேத்ரம்)
அலர்மேல் மங்கை (பத்மாவதி)
ஸ்ரீ திருவேங்கமுடையான்  (வெங்கடாசலபதி, பாலாஜி)
ஸ்ரீநிவாசன்  (மலையப்ப சுவாமி, மலைகுனியன் நின்ற பெருமாள்)
வட நாடு
ஆந்திரம்
76
திரு நாவாய்
ஸ்ரீ மலர் மங்கை நாச்சியார் (சிறுதேவி)
நாவாய் முகுந்தன் (நாராயணன்)

மலை நாடு
கேரளம்
77
திரு வித்துவக்கோடு (திருவிசிக்கோடு, திருவஞ்சிக்கோடு)
ஸ்ரீ வித்துவக்கோட்டு வல்லி (பத்மபாணி நாச்சியார்)
உய்ய வந்த பெருமாள் (அபயப்ரதன்)

மலை நாடு
கேரளம்
78
திருக்காட்கரை
ஸ்ரீ பெருஞ்செல்வ நாயகி (ஸ்ரீ வாத்சல்ய வல்லி நாச்சியார்)
காட்கரையப்பன்

மலை நாடு
கேரளம்
79
திரு மூழிக்களம்
ஸ்ரீ மதுரவேணி நாச்சியார்
திரு மூழிக்களத்தான்  (ஸ்ரீ சூக்தி நாத பெருமாள், அப்பன்)

மலை நாடு
கேரளம்
80
திரு வல்ல வாழ்
(திருவல்லா, ஸ்ரீ வல்லபா க்ஷேத்ரம்)
ஸ்ரீ வாத்சல்ய தேவி (ஸ்ரீ செல்வ திருக்கொழுந்து) நாச்சியார்
ஸ்ரீ கோலப்பிரான் (திருவல்லமார்பன் , ஸ்ரீவல்லபன்)

மலை நாடு
கேரளம்
81
திருக்கடித்தானம்
ஸ்ரீ கற்பக வல்லி
ஸ்ரீ அம்ருத (அத்புத) நாராயணன்

மலை நாடு
கேரளம்
82
திருச்செங்குன்றூர்
(திருசிற்றாறு)
ஸ்ரீ செங்கமல வல்லி
இமயவரப்பன்

மலை நாடு
கேரளம்
83
திருப்புலியூர்
(குட்டநாடு)
ஸ்ரீ பொற்கொடி நாச்சியார்
மாயப்பிரான்

மலை நாடு
கேரளம்
84
திருவாறன்விளை
(ஆறன்முளா)
ஸ்ரீ  பத்மாஸநி  நாச்சியார்
திருக்குறளப்பன் (செஷாசனா )

மலை நாடு
கேரளம்
85
திருவண் வண்டுர்
ஸ்ரீ கமல வல்லி நாச்சியார்
பாம்பணை அப்பன்

மலை நாடு
கேரளம்
86
திருவனந்தபுரம்
ஸ்ரீ ஸ்ரீஹரி லக்ஷ்மி
அனந்தபத்மநாபன்

மலை நாடு
கேரளம்
87
திரு வட்டாறு
ஸ்ரீ மரகத வல்லி நாச்சியார்
ஆதி கேசவ பெருமாள்

மலை நாடு
கேரளம்
88
திருவண்பரிசாரம்
ஸ்ரீ கமல வல்லி நாச்சியார்
ஸ்ரீ திருக்குறளப்பன் (திருவாழ்மார்பன்)

மலை நாடு
கேரளம்
89
திருக்குறுங்குடி
ஸ்ரீ குறுங்குடிவல்லி நாச்சியார்
சுந்தர பரிபூரணன் (நின்ற நம்பி)

பாண்டியநாடு
திருநெல்வேலி
90
திரு சிரீவர மங்கை (வானமாமலை, தோதாத்ரி க்ஷேத்ரம்,திருசிரீவரமங்கள நகர், நாங்குநேரி)
ஸ்ரீ சிரீவரமங்கை நாச்சியார்
ஸ்ரீ தோதாத்ரிநாதன்  (வானமாமலை)
ஸ்ரீ தெய்வநாயகன்
பாண்டியநாடு
திருநெல்வேலி
91
ஸ்ரீவைகுண்டம்,
நவதிருப்பதி
ஸ்ரீ வைகுந்தவல்லி
ஸ்ரீ வைகுந்தநாதன் (ஸ்ரீ கள்ளபிரான்)

பாண்டியநாடு
திருநெல்வேலி
92
திருவரகுணமங்கை,
நவதிருப்பதி
ஸ்ரீ வரகுண வல்லி தாயார் (ஸ்ரீ வரகுணமங்கை தாயார்)
விஜயாசனப்  பெருமாள்

பாண்டியநாடு
திருநெல்வேலி
93
திருப்புளிங்குடி,
நவதிருப்பதி
ஸ்ரீ மலர்மகள் நாச்சியார், ஸ்ரீ புளிங்குடி வல்லி
ஸ்ரீ காய்சினவேந்தன்

பாண்டியநாடு
திருநெல்வேலி
94
திரு தொலைவில்லிமங்கலம் (ரெட்டைத் திருப்பதி), நவதிருப்பதி
ஸ்ரீ கரும் தடங்கண்ணி நாச்சியார்
ஸ்ரீ அரவிந்த லோசனன், ஸ்ரீநிவாசன் (தேவப்பிரான்)

பாண்டியநாடு
திருநெல்வேலி
95
திருக்குளந்தை (பெருங்குளம்), நவதிருப்பதி
ஸ்ரீ அலமேலுமங்கை தாயார், ஸ்ரீ குளந்தை  வல்லி
ஸ்ரீ ஸ்ரீநிவாசன்
ஸ்ரீ மாயக்கூத்தன்
பாண்டியநாடு
திருநெல்வேலி
96
திருக்கோளூர், நவதிருப்பதி
ஸ்ரீ குமுத வல்லி, ஸ்ரீ கோளூர் வல்லி நாச்சியார்
ஸ்ரீ வைத்த மாநிதி பெருமாள் (நிக்ஷேபவிதன்)

பாண்டியநாடு
திருநெல்வேலி
97
திருப்பேரை
(தென் திருப்பேரை), நவதிருப்பதி
ஸ்ரீ குழைக்காது வல்லி, ஸ்ரீ திருப்பேரை நாச்சியார்
ஸ்ரீ மகர நெடும் குழைக்காதன் (ஸ்ரீ நிகரில் முகில் வண்ணன்)

பாண்டியநாடு
திருநெல்வேலி
98
திருக்குருகூர்
(ஆழ்வார் திருநகரி), நவதிருப்பதி
ஸ்ரீ ஆதிநாத வல்லி, ஸ்ரீ குருகூர் வல்லி
ஸ்ரீ ஆதிநாதன் (ஸ்ரீ ஆதிப்பிரான்)
ஸ்ரீ பொலிந்து நின்ற பிரான்
பாண்டியநாடு
திருநெல்வேலி
99
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீ ஆண்டாள் (ஸ்ரீ கோதா நாச்சியார்)
ஸ்ரீ வடபத்ரசாயி (ரங்கமன்னார்)

பாண்டியநாடு
விருதுநகர்
100
திருதண்கால் (திருதண்காலூர்)
ஸ்ரீ செங்கமல தாயார் (அன்ன நாயகி, அனந்த நாயகி, அம்ருத நாயகி, ஜாம்பவதி)
ஸ்ரீ நின்ற நாராயணன்

பாண்டியநாடு
விருதுநகர்
101
திருக்கூடல்,
மதுரை
ஸ்ரீ மதுர வல்லி (வகுலவல்லி, வரகுணவல்லி, மரகதவல்லி)
கூடல் அழகர்

பாண்டியநாடு
மதுரை
102
திருமாலிரும் சோலை
(அழகர் கோயில்)
ஸ்ரீ சுந்தர வல்லி (ஸ்ரீதேவி)
திரு மாலிரும் சோலை நம்பி (அழகர், கள்ளழகர், மாலாங்காரர்)

பாண்டியநாடு
மதுரை
103
திரு மோகூர்
ஸ்ரீ மோகூர் வல்லி (மேகவல்லி, மோகன வல்லி)
ஸ்ரீ காளமேக பெருமாள்
ஸ்ரீ திருமோகூர் ஆப்தன்
பாண்டியநாடு
மதுரை
104
திருக்கோஷ்டியூர் (கோஷ்டி க்ஷேத்ரம்)
திருமாமகள் நாச்சியார்
ஸ்ரீ உரகமெல்லணையான்
ஸ்ரீ சௌம்யநாராயணன்
பாண்டியநாடு
புதுக்கோட்டை
105
திருப்புல்லாணி, ராமநாதபுரம்
ஸ்ரீ கல்யாண வல்லி, ஸ்ரீ  பத்மாஸநி த் தாயார்
ஸ்ரீ கல்யாண ஜகந்நாதன் (தெய்வச் சிலையார்)

பாண்டியநாடு
ராமநாதபுரம்
106
திருமெய்யம்
ஸ்ரீ உய்ய வந்த நாச்சியார்
ஸ்ரீ சத்ய கிரிநாதன் (ஸ்ரீ சத்யமூர்த்தி)
ஸ்ரீ மெய்யப்பன்
பாண்டியநாடு
புதுக்கோட்டை
107
திருப்பாற்கடல்
ஸ்ரீ கடல் மகள் நாச்சியார் (ஸ்ரீ பூதேவி)
ஸ்ரீ க்ஷீராப்தி நாதன்

விண்ணுலகம்
விண்ணுலகம்
108
பரமபதம்
ஸ்ரீ பெரிய பிராட்டியார்
ஸ்ரீ பரமபத நாதன்

விண்ணுலகம்
விண்ணுலகம்
வருகை பதிவு



நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

Jump to navigationJump to search
நாலாயிர திவ்விய பிரபந்தம் பெருமாளை குறித்து பாடப்பட்ட பக்தி பாடல் தொகுப்பாகும். இது இந்து மதத்தில் வைணவ சமயத்தின் ஓர் ஆதாரமாக, தமிழ்மறையாக கொண்டாடப்படுகிறது.
கி.பி. 6ஆம் நூற்றாண்டு முதல் 9 ஆம் நூற்றாண்டுக்குள் வைணவ சமயத்தில் ஆழ்வார்கள் 12 பேரினால் இயற்றப்பட்ட இந்த பாடல்களை, 10 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நாதமுனிகள் என்பார் ஆழ்வார்கள் அருளிச் செயல்கள் எனத் தொகுத்தார். பின்னர் வந்த மணவாளமாமுனிகள், நாதமுனிகள் தொகுத்த ஆழ்வார்களின் பிரபந்தத்தோடு, திருவரங்கத்தமுதனார் செய்த இராமானுச நூற்றந்தாதியும் சேர்த்து நாலாயிர திவ்வியப் பிரபந்தம் என அழைக்கும்படி அருளினார்.
திவ்ய எனும் சொல் "மேலான" என்றும் பிரபந்தம் எனும் சொல் பலவகைபாடல்தொகுப்பினையும் குறிக்கும்.
இந்த நூல் - ஆன்ற தமிழ் மறை, ஐந்தாவது வேதம், திராவிட வேதம், திராவிட பிரபந்தம் என்றெல்லாம் வர்ணிக்கப்பட்டுள்ளது. தமிழ் பேசும் வைணவர்கள் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம் பேசும் வைணவர்களாலும் இன்றும் தினமும் படிக்கப்பட்டு வருகிறது என்பது இதன் சிறப்பு. இது,
முதலாயிரம்-----------947 பாடல்கள்
பெரிய திருமொழி----1134 பாடல்கள்
திருவாய்மொழி------1102 பாடல்கள்
என நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

24 பிரபந்தங்கள்[தொகு]

திவ்விய பிரபந்தங்கள் 24 வகைப்படும்
  1. திருப்பல்லாண்டு
  2. பெரியாழ்வார் திருமொழி
  3. திருப்பாவை
  4. நாச்சியார் திருமொழி
  5. பெருமாள் திருமொழி
  6. திருச்சந்த விருத்தம்
  7. திருமாலை
  8. திருப்பள்ளி எழுச்சி
  9. அமலனாதிபிரான்
  10. கண்ணிநுண்சிறுத்தாம்பு
  11. பெரிய திருமொழி
  12. திருக்குறுந்தாண்டகம்
  13. திருநெடுந்தாண்டகம்
  14. முதல் திருவந்தாதி
  15. இரண்டாம் திருவந்தாதி
  16. மூன்றாம் திருவந்தாதி
  17. நான்முகன் திருவந்தாதி
  18. திருவிருத்தம்
  19. திருவாசிரியம்
  20. பெரிய திருவந்தாதி
  21. திருஎழுகூற்றிருக்கை
  22. சிறிய திருமடல்
  23. பெரிய திருமடல்
  24. இராமானுச நூற்றந்தாதி

பன்னிரு ஆழ்வார்கள்[தொகு]

  1. பொய்கையாழ்வார்
  2. பூதத்தாழ்வார்
  3. பேயாழ்வார்
  4. திருமழிசையாழ்வார்
  5. நம்மாழ்வார்
  6. மதுரகவியாழ்வார்
  7. குலசேகர ஆழ்வார்
  8. பெரியாழ்வார்
  9. ஆண்டாள்
  10. தொண்டரடிப்பொடியாழ்வார்
  11. திருப்பாணாழ்வார்
  12. திருமங்கையாழ்வார்

பாடுபொருள்

இந்தப் பாடல்கள் அனைத்தும் பெருமாளையும் , அவரது பல்வேறு அவதாரங்களையும் குறித்து அமைந்துள்ளன. பெரும்பாலான பாடல்கள் 108 திவ்ய தேசங்களில் பாடப்பட்டுள்ளன. இந்த தொகுப்பில், சுமார் 1100 பாடல்கள் நம்மாழ்வாரால் இயற்றப்பட்டதாகும். இப்பாசுரங்களின் மொத்த எண்ணிக்கை 3892 ஆகும். இராமானுசர் காலத்தில் வாழ்ந்த திருவரங்கத்து அமுதனார் இயற்றிய இராமானுசர் நூற்றந்தாதியையும் (108 பாசுரங்கள் கொண்டது) சேர்த்து நாலாயிரம் என்பர். இவற்றுள் பெரும்பாலானவை பண்ணுடன் பாடக்கூடிய இசைப்பாடல்களாகும்.

பாடல்களின் பட்டியல்

முதலாயிரம்

இயற்றிய ஆழ்வார்தலம்நூலின் பெயர்நாலாயிரத்தில்
பாசுரங்களின் தொடர்
எண்ணிக்கை
பெரியாழ்வார்திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்திருப்பல்லாண்டு1 - 1212
திருமொழி13 - 473461
ஆண்டாள்திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்திருப்பாவை474-50330
நாச்சியார் திருமொழி504-646143
குலசேகர ஆழ்வார்பெருமாள் திருமொழி647 - 751105
திருமழிசையாழ்வார்திருமழிசைதிருச்சந்தவிருத்தம்752 - 871120
தொண்டரடிப்பொடியாழ்வார்திருமாலை[1]872 - 91645
திருப்பள்ளி எழுச்சி917 - 92610
திருப்பாணாழ்வார்உறையூர்அமலனாதிபிரான்[2]927 - 93610
மதுரகவியாழ்வார்கண்ணிநுண்சிறுத்தாம்பு937 - 94711

இரண்டாவதாயிரம்

இயற்றிய ஆழ்வார்தலம்நூலின் பெயர்நாலாயிரத்தில்
பாசுரங்களின் தொடர்
எண்ணிக்கை
திருமங்கையாழ்வார்பெரிய திருமொழி948 - 20311084
திருக்குறுந்தாண்டகம்2032 - 205120
திருநெடுந்தாண்டகம்2052 - 208130

மூன்றாவதாயிரம்

இயற்றிய ஆழ்வார்தலம்நூலின் பெயர்நாலாயிரத்தில்
பாசுரங்களின் தொடர்
எண்ணிக்கை
பொய்கையாழ்வார்காஞ்சிபுரம்முதல் திருவந்தாதி2082 -2181100
பூதத்தாழ்வார்மாமல்லபுரம்இரண்டாம் திருவந்தாதி2182 - 2281100
பேயாழ்வார்மயிலாப்பூர்மூன்றாம் திருவந்தாதி2282 - 2381100
திருமழிசை ஆழ்வார்நான்முகன் திருவந்தாதி2382 - 247796
நம்மாழ்வார்ஆழ்வார்திருநகரிதிருவிருத்தம்2478 - 2577100
திருவாசிரியம்2578 - 25847
பெரிய திருவந்தாதி2585 - 267187
திருமங்கை ஆழ்வார்திருஎழுகூற்றிருக்கை26721
சிறிய திருமடல்2673 - 271240
பெரிய திருமடல்2713 - 279078
திருவரங்கத்தமுதனார்இராமானுச நூற்றந்தாதி2791 - 289898

நான்காவதாயிரம்

இயற்றிய ஆழ்வார்நூலின் பெயர்நாலாயிரத்தில்
பாசுரங்களின் தொடர்
எண்ணிக்கை
நம்மாழ்வார்திருவாய்மொழி2899 - 40001102

காண்க

  • நாலாயிர திவ்வியப் பிரபந்தம் [3]

உசாத்துணைகள்

  • முனைவர் ஜெகத்ரட்சகன்: நாலாயிர திவ்யப் பிரபந்தம். ஆழ்வார்கள் ஆய்வு மையம், சென்னை.1993

வெளி இணைப்புகள்



வைணவ குருபரம்பரை வரலாறுகள்

Jump to navigationJump to search
வைணவ குருமார்களின் வரலாற்றைத் தொகுத்துக் கூறும் நூல்கள் சில தோன்றின. அவை உரைநடையிலும், செய்யுள் வடிவிலும் உள்ளன. இவை வெவ்வேறு காலங்களில் தோன்றியவை. எனினும் அவற்றில் தொகுக்கப்பட்டிருக்கும் செய்திகளை அளவிட்டுக்கொள்வது வைணவ வளர்ச்சிப் பாதையை அறிய உதவும்.[1]
நூல்கள்
வைணவ குருமார்களின் வரலாறுகளைச் [2] செய்யுள் வடிவில் எடுத்துரைக்கும் பழமையான நூல்கள் ஒன்பது.[3]
நூல்நூலாசிரியர்நூற்றாண்டுகுறிப்புநடை
அரிசமய தீபம்சடகோப தாசர் [4]17 இடைப்பகுதி12 ஆழ்வார் மற்றும் நாதமுனிகள்யமுனாசாரியார்இராமானுசர் வரலாறுகள்14 சருக்கங்களில் 1400 பாடல்
இராமானுச சரிதைபாகை சீதாராம தாசர்-திருவரங்கப் பெருமாளரையர் இராமானுசருக்கு அருளிச்செய்ததாகத் தோற்றுவாய் செய்துகொண்டு இராமானுசர் வரலாற்றை எடுத்துரைக்கிறது756 பாடல்
இராமானுசார்ய திவ்விய சரிதைபிள்ளை லோகஞ்சீயர்இடைச்செருகல்கள் உள்ளனவடமொழி, தெலுங்கு, கிரந்த எழுத்துக்களில் மேற்கோள்கள் தரப்பட்டுள்ள நூல்மணிப்பிரவாள உரையடை
குருபரம்பராப் பிரபாவம்வடிவழகிய நம்பி தாசர்11ஆழ்வார்கள், நாதமுனி, ஆளவந்தார் வரலாறுகள்2965 பாடல்கள்
குருபரம்பரைப் புராணம்ஊறை விசயராகவன்-ஆழ்வார்களுடன் நாதமுனிகள் முதலானோர் வரலாறு4361 பாடல்
திவ்வியசூரி சரிதம்வங்கிபுரம் சனிவாசாசாரி19ஆழ்வார்கள், நாதமுனி, ஆளவந்தார், எம்பெருமானார், வேதாந்த தேசிகர் - வரலாறு2824 பாடல்
பரமயோகி விலாசம்--விளங்கவில்லை-
பெரிய திருவடி அடைவுகந்தாடையப்பன்15கருடவாகன பண்டிதர் செய்த வடமொழி நூலைத் தழுவியது-
யதீந்திரப்ரவண ப்ரபாவம்பிள்ளை லோகஞ்சீயர்15 பிற்பகுதி-உரைநடை, மணிப்பிரவாளம்

வைணவ ஆச்சார்யர்கள்

ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ப்ரதாய த்தின், அடிப்படையே குருபரம்பரை தான். ஆசார்ய ஸம்பந்தம் இல்லாமல், எந்த செயலுக்கும், நடை முறைக்கும், அர்த்தம் இல்லாமல் போய்விடும் என்பார்கள் பெரியோர்கள். ஸ்ரீமந் நாராயணனை முதல்ஆசார்யராகக் கொண்டு
 வளர்ந்த வைஷ்ணவ சமயத்தின்  குரு பரம்பரை வம்சாவளி

வருகை பதிவு
அறிமுகம்
உள்ளடக்கம்
இணைப்புகள்
Follow us on
எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
    பிரபந்தம்
    திவ்ய தேசங்கள்
    கதைகள்
    கட்டுரைகள்
      பக்தி இலக்கியம்
      வைணவ இணைய தளங்கள்
      வலைப் பூக்கள்

         Facebook
         Twitter






          இராமானுசர்

          Jump to navigationJump to search
          இராமானுசர் சன்னிதி, ஶ்ரீரங்கம்
          இராமானுசர் (இராமானுஜர், 1017-1137[1] இந்து தத்துவப் பிரிவுகளில் ஒன்றான வேதாந்தத்தின் விளக்கங்களில் ஒன்றான விசிஷ்டாத்துவைதத்தின் முன்னோடியாக விளங்கினவர். அண்மைக்காலத்தில் அறிஞர்கள், இவரது பிறப்பு இன்னும் 20 - 60 ஆண்டுகள் வரை பிந்தியதாக இருக்கும் எனக் கருதுகிறார்கள். இவரது இறப்பும் 20 ஆண்டுகள் வரை பிந்தியே நிகழ்ந்திருக்க வேண்டுமென்பதும் சிலரது கருத்து. இவர் விசிட்டாத்துவைத தத்துவ இயலை நாடளாவிய முறையில் பரப்பிய மெய்யியலாளர். பிரம்ம சூத்திரத்திற்கு ஸ்ரீபாஷ்யம் என்ற ஓர் உயர்தர உரையை இயற்றி, ஆதி சங்கரரின் அத்வைதத் தத்துவத்திற்கு மாற்றுச்சொன்ன ஆன்மீகவாதி. பாரததேசத்தின், சரித்திரப்பிரசித்தி பெற்று உலகளவில் புகழடைந்த, மூன்று முக்கிய குருமார்களில் ஒருவர். மற்ற இருவரில் ஒருவர் ஆதி சங்கரர். மற்றவர் துவைத சமயப்பிரிவை நிலைநாட்டிய மத்வர். இராமானுசரைப் பின்பற்றியவர்கள் வைஷ்ணவர் அல்லது வைணவர் எனப்படுவர்.

          ஆச்சாரிய பரம்பரை

          ஒன்பதாவது நூற்றாண்டைச் சார்ந்த நாதமுனிகள் என்ற முதல் ஆச்சாரியர் அடங்கிய குரு பரம்பரையில் ஆளவந்தாருக்கு அடுத்து வந்தவர் இராமானுசர். ஸ்ரீவைணவப் பண்பாட்டில் ஆழ்வார்கள் பன்னிருவரும் மக்களின் இதயத்தைத் தொட்டு மனதை மாற்றியவர்கள். ஆச்சாரியர்களோ புத்திபூர்வமாக மனதைத் தொட்டவர்கள். பல நூற்றாண்டுகளுக்கு முன் புவியில் உலாவிய ஆழ்வார்களின் பிரபந்தங்களை நாதமுனிகள்தான் தமிழ்நாட்டில் தேடித்தேடி வெளிக்கொணர்ந்து, பாசுரங்களை இசைக்குகந்ததாக ஆக்கி எல்லா இடங்களிலும் பரப்பினார். யோகசக்தி மூலம் நம்மாழ்வாரிடமிருந்து பிரபந்தங்களை நேரிடையாகப் பெற்றார் என்பது ஸ்ரீவைணவர்கள் நம்பிக்கை. பின்னர் ஆச்சாரிய பீடத்தில் ஏறியவர் யமுனாச்சாரியார் என்பவர். ஆளவந்தார் என்பது அவரது இன்னொரு பெயர். நாதமுனிகளின் பேரன். ஒரு சொற்போரில் வென்று அரசகுலத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டு, பிற்பாடு தன் குரு மணக்கால் நம்பியின் தூண்டுதலால் திருவரங்கத்திற்கு வந்து துறவியானவர். வைணவ சம்பிரதாயங்களை ஒழுங்காக வகுத்து பின்வரும் நான்கு அடிப்படை நூல்களை எழுதியவர்.
          • சித்தித்ரயம்: இது விசிட்டாத்துவைதக் கொள்கைகளை விவரிக்கிறது.
          • ஆகம ப்ராமாண்யம்: இது பாஞ்சராத்ர ஆகம விளக்கம்.
          • மஹாபுருஷ நிர்ணயம்: இது மகாலட்சுமியுடன் கூடிய நாராயணன் தான் பரம்பொருள் என்பதை நிர்ணயிப்பது.
          • கீதார்த்த சங்கிரகம்: இது கீதைக்கு பொருளுரை.
          யமுனாச்சாரியார்தான் இராமனுசரைக் கண்டுபிடித்து தனக்குப் பிறகு ஆச்சாரிய பதவிக்கு வரவேண்டியவர் அவர் என்று உலகுக்குக் காட்டியவர்.

          வாரிசு எடுத்துக்கொண்ட சபதம்

          யமுனாச்சாரியாரின் அழைப்பை பெரிய நம்பிகள் மூலம் கேள்வியுற்று காஞ்சீபுரத்திலிருந்து ஓடோடி வந்த இராமானுசர் யமுனாச்சாரியாரின் உயிர்பிரிந்த உடலைத்தான் பார்த்தார். ஆனால் அவ்வுடலின் மூன்று கைவிரல்கள் மட்டும் மடியாத நிலையில் இருந்தன. யாராலும் காரணம் சொல்ல இயலவில்லை. இராமானுசர் மூன்று பிரமாணங்கள் எடுத்துக் கொள்வதாகச் சொல்லி அப்பிரமாணங்களை ஒவ்வொன்றாகச் சொன்னதும் மூன்று விரல்களும் ஒவ்வொன்றாக மடிந்தன. அந்த பிரமாணங்களாவன:
          • பிரம்ம சூத்திரத்திற்கு விசிஷ்டாத்வைதத்தை நிலைநாட்டி ஒரு உரை எழுதுவது;
          • விஷ்ணுபுராணம் இயற்றிய பராசரரின் மற்றும் பாகவதம் இயற்றிய வேதவியாசர் ஆகியோரின் பெயரை வைத்து அழியாத புகழுக்கு வழி கோலுவது;
          • வேதத்தை அழகுத்தமிழில் பாசுரங்களாய் ஈந்த நம்மாழ்வாரின் பெயர், உலகில் என்றென்றும் வாழும்படிச் செய்வது.
          இம்மூன்றையும் இராமானுசர் தன் காலத்தில் செய்து முடித்தார் என்பது வரலாறு. பிரம்ம சூத்திரத்திற்கு ஸ்ரீபாஷ்யம் என்ற உரை எழுதி 1100 ம் ஆண்டு முடித்தார். பராசரர் மற்றும் வேதவியாசர் பெயர்களை தன் சீடனாகிய கூரத்தாழ்வானின் குழந்தைகளுக்கு இட்டார், இவர்களில் விஷ்ணு ஸகஸ்ர நாமத்திற்கு எழுதிய விரிவான உரை இன்றும் பராசர பட்டரின் உரை என்று சிறந்து விளங்குகிறது. மூன்றாவதாக தன் சீடன் திருக்குருகைப்பிரான் பிள்ளான் மூலம் திருவாய்மொழிக்கு உரை படைத்து நம்மாழ்வாரின் பெயர் என்றும் ஓங்கி உலகளாவி இருக்கும்படிச் செய்தார்.

          கருணைக்கடல்[தொகு]

          யமுனாச்சாரியாரின் வைணவத் தத்துவங்களைக் கற்பதற்காகவே இரண்டாண்டுகள் தவமிருந்தார் இராமானுசர். யமுனாச்சாரியாரின் ஐந்து சீடர்கள் ஒருவரான திருக்கோட்டியூர் நம்பியிடம் எட்டெழுத்து மந்திரத்தை "எவருக்கும் வெளியிடக்கூடாது" என்ற நிபந்தனையின் பேரில் உபதேசம் பெற்றார். ஆனால் உபதேசம் பெற்றவுடன் திருக்கோட்டியூர் கோவில் கோபுரத்தின் மேலேறி மாந்தர் அனைவருக்கும் கேட்கும்படி அதை எல்லோருக்கும் உபதேசம் செய்தார். இதனால் மிகுந்த கோபமுற்ற திருக்கோட்டியூர் நம்பி இரகசிய மந்திரத்தை இப்படி யாவருக்கும் சொல்வது குருவின் சொல்லுக்கு துரோகமிழைப்பதாகும் என்றும் இதற்கு நரகம் புக நேரிடம் என்றதற்கு இராமானுசர் எல்லோரும் முக்தியடைய தான் ஒருவன் நரகத்திற்கும் செல்வதும் பாக்கியமே என்றார். இந்த பதிலைக் கேட்ட திருக்கோட்டியூர் நம்பி, அரங்கனின் கருணையையும் இவரின் கருணை மிஞ்சிடக்கண்டு இவரே "எம்பெருமானார்" என்று மகிழ்ச்சியினால் ஆலிங்கனம் செய்துக்கொண்டார்.

          நிர்வாகி

          இராமானுசர் சிறந்த வேதாந்தி மட்டும் அல்ல; பெரிய நிர்வாகியும் கூட. திருவரங்கம் கோயிலின் நிர்வாகத்தை ஏற்று அதை முற்றிலும் சீர்படுத்தி அன்றாடம் நடக்கவேண்டிய ஒழுங்கு முறைகளை உண்டாக்கினார். இவ்வேற்பாடுகளில் அவருக்கு எதிர்ப்புகளும் முளைத்து அவரைக் கொல்லும் முயற்சிகள் கூட நடந்தன. தற்கால ஸ்ரீவைணவ நடைமுறைகளை உருவாக்கி சடங்குகளோ, சம்பிரதாயங்களோ, பழக்க வழக்கங்களோ எல்லாவற்றிற்கும் கருத்துச் செறிவுடன் உயிர் கொடுத்தவரும் அவரே. இவையெல்லாம் செவ்வனே செயல்பட முடிந்ததற்கு முழுக் காரணம் அவர் ஒருவராகவே திருவரங்கம் கோயில் நிர்வாகம், ஸ்ரீவைணவ மட நிர்வாகம் ஆகிய இரட்டைப் பொறுப்பையும் ஏற்று நடத்தியது தான். திருவரங்கம் கோயில் உடைமைகளை சிறப்புற மீட்டெடுத்து நிர்வாகம் செய்ததால் திருவரங்கநாதன் இராமானுசரை "உடையவர்" என அழைத்தார்.

          வைணவத்தின் பரவல்

          இராமானுசர் பாரததேசம் முழுவதும் யாத்திரை செய்து வைணவத்தின் பெருமையை எங்கும் பறை சாற்றினார். எதிர்வாதங்கள் புரிந்தவர்களை வென்று வைணவ மடங்களை நிறுவினார். சில இடங்களில், ஆன்மீகத்தில் பிடிப்பு இருந்தும் இல்லறத்திலேயே இருக்க விரும்பியவர்களையும் தன் மடங்களின் ஆன்மீகத் தலைவர்களாக்கினார். திருவரங்கத்திலுள்ள தலைமை மடத்திற்கு மடாதிபதியாக வரவேண்டிய விதி முறைகளை வழிப்படுத்தினார். ஒவ்வொருவரிடமும், முக்கியமாக தாழ்த்தப்பட்ட இன மக்களிடையேயும், இரக்கம், கருணை, பரிவு முதலிய நற்குணங்களைச் சொரிந்ததோடு "திருக்குலத்தார்" என்றும் அவர்களை அழைக்கலானார் (இக்குணத்தால் கவரப்பட்டே, பின்னர் வந்த காந்திமகானும் "ஹரிஜன்" என்றார்). தமிழ் பிரபந்தங்களை ஓதவும் வைணவச் சின்னங்களை தரிக்கவும் எந்தச் சாதியினரோ ஆணோ பெண்ணோ எல்லோருக்கும் வைணவத்தில் இடம் இருக்கச் செய்தார்.

          நூல்கள்

          வடமொழியில் இராமானுசர் இயற்றிய ஸ்ரீபாஷ்யம் அவருடைய தலைசிறந்த படைப்பு. வேதாந்தத்தில் விசிஷ்டாத்வைதத் தத்துவத்தை காலத்திற்கும் நிலைநாட்டிய நூல். அதைத்தவிர அவர் இயற்றியவை:
          • வேதாந்த சங்கிரகம். இது உபநிடத தத்துவங்களை விவரித்துச்சொல்கிறது.
          • வேதாந்த சாரம், மற்றும், வேதாந்த தீபம் : இவை பிரம்ம சூத்திரத்தைப்பற்றிய சுருக்கமான உரைகள்.
          • கீதா பாஷ்யம். இது கீதைக்கு விசிட்டாத்துவைதத்தையொட்டி எழுதப்பட்ட உரை.
          • நித்யக்கிரந்தங்கள். அன்றாட வைதீகச்சடங்குகளும், பூசை முறைகளும்.
          • கத்யத்ரயம். இவை மூன்று உரைநடை நூல்கள். சரணாகதி கத்யம் பிரபத்தி என்ற சரண்புகுதலைப் பற்றியது. ஸ்ரீரங்க கத்யம் ரங்கநாதப் பெருமானை தன்னை தாசனாக்கிக் கொள்ளும்படி வேண்டுவது. வைகுண்ட கத்யம் மகாவிட்டுணுவின் இருப்பிடமான வைகுண்டத்தை நேரில் பார்ப்பதுபோல் விவரிப்பது.
          இராமானுசர் அவருடைய சொற்பொழிவுகளை தமிழில் செய்தாலும், தமிழில் அவர் எழுதியதாகத் தெரியவில்லை. ஆனால் ஸ்ரீபாஷ்யம் தவிர அவருடைய இதர நூல்களில் ஆழ்வார்களின் பக்திச்சுவை பாதிப்பு நன்றாகவே தெரிகிறது.

          இராமானுசருக்குப் பின்

          இராமானுசருக்குப் பின் ஆச்சாரியராக வந்தவர் கூரத்தாழ்வாரின் மகனாகிய பராசர பட்டர். இராமானுசர் தன்னுடைய வடமொழிப் புலமையையும், வேதாந்தக்கடலில் தான் கடைந்தெடுத்த முத்துக்களையும் ஆழ்வார்களின் பக்திவெள்ளப் பெருக்குடன் இணைத்து விசிஷ்டாத்வைதத்தை அமைத்தார். ஆனால் அடுத்த இரு நூற்றாண்டுகளில் வடமொழி நூல்கள், ஆழ்வார்களின் தமிழ் பிரபந்தங்கள் இவையிரண்டில் எது முக்கியத்துவம் வாய்ந்தது என்ற கொள்கையில் வேறுபாடுகள் ஏற்பட்டு வடகலை, தென்கலை என்ற இரண்டு பிரிவுகள் ஏற்பட்டன. தத்துவத்திலும் சில வேறுபாடுகள் தலைப்பட்டன. ஆனால் இரு சாராரும் இராமானுசர் என்ற பெயருக்கும் அவருடைய நூல்களுக்கும் உயர்ந்த மதிப்பு தருவதில் ஒருவரையொருவர் மிஞ்சுவர். ஒவ்வொரு வைணவக் கோயிலிலும் இராமானுசரின் கைகூப்பிய சிலை ஆண்டவன் சன்னிதியில் இருப்பதை இன்றும் காணலாம். வைணவத்தின் உட்பிரிவுகள் மட்டுமல்ல, இந்து சமய உலகத்தின் எந்தப்பிரிவிலும், ஆண்டவனைத் தொழும்போது ‘கடவுள் அனந்த கல்யாண குணங்களைப் பெற்றவன், அடியேன் ஒரு சின்னஞ்சிறு துளியிலும் துளி’ என்ற அடிப்படை மனப்பான்மை இருத்தல் வேண்டும் என்ற கோட்பாடு இராமானுசர் இட்டுச்சென்ற அழியாத முத்திரையே.

          வடநாட்டிலும்

          இராமானுசரின் விசிட்டாத்துவைதத் தத்துவங்கள் காசுமீரம் வரையில் வடநாட்டிலும் பிரபலமடைந்தன. இராமானந்தர் (1300-2015) விசிட்டாத்துவைதத்தை ஏற்று காசியில் ஜாதிவேற்றுமை பாராது கபீர்தாசர்ரவிதாசர், முதலிய பல சீடர்கள் மூலம் வைணவத்தைப் பரப்பினார். செருப்பு தைக்கும் குடும்பத்தில் பிறந்த ரவிதாசர் தான் இராசபுதனத்து மீராவை பக்தி மார்க்கத்தில் இழுக்கக் காரணமாயிருந்தவர். பிற்காலத்தில் ராமசரிதமானஸ் என்ற அமர காவியத்தை இயற்றி வடநாடு முழுவதும் ராமபக்தி செழிக்கச் செய்த துளசிதாசரும் உத்தரப்பிரதேசத்தைச்சேர்ந்தவர் ஆவார்.

          தொலைக்காட்சித் தொடர்

          இராமானுஜர் பற்றிய தொலைக்காட்சித்தொடருக்கு நாத்திகவாதியாக தன்னை அடையாளப்படுத்தி வருபவரும் முன்னாள் தமிழ் நாடு முதல்வருமாகிய மு. கருணாநிதி வசனம் எழுதுவதை பலரும் விமர்சித்துள்ளனர்.[2]



          விசிட்டாத்துவைதம்

          • இறைவன் நம்மோடு இருக்கிறார் என்பது அத்துவைதம் (துவைதம் அற்ற நிலை), (இரண்டற்ற ஒருமை நிலை)
          • நமக்கு முன்னும் நமக்குப் பின்னும் இறைவன் இருப்பதால் இறைவன் வேறு, நாம் வேறு, மழை நமக்குள், நம்மால் இயங்குவது இல்லை, - என எண்ணி இறைவனையும், நம்மையும் இரண்டாகப் பார்ப்பது துவைதம்.
          • இந்த இரண்டு கோட்பாடுகளையும் ஒப்புக்கொள்வது விசிட்டாத்துவைதம். (செவ்விருமை)
          • நமக்கு முன் உணவு (துவைதம்)
          • வயிற்றுக்குள் உணவு (விசிட்டாத்துவைதம்)
          • உணவு நம் உடலில் சத்தாக மாறிய நிலை (அத்துவைதம்)
          விசிட்டாத்துவைதமானது சீவாத்மாவும் பரமாத்மாவும் ஒரே பொருளாலானவை என்றும் சீவாத்மா பரமாத்மாவிலிருந்து வெளிப்பட்டது என்றும் கூறுகிறது. சித்து, அசித்துச் சேர்க்கையால் விளங்கும் இரண்டற்றதான பிரம்மம் உண்டென்பதே உட்கருத்து. பிரம்மம் ஒருவரே. அவர் சத்து என்றும் பிரம்மம் என்றும் ஈசுவரன் என்றும் திருமால் என்றும் பெயர் பெறுகிறார். அவர் சித்து என்னும் ஆத்மாவுடனும் அசித்து எனப்படும் சடத்தோடும் எப்போதும் சேர்ந்திருக்கிறார். பரமாத்மாவே நிலையானவர். சுதந்திரம் உடையவர் சித்தும் அசித்தும் அவரைச் சார்ந்திருப்பவை. ஆசாரிய அன்பு, சுருதி, சுமிருதி, நம்பிக்கை, மோட்ச விருப்பம், உலக ஆசை அறுதல், தரும சிந்தனை, வேத பாராயணம், சாது சங்கமச் சேர்க்கை முதலானவற்றால் கர்மபந்தத்தை விட்டு முக்தி பெறலாம்.




















































































































































































































































          No comments:

          Post a Comment